morning prayere

MORNING PRAYER

Spread the love

காலை ஜெபம்

MORNING PRAYER

morning prayere

ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று.

காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும்

பத்து நரம்பு வீணையோடும் தம்புரு, சுரமண்டல இசையோடும் எடுத்துரைப்பது நன்று.

ஏனெனில், ஆண்டவரே! உம் வியத்தகு செயல்களால் என்னை மகிழ்வித்தீர்; உம் வலிமைமிகு செயல்களைக் குறித்து நான் மகிழ்ந்து பாடுவேன்.

ஆண்டவரே! உம் செயல்கள் எத்துணை மேன்மையாவை; உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை.

(திருப்பாடல்கள் 92:1-5)

ஒருநாளும் எங்களை மறவாத இறைவா! இந்தக் காலை வேளையிலே உண்மை பணிந்து, வணங்கி ஆராதிக்கின்றோம்.

இந்த நேரம் வரை எங்களை காத்து, வழிநடத்து வந்த உமது மேலான அன்பிற்காக நன்றி கூறுகின்றோம்.

தூய ஆவியானவரே! நீரே எங்களை ஆட்கொள்ளும், எங்களை வழிநடத்தும், எங்களை உண்மையின் பாதையில் வழிநடக்கச் செய்யும்.

எங்கள் உடலை, நீர் வாழும் இல்லமாக மாற்றும். எங்கள் மனதில் பணிந்து கிடக்கும் அனைத்து பாவக்கரைகளையும் நீக்கி, என்னை தூய்மைப்படுத்தும்.

தூய ஆவியானவரே! நாங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும், கடவுளை வெளிப்படுத்த எங்களுக்கு உதவி புரியும். எது சரி, எது தவறு என்று அறியச் செய்தருளும்.

இவ்வாறு எங்கள் வாழ்நாள் எல்லாம், கடவுளுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பணிபுரிந்து, எங்கள் வாழ்வின் மூலம் கடவுளை வெளிப்படுத்தி வாழ, எங்களுக்கு தேவையான வரங்களை தந்துருளும்

இறைவா! இந்த ஜூலை மாதம் முழுவதும் எங்களைக் காத்து, வழிநடத்திய உமது மேலான அன்பிற்காக நன்றி அப்பா. பிறக்க உள்ள புதிய மாதத்தையும் நிறைவாய் ஆசீர்வதியும்.

இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *