PSALM 27

MORNING PRAYER

MORNING PRAYER

PSALM 27

தந்தை, மகன், தூய ஆவியார் பெயராலே, ஆமென்.

🙏 *நன்றி அறிதல்:*
எங்கள் உயிர்த்த ஆண்டவரே, இந்தப் புதிய விடியலுக்காக உமக்கு நன்றி. “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன” என்று கூறி, எங்களை உமது சொந்தங்களாக ஏற்றுக்கொண்ட உமது மேலான அன்பிற்காக உம்மைப் போற்றுகிறோம்.

📖 *இன்றைய நற்செய்திச் சிந்தனை:*
ஆண்டவரே, இன்று நற்செய்தியில் “அவற்றை எனது கையிலிருந்து எவரும் பறித்துக்கொள்ள மாட்டார்” என்று எங்களுக்கு மாபெரும் பாதுகாப்பை உறுதி அளித்துள்ளீர். உலகத்தின் போராட்டங்களும், கவலைகளும் எங்களை அலைக்கழிக்கும்போது, உமது வல்லமை மிக்க கரங்களுக்குள் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற நம்பிக்கையை இன்று எங்களுக்குத் தாரும்.

🙌 *வேண்டுதல்:*
இறைவா, தந்தையாம் இறைவனோடு நீர் ஒன்றாய் இருப்பது போல, நாங்களும் உம்மோடு எப்போதும் இணைந்திருக்க அருள் தாரும். உமது குரலை அடையாளம் கண்டு, அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கத் தேவையான ஞானத்தை எங்களுக்குத் தாரும். இன்று நாங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் உமது அன்பையும் அமைதியையும் பிரதிபலிக்கச் செய்யும்.

🌟 *அர்ப்பணம்:*
இயேசுவே, இன்று நாள் முழுவதும் உமது பராமரிப்பில் எங்களை ஒப்படைக்கிறோம். நீர் தரும் நிலைவாழ்வின் மகிழ்ச்சி இன்று எங்கள் உள்ளங்களில் நிரம்பி வழியட்டும். உமது கரம் எங்களை வழிநடத்தட்டும்.
*ஆமென். அல்லேலூயா!*

இன்றைய நாள் உங்களுக்கு ஆசீர்வாதமாகவும் பாதுகாப்பாகவும் அமையட்டும்! நாளை காலை மீண்டும் சந்திப்போம்.

MOR.PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

MORNING PRAYER

MOR.PRAYER 1

“வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?ஆண்டவர்க்கும் அவர்தம் அருள்பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்; ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்;
‘அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்; அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்’ என்கின்றார்கள். விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்; என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார். அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்; கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்;
‘என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன். ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்: ‘நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன். இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்”.

(திருப்பாடல் 2: 1-9)

என் அன்புக்குரிய இயேசு கிறிஸ்துவே, இந்த காலை வேளையில், என்னை முழுமையாக உமது பாதத்தில் வைக்கிறேன். ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை அளித்த எங்கள் ஆண்டவரே, நான் பிறரிடத்தில் எந்த பலனையும் எதிர்பார்க்காது, தூய அன்பை செலுத்த எனக்கு அருள் புரியும்.

ஆண்டவரே! உம்மைப் பற்றிய அறிவில் வளர, நிக்கதேமைப் போல உம்மிடம் ஆர்வமாய் அணுகி வருகிறேன். ஆன்மீக அறிவில் வளர்ச்சி பெற, தேவையான ஞானத்தைத் தூய ஆவியானவர் மூலம் தந்தருளும்.

இறைவா! நாங்கள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, தூய ஆவியால் புதுப்பிறப்படைய அருள் புரிவீராக. ஏனெனில், தூய ஆவியால் புதுப்பிறப்பு அடைபவரே, இறையாட்சிக்கு உட்பட முடியும் என கூறி இருக்கிறீர்.

