VELANKANNI MATHA

NOVENA FOR OUR LADY OF VELANKANNI

🌿 வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம்

VELANKANNI MATHA

ஓ, தூய அன்பின் அன்னையான ஆரோக்கிய கன்னிகையே! நீர் இயேசுவின் தாய் என்பது பற்றி மிக்க பெருமை கொள்கிறோம். உம்மை உள்ளத்துடன் ஏற்றிப் போற்றி வாழ்த்துகிறோம். இறை தூதர் அறிவித்த நற்செய்தியைத் தாழ்ச்சியான உள்ளத்துடன் ஏற்றுக் கொண்டீர் என்பதை நாங்கள் பக்தியுடன் தியானிக்கின்றோம் அருள் நிறைந்த மரியே வாழ்க! நீர் இறை மகனைக் கருவாக உமது திரு வயிற்றில் ஏந்திய நேரம் முதல், உம் புகழ் விண்ணோக்கி வளர்ந்தது. வரங்களும் அருளும் உம்மில் நிறைந்திட நீர் இறைவனின் தாயானீர். பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. கிறிஸ்துவில் நீர் பெற்ற புது வாழ்வில் நாங்களும் பங்கு கொண்டு, அருள் நிறைந்தவர்களாக இருக்க எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். உமது தாழ்ச்சியைக் கண்ட விண்ணக அரசர் உம்மில் மனிதனானார். உமது நிகரில்லாக் கற்பின் மணம் கமழ தூய ஆவியார் உம் மீது எழுந்தருளினார். ஓ, கருணை நிறைந்தவளே! உம்மில் இறைவன் ஒன்றித்தது போல், அருள் சாதனங்கள் வழியாக நாங்களும் அவருடன் ஒன்றித்து வாழ எங்களுக்காக இறைவனிடம் மன்றாடும். ஆதித் தாயின் தீவினையால் சபிக்கப்பட்ட மனுக்குலம் உம் வழியாக ஆசீர் பெற்றுள்ளது. ஓ, மாதர்களின் மாணிக்க ஒளிச் சுடரே! தாய்மார்களின் தூய இரத்தினமே! சுந்தரவதிகளின் சுந்தரியே! எல்லாத் தலைமுறைகளும் உம்மைப் பேறுடையாள் எனப் போற்றுமே. உம்மைப் பணிந்து வாழ்த்துகிறோம் தாயே! எங்களை உம் அன்புக் கரங்களால் ஆசீர்வதித்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

(தூய ஆரோக்கிய அன்னையின் புகழ்மாலையைச் சொல்லவும்)

PSALM 149

PSALM 149 MORNING PRAYER

திருப்பாடல் : 149  MORNING PRAYER 

]PSALM 149

 

ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக!
அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது.

 

(திருப்பாடல் 149: 1-6a,9b)

🛐 ஜெபம் 🛐

தாழ்நிலையில் உள்ளவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைபடுத்தும் என்றும் வாழும் எல்லாம்வல்ல எம் இறைவா! எல்லாவிதமான புகழ்ச்சிக்கும் ஆராதனைக்கும் உரியவர் நீர்! இந்த காலை வேளையில் தந்தையே உம்மை வாழ்த்தி போற்றுகிறோம்.

இறைவா, புதிய வாரத்தில் துவக்கத்திலிருக்கும் எங்களுக்கு இந்த வாரத்தில் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் அறிவுறுத்தும். இந்த வாரம் முழுவதும் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் எங்களுக்குக் கிடைக்கப் பெற அருள் புரிவீராக.

“ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.”* என இறைவா எங்களை அழைத்தீர்.

இயேசுவே, நீர் ஒருவர் மட்டுமே உலகின் ஒளி என்பதை மக்கள் உணர்ந்தவர்களாய் உம் பாதையில் எந்நாளும் நடந்திட அருள்புரிவீராக.

குருட்டு வழிகாட்டிகளை நம்பி, ஒளியென நினைத்து அவர்கள் பின்னே இருளை நோக்கிப் பயணம் செய்யும் எண்ணற்ற நபர்களின் அகக் கண்களைத் திறந்தருளும். அவர்கள் செய்து கொண்டிருக்கும் தவறினை அவர்களுக்கு உணர்த்தியருளும். அலகையின் கைகளில் இருந்து அந்த ஆன்மாக்களைப் பாதுகாத்தருளும்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

 

 

HUMBLE

COME DOWN TO EXPLORE HUMBLING ONESELF IS A LEARNING

COME DOWN TO EXPLORE

HUMBLING ONESELF IS A LEARNING

HUMBLE

 

பரபரப்பாக இயங்கும் வங்கியில் இரண்டொரு மாதம் முன்

பு – ஒருநாள் அவரை கவனித்தேன்.

