grateful

PSALM 103, MORNING PRAYER

திருப்பாடல் : 103

MOR.PRAYER 1

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.

(திருப்பாடல் 103: 1-4. 9-12)

🛐 ஜெபம் 🛐

எங்கள் குற்றங்களை எல்லாம் மன்னிப்பவரே! எங்கள் நோய்களை எல்லாம் குணமாக்குபவரே! எங்கள் பாவங்களை எல்லாம் ஆழ்கடலில் எறிபவரே! உம்மை போற்றுகின்றோம். உம்மைப் புகழ்கின்றோம். நன்றி கூறுகின்றோம். 🙏

தந்தையே! எங்களுக்கு நல்லதொரு சிறந்த ஆயனை கடந்த 12 ஆண்டுகளாக அளித்தீர். நன்றி இறைவா. திருச்சபையை திறம்பட வழி நடத்தத் தேவையான சிறந்த ஞானத்தையும், சீரிய குணநலன்களையும் அவருக்கு அளித்தீர்.

உயர்ந்த இரக்க குணத்தையும், தாழ்ச்சியையும், எளிமையையும் அவரிடமிருந்து நாங்கள் கண்டுணர்ந்து கற்றுக் கொள்ளுமாறு எங்களுக்கு எங்களின் சமகாலத்து வாழும் புனிதரை அளித்தீரே உமக்கு நன்றி.

“உன் பெயர் பேதுரு. இந்த பாறையின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன்” என்று கூறிய எம் இயேசுவே! உமது திருச்சபையின் முதல் திருத்தந்தை பேதுரு முதல் 266-வது திருத்தந்தை பிரான்சிஸ் வரை உமது அருளினால் திருச்சபை அற்புதமாக வளரச் செய்தீர். நன்றி இயேசுவே.

இரக்கத்தின் இறைவா, நேற்று உம்மிடம் அழைத்துக் கொண்ட எங்கள் திருத்தந்தை பிரான்சிஸை உமது சிறகுகளில் அணைத்துக் கொள்ளும். அவருக்கு நித்திய இளைப்பாற்றியைத் தந்தருளும்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

time

WASTE YOUR TIME WISELY, USE IT WISELY

time

WASTE YOUR TIME WISELY

REUSE:

When you waste your time wisely you are blessed to reuse it. Yes, wasting it wisely opens a new room for ideas and creativity. You are tend to hunt for relearning your time which is used wisely.

REDUCE:

When you waste your time wisely you are blessed to reduce your stress. Yes, wasting it wisely clears the way for innovative answers. You are indented to add more meaning for your life.

RESOLVE:

When you waste your time wisely you are blessed to resolve what was lost by you. Yes, wasting it wisely fastens your inner self with tremendous power. You are instilled to create a unique pathway.

READ:

When you waste your time wisely you are blessed to read the time with its great strength. Yes, wasting it wisely empowers your weak nature to turn into your awakening force. You are tempted to make a way.

Waste your time wisely

 

 

 

 

 

 

 

 

 

 

GOOD DAY

Life is worth living, life is to enjoy

Start with a thought.

LIVING
A person complained, “My friends are not true to me. My family and this entire world is really selfish.”
The teacher smiled & told a story.
In a tiny village there was a room with 1000 mirrors. One little girl went inside to play! Seeing thousands of children around her she was joyful. She smiled and clapped her hands and all the children smiled and clapped back. She considered the place as the world’s happiest and most beautiful place and visited often.
A sad and depressed man visited the place. He saw around him thousands of angry men staring at him. He raised his hands to hit them and in return 1000 hands lifted to hit him back. He thought, this is the worst place in the world and left that place.
This world is also a room with mirrors around us. What we let out is what the universe will give back! “This world is heaven and Hell. It’s up to us what we make out of it”.
Blessed Day

MOR.PRAYER

PSALM 16 , MORNING PRAYER

திருப்பாடல் : 16

MOR.PRAYER 1

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்’ என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.