தந்தையே! அன்று, கூடியிருந்த இடம் அதிரும் அளவிற்கு, நீர் திருத்தூதர்களை தூய ஆவியால் ஆட்கொள்ளச் செய்து, கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூற வைத்தீர். அதே தூய ஆவியின் மூலம், இன்று அருட்பணியாளர்களுக்கு இறை வார்த்தையை அறிவிக்க துணிவினையும், நாவன்மையையும் தந்தருளும்.

இறைவா! இந்த புதிய நாளை உமது பெயரால் நாங்கள் துவக்குகின்றோம். ஆசீர்வதித்து வழி நடத்துவீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

GOD BLESS BLESS

It is a Divine initiative

It is a Divine initiative

GOD BLESS BLESS

Saint Mother Teresa was known for her immense devotion to the Blessed Sacrament of the Eucharist.
>> She found her strength for her services of mercy, by being united and spending time with the Eucharistic Lord…
… everyday!

She has spoken very beautifully about the Holy Eucharist:
She says: “When Jesus came into the world, he loved it so much that he gave His Life for it.
>> He wanted to satisfy our hunger for God.
And what did He do?
>> He made himself the ‘Bread of Life.’

He became small, fragile and defenceless for us.
Bits of bread can be so small that…
… even a small child can chew it!

The Lord says, “No one can come to me unless drawn by the Father who sent me” (Jn 6:44)

Our attraction to the Eucharist is not merely a personal devotion…
… it is a Divine initiative
… it is a Holy gift

It is this devotion and union with the Lord, alone, that can make us also, in turn, a Eucharistic people – breaking and giving ourselves – for the welfare and salvation of the world!

May the words of St Francis de Sales inspire us:
“When the bee has gathered the dew of heaven and the earth’s sweetest nectar from the flowers, it turns it into honey, then hastens to its hive.

Let us seek to satisfy our hunger for God…
… by growing in our love for Jesus in the Most Holy Eucharist – the Bread of Life!”

 

GOOD DAY

Humility before God and Watchfulness against the Devil

Humility before God and Watchfulness against the Devil

GOOD DAY

“Humble yourselves therefore under the mighty hand of God, so that he may exalt you in due time” (1 Pet 5:6).
“Discipline yourselves, keep alert. Like a roaring lion your adversary the devil prowls around, looking for someone to devour” (1 Pet 5:8).

Today we celebrate the feast of St. Mark the evangelist. Today’s first reading is taken from the first letter of St. Peter and the Gospel passage is from the last chapter of the Gospel according to St. Mark. In today’s first reading, St. Peter refers to Mark as “my son” (1 Pet 5:13). This signifies a relationship between a teacher and a disciple. According to the early tradition, Mark wrote his Gospel as Peter’s interpreter, recording his eyewitness accounts of Jesus.

Today’s Gospel speaks about the mission of proclamation given by Jesus to his apostles as well as the assurance of his accompaniment. The first reading speaks about the attitudes required while fulfilling the entrusted mission. We need to clothe ourselves with humility because all power and glory belongs to God alone and we are God’s instruments. Besides, we need to be alert against the devil who is ever active and looking for an opportunity to attack us when we are negligent.

Today let us meditate on the two attitudes of humility before God and Watchfulness against the devil!

MOR.PRAYER

காலை ஜெபம், MORNING PRAYER

காலை ஜெபம்

MORNING PRAYER

MOR.PRAYER

“அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்”.

(திருப்பாடல் 100 :1-5)

எங்கள் வாழ்வு தரும் ஊற்றே! உம் பேரின்ப ஓடையில், எங்கள் தாகம் தணிப்பவரே! எங்கள் மீட்பின் பிறப்பிடமே! இந்த காலை வேளையில், உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதிக்கின்றோம்.

இறைவா! இன்றுவரை என்னை உம் சிறகுகளில் அரவணைத்து, பாதுகாத்து வரும் உம் மேலான அன்பிற்காக நன்றி அப்பா.

மீட்பின் தேவனே! உமது இரண்டாவது வருகையை மறந்து, அதை எதிர்நோக்காது, அதற்காக என்னையே நான் தயார்படுத்திக் கொள்ளாமல், கடந்த காலங்களில் நான் அறிவிலியாக இருந்ததற்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன். மன்னிக்கும் தேவனே! மனமிரங்கி என்னை மன்னித்தருளும்.

