NIGHT PRAYER

வல்லமை நிறைந்த ஆண்டவரே! இன்று முழுவதும் என்னை பாதுகாத்து, வழி நடத்திய உமது மேலான ஆசீருக்காக நன்றி செலுத்துகின்றேன்.
இன்று நான் எண்ணிய எண்ணங்கள், தேவைகள், செயல்திட்டங்கள், செய்து முடித்த பணிகள் அனைத்தையும், உம் பாதத்தில் சமர்ப்பித்து நன்றி கூறுகின்றேன்.
இன்று நான் யாருடைய மனதையாவது புண்படும்படியாக நடந்து இருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கின்றேன். உமது அருளினால் தான், நான் இன்று பல்வேறு காரியங்களை செய்ய முடிந்தது.
இன்று எனக்கு நீர் தந்த உணவு, உடை, பாதுகாப்பு அனைத்திற்கும் நன்றி கூறுகின்றேன்.
இந்த இரவில், தீய எண்ணங்கள், கெட்ட கனவுகள் என் மனதில் தோன்றாமல், எம்மை ஆசீர்வதியும்.
எமக்கு அமைதியான தூக்கம் தந்து, அதன் மூலம் நல்ல ஓய்வை கொடுத்து, நாளை புத்துணர்வோடு எழுந்து, என் பணிகளை தொடர வரம் தாரும். ஆமென்.
