psalm 33

திருப்பாடல் : 33 —PSALM 33  —–MORNING PRAYER

திருப்பாடல் : 33

PSALM 33  —–MORNING PRAYER

psalm 33

ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார். அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே! நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.

(திருப்பாடல் 33: 12-15, 20-21)

🛐 ஜெபம் 🛐

அகில உலகையும் படைத்த எம் இறைவா! உம்மைப் போற்றுகின்றேன். உம்மைப் புகழ்கின்றேன். உம்மை ஆராதனை செய்கின்றேன்.

இறைவா, இந்த புதிய நாளை கொடுத்தமைக்கு உமக்கு நன்றி. இன்றளவும் என்னைக் கண்ணின் மணி போல காத்துவரும் உம் கிருபைக்காகவும் நன்றி. 🙏

ஒவ்வொரு நாளும், நான் உமது பண்படுத்தும் தோட்டமாக இருக்கும் நற்பேற்றிற்காகவும் நன்றி தந்தையே. 🙏

என்னைப் பேணிக் காக்க என் சிறு வயது முதல் என் வாழ்க்கைத் தோட்டத்தில் நடுகிறவர்களையும், நீர்ப் பாய்ச்சுகிறவர்களையும் அனுப்பி என்னை ஞானத்திலும், கல்வியிலும், நற்ப்பண்பிலும் வளர்த்தீர். நடுகிறவர்களுக்கும், நீர் பாய்ச்சுகிறவர்களுக்கும் பெருமை இல்லை. ஆனால் என்னை விளையச் செய்த கடவுளாகிய உமக்கே எல்லா பெருமை. உமக்கே மகிமை, துதி, கணம் அனைத்தும் அப்பா.

குணமளிக்கும் மருத்துவரே! அன்று கடும் காய்ச்சலால் துன்புற்ற பேதுருவின் மாமியாரைக் குணமாக்கியது போல இன்று காய்ச்சலால் துன்புறும் ஒவ்வொரு பிள்ளைகளையும் கண்ணோக்கிப் பாரும். அவர்களை உம் திருக் கரங்களால் தொட்டுக் குணமாக்கும்.

இறைவா இந்த நாளில் என் இல்லத்தில் நான் அனைவருடனும் சமாதானமாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்க அருள் புரிவீராக.

இயேசு மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

 

 

 

PSALM 19 —-MORNING PRAYER

திருப்பாடல் : 19

MORNING PRAYER

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர்அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளி மயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.

(திருப்பாடல் 19: 7-10)

🛐 ஜெபம் 🛐

கருணையும், அன்பின் செல்வந்தரும், படைப்பின் ஆண்டவருமான என் இறைவா! நீர் எனக்குத் தந்துள்ள அனைத்து ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் நினைத்து நான் உமக்கு நன்றி கூறுகின்றேன். படைப்பு அனைத்தோடும் சேர்ந்து நான் உம்மை போற்றித் துதித்து ஆராதிக்கின்றேன்.

என் இயேசுவே! இன்று நான் காண்பதையும், கேட்பதையும், சிந்திப்பதையும், செயல்படுவதையும், நேரிடுவதையும், அதற்கு ஏதுவான அனைத்தையும், என் இதயத்தைப் பாதிப்பவைகளையும் இன்று உலகமெங்கும் ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியோடு இணைந்து பரிசுத்த அன்னையின் மாசற்ற திரு இருதயத்தின் வழியாக உமக்கு நான் காணிக்கையாக்குகின்றேன்.

