PEACE OF MIND

Morning prayer

                                                                            Morning prayer

PEACE OF MIND
Father, what joy it is to awake to a new day of liberty in you! Thank you for the refreshment of the night. Help me to face the day with purpose and with confidence in your Holy Spirit’s ever-freeing and ever-living power.

Thank you for the path you have placed before me this day. Thank you, also, for the gifts of your Holy Spirit, which operate in me and keep me from being dominated by my fears. You are the God of power and love, and I have received your power by adoption into your family.

Help me to always remember that I am an heir to greatness and not mediocrity! Give me clarity of focus and singleness heart today that I may be completely be centered on you and your will. In the name of the Father, the Son, and the Holy Spirit.

CLEANING

HOME MATTERS

                                                                             HOME MATTERS

CLEANING

Having your home in order isn’t about wealth, it’s about mindset.

Whether you live in a mansion or a one-room home with a dirt floor, what matters is how you care for it. Your surroundings often mirror your inner world. When your space is messy and neglected, it drains you. But when you tidy up, even just a corner, you feel something shift inside.

Cleaning isn’t just a chore; it’s a declaration: “This is mine. I value it. My life matters.”

You don’t need riches to live with dignity. A swept floor, clean dishes, a made bed, these quiet acts show strength. They say you haven’t given up. They reflect respect, resilience, and self-worth.

Order is self-care. It’s how we say, “I’m still standing.”
Because when you put your house in order, you’re really putting your soul in order.

Having our home in order

*heals you

*purifies you

*beautifies you

*adorns you

And that’s priceless.

                                                                   HOME MATTERS

Please subscribe. God bless

 

 

 

NIGHT PRAYER

                                                                                    NIGHT PRAYER

இரவு ஜெபம்

எங்களை என்றும் நேசிக்கும் அன்பு தகப்பனே, இந்த நல்ல நாளுக்காகவும், நீர் எங்களை எப்போதும் கவனித்துக்கொள்ளும் சிறப்பு வழிக்காகவும், இந்த இரவு வேளைக்காகவும் நன்றி கூறுகிறோம்.

இறைவார்த்தையின் ஊற்றான தந்தையே, உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தையால்; எங்களை வளப்படுத்துவதற்காக நன்றி. இறைவார்த்தையில் நாங்கள் காட்டும் ஆர்வத்தை, அதை வாழ்ந்து காட்டுவதிலும் காட்ட அருள் தாரும். துன்பங்கள் வந்தாலும், நிலைகுலையாது உம் வார்த்தையில் நிறைவாக வாழ்வோமாக.

இந்த நாள் முழுவதும் எங்களை கண்ணின் மணிபோல பாதுகாத்து, வழிகாட்டி மற்றும் எங்கள் கூடவே இருந்ததற்காக நன்றி ஆண்டவரே, நாங்கள் உறங்கும்போதும் இரவிலும் அதை நீடிக்கவும் உங்கள் பிடியில் இருந்து நழுவியதற்கு எங்களை மன்னியுங்கள் ஆண்டவரே, எங்கள் உள்ளம் பண்பட்ட நிலமாக இருந்து உம் வார்த்தையை ஏற்றுப் பலன் நல்கிட அருள்தாரும்.

நாங்கள் உமக்கு கீழ்ப்படியாதபோதும் அல்லது மற்ற காரியங்களை எங்கள் சொந்த வழியில் செய்ய முயற்சித்தபோதும் கூட எங்களைத் தொடர்ந்து நேசித்ததற்கு நன்றி ஆண்டவரே, நாங்கள் இருக்க ஒரு வீடு மற்றும் உறங்க சுகமான ஒரு இடம் மற்றும் சாப்பிட நல்ல உணவை ஆசீர்வாதமாக தந்ததற்கு நன்றி ஆண்டவரே, எங்களுக்கு நல்ல, அமைதியான கனவுகள் நிறைந்த உறக்கத்தையும் எங்களுக்குக் கொடுத்து, இரவு முழுவதும் எங்களைப் பாதுகாக்க உமது தேவதூதர்களை எங்கள் வீட்டைச் சுற்றி அனுப்பியருளும். உம்மை நம்பவும் உம்மை மேலும் மேலும் நேசிக்கவும் எங்களுக்கு அருள் தாரும். இயேசுவின் விலைமதிப்பற்ற பெயரில்,

– ஆமென்!

