MORNING PRAYER

MORNING PRAYER

இன்று ஒரு சிந்தனை!

அறிவு என்பது, புதையல் பெட்டகம் என்றால், பயிற்சியே அதன் திறவுகோல்; முயற்சி இருந்தால், செல்லும் பாதையெல்லாம், வெல்லும் பாதைகள் தான்!

வாழ்க்கை என்பது, பந்தயம் அல்ல ஓடி சென்று முதலிடம் பிடிக்க, அது ஒரு அழகான பயணம், ஒவ்வொன்றையும் அனுபவித்து ரசித்து நகர வேண்டும், அது காட்டும் பாதையில்!!

சிலருக்கு வரும் துன்பமும், துயரமும் பொதுவானதுதான், கையாளும் விதம்தான் வெவ்வேறானது; சிலர் தடுமாறி முயலாமல் முடங்கிடலாம், சிலர் விடாமல் முயன்று சாதித்து தடம் பதிக்கின்றனர்!!!

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம்

எம் இரக்கத்தின் ஊற்றே இறைவா! எங்கள் மூதாதையரான இஸ்ரேல் மக்கள், உம்மை விட்டு பலதடவை விலகிச் சென்றாலும், அவர்களை மன்னித்து என்னிலடங்கா அற்புதங்களை செய்தீர்கள். செங்கடலை இரண்டாக பிரித்து, தரையிலே நடக்கச் செய்தீர். பாறையைப் பிளந்து, தண்ணீர் பொங்கிவர செய்தீர். வானத்திலிருந்து மன்னா என்ற உணவை, இஸ்ரேல் மக்கள் உண்பதற்கு வேண்டிய மட்டும் பொழியச் செய்தீர் அப்பா. நன்றி ஆண்டவரே.

அதே போல் நாங்களும், பலதடவை உம்மை விட்டுச் சென்றாலும், எங்களை கைவிடாமல், எங்கள் தேவைகள் அனைத்தையும், எங்களுக்காக கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அப்பா. ஒரு தாய் தன் பிள்ளையை தேற்றி பாதுகாப்பது போல், ஒவ்வொரு நாளும் எம்மை அரவணைத்து வழிநடத்தி வருகிறீர் அப்பா. நன்றி ஆண்டவரே.

இன்றைய நாள் முழுவதும், உம்மை விட்டு விலகிச் செல்லாமல், உம்முடைய வலது கரத்தால் எங்கள் கைகளை பிடித்து, எங்களை அற்புதமாக வழிநடத்தியதற்காக, உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றைய இரவு வேளையிலும், எங்களை உமது அடைக்கலத்திலே ஒப்படைக்கின்றோம். இயேசுவே! எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், அமைதியான மனநிலையையும் தாரும் அப்பா. அதிகாலையில் முழு ஆன்ம, உடல் நலத்துடன் விழித்தெழுந்து, உமது திருமுகத்தைக் கானும் வரத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்

FABULOUS FRIDAY

FABULOUS FRIDAY

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்.அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்.இன்னும் விண்ணிலும் மண்ணிலும் வியத்தகு செயல்களைச் செய்து காட்டுவேன்.
யோவேல் 2:28-30.
இன்நாள் ஆசீர்வாதமாக அமைவதாக

SHORT STORY, “invisible screws

“invisible screws SHORT STORY” 

A teacher conducted a test. On the question paper was a simple sketch of a chair, with one question: “What’s the most important part of this chair?”

Students wrote answers like: “The legs.” “The seat.”
“The backrest.” and so on.

The teacher shook her head and said, “None of you got it right.” She smiled and explained, “The most important part is the one we don’t take notice of. ‘The screws’ that hold it all together. Without them, the chair would collapse.”

Life works the same way. It is not always the big or visible things that matter most. It’s the unseen support — family, health, kindness and the little choices we make each day.

So let’s never overlook the “invisible screws” in our lives. They are the quiet reasons that we are still standing strong.

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

“மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே”.

(திருப்பாடல்கள் 24: 1-6)

என்றும் வாழும் எங்கள் தந்தையே! இந்த அதிகாலை வேளையில் உம்மைப் போற்றுகின்றேன், நன்றி கூறுகின்றேன். நேற்றைய நாள் முழுவதும் என்னைக் காத்து, வழிநடத்திய உம் அன்பிற்காக நன்றி அப்பா.

தந்தையே! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.

இறைவா! எங்கே பகைமை நிறைந்துள்ளதோ, அங்கே அன்பையும்; எங்கே கயமை நிறைந்துள்ளதோ, அங்கே மன்னிப்பையும் விதைத்திட அருள்புரியும். இதனால் இயேசுவே! நீர் விதைத்த இறையாட்சி, இப்பூவுலகெங்கும் செழித்து வளர்தோங்குக. உமது இறையாட்சியில் நாங்கள் பங்கு கொள்ளும் பேற்றினை கொடுக்கவிருப்பதற்காக நன்றி அப்பா.

