PRAYER FOR PRIESTS

PRAYER FOR PRIESTS

Gracious and loving God, we thank you for the gift of our priests . Through them, we experience your presence in the sacraments. Help our priests to be strong in their vocation. Set their souls on fire with love for your people. Grant them the wisdom, understanding, and strength they need to follow in the footsteps of Jesus. Inspire them with the vision of your Kingdom. Give them the words they need to spread the Gospel. Allow them to experience joy in their ministry. Help them to become instruments of your divine grace. We ask this through Jesus Christ, who lives and reigns as our Eternal Priest.

St. John Mary Vianney

St. John Mary Vianney

Let’s honor the patron saint of parish priests — a man of deep prayer, humble service, and burning love for God and souls.
May we be inspired by his:
✨ Humility in all things
✨ Unshakable faith in trials
✨ Love for the Eucharist
✨ Compassion in ministry
✨ Zeal for saving souls
✨ Spirit of sacrifice and prayer
Let us strive to live these virtues in our own lives.
St. John Mary Vianney, pray for us!
Have a grace-filled day!

காலை செபம்

காலை செபம்

குருக்களின் பாதுகாவலர் புனித ஜான் மரிய வியான்னியின் நினைவு தினம் இன்று

குருக்களுக்காகச் செபம்

இயேசு ஆண்டவரே! ஆன்மாக்களின் நல்லாயனே! நிலையானப் பெருங்குருவே! உமது தெய்வீகக் குருத்துவத்தில் பங்குகொள்ள அழைக்கப்பட்டுள்ள எங்களது குருக்களுக்காக நன்றி கூறுகின்றோம். 🙏 அவர்களைக் காப்பாற்றும் படியாக உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். அவர்கள் உமக்குச் சொந்தமானவர்களானதாலும், அவர்களுடைய வாழ்வே உமது பலிப் பீடமாக இருப்பதாலும், அவர்களின் உடலும் உள்ளமும் பலவீனமானவை என்பதாலும், அவர்களை விழ வைக்க சாத்தான் விரிக்கும் வலைகள் அதிகம் என்பதாலும் அவர்களைக் காப்பாற்றும். அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்திருந்தாலும், இந்த உலகத்தின் மத்தியில் வாழ்கிறார்கள். இவ்வுலகச் சிற்றின்பங்களும் நாட்டங்களும் அவர்களைச் சோதிப்பதாலும், அவர்களை உமது திரு இருதய நிழலில் வைத்துக் காப்பாற்றும். அவர்கள் வாழ்வில் ஏற்படும் சோதனை, வெறுமை, தனிமை, தடுமாற்றம், ஆகியவற்றிலிருந்து காத்துக் கரம் பிடித்து வழி நடத்தியருளும். அவர்களுடைய தியாகத் வாழ்வே வீண் எனத் தோன்றும் பொழுது அவர்கள் அருகிருந்து ஆறுதல் அளியும். அவர்களை நீர், உமது அன்பில் என்றும் நிலைத்திருக்கச் செய்து, உமக்கும், உம் மக்களுக்கும், அவர்கள் பணிவுடனும் பயனுடனும் தொண்டாற்றச் செய்தருளும். அவர்களின் அருட்பணிகள் எங்களுக்குப் பலன் அளிக்கும்படிக்கு அவர்களது ஒவ்வொரு சிந்தனையையும், சொல்லையும், செயலையும் ஆசிர்வதித்துப் புனிதப் படுத்தியருளும். அதனால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து மக்களையும் உண்மையானப் புனித வாழ்விற்கு நடத்திச் செல்வார்களாக. பலர் உம்மை அறிந்து, இவ்வுலக வாழ்வில் உம்மை அன்பு செய்து, விண்ணுலகத்தில் நிலையான பேரின்பத்தை அடையும் வகையில் அவர்களின் சீடத்துவம் பலன் தருமாறு அவர்களை ஆசிர்வதித்தருளும். இந்த செபத்தை அன்பு அன்னை மரியாளின் பரிந்துரையிலும், என்றென்றும் வாழும் பெருங்குருவாம் உமது மகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மை இறைஞ்சி மன்றாடுகிறோம்.

இன்று ஒரு சிந்தனை!

இன்று ஒரு சிந்தனை!

அடக்கமாக உள்ளவரின் வலிமையை அறியாமல், அவரை எளிதாக வெல்ல நினைப்பவனுக்கு, தப்பாது கேடு நேரும்!

வாழ்க்கை கடினமாகதான் இருக்கும், எதிர்த்து போராட, அதற்கேற்ப உன்னை, மேலும், மேலும் உறுதியாக்கி கொள்!!

