MORNING PRAYER
காலை ஜெபம்

புனித லீதியாவை நோக்கி செபம்
இறைவனின் அன்பிற்குரிய புனித லீதியாவே !
இறைவார்த்தையைத் திறந்த இதயத்தோடு ஏற்றுக் கொண்டு, புனித பவுலின் நற்செய்திப் பணிக்கு ஆதரவாக இருந்த உமது விசுவாச வாழ்வுக்காக இறைவனைப் போற்றுகிறோம்.
எங்கள் இதயங்களையும் ஆண்டவரின் வார்த்தைக்குத் திறந்திட இறைவனிடம் எங்களுக்காக மன்றாடும். எங்கள் குடும்பங்களில் விசுவாசம், அன்பு, ஒற்றுமை மற்றும் சமாதானம் நிலைத்திருக்க அருள் வேண்டித் தந்தருளும்.
விருந்தோம்பல், தாராள மனம், பிறருக்குச் சேவை செய்யும் உள்ளம் ஆகிய நற்குணங்களில் நாங்கள் வளரவும், எங்கள் வீடுகள் இறைவனின் அன்பு நிறைந்த இல்லங்களாக மாறவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எங்கள் தேவைகளையும் கவலைகளையும் ஆண்டவரிடம் எடுத்துரைத்து, அவரது திருவுளத்தின்படி வாழவும், எல்லா சோதனைகளிலும் உறுதியாக நிலைத்திருக்கவும் எங்களுக்கு அருள் கிடைக்கச் செய்யும்.
இறுதிவரை கிறிஸ்துவுக்கு உண்மையாய் வாழ்ந்து, ஒருநாள் உம்மோடு சேர்ந்து விண்ணக மகிமையை அடைய இறைவனின் அருளைப் பெற்றுத் தாரும்.
இதை எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக வேண்டிக் கொள்கிறோம்.
ஆமென்.
