save life

 KINDNESS SAVES LIFE

 

KINDNESS SAVES LIFE

 

save life

 

 

A man was hired to paint a boat. As he worked, he noticed a small hole in the hull. He repaired it.

The next morning, however, the owner returned, holding a check far more generous than what was owed for the painting.

Surprised, the painter asked, “Sir, this is more than what I had asked for.

The owner smiled and said, “This isn’t for the painting. It’s for fixing the hole in the boat.”

The painter, “But that was such a small thing, not worth this amount.”
“My friend, you don’t understand,” the owner began. “When I asked you to paint the boat, I knew about the hole but forgot to tell you.

My children took the boat out on a fishing trip without telling me. I was away, and when I got home, I was horrified to realize they had gone out in a boat with a hole in the hull. I was terrified, thinking they might never return.

But when they came back safely, I rushed to check the boat and found that you had repaired the hole. You saved my children’s lives. That’s something I can never fully repay.”

Sometimes, the smallest gestures have the greatest impact.

We may unknowingly fix many “holes” for others—offering help, mending hearts, or simply being there when needed.

We often don’t realize how much those small actions can mean to someone else.

Our quiet kindness might save a life. Keep helping, keep caring, for the world needs more boat painters.

PSALM 85

MORNING PRAYER—PSALM 85

 

MORNING PRAYER

திருப்பாடல் : 84

PSALM 85

என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர். அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார்.

(திருப்பாடல் 84: 2-5, 11)

🛐 ஜெபம் 🛐

என்றும் வாழும் தந்தையே எம் இறைவா! மேலும் ஒரு புதிய நாளை எங்களுக்கு அளித்து நாங்கள் மனம் திரும்ப மேலும் ஒரு புதிய சந்தர்ப்பத்தை எங்களுக்கு அளித்திருக்கிறீர். நன்றி இறைவா! 🙏

 

BREAK THROUGH

BREAKTHROUGH

 

  BREAKTHROUGH

BREAK THROUGH

When life breaks you,
it is because
you are ready to be put
back together differently.
Every piece of you that
feels shattered is a piece
that will find a new place,
a new purpose,
a new meaning.
Trust that the cracks
are where the light gets in.
And sometimes,
in our brokenness,
we find our
greatest wholeness.
We find the courage
to rebuild,
to reimagine,
to redefine what it
means to be strong.
You are not broken;
you are breaking through.

MARY

NOVENA TO OUR LADY OF VELANKANNI–NATIVITY OF OUR LADY

NOVENA TO OUR LADY OF VELANKANNI

NATIVITY OF OUR LADY

MARY

ஆரோக்கிய அன்னையே! இறைவனின் தாயான உம்மை வாழ்த்துகிறோம். இறைவனின் புகழ் பாடும் படைப்புப் பொருட்கள் அனைத்தும் உம்மை வாழ்தும்படியாக அழைக்கின்றோம். கடவுளின் படைப்புகளே, ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். வானக அரசியைப் புகழ்ந்து பாடுங்கள். இறைவனின் தூதர்களே, ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். வானகப் படைப்புகளே, வானக அரசியைப் புகழ்ந்து பாடுங்கள். விண்ணகத்திலுள்ள புனிதர்களே, ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். பகலோனே, நிலவே, வானத்தில் ஒளிர்கின்ற விண்மீன்களே, ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். மழையே, வெண் பனியே விண்ணக அரசியைப் புகழ்ந்து பாடுங்கள். வெம்மையே, குளிரே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். மலைகளே, குன்றுகளே, பள்ளத்தாக்குகளே ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள். இருளே, ஒளியே ஆரோக்கிய அன்னையை வாழ்த்துங்கள். மேகங்களே, மின்னல்களே, ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள். பூமிதனில் உள்ள விளைச்சல்களே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். நீர் சுனைகளே, மலை அருவிகளே, நதிகளே, ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள். கடலே, கடல்வாழ் உயிர்களே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். வானத்துப் பறவைகளே, தரைவாழ் உயிரினங்களே ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள். ஆரோக்கியத் தாயே! புகழ் பாடும் உம் மக்களின் மன்றாட்டுக்களை தயவுடன் ஏற்றுக் கொள்ளும். நாங்கள் என்றென்றும் உம்மை எங்கள் தாயாக அன்பு செய்வோம். நாங்கள் ஆன்ம உடல் ஆரோக்கியம் நிறைந்தவர்களாக இறைவனின் அன்பில் நிலைத்துப் புனிதர்களாக வாழ்ந்திட எங்களுக்காக உம் திரு மகன் வழியாக விண்ணகத் தந்தையிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

 

psalm-145

PSALM 145 —திருப்பாடல் : 145—-MORNING PRAYER

PSALM 145

திருப்பாடல் : 145

MORNING PRAYER

psalm 145

ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார். ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார். என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!