உமது வருகையை, தினம் தினம் ஆவலோடு எதிர்கொள்ளும் வகையில் அதற்கு ஏற்றபடி, முன்மதியுள்ள பெண்டிரின் மனநிலையை எனக்குத் தந்தருளும்.

இரக்கத்தின் இறைவா! செம்மறியின் விருந்திற்கு அழைக்கப்படும் மாபெரும் பேற்றினை எனக்கும் அளித்தருளும்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

PRAYER

MORNING PRAYER

காலை செபம்

MORNING PRAYER

PRAYER

“அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். ‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்”!

(திருப்பாடல் 66: 1-7)

அன்பே உருவான எம் இறைவா! உம்முடைய இரக்கப் பெருக்கத்தினால், மற்றொரு புதிய நாளை காணச்செய்த உமது மேலான அன்பிற்காக நன்றி. தந்தையே! இந்த அதிகாலை வேளையில் உம்மை வாழ்த்திப் போற்றி, ஆராதிக்கின்றேன்.

என் அன்பு இயேசுவே! இந்தக் காலை வேளையில், உம்மை எண்ணியே என் உள்ளம் நாடுகிறது.

“என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” எனக் கூறிய இயேசுவே, உம்மையே நாடுகிறேன், தேடுகிறேன், நம்பிக்கை கொள்கிறேன்.

நம்பிக்கைக் கொள்ளும் அனைவரும், நிலைவாழ்வை அடைய வேண்டும் என்ற, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற வந்த எங்கள் இயேசுவே !நாங்கள் கபடமற்ற மனமுடையவர்களாக வாழவும், நாங்கள் முழுமனதோடு உம்முடைய பிரசன்னத்தில், உம் அன்பில், எப்போதும் நிலைத்திருக்கவும் வரமருளும்.

உமது அளவுகடந்த ஞானத்திற்கேற்ப, இன்று என்னை பயன்படுத்தும். உம்மோடு உமக்காக வாழ்வதே, எனக்கு கிடைக்ககூடிய மாபெரும் பேறு எனப் புரிந்துக்கொண்டு வாழ இறைவா! எனக்கருள் புரியும்.

இயேசு மரி, சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

MOTIVATIONAL

MASTERMIND MONDAY

MASTER MIND MONDAY

MOTIVATIONAL

இவற்றை கற்றுக்கொண்டால் — எதுவும் உன்னை அசைக்காது!

உன் வாழ்க்கையில் யாரும் உன்னை கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலை வேண்டுமா?
அது அதிர்ஷ்டத்தால் வராது — இந்த 9 பழக்கங்களால் வரும்! 👇

1. 👁️ கண்களில் பார்த்துப் பேசு
யார் முன்னே நின்றாலும், அவர் கண்களை நேருக்கு நேர் பார். அது உன் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும். கண்களை தவிர்ப்பவன் — தன்னை தவிர்க்கிறான்.

2. ⏸️ உடனே பதில் சொல்லாதே
கேள்வி கேட்கும்போது சில நொடிகள் நிறுத்து. பிறகு அமைதியாக, சுருக்கமாக பேசு. அவசரமான வார்த்தைகள் பலவீனத்தை காட்டும். அமைதியான பதில் ஆற்றலை காட்டும்.

3. 🔒 உன் பலவீனத்தை மறை
எல்லாரிடமும் மனசை திறக்காதே. உன் வலியை அறிந்தவன் — அதை ஆயுதமாக்குவான். உன் அன்பானவர்களிடம் மட்டும் பேசு.

4. 😌 மன அழுத்தத்தை வெளியே காட்டாதே
உள்ளே புயல் வீசினாலும் — வெளியே அமைதியாக இரு. உன் நிதானம்தான் உன் மிகப்பெரிய பலம்.

5. 👔 நேர்த்தியாக உடை அணி
உடை என்பது வெறும் ஆடையல்ல — அது உன் ஒழுக்கத்தின் பிரதிபலிப்பு. நேர்த்தியான தோற்றம் உன்னை நீயே மதிக்க வைக்கும்.

