Human hands praying to god on mountain sunset background

MORNING PRAYER

MORNING PRAYER

PRAYER1

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

கடவுளை நோக்கி உரத்த குரலில் மன்றாடுகின்றேன்; கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள வேண்டுமென்று அவரை நோக்கி மன்றாடுகின்றேன்.

என் துன்ப நாளில் என் தலைவரை நாடினேன்; இரவில் அயராது கைகூப்பினேன்; ஆனாலும் என் ஆன்மா ஆறுதல் அடையவில்லை.

கடவுளை நினைத்தேன்; பெருமூச்சு விட்டேன்; அவரைப்பற்றி சிந்தித்தேன்; என் மனம் சோர்வுற்றது.

என் கண் இமைகள் மூடாதபடி செய்துவிட்டீர்; நான் கலக்கமுற்றிருக்கிறேன்; என்னால் பேச இயலவில்லை.

கடந்த நாள்களை நினைத்துப் பார்க்கின்றேன்; முற்கால ஆண்டுகளைப்பற்றிச் சிந்திக்கின்றேன்.

(திருப்பாடல்கள் 77:1-5)

✝️ஜெபிப்போமாக : 🛐

விண்ணக தந்தையே இறைவா! உம்மை போற்றுகிறோம்! நீரே விண்ணையும், மண்ணையும் படைத்தவர். அனைத்தையும் வழிநடத்தி வருபவரும், ஆள்பவரும் நீரே! உமக்கே அனைத்தும் அடிபணிகின்றன, உமக்கே மகிமையும், மாட்சியும் உரித்தாகுக ஆமென்!

அன்பு ஆண்டவரே! இந்த நேரம் வரை எங்களை பராமரித்து, வழிநடத்தி வந்த உமது இரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்!

இயேசுவே! எனக்கு வாழ்வே நீர்தான். நீர் என் வாழ்வில் இல்லை என்றால், நான் இருளில் வீழ்ந்து விடுவேன். அப்பா! உம்மை அதிகமாக நேசிக்கவும், எப்போதும் உமது அன்பு உறவில் வாழவுமே ஆசிக்கின்றேன். அன்பு இதயமும், பரிசுத்தமான உள்ளத்தையும் எனக்கு தந்தருளும்.

அப்பா! இன்றைய நாளில் பிறருக்கு வேதனையோ, வருத்தமோ, பெயரை கெடுக்கும் யாதொன்றும் என்னில் இருந்து ஏற்படாதவாறும்,

நாங்கள் பேசும் போது கவனத்தோடும், என் செயல்கள் விவேகத்தோடும் செயலாற்ற எனக்கு உதவியருளும். தீமையானது எதுவும், என் நாவில் இருந்து வராதபடி எனது சிந்தனையை பரிசுத்தமாக்கும்.

🙏🏻ஆமென்.🙏🏻

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

திருப்பாடல் : 103

MOR.PRAYER 1

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினம் கொள்பவரல்லர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.

(திருப்பாடல் 103: 1-4, 8-11)

🛐 ஜெபம் 🛐

அகில உலகையும் படைத்தவரே! இரக்கமும் அருளும் கொண்டவரே !
பேரன்பையும், இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றவரே! உம்மை இந்த காலை வேளையில் வாழ்த்தி, வணங்கி, போற்றி ஆராதனை செய்கிறோம்.

என்றென்றும் வாழும் எல்லாம்வல்ல எம் இறைவா! இந்த புதிய நாளை எங்களைக் காணச் செய்த உமது கிருபைக்காக நன்றி. நேற்றைய ஒய்வு நாளில் உமது இறைவார்த்தையைக் கேட்டு, உமது மகனும், எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் திருவுடலை உண்ணும் பெரும் பாக்கியத்தை எங்களுக்கு அளித்தீரே. நன்றி இறைவா!

இனிய இயேசுவே! அனுதினமும் உம் வழி நடக்க, உம்மைக் காண, உம்மைப் பின்பற்ற நாங்கள் ஆவல் கொண்டுள்ளோம். “என்னைப் பின்பற்றி வா..” என்ற உமது குரலைக் கேளாது, உமது அழைப்பை உணராது இருந்த எங்களது கடந்த கால தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிபைக் கேட்கிறோம். மன்னிக்கும் தேவனே மனமிரங்கி எங்களை மன்னித்தருளும். 🙏

ஆண்டவரே! நாங்கள் விசுவாசத்தில் என்றென்றும் நிலைத்திருந்து எந்த சூழ்நிலைகளிலும் உம் அழைப்பை ஏற்று நாங்கள் உம்மைப் பின்பற்ற எங்களுக்கு அருள் புரிவீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

SPECIAL

The way you treat your mother is the way life will treat you.