வெள்ளை வேட்டி. வெள்ளை – தொள தொள – சட்டை. அறுபது வயதிருக்கலாம்.

ஒதுக்குப் புறமாக உட்கார்ந்திருந்த என் அருகில் வந்தமர்ந்தார்.

கையில் பணமெடுக்கும் செலான்.

கண்டிப்பாக எழுதித் தரச் சொல்லுவார் என்கிற இறுமாப்புடன் பேனாவில் கை வைத்துத் தயாராய் இருந்தேன்.

அவர் தன் சட்டையின் மேல் பையிலிருந்து பேனாவை எடுத்தார்.

நடுங்கும் விரல்களில் செலானில் பெயர், தேதியை எழுதினார்.

பாஸ் புக்கை சரி பார்த்தபடியே, ஒவ்வொரு எண்ணாய்ப் பொறுமையாய் அக்கவுண்ட் நம்பரை எழுதினார்.

எழுதிக் கொண்டே என் பக்கம் திரும்பி சிரித்தார்.

“எழுதனும்களாய்யா?” என்றவனை ‘வேண்டாம் தம்பி” என்று சிரித்து மறுத்தார்.

தொகை எழுதும் Column வந்ததும், உள் பையிலிருந்து எதையோ எடுத்தார்.

சாணிப் பேப்பரில் அச்சடிக்கப்பட்டு நான்காய் மடித்து வைத்திருந்த அது – வாய்ப்பாடு !!

”மொதல்லல்லாம் யார்ட்டயாச்சும் எழுதித் தரச் சொல்லிக் கேட்கறதுண்டு தம்பி. ஒருநாள் என் பையன்ட்ட சொன்னப்ப, படிச்சிருக்கலாம்லப்பா ன்னு கேட்டுட்டான். சங்கடமாப் போச்சு. படிக்காட்டி தான் என்ன.. நாம நெனைச்சா எழுத முடியாதான்னு இப்ப, நானே எல்லாம் எழுதிக்கிடறது. ஆனா இந்த நம்பருங்க மட்டும்தான் மனசுக்குள்ள நிக்க மாட்டீங்குது. அதான் வாய்ப்பாடு புக்கை வெச்சுக்க ஆரம்பிச்சேன்” என்றார்.

அவரை நினைத்துப் பெருமையாக இருந்தது !

அதன்பிறகு பலமுறை அவரைக் காண்பதும், புன்னகையைப் பரிமாறிக் கொள்வதுமாய்க் கழிந்தது.

ஒருமுறை திண்டுக்கல்லில் ஓர் இடத்தைச் சொல்லி, “அங்க ஒரு பெட்ரோல் பங்க் இருக்குல்ல.. அங்க தான் இருப்பேன்” என்றார்.

இரண்டு நாள் முன், பைக் பெட்ரோலுக்காக அருகே இருந்த பெட்ரோல் பங்குக்கு செலுத்தினேன்.

பெட்ரோல் அடித்துக் கொண்டிருந்த போது தான் அங்கே அந்தப் பெரியவரைப் பார்த்தேன்.

 

காற்றுப் பிடிக்கும் இடத்தருகில் தரையில் அமர்ந்து எஞ்ஜின் போன்ற எதையோ நோண்டிக் கொண்டிருந்தார்.

நிமிர்கையில் அவரும் என்னைப் பார்த்திருந்தார்.

சிரித்தபடி அருகே வந்து, “வாங்க வாங்க தம்பி..” என்றபடியே அருகே வர, நான் பைக்கை விட்டிறங்கியபடி அவரிடம் நெருங்கினேன்.

“பைக்கை அப்டி ஓரமா நிறுத்துங்க..” என்றவர் அலுவலக அறைக்கு நடந்தார்.

“இல்லீங்கய்யா.. நான் கெளம்பறேன். நீங்க வேலையைப் பாருங்க” எனும் போது …

“அட வாங்க தம்பி” என்று கையைப் பிடித்து அழைத்துப் போனார்.

அலுவலக அறையில் ஒரு இளைஞர் அமர்ந்திருக்க, போய் அறிமுகப்படுத்தினார்.

“பேங்க்ல அடிக்கடி பார்ப்பேன்ம்பேனே? இவரு தான். இந்தத் தம்பிகிட்ட மட்டும் தான் பேசுவேன் அப்பப்ப” என்று சொல்லிவிட்டு, “டீயா காப்பியா” என்று கேட்டார்.