(திருப்பாடல் 145: 17-21)

🛐 ஜெபம் 🛐

விண்ணுலகில் வீற்றிருப்பவரே! விடுதலை அளிப்பவரே! விரும்பிக் கேட்பவற்றைக் கொடுப்பவரே! உம்மைப் போற்றுகிறேன். உம்மைப் புகழ்கின்றேன். நன்றி கூறுகின்றேன்.

தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், அண்மையில் இருக்கும் என் ஆண்டவரே உமக்கு நன்றி.🙏

இந்த காலை வேளையில் உம்மை நினைப்பது, உம்மைப் புகழ்வது, உம்மிடம் செபிப்பது மனதுக்கு மகிழ்ச்சி தருவதாகவும், ஆறுதல் அளிப்பதாகவும், ஆற்றலைக் கொடுப்பதாகவும் உள்ளது.

இறைவா! ஓய்வுநாள் சட்டத்தைப் பற்றி பேசிய பரிசேயர்களைப் போல் நானும் பிறரிடம் குறை காணும் போக்குடன் இருந்த தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன். ஏனெனில் அன்பு குறையும் இடத்தில்தான் குறைகள் பெரிதாகத் தெரியும் என்பதை நான் உணர்வேன். எனவே பிறரிடம் குறை காணும் குணத்தினை இனி நான் அடியோடு தவிர்ப்பேன்.

இயேசுவே, பிறரிடத்தில் குறை காணும் போக்கு உமது அன்புக் கட்டளையை நிறைவேற்ற எப்போதும் தடையாக உள்ளது என்ற உண்மையை நான் அனுதினமும் உணர்வேனாக. அன்பு பிறரிடத்தில் நிறைகளை மட்டுமே காணும் என்பதை நான் என் வாழ்வில் செயல்படுத்த அருள் புரிவீராக.

 

MARY

NOVENA TO OUR LADY OF VELANKANNI

 

NOVENA TO OUR LADY OF VELANKANNI

MARY

 

இரக்கம் மிகுந்த அன்னையே! எங்கள் பாவங்களின் பொருட்டு நீர் இயேசுவுடன் அனுபவித்த வேதனை எவ்வளவோ கொடூரமானது. அதை நினைத்து ஆலைவாய்க் கரும்பென மனம் வருந்துகின்றோம். ஓ, கருணைக் கடவுளின் கன்னித் தாயே! நீர் சிந்திய கண்ணீர் யாவும் எங்களுக்கு அருட்சுனையாய்ப் பாயட்டும். எங்கள் உள்ளத்தில் காணப்படும் தீய நாட்டங்களை எல்லாம் அகற்றி இறை அன்பை வளர்க்கட்டும். அன்புத் தந்தைக்கு ஏற்ற பிள்ளைகளாக நாங்கள் வாழ எங்களுக்கு ஆசீர் தாரும். தூய அன்னையே! எல்லா ஆபத்துகளினின்றும்

எங்களை பாதுகாத்தருளும். வேடனைக் கண்ட பறவை விண்ணிலே பறந்து மறைவது போலவும், புலியைக் கண்ட புள்ளிமான் புதருக்குள் பதுங்கி ஒளிவது போலவும், பாவிகளாகிய நாங்கள் உமது மாசற்ற திரு இருதயத்தில் அடைக்கலம் நாடி ஓடி வருகிறோம். எங்களை அரவணைத்து, இறைவனிடம் அழைத்துச் செல்ல எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

 

LIVING

LIFE TIPS —–WORTHY LIVING

LIFE TIPS

WORTHY LIVING

LIVING

 

மீண்டும் பேசினால் மேலும் மேலும், காயப்படுவோமென்ற பயத்தினாலே, மௌனத்தை தேர்ந்தெடுக்கிறது சிலரது அன்பு.