The way you treat your mother is the way life will treat you.

APPRECIATE

A mother is the heart of love and life itself. She embodies unconditional love—a love like no other. Do not judge her. Have you ever taken the time to sit with her, to truly listen to her stories, to understand the life she lived before you came along?

Perhaps she never told you about the struggles she endured, the silent battles she fought, or the scars she carries—scars that reopen every time memories resurface. She may have faced a painful childhood, a difficult youth, moments of loneliness, mistreatment, and hardship. Yet, she chose to keep her pain hidden, not wanting to burden you, not wanting you to see the shadows of her past.

Out of love, she remained silent. Maybe silence became her refuge, her way of protecting herself from reliving the suffering.

Honor her. Treasure her. Treat her with kindness, for she is a gift beyond measure. In doing so, you will invite blessings, peace, joy, stability, and a long, fulfilling life.

And remember, how you treat your mother will reflect in the way others treat you. The love and respect you show will shape the way the world responds to you.

There is only one mother. If you fail to cherish her now, regret may follow you in the years to come. And when sleepless nights come, it won’t be her presence keeping you awake—it will be the weight of your own neglect, the echoes of words unspoken, and the pain of missed chances that refuse to let you rest.

grateful

BE TOO MUCH

grateful

BE TOO MUCH

Be too much.
Be extra.
Live large.
Smile big.
Laugh hard.
Celebrate yourself.
Open your heart.
Express your emotions.
Use your words.
Giggle. Dance.
Soak in the Sun.
Splash in the waves.
Breathe deep, and love your life, you only get one.

Give yourself permission to take up space and be who you truly are.

Life isn’t meant to be tiptoed through – it’s meant to be felt, expressed, and celebrated.

So be bold, be real, and love the life that’s yours to live .

NIGHT PRAYER

NIGHT PRAYER

 

NIGHT PRAYER

NIGHT PRAYER

வல்லமை நிறைந்த ஆண்டவரே! இன்று முழுவதும் என்னை பாதுகாத்து, வழி நடத்திய உமது மேலான ஆசீருக்காக நன்றி செலுத்துகின்றேன்.

இன்று நான் எண்ணிய எண்ணங்கள், தேவைகள், செயல்திட்டங்கள், செய்து முடித்த பணிகள் அனைத்தையும், உம் பாதத்தில் சமர்ப்பித்து நன்றி கூறுகின்றேன்.

இன்று நான் யாருடைய மனதையாவது புண்படும்படியாக நடந்து இருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கின்றேன். உமது அருளினால் தான், நான் இன்று பல்வேறு காரியங்களை செய்ய முடிந்தது.

இன்று எனக்கு நீர் தந்த உணவு, உடை, பாதுகாப்பு அனைத்திற்கும் நன்றி கூறுகின்றேன்.

இந்த இரவில், தீய எண்ணங்கள், கெட்ட கனவுகள் என் மனதில் தோன்றாமல், எம்மை ஆசீர்வதியும்.

எமக்கு அமைதியான தூக்கம் தந்து, அதன் மூலம் நல்ல ஓய்வை கொடுத்து, நாளை புத்துணர்வோடு எழுந்து, என் பணிகளை தொடர வரம் தாரும். ஆமென்.

MOR.PRAYER

PASSION —DAILY PRAYER

PASSION —DAILY PRAYER

MOR.PRAYER

Day 4  – PASSION

📖 Key Verse: “Never be lacking in zeal, but keep your spiritual fervor, serving the Lord.” (Rom 12:11)

💭 Reflection: The disciples, once touched by the Fire of Love, were ablaze with a passionate fire, which prompted them to share Christ’s Love, without fear, even to the point of martyrdom. Spiritual passion is about faithful endurance, with deep joy and optimism. Fervour fades when it’s self-fuelled; but when led by the Holy Spirit, we remain passionate and zealous, regardless of the circumstances of life.