இல்லீங்கய்யா” என்றவனை..
“அட சும்மா இருங்க” என்று விட்டு, அலுவலக இளைஞரிடம்,

‘ஒரு 20 ரூவா குடுப்பா.. டீ வாங்கிட்டு வரேன்” என்று வாங்கிக் கொண்டு போனார்.

என்ன பேசுவது என்று புரியாமல், “பெரியவர் ரொம்ப கவனம்ங்க. பேங்க் வர்றப்ப பார்த்திருக்கேன். அவரு பையன் ஏதோ பேசிட்டான்னு அவரே எல்லாத்தையும் எழுதிக்கிறார். நீங்க வேற யாரையாச்சும் கூட அனுப்பலாமே சார்? பாவம் வயசான காலத்துல….”

“இல்லீங்க.. அவருக்கு சில வேலையை அவரே செஞ்சாத் தான் பிடிக்கும்.. அப்டியே வளர்ந்துட்டார்” என்றார் இளைஞர்.

“அதுசரிதான்ங்க. நீங்க ஓனர். நீங்க சொன்னா கேட்க மாட்டாரா என்ன?”

ஒரு 30 வினாடி சிரித்தவர் சொன்னார்:

 

நீங்க வேறங்க. அவருதாங்க ஓனர். இந்த பங்க், அதோ அந்த காம்ப்ளக்ஸ் எல்லாம் அவருது தான். அவர் பையன் தான் நான். எனக்கு கல்யாணம் ஆகறவரைக்கும், எனக்கே சம்பளம்தான்னுட்டார்”

விக்கித்துப் போய் வெளியே பார்த்தேன்.

அந்தப் பெரியவர் டீ பார்சலோடு நடந்து வந்துக் கொண்டிருந்தார்.

என்னை யாரோ பளார் என்று அறைந்தது போலிருந்தது!!

1. என்ன ஒரு அருமையான மேனேஜ்மெண்ட்.?!!

2. என்ன ஒரு உழைப்பு..?!!!

3. சிம்பிளிசிட்டி..!!!!

4. வாழ்க்கையில் எதார்த்தம்..!!!

நாம் கற்றுக் கொள்ள இன்னும் இவரைப் போல மாமனிதர்கள் இருக்கிறார்கள்.

நாம் கொஞ்சம் கீழே இறங்கி வர வேண்டும்!!

LIFE

PURPOSE IN LIFE

PURPOSE IN LIFE

LIFE

What is our purpose in life?”
What if I say that we have fulfilled it when we took an extra hour to talk to that kid or that old neighbour? Or when we paid for that young couple in the restaurant? Or when we saved that little puppy in the traffic? Or when tied our father’s shoe laces for him?

Our problem is that we equate our purpose with goal-based achievement. The Universe isn’t interested in our achievements but just our hearts. When we choose to act out of kindness, compassion and love, we are already aligned with our true purpose. There is no need to look any further! Maybe in the end, it doesn’t matter what we have achieved, What we owned or how we looked. Maybe all that matters is how kind, passionate, and loving we have been to ourselves and others. The foundation of a strong self comes from small acts of kindness and love. God doesn’t give us the people we want. He gives us the people we need.

God provides enough strength to bear one another. He gives that spirit to understand them. Oue purpose is to live and let live.

NIGHT PRAYER 1

NIGHT PRAYER—இரவு நேர பிரார்த்தனை †

NIGHT PRAYER

இரவு நேர பிரார்த்தனை †

NIGHT PRAYER 1

எல்லாம் வல்ல தந்தை, மகன், தூய ஆவியானவரே, நாங்கள் உம்மை வணங்குகிறோம், மகிமைப்படுத்துகிறோம்! உம்முடைய தெய்வீக மகத்துவத்திற்கு நாங்கள் எம்மை அர்ப்பணிக்கின்றோம். எங்களிடம் இருந்தும் மற்றும் அனைத்து விசுவாசிகளிடமிருந்தும், நீர் விரும்பாதவைகளை எம்மிலிருந்து களைந்தருளும். உம்முடைய பார்வையில் நன்றியுள்ளவற்றை மாத்திரமே எங்களுக்கு வழங்கிடவும் பணிவுடன் மன்றாடுகிறோம்.

