HEALTHY IMAGES

DAILY HABIT IS A MEDICINE

DAILY HABIT IS A MEDICINE

HEALTHY IMAGES

மருந்துகள் என்றால் என்ன?

1. சீக்கிரம் தூங்குவதும், அதிகாலையில் எழுவதும் மருந்து.
2. காலையில் கடவுளை நினைவு கூர்வது ஒரு மருந்து.
3. யோகா, பிராணாயாமம், உடற்பயிற்சி ஆகியவை மருந்துகள்.
4. காலை, மாலை நடைப்பயிற்சியும் மருந்து.
5. நோன்பு எல்லா நோய்களுக்கும் மருந்து.
6. சூரிய ஒளியும் மருந்துதான்.
7. மண்பானை நீரைக் குடிப்பது ஒரு மருந்து.
8. கை தட்டுவதும் மருந்துதான்.
9. நன்றாக மென்று சாப்பிடுவது மருந்து.
10. தண்ணீர் குடிப்பதும், மனதளவில் சாப்பிடுவதும் மருந்துகள்.
11. சாப்பிட்ட பின் வஜ்ராசனத்தில் அமர்வது மருந்து.
12. மகிழ்ச்சியாக இருக்க முடிவு செய்வது மருந்து.
13. சில நேரங்களில் மௌனமே மருந்து.
14. சிரிப்பும் நகைச்சுவையும் மருந்து.
15. மனநிறைவே மருந்து.
16. மனதுக்கும் உடலுக்கும் அமைதி மருந்து.
17. நேர்மையும் நேர்மறையும் மருந்துகள்.
18. தன்னலமற்ற அன்பும் உணர்ச்சிகளும் மருந்துகள்தான்.
19. பிறருக்கு நன்மை செய்வதே மருந்து.
20. அறம் தரும் ஒன்றைச் செய்வதே மருந்து.
21. பிறருடன் இணக்கமாக வாழ்வதே மருந்து.
22. உண்பதும், குடிப்பதும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதும் மருந்து.
23. ஒவ்வொரு உண்மையான மற்றும் நல்ல நண்பரும் பணம் இல்லாத ஒரு முழுமையான மருத்துவக் கடை.
24. குளிர்ச்சியாகவும், பிஸியாகவும், ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் இருப்பது மருந்து.
25. ஒவ்வொரு புதிய நாளையும் முழுமையாக அனுபவிப்பது மருந்து.

grateful

Let us trust our Lord Who is the Potter of our lives…

Let us trust our Lord Who is the Potter of our lives…

grateful

One morning, the husband was at breakfast…
… his face hidden behind the morning paper.
The frightened maid tiptoed into the room and whispered something to the wife’s ears.

The wife – paled slightly – then squared her shoulders resolutely and said:
“Dear, for the last seventeen years, you have been eating oats porridge in the morning.
You will be very upset, isn’t it, if you don’t get it this morning?”

Expecting the worst reaction, the wife began to turn away.

The husband, hiding his naughty smile, however said: “Oh how sad!
Yes, I will miss my daily meal!
But hey! It’s also a nice chance to get something interesting to eat, without having to tell explicitly…
… how bored I am with my daily meal!”

The husband, without wanting to express that he wanted a change in his meal,
… hid behind a casual attitude of “saying yes” without really intending!

Well… such is the case with many of us as well, probably.
There are many things that we don’t really enjoy…
… yet, pretend that everything is fine.
There are many things not going on fine with us…
… but we still behave as if we are okay with everything.

We sometimes are people who affirm and consent…
… without really understanding or grasping the whole reality

There is a “lip” yes…
… but not a consent with the mind.

There is an external nodding…
… without a true affirmation from the heart.

Let us trust our Lord Who is the Potter of our lives…

PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

PRAYER

காலை ஜெபம்

புனித யூதா ததேயூவை நோக்கி ஜெபம்

மாட்சிமைமிக்க அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான புனித யூதா ததேயுசே எங்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினரே! புண்ணியங்கள் மின்னித்துலங்கும் தூயவரே! புதுமை வரங்களில் சிறந்தவரே! தம்மை தேடிவந்தவர்களை தப்பாமல் ஆதரிக்கும் தயாள உள்ளங் கொண்டவரே! உம்மை நாங்கள் வாழ்த்துகிறோம். இந்த அற்புத வரங்களை உமக்களித்த அன்பு தேவனுக்கு ஆராதனை செலுத்துகிறோம். இதயபூர்வமான நன்றி நவில்கிறோம்.
எங்களுக்குத் தேவையான ஆன்ம சரீர நலன்களையெல்லாம் அடைந்து தந்தருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம். சிறப்பாக இப்போது எங்களுக்கு மிகவும் அவசியமாக இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.