இறைவா, இன்றைய ஞாயிறு திருப்பலியை பக்தியோடு பங்குபெற்று உமது திருவுடலை விசுவாசத்தோடு பெற்றுக் கொள்ளும் அனைத்து மக்களையும் நீர் ஆசீர்வதிப்பீராக. பல்வேறு பிணிகளால் வறுந்தும் பலரை உமது திருக்கரங்களால் தொட்டுக் குணமாக்கிடும். உமது பிள்ளைகளாகிய எங்களுக்கு நல்ல உடல், உள்ள சுகத்தினைத் தந்தருளும். 🙏

இறைவா, பிறந்த இந்த புதிய மாதத்தில் பிறருக்கு வேதனையோ, வருத்தமோ, பெயரைக் கெடுக்கும் யாதொன்றும் என்னில் இருந்து ஏற்படாதவாறு என் பேச்சுக்களில் கவனத்தோடும், என் செயல்பாடுகளில் விவேகத்தோடும் செயலாற்ற எனக்கு உதவியருளும். ஆன்ம பலத்தால்

கோபத்தை அன்பாகப் பகிர்ந்திடவும், அன்பால் பழிவாங்கும் சிந்தனைகளை வெற்றி கொள்ளவும், பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் சமாதானத்தை இழந்து விடாமல் உம்மையே அடைக்கலமாக்கி நான் வாழ எனக்கு உதவியருளும்.🙏

ஆண்டவரே! நன்மை தீமைகளை பகுத்தறியும் நல்ல ஞானத்தை எனக்குத் தந்தருளும். மேலும் தூய ஆவியானவர் என்னுள் தங்கியிருக்க, என்னுள் இருந்து செயலாற்ற அருள் புரிவீராக. 🙏

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

PSALM 145

திருப்பாடல் : 145

திருப்பாடல் : 145

MORNING PRAYER

PSALM 145

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர். ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார்.

(திருப்பாடல் 145 : 8-14)

🛐 ஜெபம் 🛐

இரக்கமும், கனிவும், பேரன்பும் கொண்ட எம் இறைவா! இந்த காலை வேளையில் உம்மைப் போற்றுகின்றேன்! உம்மைப் புகழ்கின்றேன்! நன்றி கூறுகின்றேன்.

இறைவா! இந்நாள் முழுவதும் எனக்குத் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் கிடைக்கப் பெற அருள் புரிவீராக. அப்போதுதான் என் வாய் மனித ஞானத்தால் கற்றுக் கொண்ட சொற்களைப் பேசாமல் தூய ஆவியானவர் கற்றுத் தரும் சொற்களையே பேசும்.

இயேசுவே! பல குடும்பங்களில் ஏற்படும் குழப்பம், சமாதானமின்மை, சண்டை, சச்சரவு ஆகியவற்றிற்குக் காரணமான தீய ஆவிகளை உமது வானளாவிய அதிகாரத்தால், வல்லமையால் விரட்டிவிடும். அக்குடும்பங்களில் குடும்ப செபமாலை சொல்லும் வழக்கத்தினால் நிலையான அமைதி, சமாதானம் குடிகொள்ள அருள் புரிவீராக.

இறைவா, இந்த நாள் முழுவதும் எங்களோடு இருந்து எங்களைக் காத்து வழி நடத்துவீராக.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

NIGHT PRAYER 1

NIGHT PRAYER —PRAYER FOR NIGHT

NIGHT PRAYER –PRAYER FOR NIGHT

NIGHT PRAYER

இரவு செபம்

எங்களை ஒவ்வொரு நாளும், அற்புதமாய் வழிநடத்தும் அன்பு தகப்பனே, உம்மை நன்றியுள்ள இருதயத்தோடு போற்றுகின்றோம், புகழ்கின்றோம், ஆராதிக்கின்றோம், உமக்கு நன்றி செலுத்துகின்றோம் அப்பா.

இன்றைய நாள் முழுவதும், எம்மை கண்ணின் மணிபோல் காத்து, யாதொரு தீங்கும் எம்மை அனுகாமல் பாதுகாத்த, உம் இரக்கத்திற்காக, உமக்கு நன்றி செலுத்துகின்ன்றோம் அப்பா.

காலை முதல் இந்நேரம் வரை, எங்களின் அன்றாடப் பணிகளை செவ்வனே செய்து முடிக்க எங்களுக்கு ஆற்றலையும், ஞானத்தையும் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்ன்றோம் அப்பா.