நீர் கட்டளையிடுவனவற்றை நாங்கள் இங்கே செய்யவும், நீர் வாக்குறுதியளிப்பதைப் பெறவும், உமக்கு நாங்கள் எங்கள் ஆத்மாக்களையும் உடலையும் அர்ப்பணிக்கின்றோம். பிறருக்கு, அவர்களின் அனைத்துத் தேவைகளையும், ஆறுதலையும் தந்து, அவர்களின் அனைத்து சோதனைகளிலும், துன்பங்களிலிருந்தும் அவர்களை விடுவித்து, அவர்கள் உண்மையை அறிந்துகொள்ளவும், அனைவரையும் அன்பு செய்யவும்,

உமக்கே சேவை செய்யவும், இனிமேல் உமது பரலோக இராச்சியத்தை அனுபவிக்கவும் அருள்புரிவீராக.

உம்முடைய தெய்வீகப் பாதுகாப்பிற்காக உலகளாவிய ரீதியில் நாங்கள் அனைத்து மக்களுக்காகவும் மன்றாடுகிறோம். நீர் அவர்களுடைய பாவங்களுக்கான உயிருள்ள மன்னிப்பை வழங்கிடவும், மேலும், மரித்து, இவ்வுலகிலிருந்து விலகிச் சென்ற அனைத்து ஆன்மாக்களும் உம்முனுடைய நித்திய அமைதியில் இளைப்பாறிடவும் அருள்வீராக! என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி புரிபவர் நீரே! ஆமென்! †

எங்கள் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் தூய திருநாமத்திலும், அவருடைய அதி பரிசுத்த அன்னை, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பரிந்துரைகள் மூலமும், தாழ்மையுடன் செபிக்கிறோம், ஆமென்! †

Psalm 33-1 Sing For Joy In The Lord pink

PSALM 33

 

PSALM 33

Psalm 33 1 Sing For Joy In The Lord pink

திருப்பாடல் : 33

ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.

(திருப்பாடல் 33: 12-13. 18-21)

🛐 ஜெபம் 🛐

என்றும் வாழும் எல்லாம் வல்ல எம் தந்தையே! உம்மை வாழ்த்திப் போற்றி, ஆராதித்து வணங்குகிறோம். ஒரு தாய் தன் சேயை அன்போடு நோக்குவது போல், இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் எங்கள் அருகில் இருந்து எங்களை உள்ளன்போடு உற்று நோக்கியவரே! உமக்கு நன்றி! மற்றொரு புதிய மாதத்தை எங்களுக்கு வாய்ப்பாகக் கொடுக்க இருக்கிறீர். உமக்கு நன்றி.

இறைவா, உம் பிள்ளைகளாகிய எங்களை நம்பி ஒவ்வொருவருக்கும் நீர் ஒவ்வொருவிதமான பொறுப்புகளை ஒப்படைத்திருக்கின்றீர். நன்றி இறைவா. 🙏 அதற்கெல்லாம் நாங்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து, கொடுத்த பொறுப்பில் உண்மையுள்ளவர்களாக நாங்கள் இருக்க அருள் புரிவீராக.

நீர் எங்களுக்கு அருளும் ஒவ்வொரு நாளும், ஆயத்தமாயிருக்கிற, பொறுப்புள்ள பணியாளனாக நாங்கள் மாற நீர் எங்களுக்கு அளிக்கும் நல்வாய்ப்பு என்ற உண்மையை ஒவ்வொரு நாளும் நாங்கள் உணரும்படி செய்தருளும்.

இறைவா, நீர் எனக்கு தந்த தாலந்துகளை உமது மாட்சிக்காகவே நான் பயன்படுத்துவேன். உமக்கு ஏற்ற பிள்ளையாக இந்நாளில் நான் நிச்சயம் நடப்பேன்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமேன்.

விண்ணகத்தில் இருக்கிற…(1)
அருள் நிறைந்த…(3)
பிதாவுக்கும், சுதனுக்கும்…(1)

ஆமேன்.🙏

Work etiquette word concepts blue banner. Workplace manners and behavior. Infographics with icons on color background. Isolated typography. Vector illustration with text. Arial-Black font used

POLITE GESTURES

  POLITE GESTURES

ETIQUTTE

 

Manners and etiquette are far more than just polite gestures;

they’re the true markers of our character.

It’s not about money—class and dignity can’t be bought.

Rather, how we conduct ourselves reflects the values instilled in us and the environment that shaped our upbringing.

The way we respond to others, especially in difficult moments, reveals not only the principles we were taught but also the depth of our humanity.

In these seemingly small actions, our true nature is unveiled, telling the story of both where we’ve come from and who we aspire to be.

 

smile

YOUR SMILE IS YOUR ASSET

 

  YOUR SMILE IS YOUR ASSET

smile

உங்களின் புன்னகை பூத்த அழகு முகம்,

நீங்கள் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும்

நீங்கள் தரும் அன்புப் பரிசு என்பதை நினைவில் வையுங்கள்.