விரும்பி நிற்கத் தெரிந்தவர்களுக்கு விலகி நிற்கத் தெரியாது. காரணம் அவர்கள் அன்பை கடமையாக வைத்தவர்கள் அல்ல. உண்மையாக வைத்தவர்கள்.

புரிதல் இல்லாத இடத்தில், நீங்கள் உங்களது அன்பை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. காலம் அதன் பணியை சிறப்பாக செய்து முடிக்கும்.

நினைவில் வைத்திருங்கள். பிடிவாதங்கள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனம் என காலம் உணர்த்தும். அப்போது உங்களுக்கு வயதாகி இருக்கக்கூடும்.

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

MOR.PRAYER

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.

யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;

புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள்.

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கை

அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் ப+வுலகு நிறைந்துள்ளது.

(திருப்பாடல்கள் 33:1-5)

உலகை படைத்து, பராமரித்து வழிநடத்தி வரும் இறைவா! இதோ இந்த காலை நேரத்திலே, உம்மை போற்றி புகழுகிறோம்.

உம்மோடு பேசவும், உம்து அன்பை அனுபவிக்கவும், இன்னொரு புதிய நாளை எங்களுக்கு தந்தமைக்காக, உமக்கு நன்றி கூறுகிறோம்.

ஆண்டவரே! உமது அன்பை மறந்து நாங்கள் செய்த அனைத்து செயல்களுக்காகவும், இந்த நேரத்தில் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறோம். உமது அன்பிலிருந்து விலகி சென்றதற்காக மனம் வருந்துகிறோம். உமது பேரிரக்கத்தை முன்னிட்டு எங்களை மன்னித்தருளும் அப்பா.

எங்கள் வாழ்க்கை பயணத்தில் துணையாய் இரும்; எங்கள் அன்றாட செயல்களில், நேர்மையுடன் நடக்க எங்களுக்கு துணை புரியும்; இரக்க செயல்கள் செய்ய எங்களை ஈடுபடுத்தும்.

இவ்வாறு, எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பணிபுரிந்து, எங்கள் வாழ்வின் மூலம் உம்மை பிறருக்கு வெளிப்படுத்தி வாழ, எங்களுக்கு தேவையான அருள் வரங்களை தந்துருளும்.

 

NIGHT PRAYER

NIGHT PRAYER—–THANKS BE TO GOD

NIGHT PRAYER

THANKS BE TO GOD

NIGHT PRAYER

அன்பும், இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பு ஆண்டவரே,

இந்த இரவு நேரத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். மனிதரின் வார்த்தைகள் மற்றவர்களை விழச்செய்யும், செயலற்று போகச்செய்யும். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகள் வல்லமையுள்ளது; அவரின் வார்த்தைகள், எங்கள் வாழ்வில் காணப்படும் எல்லா பிரச்சனைகளையும் மாற்றவும், அமைதிப்படுத்தவும், விடுதலை தரவும், வல்லமையுள்ளதாகவும் எங்களுக்கு உமது ஆசீராக இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

ஆண்டவரே, நாங்கள் எப்போதும் உம்முடைய குரலுக்கு செவி கொடுக்கிறவர்களாகவும், உம்முடைய இறை வார்த்தைகள், எங்கள் வாழ்வில் ஆசீர்வாதமாகவும் இருக்க உமது அன்பை எங்களுக்கு தந்தருள வேண்டுகிறோம்.

இன்றைய எங்கள் அன்றாட பணிகளை, எங்கள் குடும்பத்தினரை ஆசீர்வதித்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இந்த நாள் முழுவதும், எம் வாழ்க்கை பயணத்தில் சிறப்பாக பயணிக்க, நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியான மனநிலையையும் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இன்று இரவு எமக்கு மன அமைதியையும், நல்ல உறக்கத்தையும் தந்தருளும். அதிகாலை எழுந்து, உம்முடைய பாதத்தில் அமர்ந்து, செபித்து, நாளைய எங்கள் பணிகளை இனிதே துவங்க, உமது மேலான இரக்கத்தின் ஆசீரை எமக்கு அளித்தருளும்.

எங்கள் தாழ்மையின் நன்றிகளையும், வேண்டுதல்களையும் ஏற்று, உமது அன்பின் ஊற்றால், இறை இரக்கத்தினால் எம்மை நிரப்பி ஆசீர்வதியும்.

– ஆமென்.