எங்களுக்கு சின்ன சின்ன உடல்நல பிரச்சனைகள் இருந்த போதிலும், உமது இறைஇரக்கத்தின் இரத்தத்தால், எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்த உம் தாயினும் மேலான அன்பிற்காக நன்றி செலுத்துகின்றோம் அப்பா.

ஆண்டவரே, இந்த இரவுப்பொழுதை ஆசீர்வதியுங்க. உமது காவல் தூதர்களை அனுப்பி எங்களை பாதுகாத்திடுங்க. எங்களுக்கு ஆழ்ந்த நித்திரையையும், மனஅமைதியையும் தாரும் அப்பா. நாங்கள் அதிகாலை புதிய ஆற்றலோடும், புத்துணர்ச்சியோடும் எழுந்து, உம்மை போற்றி புகழ வரம் தாரும்.

அன்பு தகப்பனே! இன்று நாங்கள் உமக்கு எதிராக, அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்காக, பாவங்களுக்காக மனம்வருந்தி மன்னிப்பு கேட்கின்றோம் அப்பா. எங்களை தயைகூர்ந்து மன்னித்து, உமது பிள்ளையாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென, சிரம் தாழ்த்தி வணங்கி மன்றாடுகின்றோம். ஆமென்.

🌹இனிய இரவு வணக்கம் 🌹

NIGHT PRAYER

NIGHT PRAYER

 

இரவு செபம்

NIGHT PRAYER

இரவு நேரங்களில் ஆண்டவரின் இல்லத்தில் பணி செய்யும் ஆண்டவரின் ஊழியரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.

(திருப்பாடல்கள்134:1)

இந்த நாள் முழுவதும் எங்களை வழிநடத்தி வந்த, உமது மேலான இரக்கத்திற்காக கோடான கோடி நன்றி அப்பா! நன்றி ஆண்டவரே! நன்றி மீட்பரே! எங்களைப் பாவம் ஒருநாளும் மேற்கொள்ளாதவாறு, எங்களை காத்திடுமாறு உம்மிடம் மன்றாடுகிறோம்.

இதோ இந்த இரவு நேரத்தில், உம்முடன் பேச வந்திருக்கும் எங்களை ஆசீர்வதித்தருளும். ஆண்டவரே! மாலையில் மலையில் நீர் தனிமையில் சென்று, கடவுளோடு பேசிக் கொண்டிருந்தீர், அதுபோல ஆண்டவரே, உம்மோடு பேச நாங்கள் வந்திருக்கிறோம்.

அப்பா இந்த இரவு வேளையில், எத்தனையோ குடும்பங்கள் உண்பதற்கு உணவில்லாமல், பட்டினியோடு தூங்கும் நிலையில் இருப்பதை நாங்கள் காண்கிறோம், குறிப்பாக அகதிகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், கவனிக்க யாருமில்லாத மனிதர்கள் ஆகியவர்களை நாங்கள் நினைவு கூறுகிறோம்.

அப்பா நீரே அவர்களுக்கு துணையாய் இரும். அவர்களுக்கும் நீரே கடவுள், அவர்களும் உம் பிள்ளைகள் தானே! அவர்களோடு இருந்துருளும். சாத்தானின் சோதனையில் இருந்து அவர்களை காப்பாற்றும்.

அன்பு இயேசுவே! எங்கள் மீட்பரே! இரவில் தூங்குவதற்கு கூட வழியில்லாமல் இருக்கும், ஒவ்வொரு மனிதர்களையும் நினைவு கூர்ந்து ஜெபிக்கிறோம் அப்பா. ஆசீர்வதித்தருளும், பாதுகாத்தருளும், அரவணைத்தருளும், வழிநடத்தும்.

 

தீய கனவுகள் காணாமலும், அமைதியான தூக்கம் கிடைக்கவும், காலையில் எழுந்து உம்மை மகிமைப்படுத்த எமக்கு வரமருளும். ஆமென்.