MOR.PRAYER

MORNING PRAYER

                                                                          MORNING PRAYER

MOR.PRAYER 1

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;

மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

(திருப்பாடல்கள் 23:1-6)

✝️ஜெபிப்போமாக :🛐

எங்கள் பாதுகாவலரான புனித தோமையாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே, கிறிஸ்துவை தொட்டறிந்து கிறிஸ்துவின் மீது நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை அறிந்து பறைசாற்ற பேறுபெற்ற தூயவரே, எம் பாரத பூமியில் நற்செய்தியை ஆர்வமுடன் போதித்த போதகரே.! தப்பறைகளை உடைத்த திருத்தூதரே..!, இறைவனின் அருளால் பல வாரங்களை இந்திய மக்களுக்கு அளித்து கிறிஸ்துவின் அன்பை விதைத்த புனிதரே..! இந்த காலை வேளையில் உம்மோடு உறவாட வந்துள்ளேன். என்னை ஆசீர்வதித்தருளும். என் உள்ளத்தின் குரலை கேட்டு எனக்கு உதவியருளும்.

இறைவனை அறிந்து நீரே என் கடவுள் நீரே என் ஆண்டவர் என மொழிந்து அவர் வழியில் நடந்த புனித தோமையாரே..!நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள எங்களை, கடன் தொல்லை, தொழிலின்மை போன்ற இக்கட்டுகளில் இருந்து பாதுகாத்தருளும். உமது பரிந்துரை வழியாக துன்பம், வறுமை, அவமானம், ஏமாற்றம் ஆகியவற்றால், வாடி நிற்கும் எங்களுக்கு உதவியருளும். வறுமையால் துயருற்று அழுவோரின் கண்ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.

எங்கள் அன்புக்குரிய புனித தோமையாரே..! இறைவனின் சித்தம் எதுவெனக் கண்டு, எப்பொழுதும் நீர் பரிசுத்தமாக நடந்தது போல, நாங்களும் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப எப்போதும் நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும், தீமையை அகற்றி தூயோராய் வாழவும்; மக்கள் யாவரும் மெய்யங் கடவுளைக் கண்டறிந்து தக்க முறையில் அவரை வழிபடவும், எங்களுக்காக இயேசு ஆண்டவரிடம் வேண்டியருளும்.

எங்களையும் எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும், உழைப்பினையும் ஆசிர்வதித்தருளும். எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற, எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசியருளும்.

உமக்கு திருவிழா எடுத்து கொண்டாடும் இவ்வேளையில், எங்களை நீர் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். எங்களை எப்போதும் தீயோனிடமிருந்து காத்திடுமாறு வேண்டுகிறோம். சாத்தானின் வஞ்சக சூழ்ச்சியில் நாங்கள் விழாமல் உம்மீது விசுவாசத்தில் நிலைத்திட உம்மை மன்றாடுகிறோம்.

🙏🏻ஆமென்.🙏🏻

MOR.PRAYER

Morning prayer

                                                                                Morning prayer

MOR.PRAYER 1

Wonder-working God, I enter your day with thanksgiving and begin this day with praise. I honor and adore you. I exalt you for your goodness and your mercy. Again, this new morning, your new mercies I beseech.

One of the things I fail to see are the blessings that you have in store for me. Help me to slow down enough in this day to recognize not only your blessings, but simply your constant presence in my life. Grant me the serenity to walk in your peace.

Lord, help me to be the Light that you have called me to be to the world in which I find myself.