(திருப்பாடல் 16: 1-2. 5, 7-11)

🛐 ஜெபம் 🛐

உயிர்த்த என் இறைவனே ! என் ஆண்டவரே ! என் தேவனே! நீரே என் கடவுள்.

ஆண்டவரே உம்மை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; நீர் எப்பொழுதும் என் வலப்பக்கம் உள்ளீர். எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.’

உயிர்த்த இயேசுவே, அன்று உம்மை கல்லறையில் உம்மைக் காணாது திரும்பிய பெண்களிடம் “அஞ்சாதீர்கள்” என ஆறுதல் கூறி அவர்களை தைரியமூட்டினீர்.

இன்று எண்ணற்ற பெண்கள் தங்களது குடும்பகளில், பணிபுரியும் இடங்களில், பொதுவெளிகளில் பலவித காரணங்களால் அஞ்சி நடுங்கும் நிலை உள்ளது. ஆண்டவரே, அவர்களது அச்சத்தை அகற்றி அவர்களுக்கு அருகில் ஆறுதலாக இருப்பீராக.

இறைவா, இன்று தாழ்ச்சியுள்ளவர்களாகவும், சிறுபிள்ளைகள் போல கபடமற்றவர்களாகவும் எங்களைப் புதுப்பித்து, உமது திருவுளத்திற்கு கீழ்படிந்து நடக்க அருள் புரிந்தருளும்.

உம்மை உண்மையுடன் அன்பு செய்பவர்களுக்கு, நீர் வாக்களித்திருக்கும் நிலையான வாழ்வை நாங்களும் பெறத் தகுதியுள்ளவர்களாக இருக்க அருள் புரிந்தருளும்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

smile

MORNING PRAYER

MORNING PRAYER

LAUGH

உம் வயிற்றின் கனியும் ஆசி பெற்றதே!
(லூக்கா 1;39-45)

❤ தியானிப்போம்❤
✝🌲 “மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்.(மத்12;33)
✝❤🌲 உண்மையான திராட்சைச் செடி நானே; என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். நீங்கள் அதன் கொடிகள், ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். (யோவா15:1-5) தந்தையின் திராட்சை செடியாக, அன்னை மரியின் கனியாக, சூசை தந்தையின் கொடியாக இம்மண்ணில் ஏழ்மையின் வடிவில் மலர்ந்து, நிலை வாழ்வின் நற்செய்தியை நற்கனிகளாக தந்து தம் பிறப்பால் உலகிற்கு ஒளியூட்டிய மெசியாவின் முதல் வருகையை நினைவூட்டும் திருவருகைக்கால நான்காம் மெழுகுத்திரி.

🙏ஜெபம்🙏
✝🧎‍♀ விண்ணின் விடியலாக,உலகின் ஒளியாக, நிலை வாழ்வின் நற்செய்தியாக எம்மை தேடி வந்த இயேசுவே! உம்மை அன்பு செய்கின்றோம். உமது மீட்பின் வருகைக்காக நன்றி கூறுகிறோம்.
+🧎‍♀ உங்களை நான் நண்பர்கள் என்றேன். ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.
+🧎‍♀ நீங்கள் என்னை தேர்ந்து கொள்ளவில்லை; நான் தான் உங்களை தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்.
+🧎‍♀ ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்கு கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.(யோவான் 15;15-17)

அன்பு இயேசுவே! திருவருகைக் காலம் தரும் புத்துணர்வால் ஊட்டம் பெற்றுள்ள நாங்கள் அன்னை மரியா சூசை தந்தையை போன்று இடர்களுக்கு மத்தியிலும் நற்கனிகள் பல தந்து உமது நண்பர்களாக திகழவும், அன்னை மரியின் பிள்ளைகளாக, இயேசுவின் சகோதரர்களாக, எங்கள் சொல்லாலும், செயலாலும் இயேசுவை நாள்தோறும் ஈன்று வளர்த்தெடுக்கவும் அருள் தாரும் ஆமென் அல்லேலூயா. ..
🌸( பிறரை அன்பு செய்து, மன்னித்து, நன்மைகள் புரியும் பொழுது இயேசுவை நாமும் ஈன்றெடுக்கின்றோம்.)

grateful

MORNING PRAYER, PSALM 30

திருப்பாடல் : 30

 MORNING PRAYER

grateful

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.