 

 

VELANKANNI MATHA

NOVENA TO OUR LADY OF VELANKANNI

வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம்:

VELANKANNI MATHA

களங்கமற்ற ஆரோக்கிய அன்னையே! இறைவனின் கொடைகளைப் பெற்றுத் தரும் பேருபகாரியே வாழ்க! தூய எலிசபெத் வீட்டில் நீர் தங்கி இருந்தபோது, அவ்வீட்டாருக்கும் திருமுழுக்கு யோவானுக்கும் எத்தனையோ நன்மைகள் கிடைக்கச் செய்தீர். வேளாங்கண்ணித் திருத்தலத்தில் வீற்றிருக்கும் நீர் எங்களுக்குத் தேவையான எல்லா நன்மைகளையும் பெற்றுத் தாரும். உமது தயவால் இத்திருத்தலத்தில் பார்வை பெற்றோரும், ஆரோக்கியம் அடைந்தோரும், பாவ வழி விட்டு மனந்திரும்பியோரும், ஆறுதல் அடைந்தோரும் எத்தனையோ பேர்! ஓ, தயை நிறைந்த தடாகமே! இரக்கத்தின் திரு உருவே! மனித குலத்துக்கு நீர் செய்துள்ள பேருபகாரங்களுக்கு வணக்கத்துடன் நன்றி கூறுகின்றோம். உம்மை உயர்த்திய எல்லாம் வல்ல இறைவனைப் பணிந்து ஆராதிக்கிறோம். எங்களுக்காக என்றும் இறைவனிடம்

மன்றாட உம்மை வேண்டுகின்றோம். கன்றை அறியாப் பசுவில்லை. சேயை அறியாத் தாயில்லை. நீர் மனுக்குலத்தின் தாயாக உள்ளீர். உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் உம் அன்புக் கரங்களில் வைத்துக் காத்தருளும். மேலும் கிறிஸ்துவை நிராகரித்தவர்களும், பாவ வழியில் வாழ்பவர்களும் மனந்திரும்பவும், எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.

PSALM 19

PSALM 19 MORNING PRAYER

திருப்பாடல் : 19

PSALM 19

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர்அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளி மயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.

(திருப்பாடல் 19: 7-10)

🛐 ஜெபம் 🛐

கருணையும், அன்பின் செல்வந்தரும், படைப்பின் ஆண்டவருமான என் இறைவா! நீர் எனக்குத் தந்துள்ள அனைத்து ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் நினைத்து நான் உமக்கு நன்றி கூறுகின்றேன். படைப்பு அனைத்தோடும் சேர்ந்து நான் உம்மை போற்றித் துதித்து ஆராதிக்கின்றேன்.

என் இயேசுவே! இன்று நான் காண்பதையும், கேட்பதையும், சிந்திப்பதையும், செயல்படுவதையும், நேரிடுவதையும், அதற்கு ஏதுவான அனைத்தையும், என் இதயத்தைப் பாதிப்பவைகளையும் இன்று உலகமெங்கும் ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியோடு இணைந்து பரிசுத்த அன்னையின் மாசற்ற திரு இருதயத்தின் வழியாக உமக்கு நான் காணிக்கையாக்குகின்றேன்.

இறைவா, இன்றைய ஞாயிறு திருப்பலியை பக்தியோடு பங்குபெற்று உமது திருவுடலை விசுவாசத்தோடு பெற்றுக் கொள்ளும் அனைத்து மக்களையும் நீர் ஆசீர்வதிப்பீராக. பல்வேறு பிணிகளால் வறுந்தும் பலரை உமது திருக்கரங்களால் தொட்டுக் குணமாக்கிடும். உமது பிள்ளைகளாகிய எங்களுக்கு நல்ல உடல், உள்ள சுகத்தினைத் தந்தருளும். 🙏