✅ Do I make sure to be faithful to my personal spiritual practices so that I may always be a Spirit-filled person?
✅ What can I do to reignite someone else’s faith?

🗣️ Quote from Early Church Fathers: “The flame of Divine Love kindled by the Spirit must not go out in us, but burn brighter day by day.” (St. Gregory the Great)

🙏 Prayer: O Holy Spirit, Spirit of fire, burn away my apathy and light a Holy Passion in me that endures, even amid the difficulties and challenges of life. Amen.

COME HOLY SPIRIT, FILL MY HEART!
COME HOLY SPIRIT, LEAD MY LIFE!

ENVIRONMENT

World Environment Day

World Environment Day

ENVIRONMENT

இன்று ஜூன் 05. உலக சுற்றுச் சூழல் தினம் World Environment Day. சுற்றுச் சூழல் தினம் 2025 ‘நெகிழி மாசை முடிவுக்கு கொண்டு வருவோம் – Beat Plastic Pollution’ என்கிற மையச் சிதன்னையில் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியது போல நம் சொந்த வீடாகிய இப்பூமியையும் மானுடத்தையும் பேணிக் காக்க அழைப்பு பெறும் நாள். சுற்றுச் சூழல் சார்ந்த நம் பார்வைகளையும், பணிகளையும் நேர்மையாக பரிசீலனை செய்யும் நாள். சுற்றுச் சூழல் ஆன்மீகத்தை உருவாக்கி, வளர்க்க வேண்டியதை பற்றி சிந்திக்க வேண்டிய நாள். பெருகி வரும் நெகிழி மாசை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட வேண்டிய நாள்.

நிலம், நீர், காற்று, ஆகாயம் மிக அதி வேகமாக மீட்க முடியாத வகையில் மாசுப்படுத்தப்படுகிறது. ஒலி மாசு, ஒளி மாசு, நெகிழி மாசு, மின்னணு மாசு, உணவு மாசு போன்றவை வரைமுறையின்றி அதிகரித்து வருகிறது. நுண் நெகிழி துகள்கள் – Micro and Nano Plastics மனித உடலில் புகுந்து வருகின்றன. இது மனிதனுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் ஆபாயம் அதிகரித்து வருகிறது.

பூமியில் உயிர் வாழ்வுக்கு தேவையான பல்லுயிரியம் மிகவேகமாக அழிந்து கொண்டிருக்கிறது. சூழலியலின் முக்கிய அம்சங்களாகிய வனங்களும், கடல்களும் திட்டமிட்டு வளர்ச்சி என்கிற போர்வையில் அழிக்கப் படுகின்றன. பூமி வெப்பமாதல் பெரும் காலநிலை நெருக்கடியை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. பூமியை காக்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

சுற்று சூழல் பிரச்னை களால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவது ஏழை நாடுகள் மற்றும் ஏழை மக்களே. மேலும் லாபம், சுரண்டல் மற்றும் வணிகமயம் ஆகியவற்றை மையப்படுத்திய அதிதீவிர முதலாளித்துவ போக்கு சுற்றுச் சூழல் சீர்க்கேடுகளுக்கு முக்கிய காரணம் என்பதை உணர வேண்டும்.

இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். பூமியை சிதைத்து, சுரண்டி அழிப்பதால் பூமிக்கு பிரச்னை இல்லை. தொல்லியல் காலத்தில் இருந்தே பூமி சிதைவுகளை சந்தித்து மீண்டு எழுந்துள்ளது. பூமி சிதைவதால் மனிதகுலம் தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

இறைவனின் உன்னத படைப்பாகிய இந்த அழகிய பூமியையும், அதன் இயற்கை வழங்களையும், சுற்றுச் சூழலை யும், படைப்பின் மகுடம் எனப்படும் மானுடத்தையும் பேணிக் காக்க மற்றும் நிலைத்த நீடித்த வளர்ச்சிக்காக என்ன திட்டங்கள் வைத்திருக்கிறோம்? அடுத்த தலைமுறைக்கு நாம் எத்தகைய பூமியை கொடுக்க போகிறோம்?

நம் நற்செய்திப் பணியில், அருட்பணி திட்டத்தில் நம் அனைவரின் சொந்த இல்லமாகிய பூமியையும் அதன் வளங்கள் அனைத்தையும் பேணி காக்க தெளிந்த இலக்குகள் மற்றும் கொள்கைகளுடன் கூடிய திட்டம் இருக்கிறதா?