எனக்கு இது வராது, என்னால் முடியாது, என நினைப்பவரால், எதையும் சாதிக்க இயலாது, வெற்றிக்கனியை எட்டும் வரை, முயற்சி வேண்டும்,!!!

Morning prayer

Morning prayer
Comforting God, my breath for this day is yours. My life for this day is yours. All that I have and all that I am I offer to you.

You draw me near you and I am comforted and strengthened. Gracious God, these days are challenged by instant gratification and temporary answers. These seductions grip us. I call to you to save our spirits from webs of self-indulgence as well as self-deprivation and remit them to your ready hand of care. As the dawn of this hour wakes some to loss and others to hopefulness, give us confidence to trust you. Remind us that we never walk alone.

MY DAD IS MY HERO

MY DAD IS MY HERO

அப்பாவை பெயர் சொல்லிக்கூப்பிடும் மகள்கள் ஒருவித அழகு.
மகளை தன் அம்மாவாக பார்க்கின்ற அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவுக்கு மேக்கப் போட்டு ரசிக்கும் மகள்கள் ஒருவித அழகு.
மகளுக்கு தன் கையால் உணவூட்டி மகிழும் அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவின் கழுத்தில் தொங்கி விளையாடும் மகள்கள் ஒருவித அழகு.
மகளின் கால்களில் கொஞ்சி விளையாடும் அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பா சொல்லும் அத்தனை உண்மைகளையும் ஆர்வமாய் கேட்கின்ற மகள்கள் ஒருவித அழகு.
மகள் சொல்லும் அத்தனை பொய்களையும் சிரிக்காமல் ரசிக்கின்ற அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவைத் தேடவைத்து மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளும் மகள்கள் ஒருவித அழகு.
மகளைக் கண்டபிறகும் மரத்தையே கண்டுபிடிக்க முடியாதவர்களாய் தேடும் அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவை ஹீரோவாக பார்க்கும் மகள்கள் ஒருவித அழகு.
மகளை இளவரசியாக நடத்தும் அப்பாக்கள் அதைவிட அழகு.
கையை விடும்படி அப்பாவை கெஞ்சும் மகள்கள் ஒருவித அழகு.
யாருக்காகவும் மகளை விட்டுக்கொடுக்காத அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவுக்குத் தன் சோகங்களை சொல்லி ஆறுதல்தேடும் மகள்கள் ஒருவித அழகு.
மகளின் முகத்தைப் பார்த்துத் தன் சோகங்களை மறந்துவிடும் அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவுக்கு மகளாக அடுத்த ஜென்மத்திலும் பிறக்க விரும்பும் மகள்கள் ஒருவித அழகு.
மகளுக்கே பிள்ளையாக அடுத்த ஜென்மத்தில் பிறக்க விரும்பும் அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவுக்கு முன் ஆண்போல வேஷமிட்டு வீரம் பேசும் மகள்கள் ஒருவித அழகு.
மகளுக்கு முன் எந்த வேஷமும் இல்லாமல் பெண்மையை வெளிப்படுத்தும் அப்பாக்கள் அதைவிட அழகு.
வயதான அப்பாவை தன் பிள்ளைபோல நினைக்கும் மகள்கள் ஒருவித அழகு.
வயதான பின்னரும் தன் மகளை குழந்தையாகவே நினைக்கும் அப்பாக்கள் அதைவிட அழகு.
கடவுள் தந்த வரம் என் அப்பா என நினைக்கும் மகள்கள் ஒருவித அழகு.
அந்தக் கடவுளே என் மகள்தான் என நினைக்கும் அப்பாக்கள் அதைவிட அழகு.

அவளின் தேவைகளுக்கு கேட்காமலே கொடுப்பாள்…!!!
அவளின் முத்தம் எனக்கு தேவையென்றால் தங்கம் ஒன்னே ஒன்னுன்னு கெஞ்சனும் அதிர்ஷ்ட முத்தமாச்சே….!!!

How we interpret what happens to us

How we interpret what happens to us

A young salesman became discouraged because he had been rejected by many of the customers that he approached.

He asked a more experienced salesman for some advice.
“Why is it that every time I make a call on someone I get rejected?”

“I just don’t understand that,” answered the older salesman…
… “I’ve been hit on the head, called dirty names, and thrown out the door, but I’ve never been rejected!
Remember, my son: Rejection isn’t what happens to us…
… but how we interpret what happens to us!”

இரவு செபம்

இரவு செபம்

(திபா 84: 2. 3. 4-5a,7a. 10)

ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது!

வானகத் தந்தையே இறைவா!
இந்த மாலை வேளையில் என் உடலும், உள்ளமும் ஆழ்ந்த ஏக்கத்துடன் உம்மை நோக்கித் திரும்புகிறது.