(நம் தேவைகளை எடுத்துக் கூறுவோம்)

நேசிக்கப்படத்தக்கவரும் உள்ளப் பண்பாடு உடையவரும் இறைப் புகழை பாடுபவருமான பெயர்பெற்று இயங்கும் தயாள இருதய ததேயுவே! உமது வல்லமையில் எங்கள் நம்பிக்கை வீண் போகவிடாதேயும்.
யூதாசின் பெயர் ஒற்றுமையால்; உமக்கு நேர்ந்த பக்திக் குறையைக் பரிகரித்து வகையின்றி வாடுவோருக்கு வல்லமையுடன் உதவி புரியும் அரிய வரத்தை இறைவன் உமக்கு அளித்திருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்தருளும்.
இப்பெரிய வரத்திற்காக நாங்களும் உம்முடன் சேர்ந்து இறைவனின் புகழைப் பாடத் துணைபுரியும். அவருக்கு நன்றி செலுத்த தயை செய்யும். நீர் எங்களுக்கு செய்கின்ற இப்பேருதவிக்காக எங்கள் வாழ்நாளெல்லாம் நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்போம். உமது வல்லமையுள்ள மன்றாட்டை மக்களிடையில் அறியச் செய்வோம். பலர் அறியாப் புனிதரே சிறப்பு இயல்புகள் பல படைத்தவரே பலன் தரும் உமது பக்தி பாரெங்கும் பரவ எங்களால் ஆன பிரயாசையெல்லாம் எடுப்போம் என்றும் உறுதியாய் வாக்களிக்கிறோம்.

ஆமென்.

MORNING PRAYER 1

HAPPY FEAST

HAPPY FEAST

MORNING PRAYER 1

Intimate Friendship and Loving Discipleship

Martha said to Jesus, “Lord, if you had been here, my brother would not have died. But even now I know that God will give you whatever you ask of him” (Jn 11:21-22).

Friendship is one of God’s greatest gifts to humanity. Without this precious gift, life would become lonely and unbearable. Jesus, the Son of God, sanctified friendship by deeply engaging in intimate friendship with three siblings in an amazing family in Bethany. We get to know about Martha, Mary, and Lazarus from two evangelists: Luke and John.

Luke briefly focuses on Martha’s active serving and Mary’s listening (Lk 10:38-42). John, on the other hand, dedicates the eleventh chapter and first eleven verses of the twelfth chapter describing heartfelt friendship between Jesus and Bethany siblings. The theological virtues of faith, hope, and love shine forth in and through the loving discipleship and generous hospitality shown by them.

On the feast of Bethany siblings, let us make a firm resolve to develop an intimate friendship with Jesus through loving discipleship!

Good day and God bless us all!

MORNING PRAYER IMAGES

MORNING PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER IMAGES

காலை ஜெபம்

புனித அல்ஃபோன்சாவிடம் செபம்

புனித அல்ஃபோன்சாவே! நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பாடுகளிலும், மரணத்திலும், உயிர்ப்பிலும் பங்குகொண்ட நீர், எங்கள் மத்தியில் இருந்து தேர்ந்துகொள்ளப்பட்டீர். புண்ணியத்தில் வளர்ந்த நீர் இறைவனால் புனித நிலைக்கும் மோட்ச பாக்கியத்திற்கும் அழைத்துக் கொள்ளப்பட்டீர் .
எங்களின் துன்பங்களிலும், துயரங்களிலும் இறைவனிடம் எமக்காய் பரிந்து பேசும். ஓ துன்பங்களால் தூய்மை அடைந்த தூயகமே! உம்மை போல் நாங்களும் இறைவனை முற்றிலும் சரணடைந்து தூய வாழ்வு வாழ வழிநடத்தும்.
கிறிஸ்துவின் பாடுகளுக்காகவும், எம் பாவங்களின் மன்னிப்பிற்காகவும், அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவும், மீட்பிற்காகவும் எங்கள் துன்பங்களை பொறுமையோடு ஏற்று இறை மகிமைக்காக வாழும் வரம் தாரும்.

ஆமென். †

SACRED HEART

PRAYER TO SACRED HEART JESUS

PRAYER TO SACRED HEART JESUS

SACRED HEART

இயேசுவின் திருஇருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்

இயேசுவின் திருஇருதயமே ! கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும் சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம். நேசமுள்ள இயேசுவே ! எங்கள் குடும்பங்களில் உள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம் .தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திருஇருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும். தவறி எங்களில் எவனாவது உமது திருஇருதயத்தை நோகச் செய்திருந்தால் அவன் குற்றங்களுக்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவனுக்கு கிருபை செய்தருளும். இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், ஊனமுற்றோர்களுக்கு ஊன்றுகோலும் ,விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்து காத்திருப்பீராக.

இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே ! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தரே, இந்த ஊரில் உள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும், அவர்களுடைய திருஇருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வபயத்தையும் வளரச் செய்யும். சீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும், மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம்.

திவ்விய இயேசுவே! முறைமுறையாய் உமது திரு சிநேகத்தில் சீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும் .

ஆமென்.

26__Sts__Joachim_and_Anne_Parents_of_Mary

PRAYER TO ST. ANNE AND JOCHIM

PRAYER TO ST. ANNE AND JOCHIM

26 Sts Joachim and Anne Parents of Mary

புனித அன்னையார் மற்றும் புனித யோவாக்கீமுக்கு ஜெபம்*

அன்பிற்குரிய *புனித அன்னையாரே* மற்றும் *புனித யோவாக்கீமே*, தூய கன்னி மரியாளின் பெற்றோர்களும், நம் தெய்வீக இரட்சகராகிய இயேசுவின் தாத்தா–பாட்டியார்களும் ஆகிய நீங்கள், உம்மை அன்போடும் நம்பிக்கையோடும் நாடி வரும் என்மேல் இரக்கம் கொண்டு, நான் உம்முன் சமர்ப்பிக்கும் இந்த விண்ணப்பத்தை கருணையுடன் கேட்டருளும்.

ஆசீர்வதிக்கப்பட்ட புனிதர்களே! உம்முடைய அன்பு மகளாகிய மரியாள், இயேசுவின் அன்பான தாயாக இருந்ததால், நீங்கள் இயேசுவின் திரு இருதயத்திற்கு மிகவும் பிரியமானவர்கள். உங்களுள் ஓடிய அதே இரத்தமே பின்னர் நம் மீட்பிற்கான விலையாகிய அவருடைய திரு இரத்தமாக அமைந்தது. ஆகையால், அவர் உங்களது வேண்டுகோளை மறுப்பாரோ?

மகத்தான புனிதர்களே! தமது தாயாகிய விண்ணகமும் மண்ணகமும் அரசியான உமது மகள் மரியாளின் அன்பான பராமரிப்பில், “ஞானத்தில் நிறைந்து, வளர்ந்து வல்லமையடைந்த” இளைய இயேசுவின்மேல் உங்களுடைய அன்பும் செல்வாக்கும் அளவற்றதாக இருந்தது. “நன்மை செய்து திரிந்த” அவரைப் போலவே, இரக்கமும் கருணையும் கொண்டு, என் பெரும் தேவையில் இருக்கும் உமது அடியாராகிய எனக்கு உதவியாக வாரும்.

*புனித அன்னையாரே, புனித யோவாக்கீமே*, “எங்கள் வாழ்வும், இனிமையும், நம்பிக்கையுமான” மரியாளின் அன்பான பெற்றோர்களே, எனக்காக அவரிடம் மன்றாடி, நான் வேண்டிக் கொள்கிற இந்த விண்ணப்பத்தைப் பெற்றுத்தாரும்.

*ஆமென்.*

MORNING PRAYER 1

MORNING PRAYER

MORNING PRAYER

காலை செபம்

MORNING PRAYER 1

பனிமய மாதா ஜெபம்

சர்வஜீவ கோடிகளுக்கு உணவைத் தந்து காப்பாற்றும் சர்வேசுரனுக்கு அமுதூட்டிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, உமது உபய திருவடிகளே எங்கள் அடைக்கலம்.🙏
(3 முறை).

எங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே, உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையை வேண்டி வந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், எங்கள் சந்தோஷமும்,எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ? உம்மைத் தேடி வந்த நிர்ப்பாக்கியர்களுக்கு உதவியாயிரும். அழுகிற பேர்களை அரவணையும், அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும்.

நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் பேரில் தயவாயிரும். தாயே! தயைக் கடலே! தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்குத் தஞ்சமே! உம்முடைய சந்நிதானம் தேடி வந்தோம். ஆறு, காடு, கடல்களைக் கடந்து ஓடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடி நொந்தோம்.

எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ அம்மா? அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா! தஸ்நேவிஸ் மரியே அம்மா! எங்கள் குடும்பங்கள் முழுவதையும் இன்று உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும் தாயே!.

Human hands praying to god on mountain sunset background

MORNING PRAYER

MORNING PRAYER

PRAYER1
Human hands praying to god on mountain sunset background

இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கட்டுகளை உடைக்கும் செபம்.