ஐக்கிய நாடுகள் அவையின் நீடித்த நிலை வளர்ச்சிக்கான 17 இலக்குகள் பற்றி நம் பணித்தளங்களில் விழிப்புணர்வு கொடுக்கிறோமா? செயல்படுத்த திட்டங்கள் வகுத்து இருக்கிறோமா? திருத்தந்தை பிரான்சிஸ் 10 ஆண்டுகளுக்கு முன் நமக்கு தந்த ” புகழ் அனைத்தும் உமக்கே ” திருமடல் நம் மக்களிடம் சென்று சேர்ந்து இருக்கிறதா? திருமடலை வாசித்து, விவாதித்து செயல் திட்டங்கள் வகுக்க முயற்சி செய்தோமா? நிலைத்த நீடித்த நிறை வளர்ச்சிக் காக சிந்திப்போம்.

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

MOR.PRAYER

இயேசுவின் திருஇருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்

இயேசுவின் திருஇருதயமே ! கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும் சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம். நேசமுள்ள இயேசுவே ! எங்கள் குடும்பங்களில் உள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம் .தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திருஇருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும். தவறி எங்களில் எவனாவது உமது திருஇருதயத்தை நோகச் செய்திருந்தால் அவன் குற்றங்களுக்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவனுக்கு கிருபை செய்தருளும். இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், ஊனமுற்றோர்களுக்கு ஊன்றுகோலும் ,விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்து காத்திருப்பீராக.

இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே ! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தரே, இந்த ஊரில் உள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும், அவர்களுடைய திருஇருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வபயத்தையும் வளரச் செய்யும். சீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும், மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம்.

திவ்விய இயேசுவே !முறைமுறையாய் உமது திரு சிநேகத்தில் சீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும் .

ஆமென்.🙏

APPRECIATE

Life Is What We Make It.

Life Is What We Make It...

APPRECIATE

Life is a game—enjoy the ride.
Laugh out loud, let joy be your guide.
Tears will fall, and pain will stay,
But we choose how we face each day.

Life is a song—dance with grace.
Sadness comes, but joy has its place.
A smile can heal, a kind word uplift,
Let this be our gift: life is what we make it.

Life holds both right and wrong,
We grow through struggles, tough and strong.
Your life and mine, both simple and grand,
It’s in our hands—life is what we make it..

PSALM 68

PSALM 68 PRAYER

PSALM 68 PRAYER

 

திருப்பாடல் : 68PSALM 68

கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும். எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர். உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். வானங்களின் மேல், தொன்மைமிகு வானங்களின் மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்; இதோ! அவர் தம் குரலில், தம் வலிமைமிகு குரலில், முழங்குகின்றார். கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள். அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது; அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது. கடவுள் போற்றி! போற்றி!

(திருப்பாடல் 68: 28-29, 32-35c)

🛐 ஜெபம் 🛐

நம்பிக்கையைத் தருகின்ற நல்அமுதே! என் வாழ்வை நம்பிக்கையில் துலங்க செய்பவரே! உம்மை தாழ்ந்து பணிந்து ஆராதிக்கின்றோம். உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

“பெற்றுக் கொள்வதைவிடக் கொடுத்தலே பேறுடைமை” என்று கூறிய எம் இயேசுவே, பிறருக்கு அதிக அளவில் உதவி செய்ய தகுந்த சூழ்நிலையை எங்களுக்குத் தந்தருளும். அன்னை மரியின் அரவணைப்பில், தூதர்களின் பாதுகாப்பில் கண்விழித்து நாங்கள் மீண்டும் வாழவும், உம்மைப் போற்றிப் புகழவும், எங்களின் ஆன்மாவின் மீட்புக்காகவும் மீண்டும் ஒரு புதிய நாளைத் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இறைவா! உம் திருமுகத்தைத் தேடவும், உம் திருவழியில் நடக்கவும், எங்கள் முழு உள்ளத்தோடும், ஆன்மாவோடும் உம்மை அன்பு செய்யவும், உமக்காக வாழவும், பாவத்தை விட்டு நாங்கள் விலகவும் அருள்புரியும்.

இயேசு, மரி!, சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.