இறைவா! கடந்த 12 மாதங்களில், எங்களது இக்கட்டான காலக்கட்டங்களில் எல்லாம், எங்களோடு இருந்து எங்களைக் காத்து வழி நடத்தினீரே. நன்றி தகப்பனே.

இந்த ஆண்டு, நாங்கள் அலகையின் தூண்டுதல்களினால் செய்த அனைத்து பாவங்களையும் மனமிரங்கி மன்னிப்பீராக.

இறைவா! இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். நான் துவங்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருளும்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு செபம்

அடுத்தவர் அறியாமல் அயலானுக்கு உதவிடும்போது, ஆண்டவராகிய நீர் கைமாறு அளிக்கின்றீர் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்த இயேசுவே! இன்றைய நாள் முழுவதும் உமது அருளுதவியில் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, உமது அன்பு பிள்ளைகளைப்போல் அரவணைத்து காத்து, வழிநடத்தியதற்காக நாங்கள் உம்மைப் போற்றி புகழ்கின்றோம்.

நாங்கள் இயங்குவதும், இருப்பதும் உம்மாலே; உமது அருட்கரம் எங்களோடு இருந்து, அறவழிகாட்டி, வாழ்வு என்னும் பாதையில் அழைத்துச் சென்று, அற்புதங்கள் செய்து வாழ வைத்ததற்காக நன்றி கூறுகின்றோம். அடுத்தவர் தரும் அங்கீகாரம் அல்ல; ஆண்டவராகிய நீர் தரும் அருள் ஆசீர் அபரிமிதமானது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு செயலையும் உமது மகிமைக்காக செய்ய, நீர் தந்த அருளுக்காக நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவரே! சிறிய அளவு செய்தாலும், உள்ளத்திலிருந்து கொடுக்கும்போது, உள்ளத்தை உற்றும் நோக்கும் நீர், உரிய கைமாறு செய்வீர் என்பதை உணர்ந்து, எங்களால் முடிந்ததை பிறருடைய வாழ்வுக்காக வழங்கிட, எங்களைத் தூண்டியதற்காக நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவரே! இந்த இரவு வேளையில் உறங்கச் செல்லும் நாங்கள், உமது அருட்கரங்களை நோக்கி எங்களுடைய புறக்கரங்களை நீட்டுகின்றோம். உமது காயப்பட்ட கரங்கள், எங்களுடைய உள்மனக் காயங்களை ஆற்றி, தேற்றி இளைப்பாறுதல் தந்து, இனிய உணர்வுகளோடு, உறவுகளோடு புதிய நாளை வாழ்ந்திட வழிகாட்ட வேண்டும் என்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

FF—-FOREVER FAITHFUL

FF—-FOREVER FAITHFUL

Corporal Jeffrey Lee Nashton is a former Marine Corps sergeant in the US.

On Oct. 23, 1983, a suicide bomber drove a truck load of explosives into the Marine Camp at Beirut International Airport, Lebanon, killing 241 soldiers.
Nashton, a lance corporal, just 23 at that time, was among those severely injured in the attack.

Nashton had many tubes, running in and out of his body, with grave injuries all over.
A witness would say, that ‘he looked more like a machine than a man’.

Yet, he survived!

It is said, that two days after the bombing, while lying on the hospital bed in Weisbaden, Germany…
… in deep pain and agony, Nashton scribbled two words on a note and gave to his commander, Marine Commandant Paul X. Kelley.

The two words on the note read: “Semper Fi”

“Semper Fi” is the Latin motto of the Marines.
It means: “Forever Faithful!”

The pledge of “Semper Fi”…
… strengthened the injured man, in his moments of agony and struggle!
… became the reason for the wounded person, to remain steadfast in the face of anguish!

However, life seemingly handed them something quite opposite…
Their childlessness caused to seem that the Lord had totally forgotten!

How true is this situation in our own lives too?

We bank on God’s promises that “He would provide” everything…
… but when some of our expectations fall short, we feel God is just not with us!

We feel joyful to know that God’s Providence will guide us through…
… yet, when some unforeseen and sudden mishaps happen, we feel God has forgotten us!

This is where we need to look to Zechariah and Elizabeth and be inspired by their amazing faith.

Though all possibilities of hope and expectation was “lost”, humanly speaking…
… they still kept the faith!
… they still remained true to the Lord!
… they still continued to be devout to God!