(திருப்பாடல் 30 : 1,3. 4-5. 10-12)

👼 ஜெபம் 👼

உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடிப்பவரே! வலியோரை அரியணையினின்று தூக்கி எறிபவரே!
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறவரே! பசித்தோரை நலன்களால் நிரப்புபவரே! செல்வரை வெறுங்கையராய் அனுப்புகிறவரே!
வாரும். இறங்கி வாரும்!
இந்த வையகத்தை வளப்படுத்த இறங்கி வாரும்.! வல்லவராம் கடவுளே வாரும். அரும் பெரும் செயல்கள் செய்ய இப்பூமிக்கு இறங்கி வாரும்.

இறைவா! சாராவுக்கும், ரெபேக்காவுக்கும், மனோவாகுவின் மனைவிக்கும், செக்கரியாவின் மனைவி எலிசபெத்திற்கும் நீர் மனமிரங்கி குழந்தைப் பேறு அளித்து அக்குழந்தைகளை உமது இறைத்திட்டத்திற்கு பயன்படுத்தியது போல அன்னாவின் அழுகுரலுக்கும் செவிசாய்த்து சாமுவேலை அளித்து அவரையும் உமது இறைத்திட்டத்திற்கு பயன்படுத்தினீர்.

இரக்கத்தின் இறைவா இன்று விஷேசமாக மகப்பேறின்றி தவிக்கும் எண்ணற்ற பெண்களுக்காக செபிக்கிறோம். புலம்பி அழும் அவர்களது அழு குரல்களைக் கேளும். மனமிரங்கி அவர்களைத் தொட்டு ஆசீர்வதித்து மக்கட்பேற்றினை அளித்தருளும். உமது இறைத்திட்டத்தை நிறைவேற்றும் கருவிகளாக அக்குழந்தைகளை மாற்றியருளும்.

 

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம்

NIGHT PRAYER

NIGHT PRAYER

மன்னிப்பதில் தாராள மனம் கொண்ட, கொடை வள்ளலான
எங்கள் ஆன்டவரே, இயேசுகிறிஸ்துவே! இன்றைய பகல் முழுவதும் உமது கருனையால் எங்களை வழிநடத்திய இறைவா, நாங்கள் மற்றவர்களுக்கு எதிராக எதாவது குற்றம் செய்திருந்தால், எங்களை மன்னியும் அப்பா. மேலும், பிறர் எங்களுக்கு எதிராக ஏதாவது குற்றம் செய்திருந்தால், அவர்களை மன்னிக்கும் மனபான்மையை எங்களுக்கு தந்தருளும்படியாகவும் உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் மீது அளவில்லாத அக்கரையும், கவலையும் கொண்டுள்ள எங்கள் ஆண்டவரே, கர்ஜிக்கும் சிங்கம் போல் யாரை விழங்கலாம் என்று, காத்துக்கொண்டிருக்கும் சாத்தானின் மாயவலையில் சிக்காமல் இருக்க, எங்கள் மீது கவலை கொண்டு, பேரன்பு கொண்டு எங்களை பாதுகாத்த உமது மேலான அன்பிற்காக, நன்றி செலுத்துகிறோம். இன்றைய நாள் முழுவதும் உமது சிறகுகளின் அரவணைப்பில், எங்களை பாதுகாத்து வந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இன்றைய நாளில் உம்முடைய அன்பினால், எங்களுடைய வேலைகள், பயணங்கள் மற்றும் எல்லா சூழ்நிலையிலும், எங்களை அற்புதமாக வழிநடத்தியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இறைவா! இந்த இரவு வேளையிலும் எங்களுடைய ஆன்மாவை, தங்களுடைய கரங்களில் ஒப்படைக்கிறோம். எங்களுக்கு மன அமைதியுடன், ஆழ்ந்த உறக்கத்தை தந்து, அதிகாலையில் முழு ஆன்ம உடல் சுகத்தோடு விழித்தெழுந்து, உமது திருமுகத்தை கானும் வரத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

MOR.PRAYER

MORNING PRAYER, PSALM 33

திருப்பாடல் : 33

MORNING PRAYER

HUMBLE

யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.