இறைவா, பிறந்த இந்த புதிய மாதத்தில் பிறருக்கு வேதனையோ, வருத்தமோ, பெயரைக் கெடுக்கும் யாதொன்றும் என்னில் இருந்து ஏற்படாதவாறு என் பேச்சுக்களில் கவனத்தோடும், என் செயல்பாடுகளில் விவேகத்தோடும் செயலாற்ற எனக்கு உதவியருளும். ஆன்ம பலத்தால் கோபத்தை அன்பாகப் பகிர்ந்திடவும், அன்பால் பழிவாங்கும் சிந்தனைகளை வெற்றி கொள்ளவும், பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் சமாதானத்தை இழந்து விடாமல் உம்மையே அடைக்கலமாக்கி நான் வாழ எனக்கு உதவியருளும்.🙏

VELANKANNI MATHA

NOVENA FOR OUR LADY OF VELANKANNI

🌿 வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம்

VELANKANNI MATHA

ஓ, தூய அன்பின் அன்னையான ஆரோக்கிய கன்னிகையே! நீர் இயேசுவின் தாய் என்பது பற்றி மிக்க பெருமை கொள்கிறோம். உம்மை உள்ளத்துடன் ஏற்றிப் போற்றி வாழ்த்துகிறோம். இறை தூதர் அறிவித்த நற்செய்தியைத் தாழ்ச்சியான உள்ளத்துடன் ஏற்றுக் கொண்டீர் என்பதை நாங்கள் பக்தியுடன் தியானிக்கின்றோம் அருள் நிறைந்த மரியே வாழ்க! நீர் இறை மகனைக் கருவாக உமது திரு வயிற்றில் ஏந்திய நேரம் முதல், உம் புகழ் விண்ணோக்கி வளர்ந்தது. வரங்களும் அருளும் உம்மில் நிறைந்திட நீர் இறைவனின் தாயானீர். பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. கிறிஸ்துவில் நீர் பெற்ற புது வாழ்வில் நாங்களும் பங்கு கொண்டு, அருள் நிறைந்தவர்களாக இருக்க எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். உமது தாழ்ச்சியைக் கண்ட விண்ணக அரசர் உம்மில் மனிதனானார். உமது நிகரில்லாக் கற்பின் மணம் கமழ தூய ஆவியார் உம் மீது எழுந்தருளினார். ஓ, கருணை நிறைந்தவளே! உம்மில் இறைவன் ஒன்றித்தது போல், அருள் சாதனங்கள் வழியாக நாங்களும் அவருடன் ஒன்றித்து வாழ எங்களுக்காக இறைவனிடம் மன்றாடும். ஆதித் தாயின் தீவினையால் சபிக்கப்பட்ட மனுக்குலம் உம் வழியாக ஆசீர் பெற்றுள்ளது. ஓ, மாதர்களின் மாணிக்க ஒளிச் சுடரே! தாய்மார்களின் தூய இரத்தினமே! சுந்தரவதிகளின் சுந்தரியே! எல்லாத் தலைமுறைகளும் உம்மைப் பேறுடையாள் எனப் போற்றுமே. உம்மைப் பணிந்து வாழ்த்துகிறோம் தாயே! எங்களை உம் அன்புக் கரங்களால் ஆசீர்வதித்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

(தூய ஆரோக்கிய அன்னையின் புகழ்மாலையைச் சொல்லவும்)

PSALM 149

PSALM 149 MORNING PRAYER

திருப்பாடல் : 149  MORNING PRAYER 

]PSALM 149

 

ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக!
அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது.

 

(திருப்பாடல் 149: 1-6a,9b)

🛐 ஜெபம் 🛐

தாழ்நிலையில் உள்ளவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைபடுத்தும் என்றும் வாழும் எல்லாம்வல்ல எம் இறைவா! எல்லாவிதமான புகழ்ச்சிக்கும் ஆராதனைக்கும் உரியவர் நீர்! இந்த காலை வேளையில் தந்தையே உம்மை வாழ்த்தி போற்றுகிறோம்.

இறைவா, புதிய வாரத்தில் துவக்கத்திலிருக்கும் எங்களுக்கு இந்த வாரத்தில் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் அறிவுறுத்தும். இந்த வாரம் முழுவதும் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் எங்களுக்குக் கிடைக்கப் பெற அருள் புரிவீராக.

“ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.”* என இறைவா எங்களை அழைத்தீர்.

இயேசுவே, நீர் ஒருவர் மட்டுமே உலகின் ஒளி என்பதை மக்கள் உணர்ந்தவர்களாய் உம் பாதையில் எந்நாளும் நடந்திட அருள்புரிவீராக.

குருட்டு வழிகாட்டிகளை நம்பி, ஒளியென நினைத்து அவர்கள் பின்னே இருளை நோக்கிப் பயணம் செய்யும் எண்ணற்ற நபர்களின் அகக் கண்களைத் திறந்தருளும். அவர்கள் செய்து கொண்டிருக்கும் தவறினை அவர்களுக்கு உணர்த்தியருளும். அலகையின் கைகளில் இருந்து அந்த ஆன்மாக்களைப் பாதுகாத்தருளும்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

 

 

HUMBLE

COME DOWN TO EXPLORE HUMBLING ONESELF IS A LEARNING

COME DOWN TO EXPLORE

HUMBLING ONESELF IS A LEARNING

HUMBLE

 

பரபரப்பாக இயங்கும் வங்கியில் இரண்டொரு மாதம் முன்

பு – ஒருநாள் அவரை கவனித்தேன்.

வெள்ளை வேட்டி. வெள்ளை – தொள தொள – சட்டை. அறுபது வயதிருக்கலாம்.

ஒதுக்குப் புறமாக உட்கார்ந்திருந்த என் அருகில் வந்தமர்ந்தார்.

கையில் பணமெடுக்கும் செலான்.

கண்டிப்பாக எழுதித் தரச் சொல்லுவார் என்கிற இறுமாப்புடன் பேனாவில் கை வைத்துத் தயாராய் இருந்தேன்.

அவர் தன் சட்டையின் மேல் பையிலிருந்து பேனாவை எடுத்தார்.

நடுங்கும் விரல்களில் செலானில் பெயர், தேதியை எழுதினார்.

பாஸ் புக்கை சரி பார்த்தபடியே, ஒவ்வொரு எண்ணாய்ப் பொறுமையாய் அக்கவுண்ட் நம்பரை எழுதினார்.

எழுதிக் கொண்டே என் பக்கம் திரும்பி சிரித்தார்.

“எழுதனும்களாய்யா?” என்றவனை ‘வேண்டாம் தம்பி” என்று சிரித்து மறுத்தார்.

தொகை எழுதும் Column வந்ததும், உள் பையிலிருந்து எதையோ எடுத்தார்.

சாணிப் பேப்பரில் அச்சடிக்கப்பட்டு நான்காய் மடித்து வைத்திருந்த அது – வாய்ப்பாடு !!

”மொதல்லல்லாம் யார்ட்டயாச்சும் எழுதித் தரச் சொல்லிக் கேட்கறதுண்டு தம்பி. ஒருநாள் என் பையன்ட்ட சொன்னப்ப, படிச்சிருக்கலாம்லப்பா ன்னு கேட்டுட்டான். சங்கடமாப் போச்சு. படிக்காட்டி தான் என்ன.. நாம நெனைச்சா எழுத முடியாதான்னு இப்ப, நானே எல்லாம் எழுதிக்கிடறது. ஆனா இந்த நம்பருங்க மட்டும்தான் மனசுக்குள்ள நிக்க மாட்டீங்குது. அதான் வாய்ப்பாடு புக்கை வெச்சுக்க ஆரம்பிச்சேன்” என்றார்.

அவரை நினைத்துப் பெருமையாக இருந்தது !

அதன்பிறகு பலமுறை அவரைக் காண்பதும், புன்னகையைப் பரிமாறிக் கொள்வதுமாய்க் கழிந்தது.

ஒருமுறை திண்டுக்கல்லில் ஓர் இடத்தைச் சொல்லி, “அங்க ஒரு பெட்ரோல் பங்க் இருக்குல்ல.. அங்க தான் இருப்பேன்” என்றார்.