இயேசுவின் நாமத்தினாலும், இயேசுவின் வார்த்தையினாலும், இயேசுவின் பரிசுத்த இரத்தத்தாலும், என்னையும் என் குடும்பத்தில் உள்ளவர்களையும் தாக்கியுள்ள ஆவிகளின் கட்டுகளை உடைத்து செபிக்கிறேன். இயேசுவே, என்னையும், என் குடும்பத்தினரையும் உமது பரிசுத்த இரத்த கோட்டைக்குள் வைத்து மறைத்துக் கொள்ளும். இயேசுவே, உமது சிறகுகளால் மூடிக் கொள்ளும். இயேசுவே, உமது தூய ஆவியால் மறைத்துக் கொள்ளும். உமது தூதர்களைச் சுற்றி காவல் புரியும்படி கட்டளையிட்டருளும்.

இயேசுவே, உமது நாமத்தினால், எங்கள் இல்லத்தில் உள்ள எல்லா தீமைகளையும், வெறுப்பின் ஆவி, குழப்பத்தின் ஆவி, இன்னும் உமக்கு விருப்பமில்லாதது எதுவோ அனைத்தையும் உமது பாதத்தில் வைக்கிறேன். இயேசுவே, உமது நாமத்தினால் கட்டி, உமது பரிசுத்த இரத்தத்தால் சுட்டெரித்தருளும்.

MORNING PRAYER 1

MORNING PRAYER

காலை ஜெபம்

MORNING PRAYER

MORNING PRAYER 1

அர்ப்பண ஜெபம்

கருணையும், அன்பின் செல்வந்தரும், படைப்பின் ஆண்டவருமான என் இறைவா! நீர் எனக்குத் தந்துள்ள அனைத்து ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் நினைத்து நான் உமக்கு நன்றி கூறுகின்றேன். படைப்பு அனைத்தோடும் சேர்ந்து நான் உம்மைத் துதித்து ஆராதிக்கின்றேன்.

என் இயேசுவே! இன்று நான் காண்பதையும், கேட்பதையும், சிந்திப்பதையும், செயல்படுவதையும், நேரிடுவதையும், அதற்கு ஏதுவான அனைத்தையும், என் இதயத்தைப் பாதிப்பவைகளையும் அவ்வப்போது உலகமெங்கும் ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியோடு இணைந்து பரிசுத்த அன்னையின் மாசற்ற திரு இருதயத்தின் வழியாக உமக்கு நான் காணிக்கையாக்குகின்றேன்.

இறைவா, என் தாய், தந்தையினுடையவும், முன்னோர்களுடையவும் அனைத்துலக மக்களின் பாவப் பரிகாரத்திற்காகவும் ஆன்மாக்களின் மீட்பிற்காகவும் இந்த அர்ப்பணத்தை நீர் ஏற்றருளும்.

பிறருக்கு வேதனையோ, வருத்தமோ, பெயரைக் கெடுக்கும் யாதொன்றும் என்னில் இருந்து ஏற்படாதவாறு என் பேச்சுக்களில் கவனத்தோடும், என் செயல்பாடுகளில் விவேகத்தோடும் செயலாற்ற எனக்கு உதவியருளும். ஆன்ம பலத்தால் கோபத்தை அன்பாகப் பகிர்ந்திடவும், அன்பால் பழிவாங்கும் சிந்தனைகளை வெற்றி கொள்ளவும், பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் சமாதானத்தை இழந்து விடாமல் உம்மையே அடைக்கலமாக்கி நான் வாழ எனக்கு உதவியருளும்.

என் இயேசுவே, உம்மை அன்பு செய்யவும், உம்மீதுள்ள அன்பின் பொருட்டு நீர் விரும்பும் எதையும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளவும் எனக்கு ஆற்றல் தாரும். உமது அன்பிலிருந்து என்னை வேறுபடுத்துகின்ற எல்லாவிதமான ஊனுடல் பலவீனங்களையும், விசுவாசத்திற்கும் பரிசுத்தத்திற்கும் எதிராக வருகின்ற சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டிய ஆன்மீக சக்தியை நீர் எனக்குத் தந்தருளும்,

எனது அனைத்துச் செயல்களிலும் உமது அருளும், ஆசீரும் பொழிந்தருளும். அனைத்தையும் நன்றாக துவங்கவும், நன்றாக முடிக்கவும் எனக்கு ஆற்றல் தந்தருளும். மரணம் என்னை நெருங்குகையில் அந்த பலவீனமான நேரத்தில் வலுவான சோதனைகள் என்னை வேதனைப்படுத்தும்போது என் இயேசுவே, நீர் வந்து எனக்கு உதவிடவும், என் ஆன்மாவை ஏற்றுக் கொள்ளவும் வேண்டுகிறேன்.

ஆமென்.