Site icon Life Setter Saluja

காலை செபம் 

                                                                                  காலை செபம் 

புனித இஞ்ஞாசியார் செய்த செபம்

அன்பான ஆண்டவரே! தாராள உள்ளதோடு வாழ எனக்குக் கற்றுத்தாரும். காயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் நான் என் வாழ்நாளில் பணி புரிவேனாக! ஊதியத்தை எதிர் நோக்காமல் நான் உழைப்பேனாக! ஒன்று மட்டும் போதும் ஓ என் இறைவா! உமது திருவுளத்தை நிறைவேற்றுவதால் வரும் இன்பமொன்றையே நான் ஆசிக்கிறேன்.

ஆமென்.

♦️ புனித இஞ்ஞாசியாரை நோக்கி செபம்

இறைவனின் அதிமிகப் புகழை இப்பூவுலகில் பரவச் செய்வதற்கும், எண்ணிக்கையில்லாத மக்களை விண்ணுலகில் சேர்ப்பதற்கும் இறைவன் தேர்ந்தெடுத்த புனித இஞ்ஞாசியாரே!

எளியேன் எனக்குத் தகுதியில்லை என்றாலும், உம் பேரிலுள்ள நம்பிக்கையாலும் உமது செல்வாக்கு வல்லபத்தாலும் ஏவப்பட்டு உமது சரணமாய் ஓடி வந்தேன். நீர் என் பாதுகாவலராயிருந்து என்னைக் காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். சோதனை வேளையில் எனக்கு ஆதரவாயிரும். இறைவன் திருமுன் பரித்துரைத்து என் குறைகளைப் போக்கியருளும். சிறப்பாக என் செயல்களையெல்லாம் அர்ச்சித்து பேறுபலனுள்ளனவாக்கி விண்ணுலகப் பரிசை உறுதிப்படுத்தும். வலிமையாகிய உத்தம இறையன்பை எனக்காகக் கேட்டுத் தந்தருளும்.

ஆமென்.

Exit mobile version