உமது தூய பலிபீடத்தின் அருகே, ஓய்வைத் தேடும் சோர்வடைந்த பறவையைப் போல, என் ஆன்மா இந்த இரவுப் பொழுதில் உமது உடனிருப்புக்காக ஏங்குகிறது. நீரே என் உண்மையான அடைக்கலம், என் அமைதி, என் ஆறுதல், என் பாதுகாப்பான மறைவிடம்.

உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். ஆதலால் அவர்களின் இதயங்களை நீர் மகிழ்ச்சியினால் நிரப்புகிறீர். உலகம் இருண்டு போனாலும்,
நீரே இன்னும் என் ஒளி.
நான் பலவீனமாக உணர்ந்தாலும், நீரே என் பலம். ஆண்டவரே, இன்றைய நாளில் எனது பலவீனத்தால் உமக்கெதிராகவும், சக மானிடருக்கெதிராகவும் நான் கட்டிக்கொண்ட பாவங்களுக்காக என்னை மன்னியும்.

வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும், உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது; எனவே, இன்றிரவு உமது கருணையால் என்னைச் சூழ்ந்து கொள்ளுங்கள். என் தலையணை உமது உறுதி தரும் வார்த்தைகளாகவும் , என் போர்வை, உமது தூதர்களின் இறக்கைகளின் நிழலாகவும் இருக்கட்டும்.

நான் நாளை, புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் எழுந்திருப்பேன் என்னும் நம்பிக்கையில், இந்த இரவினை உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன் – ஆமென்

(திபா 84: 2. 3. 4-5a,7a. 10)

ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது!

வானகத் தந்தையே இறைவா!
இந்த மாலை வேளையில் என் உடலும், உள்ளமும் ஆழ்ந்த ஏக்கத்துடன் உம்மை நோக்கித் திரும்புகிறது.

உமது தூய பலிபீடத்தின் அருகே, ஓய்வைத் தேடும் சோர்வடைந்த பறவையைப் போல, என் ஆன்மா இந்த இரவுப் பொழுதில் உமது உடனிருப்புக்காக ஏங்குகிறது. நீரே என் உண்மையான அடைக்கலம், என் அமைதி, என் ஆறுதல், என் பாதுகாப்பான மறைவிடம்.

உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். ஆதலால் அவர்களின் இதயங்களை நீர் மகிழ்ச்சியினால் நிரப்புகிறீர். உலகம் இருண்டு போனாலும்,
நீரே இன்னும் என் ஒளி.
நான் பலவீனமாக உணர்ந்தாலும், நீரே என் பலம். ஆண்டவரே, இன்றைய நாளில் எனது பலவீனத்தால் உமக்கெதிராகவும், சக மானிடருக்கெதிராகவும் நான் கட்டிக்கொண்ட பாவங்களுக்காக என்னை மன்னியும்.

வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும், உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது; எனவே, இன்றிரவு உமது கருணையால் என்னைச் சூழ்ந்து கொள்ளுங்கள். என் தலையணை உமது உறுதி தரும் வார்த்தைகளாகவும் , என் போர்வை, உமது தூதர்களின் இறக்கைகளின் நிழலாகவும் இருக்கட்டும்.

நான் நாளை, புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் எழுந்திருப்பேன் என்னும் நம்பிக்கையில், இந்த இரவினை உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன்

இன்று ஒரு சிந்தனை!

இன்று ஒரு சிந்தனை!

இன்று நீ சக்திவாய்ந்தவராக இருக்கலாம், ஆனால் நினைவில் கொள், காலம் உன்னை விட சக்தி வாய்ந்தது!

காலமும், சூழ்நிலையும், எப்போது வேண்டுமானாலும் மாறலாம்; யாரையும் வாழ்க்கையில் குறைத்து மதிப்பிடவோ, காயப்படுத்தவோ வேண்டாம்!!

ஒரு பறவை உயிருடன் இருக்கும்போது, எறும்புகளைத் தின்னும், ஒரு நாள் பறவை இறக்கும், இறந்தவுடன், எறும்புகள் பறவையை தின்னும்!!!

ONE THING IN LIFE IS PERMANENT——IT’S YOU

ONE THING IN LIFE IS PERMANENT——IT’S YOU

Whatever happens, stay alive.
Don’t die before you’re dead.
Don’t lose yourself, don’t lose hope, don’t lose direction. Stay alive, with yourself, with every cell of your body, with every fiber of your skin.

Stay alive, learn, study, think, read, build, invent, create, speak, write, dream, design.
Stay alive, stay alive inside you, stay alive also outside, fill yourself with colors of the world, fill yourself with peace, fill yourself with hope.
Stay alive with joy.

There is only one thing you should not waste in life,
and that’s life itself.