PENCIL

    KUTTI STORY —PENCIL AND ERASER

    KUTTI STORY —PENCIL AND ERASER

 

PENCIL

Pencil and eraser are the thickest friends. They dialogue, argue and confront quite often in fact it helped them to build up their friendship. One day

Pencil: I’m sorry.

Eraser: For what?

Pencil: I’m sorry, you get hurt because of me. Whenever I make a mistake, you’re always there to erase it. But as you make my mistakes vanish, you lose a part of yourself and get smaller and smaller each time.

Eraser: That’s true, but I don’t really mind. You see, I was made to do this, I was made to help you whenever you do something wrong, even though one day I know I’ll be gone. I’m actually happy with my job. So please, stop worrying, I will not be happy if see you sad.

Reflection: “Our Parents are just like the eraser, and we are the pencil. They’re always there for their children, cleaning up their mistakes. Sometimes along the way they get hurt and become smaller (older and eventually pass on).

 

MORNING PRAYER

MORNING PRAYER

காலை✝️ஜெபம்🌤️🌴

🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

அவர் அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, அவர்களது துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார்.

அவர்களுக்கு உதவுமாறு, அவர் தமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்; தமது பேரன்பிற்கேற்பக் கழிவிரக்கம் கொண்டார்;

அவர்களைச் சிறைசெய்த அனைவர் முன்னிலையிலும் அவர்கள் இரக்கம் பெறும்படி செய்தார்.

எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! எங்களை விடுவித்தருளும்; வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும்; அப்பொழுது நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்; உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம்.

இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக! மக்கள் அனைவரும் “ஆமென்” எனச் சொல்வார்களாக! அல்லேலூயா!

(திருப்பாடல்கள் 106:44-48)

✝️ஜெபிப்போமாக:🛐

அனைத்தையும் படைத்து, காத்து, வழிநடத்தி வரும் இறைவா! இந்த காலை வேளையிலே உம்மை போற்றுகின்றோம்.

இவ்வுலகில் உமது வல்லமை விளங்கும்படி, முற்காலத்தில் மக்களை வழிநடத்தி வந்தீர். இக்காலத்தில், உமது மகனையே எங்களுக்காக அனுப்பி, எங்களை மீட்டுக் கொண்டீர். உமது எல்லையற்ற அன்பால், நாங்கள் விண்ணகத்துக்கு உரிமை பெற்றுள்ளோம். நன்றி ஆண்டவரே!

அன்பான தந்தையே! உமது தூய ஆவியார், எங்களின் உள்ளங்களை ஆட்கொள்ளட்டும். உமது அரசை, இவ்வுலகில் வெளிப்படுத்தும் பிள்ளைகளாக நான் வாழ, எங்கள் மீது இறங்கச் செய்தருளும்.

வேதனைகள், சோதனைகள் வரும் வேளைகளில், இனி சோர்ந்து போகாமல், அடுத்து கிடைக்கவிருக்கும் மகிமையை காண, வழிநடக்க உமது வல்லமையை எமக்குத் தாரும்.

🙏🏻ஆமென்.🙏🏻

MORNING PRAYER

MORNING PRAYER

“காற்றும் கடலும் இவருக்குக் கீழ்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?” என்று வியந்தார்கள்.
(மத்தேயு 8;23-27)

❤️ தியானிப்போம்❤️
✝️ என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மை மிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர். வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர்.
✝️ நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்! காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர். தீப்பிழம்புகளை உம் பணியாளராய் கொண்டுள்ளவர்.
✝️ நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின் மீது நிலை நாட்டினீர்.அது என்றென்றும் அசைவுறாது. அதனை ஆழ்கடல் ஆடையென மூடி இருந்தது. மலைகளுக்கும் மேலாக நீர் திரள் நின்றது. நீவிர் கண்டிக்கவே அது விலகி ஓடியது; நீவிர் இடியென முழங்க அது திகைப்புற்று ஓடியது.(திபா104)
✝️❤️ புதிய மாதம் கடவுளின் கருணை. அவரது ஞானம் வியப்புக்குரியது, நம் அறிவுக்கு எட்டாதது. மாட்சிமை மிகுந்த அவரது மேன்மைக்கு பணிந்து, எல்லையற்ற அவரது கருணையை புகழ்ந்து வணங்கி ஆராதித்து நல்வாழ்வை சுத்திகரித்துக் கொள்வோம்.