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம்

இரக்கமிகு ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் நீர் எங்களுக்காக செய்யும் அனைத்து வல்லமைமிக்க மற்றும் அற்புதமான காரியங்களுக்காகவும் நாங்கள் உம்மை நேசிக்கிறோம், நன்றி செலுத்துகிறோம்!

எங்கள் எதிரிகளின் அனைத்து தாக்குதல்களையும் தடுக்க உமது வலிமைமிக்க சம்மனசுக்களை எங்களைச் சூழ்ந்திருக்கச் செய்ததற்காக நன்றி. கடினமான பகல்வேளைப் பணிகளின் பிறகு, பல சவால்களை எதிர்கொண்டு, உமது அளவற்ற அன்பு, கவனிப்பு மற்றும் பாதுகாப்பில், முழுமையாக ஓய்வெடுக்க எங்களுக்கு உதவி புரியும். இப்போது நாங்கள் உறங்கச் செல்லும்போது, ​​இரவில் எங்களைக் காத்துக்கொள்ளவும், கவனிக்கவும், பாதுகாக்கவும், விடியற்காலையில் எங்களை எழுப்பவும் உம்மை பிரார்திக்கிறோம்.

அப்பா, எங்கள் கவலைகளை நீர் அறிவீர்! எங்கள் கஷ்டங்களை கவனித்துக்கொள்கிறீர். எனவே எங்களுடைய கடினமான கவலைகள் அனைத்தையும் நாங்கள் உம்மிடம் ஒப்படைக் கிறோம். எமது கடின சூழ்நிலைகளை நாங்கள் உமது காலடியில் வைக்கிறோம். ஒரு புதிய நாள் தொடங்கும்வரை எங்களுக்கு அமைதியான உறக்கத்தைக் கொடுத்தருளும். இவை அனைத்தையும் எங்கள் இரட்சகராகிய இயேசுவின் தூய திருநாமத்தில் ஜெபிக்கிறோம்.
ஆமென்!

MORNING PRAYER

MORNING PRAYER

இறைப்பற்றுள்ளவர்களோடு, உனக்குத் தெரிந்தவரை கட்டளைகளைக் கடைப்பிடித்தவர்களோடு, ஒத்த கருத்து உடைவர்களோடு, நீ தவறினால் உன்னுடன் சேர்ந்து வருந்துபவர்களோடு, எவ்பொழுதும் இணைந்திரு.உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில்;

அதைவிட நம்பத்தக்கது உனக்கு வேறெதுவுமில்லை.இவை எல்லாவற்றுக்கும்மேலாக, உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்.
சீராக் 37:12,13,15.
இன்நாள் ஆசீர்வாதமாக அமைவதாக
இன்றைய இறைவார்த்தையை ஒருவருக்காவது பகிர்வோம்

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம்

இரக்கமிகு ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் நீர் எங்களுக்காக செய்யும் அனைத்து வல்லமைமிக்க மற்றும் அற்புதமான காரியங்களுக்காகவும் நாங்கள் உம்மை நேசிக்கிறோம், நன்றி செலுத்துகிறோம்!

எங்கள் எதிரிகளின் அனைத்து தாக்குதல்களையும் தடுக்க உமது வலிமைமிக்க சம்மனசுக்களை எங்களைச் சூழ்ந்திருக்கச் செய்ததற்காக நன்றி. கடினமான பகல்வேளைப் பணிகளின் பிறகு, பல சவால்களை எதிர்கொண்டு, உமது அளவற்ற அன்பு, கவனிப்பு மற்றும் பாதுகாப்பில், முழுமையாக ஓய்வெடுக்க எங்களுக்கு உதவி புரியும். இப்போது நாங்கள் உறங்கச் செல்லும்போது, ​​இரவில் எங்களைக் காத்துக்கொள்ளவும், கவனிக்கவும், பாதுகாக்கவும், விடியற்காலையில் எங்களை எழுப்பவும் உம்மை பிரார்திக்கிறோம்.

அப்பா, எங்கள் கவலைகளை நீர் அறிவீர்! எங்கள் கஷ்டங்களை கவனித்துக்கொள்கிறீர். எனவே எங்களுடைய கடினமான கவலைகள் அனைத்தையும் நாங்கள் உம்மிடம் ஒப்படைக் கிறோம். எமது கடின சூழ்நிலைகளை நாங்கள் உமது காலடியில் வைக்கிறோம். ஒரு புதிய நாள் தொடங்கும்வரை எங்களுக்கு அமைதியான உறக்கத்தைக் கொடுத்தருளும். இவை அனைத்தையும் எங்கள் இரட்சகராகிய இயேசுவின் தூய திருநாமத்தில் ஜெபிக்கிறோம்.
ஆமென்!