இரண்டு நாள் முன், பைக் பெட்ரோலுக்காக அருகே இருந்த பெட்ரோல் பங்குக்கு செலுத்தினேன்.

பெட்ரோல் அடித்துக் கொண்டிருந்த போது தான் அங்கே அந்தப் பெரியவரைப் பார்த்தேன்.

 

காற்றுப் பிடிக்கும் இடத்தருகில் தரையில் அமர்ந்து எஞ்ஜின் போன்ற எதையோ நோண்டிக் கொண்டிருந்தார்.

நிமிர்கையில் அவரும் என்னைப் பார்த்திருந்தார்.

சிரித்தபடி அருகே வந்து, “வாங்க வாங்க தம்பி..” என்றபடியே அருகே வர, நான் பைக்கை விட்டிறங்கியபடி அவரிடம் நெருங்கினேன்.

“பைக்கை அப்டி ஓரமா நிறுத்துங்க..” என்றவர் அலுவலக அறைக்கு நடந்தார்.

“இல்லீங்கய்யா.. நான் கெளம்பறேன். நீங்க வேலையைப் பாருங்க” எனும் போது …

“அட வாங்க தம்பி” என்று கையைப் பிடித்து அழைத்துப் போனார்.

அலுவலக அறையில் ஒரு இளைஞர் அமர்ந்திருக்க, போய் அறிமுகப்படுத்தினார்.

“பேங்க்ல அடிக்கடி பார்ப்பேன்ம்பேனே? இவரு தான். இந்தத் தம்பிகிட்ட மட்டும் தான் பேசுவேன் அப்பப்ப” என்று சொல்லிவிட்டு, “டீயா காப்பியா” என்று கேட்டார்.

இல்லீங்கய்யா” என்றவனை..
“அட சும்மா இருங்க” என்று விட்டு, அலுவலக இளைஞரிடம்,

‘ஒரு 20 ரூவா குடுப்பா.. டீ வாங்கிட்டு வரேன்” என்று வாங்கிக் கொண்டு போனார்.

என்ன பேசுவது என்று புரியாமல், “பெரியவர் ரொம்ப கவனம்ங்க. பேங்க் வர்றப்ப பார்த்திருக்கேன். அவரு பையன் ஏதோ பேசிட்டான்னு அவரே எல்லாத்தையும் எழுதிக்கிறார். நீங்க வேற யாரையாச்சும் கூட அனுப்பலாமே சார்? பாவம் வயசான காலத்துல….”

“இல்லீங்க.. அவருக்கு சில வேலையை அவரே செஞ்சாத் தான் பிடிக்கும்.. அப்டியே வளர்ந்துட்டார்” என்றார் இளைஞர்.

“அதுசரிதான்ங்க. நீங்க ஓனர். நீங்க சொன்னா கேட்க மாட்டாரா என்ன?”

ஒரு 30 வினாடி சிரித்தவர் சொன்னார்:

 

நீங்க வேறங்க. அவருதாங்க ஓனர். இந்த பங்க், அதோ அந்த காம்ப்ளக்ஸ் எல்லாம் அவருது தான். அவர் பையன் தான் நான். எனக்கு கல்யாணம் ஆகறவரைக்கும், எனக்கே சம்பளம்தான்னுட்டார்”

விக்கித்துப் போய் வெளியே பார்த்தேன்.

அந்தப் பெரியவர் டீ பார்சலோடு நடந்து வந்துக் கொண்டிருந்தார்.

என்னை யாரோ பளார் என்று அறைந்தது போலிருந்தது!!

1. என்ன ஒரு அருமையான மேனேஜ்மெண்ட்.?!!

2. என்ன ஒரு உழைப்பு..?!!!

3. சிம்பிளிசிட்டி..!!!!

4. வாழ்க்கையில் எதார்த்தம்..!!!

நாம் கற்றுக் கொள்ள இன்னும் இவரைப் போல மாமனிதர்கள் இருக்கிறார்கள்.

நாம் கொஞ்சம் கீழே இறங்கி வர வேண்டும்!!