🙏 ஜெபம் 🙏
✝️🧎‍♀️ என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உள்ளமே அவரது திருப்பெயரை ஏத்திடு!
+🧎‍♀️ ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
+🧎‍♀️ தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பி இருக்கின்றன. நீர் கொடுக்க அவை சேகரித்துக் கொள்கின்றன. நீர் உமது கையை திறக்க அவை நலன்களால் நிறைவுறுகின்றன.
+🧎‍♀️ நான் வாழும் நாளெல்லாம் ஆண்டவரை போற்றி பாடுவேன்; என் உயிர் உள்ள வரையிலும் என் கடவுளுக்கு புகழ் சாற்றிடுவேன்.
+🧎‍♀️ என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக. நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.(திபா104) ஆமென் அல்லேலூயா..
🙏 இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏
🌹 மரியே வாழ்க🌹

LIVING

Stay with an aspiration

                                                 Stay with an aspiration. Mood to celebrate

LIVING

Not everything can be rushed. Healing, growth and change unfold at their own pace and patience allows them to blossom. There’s a sacred rhythm in the universe. It knows our heart’s deepest desires and the perfect time for them to bloom.

When we rush, grasp or chase, we turn away from this flow. But when surrender, we open the door for miracles to happen in their own gentle way. We must believe that every delay is a form of protection. Every wait is a quiet preparation.

Every closed door is making space for what is truly meant for us. Let’s breathe in this moment. Let go of control and lean into trust, knowing that the Universe is always orchestrating our highest good.

 

 

NIGHT PRAYER

THANKSGIVING PRAYER

                                                                THANKSGIVING PRAYER

மாத இறுதி இரவு நன்றி ஜெபம்

NIGHT PRAYER

அன்பின் விண்ணகத் தந்தையே இறைவா! இந்த மாதம் முழுவதும் உமது இரக்கப் பெருக்கத்தினாலும், புனித அன்னை மரியாளின் பரிந்துரையாலும், எங்களுக்கு ஏராளமான அற்புதங்களை செய்துள்ளீர்கள் அப்பா. இதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். மேலும், இந்த மாதத்தில் உமக்கு விரோதமாக செய்த பாவங்களுக்காக, குறிப்பாக பிறரன்பிற்கு விரோதமாக செய்த பாவங்களுக்காகவும், பிறரை மன்னிக்காமல் இருந்ததற்காகவும், பிறருக்கு உதவி செய்யும் சூழ்நிலை எனக்கு இருந்தும், உதவி செய்ய தவறியதற்காகவும் உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறோம் அப்பா. எங்களை மன்னித்தருளும் இறைவா.

பிறக்க இருக்கும் புதிய மாதத்தில், உம்முடைய அளவற்ற அன்பினாலும், இரக்கத்தினாலும் எங்களை ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமாய் இறைஞ்சி மன்றாடுகின்றோம். வரும் நாட்களில் எங்களுக்கு என்ன தேவை என்பது உமக்கு தெரியும் ஆண்டவரே. எங்களின் விண்ணப்பங்களை ஏற்று, உமது சித்தத்தின் படி எங்களுக்கு தயவாய் அருள் புரிந்தருளும் அப்பா.

இந்த இரவு நேரத்தையும் உம்முடைய பாதத்தில் ஒப்படைக்கின்றோம். எங்களுக்கு எந்த மனஅழுத்தமும் இல்லாமல், ஆழ்ந்த உறக்கம் தந்து, காலையில் முழு ஆன்ம, உடல் சுகத்தோடு விழித்தெழுந்து, உமது திருமுகத்தை கண்டு புதிய மாதத்தைக் காண எங்களை வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

– ஆமென்.