6. 🗣️ மெதுவாக பேசு
வேகமாக பேசுபவன் பயத்தில் இருக்கிறான். மெதுவாக பேசுபவன் நம்பிக்கையில் இருக்கிறான். உன் வார்த்தைகளுக்கு நீயே மரியாதை கொடு.

7. 🚫 பிறர் கருத்தை பொருட்படுத்தாதே
“அவங்க என்ன நினைப்பாங்களோ?” என்று வாழ்க்கையை வீணாக்காதே. உன்னை பத்தி அவர்கள் சொல்வது — அவர்களின் பிரச்சனை. உன் பிரச்சனை இல்ல.

8. 🌊 கட்டுப்படுத்த முடியாதவற்றை ஏற்றுக்கொள்
வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்ற முடியாது. ஆனால் அதற்கு எப்படி நீ நடந்துகொள்கிறாய் என்பதை மட்டும் மாற்றலாம். எதிர்வினை ஆற்றாதே — ஏற்றுக்கொள்.

9. 🌟 உன் வாழ்க்கையை நீயே வடிவமைத்துக்கொள்
யாரோ சொன்ன வழியில் போகாதே. உனக்கான கனவை வரைந்துகொள். அந்த தடத்தில் நட. அதுவே உன் விடுதலை.

திருக்குறள் சொல்கிறது:

“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.”

செயலில் உறுதி என்பது மனதின் உறுதியே — மற்ற எல்லாம் வெளிப்பூச்சுதான்.

LIFE AS

Life is a strange melody

Life is a strange melody

LIFE AS

Some people are meant to be loved for a short time, just like how our favourite songs, movies, and books come to an end. It’s about the quality of the time spent together, not the longevity of the love.
The True Meaning of Life*

Sometimes life feels like a burning fire of sadness.
Sometimes it blooms like a beautiful garden of joy.
Life is a strange melody—
it makes us laugh,
and at times, it brings tears to our eyes.
It gives us the taste of both
bitter and sweet experiences.
But at the end of the day,
life quietly becomes the account book of our actions,
where every deed we do finds its place.
So live wisely, act kindly, and walk with humility…

MOR.PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

MORNING PRAYER

MOR.PRAYER 1

“ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்”.

(திருப்பாடல் 118: 1,14-15. 16,18-21 )

எல்லாம் வல்ல இறைவா! உம்முடைய திருநாமம் பரிசுத்தம் என போற்றுகின்றேன். என்னை முழுமையாக உமது பாதத்தில் வைக்கிறேன். கடந்த இரவு முழுவதும் பாதுகாத்த, உம் ஆசீருக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.

ஆண்டவரே, என் மன்றாட்டுகளை நீர் கேட்டதால், நான் உமக்கு என்றும் நன்றி செலுத்துவேன். நீர் என் வாழ்வில் செய்த அனைத்து அற்புதங்களுக்காகவும் நன்றி அப்பா. நீர் செய்த வல்ல செயல்களான நான் கண்டதையும், கேட்டதையும், பிறரிடம் எடுத்துரைக்காமலிருக்க என்னால் முடியாது. உம்மைப் பற்றி, உமது நற்செய்தியைப்பற்றி நான் பறைசாற்ற, தூய ஆவியின் துணையினை நீர் பேதுருவுக்கும், யோவானுக்கும் தந்தது போல, எனக்கும் தந்தருளும்.

இறைவா, இன்று விஷேசமாக பிறரால் வீண்பழி சுமத்தப்பட்டவர்கள், அவதூறு பேச்சுக்கு ஆளானவர்கள் ஆகியோருக்காக வேண்டுகிறோம். அவர்கள் படும் மனத்துயரினைக் கண்ணுற்று பாரும். அவர்களது கண்ணீரைத் துடைத்து, மனக்காயங்களை ஆற்றும். அவர்களுக்கு பொல்லாரினால் ஏற்பட்ட அவப்பெயரினை நீக்கியருளும்.

இறைவா! இந்த நாள் முழுவதும், உம்முடைய மகிமையை காணும்படியாக செய்வீராக. உம்மோடு உமக்காக வாழவும், என் வாழ்விலும் , தாழ்விலும் உம்மை மட்டுமே அன்புசெய்ய அருள்புரியும்.