(திருப்பாடல் 33: 2-3. 11-12. 20-21)

🛐 ஜெபம் 🛐

எல்லாம் வல்ல எம் ஆண்டவரே! சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றவரே! வலிமை இழந்தோர்க்கு ஊக்கம் அளிப்பவரே! உம்மை வாழ்த்தி, போற்றி, ஆராதித்து வணங்குகின்றோம். ஒரு தாய் தன் சேயை அன்போடு நோக்குவது போல், இந்த இரவு முழுவதும் எங்கள் அருகில் இருந்து எங்களை உள்ளன்போடு உற்று நோக்கியவரே! உமக்கு நன்றி! மற்றொரு புதிய நாளை எங்களுக்கு வாய்ப்பாகக் கொடுத்து இருக்கிறீர். உமக்கு நன்றி அப்பா! 🙏

இறைவா, உதவி தேவைப்படுவோரை நான் அறிந்திருந்தும் அறியாதது போல இருந்த தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன்.

பிறரன்பு சேவையில் அன்னை மரியாளை நான் பின்பற்ற அருள் புரிவீராக. எனக்கு தேவைகள் பல இருப்பினும், நான் வாழ்வியல் துன்பங்களில் இருந்தாலும் பிறருக்கு உதவிகள் புரிவதில் அன்னை மரியாளைப் போல ஆவலோடும் முழு அர்ப்பணிப்போடும் செயல்பட அருள் புரிவீராக.

இறைவா ! இன்று விஷேசமாக தேவையில் இருப்போருக்காக வேண்டுகிறேன். அவர்களுக்கு குறித்த நேரத்தில் உதவிகள் கிடைத்திட பிராத்திக்கிறேன்.

இறைவா இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். என்னைக் காத்து வழி நடத்துவீராக.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

LIFE

PSALM 71, MORNING PRAYER

SURROUND

திருப்பாடல் : 71

என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.
என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை.
பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்; உமக்கே உரிய நீதி முறைமையைப் புகழ்ந்துரைப்பேன்.
கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.

 

grateful

PSALM 24, MORNING PRAYER

 

திருப்பாடல் : 24

grateful

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே.

(திருப்பாடல் 24: 1-6)

🌿 ஜெபம் 🌿

என்றும் வாழும் எங்கள் தந்தையே! இந்த அதிகாலை வேளையில் உம்மைப் போற்றுகிறேன். நன்றி கூறுகிறேன். நேற்றைய நாள் முழுவதும் என்னைக் காத்து வழிநடத்திய உம் கிருபைக்காக நன்றி.

தந்தையே உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.

இறைவா, எங்கே பகைமை நிறைந்துள்ளதோ அங்கே அன்பையும், எங்கே கயமை நிறைந்துள்ளதோ அங்கே மன்னிப்பையும் விதைத்திட அருள்புரியும். இதனால் இயேசுவே ! நீர் விதைத்த இறையாட்சி இப்பூவுலகெங்கும் செழித்து வளர்தோங்குக.
உமது இறையாட்சியில் நாங்கள் பங்கு கொள்ளும் பேற்றினை கொடுக்கவிருப்பதற்காக நன்றி.

இறைவா கடந்த இந்த 12 மாதங்களில் எங்களது இக்கட்டான காலக்கட்டங்களில் எல்லாம் எங்களோடு இருந்து எங்களைக் காத்து வழி நடத்தினீரே. நன்றி தகப்பனே.

இந்த ஆண்டு நாங்கள் அலகையின் தூண்டுதல்களினால் செய்த அனைத்து பாவங்களையும் மனமிரங்கி மன்னிப்பீராக.

இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றோம். நாங்கள் துவங்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருளும்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.