இயேசு மரி! சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

LIVING

POSITIVE ATTITUDE A HEALING ATTITUDE

இன்றைய சிந்தனை.”
……………………….

” நேர்மறையாக சிந்தியுங்கள்..”

POSITIVE ATTITUDE A HEALING ATTITUDE

tomorrow
…………………………

துன்பங்களும், துயரமும் உங்களைத் துரத்துகிறதா? அவற்றிற்கு எளிதாக தீர்வு காண முயல வேண்டுமே தவிர
மன அழுத்தத்திற்கு ஆளாகக் கூடாது..

துன்பம் இல்லாத மனிதர்களே உலகில் யாரும் இல்லை..

அந்த நேரங்களில் கீழே உள்ள மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நமது பிரச்சினை எல்லாம் மிகமிக சாதாரணம்…

அதனால் எந்த ஒரு செயலை செய்யும் போதும் நேர்மறையாகவே சிந்திக்க வேண்டும்..

லண்டன் நகரத்தில் ஒரு பெண் வாழ்ந்து வந்தார். அங்கு உள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளருவது போலவே அவை எல்லோருக்கும் பிடிக்கும்.

ஆனால் இந்தப் பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. ஒரு ரோஜாப்பூ அருகில் இருந்தாலே இவர் கண்களில் இருந்து கண்ணீர் வரும். தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார்.

அதனால் இவர் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் இருந்து இருந்தார்.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார்.

அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளிலில் நூற்றுக் கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள்.

‘ஒரு பூ அருகில் இருந்தாலே இருக்க முடியாது. இப்போது இந்தக் கூட்டத்தில் இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி இறுதிவரை இருக்கப் போகின்றோம்’ என்று பயந்தார்.

ஆனால் வேறு வழி இல்லாமல் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார்.

பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்ததோடு தும்மலும் வந்தது. முகமெல்லாம் சிவந்து விட்டது.

கூட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்த ஒருவர் எழுந்து வெளியில் செல்கின்ற போது,

‘ ‘இந்த பூக்களைப் பாருங்கள் நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன’ என்று வியந்தபடி கூறிக் கொண்டே சென்றார்.

அப்பொழுது தான் இவருக்குத் தெரிந்தது. அந்தப் பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல, காகிதத்தில் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று.

‘இந்தப் பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்’ என இவர் நினைத்த விநாடியே அவருடைய அலர்ஜிக்கு உண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.

இது தான் நம் மனதின் சக்தி! “ஒன்றை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அது நம்மை பாதிக்கும்.

ஆம்.,நண்பர்களே..

‘வாழ்க்கை ரொம்பத் துயரமாக,துன்பமாக இருக்கு’ என்று நீங்கள் நினைத்தீர்களானால், உங்களுக்கு வாழ்க்கையிலுள்ள சின்னச் சின்ன மகிழ்ச்சியான தருணங்கள் கூட உங்கள் கண்ணில் தெரியாது.

ஆனால்,

அதே நீங்கள் ‘வாழ்க்கை ரொம்ப ஆனந்தமாகப் போகுது’ அப்படியென்று நினைத்தீர்களானால்,

”உங்களுக்கு அன்றாடம் நடக்கும் சின்னச் சின்ன நிகழ்வுகள் கூட ஆனந்தமாகத் தெரியும்.

அதனால் நீங்கள் கவலையான நேரங்களிலோ அல்லது மகிழ்ச்சியான நேரங்களிலோ எப்போதும் உங்கள் மனதை நேர்மறையாகவே வைத்திடுங்கள். அது தான் உங்களுக்குச் சிறந்தது.

ஆம், மனதில் நீங்கள் சாதாரணமாக நினைக்கும் எண்ணங்கள் இவ்வளவு சக்தி வாய்ந்தவை

அதனால் நீங்கள் எப்பொழுதும் நேர்மறையாக சிந்தித்து பழகுங்கள். உங்கள் வாழ்க்கை சுமூகமாக செல்லும்.