 

Your beautiful, glowing and smiling face is a gift to all you meet today.

NIGHT PRAYER

NIGHT PRAYER

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம் †

இன்றைய ஆசீர்வாதத்திற்கு நன்றி செலுத்துவதற்கும், நாளைக்கான நம்பிக்கைக்காக ஜெபிப்பதற்கும் சரியான வழி, படுக்கை நேர ஜெபம் ஆகும்!

எங்களை என்றும் நேசிக்கும் விண்ணகத் தந்தையே, இன்று, இந்த புதிய நாளில், உமது அன்பு, கவனிப்பு மற்றும் பாதுகாப்புடன் நீர் வழங்கிய பல ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். நாள் முழுவதும் எங்கள் குடும்பங்களையும் எங்களையும் கவனித்துக்கொண்டதற்கு நன்றி. அப்பா, இரவு முழுவதும் எங்களை உமது மேலான கண்காணிபில் எம்மை வைத்திருக்க வேண்டிக்கொள்கிறோம். அன்புள்ள ஆண்டவரே, இந்த மணிநேர ஓய்வை அடைய நீர் எங்களுக்கு உதவியதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பலவித இடர்பாடுகளின் பயத்துடன் இணைந்து, இன்றைய நாளின் வெயிலின் தாக்கம் மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால் நீர் இவைகளிலிருந்து எங்களை பாதுகாத்தீர். நாங்கள் இப்போது மிகவும் அசதியாகவும் சோர்வாகவும் இருக்கிறோம். எங்கள் மனதில் பதட்டமான எண்ணங்கள் நிறைந்திருக்கின்றன.

ஆண்டவரே, இன்றிரவு உம்முடைய மேலான பாதுகாப்பின் உண்மையான ஓய்வைக் கண்டுணர எங்களுக்கு உதவி புரியும். இந்த கவலையான எண்ணங்களிலிருந்து எங்களை விடுவித்து, உமது அமைதி, நிதானம், மற்றும் மனநிம்மதியால் எங்களை நிரப்பவும். உமது அன்பான குமாரனின் திருஇரத்தத்தால் எங்களை சுத்தப்படுத்தி, உமது வழிகளில் நடக்க எங்களுக்கு உதவி புரியும். இயேசுவே, இரவின் பயங்களிலிருந்தும், இருளில் நடக்கும் கொள்ளை நோயிலினின்றும் எங்களைக் காப்பாற்றும். இந்த இரவில் எந்த தீமையும் எங்களை அண்டாது என்பதையும், எந்தவொரு கெடுதலும் எங்கள் இல்லத்தின் அருகில் வராது என்பதையும் அறிந்து நாங்கள் தூங்க உதவி புரியும். புத்துணர்ச்சியுடன் விடியலில் எழுந்து, மற்றொரு நாளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எங்கள் இனிய ஜெபங்களுக்கு பதிலளித்ததற்கு நன்றி, ஆமென்! †

இனிய இரவு வணக்கம்! 🌹
கடவுள் நம் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! †

PEACE OF MIND

 PEACE AT MIND , PEACE AT SOUL, PEACE AT UNIVERSE

 PEACE AT MIND , PEACE AT SOUL, PEACE AT UNIVERSE

PEACE OF MIND

 

 

பல நேரங்களில் நாம் மனஅமைதி இன்றி வாழ்வதற்கு. நாம் பேசும் பேச்சுக்களே காரணங்களாக அமையலாம். தேவை இல்லாத பேச்சுக்களால் உடல் சக்தியும் மன சக்தியும் இழந்து நாம் யார் என்பதை நாம் அறியாமல் இருந்துவிட்டு இப்புவியை விட்டுச் சென்றுவிடுவோம். அமைதியின் சக்தியை அறியவும் நாம் யார் என்பதை உணரவும் ஒரு தத்துவக் கதையை இதில் பார்ப்போம்.

வனாந்தர தேசம் ஒன்றில் குரு ஒருவர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். அவருக்கு மொத்தம் பத்து சீடர்கள் இருந்தார்கள். அதில் கர்ணன் என்ற ஒரு சீடனுக்கு மட்டும் பேசுவது என்றால் மிகவும் பிடிக்கும். அவன் பேசுவதற்காகப் பிறரைப் பற்றிக் குறை கூறுவதும், பிறர் தன்னை மதிப்பதற்காக அவர்களுடன் உரையாடி அவ்வுறையில் வெல்வதும் அவனது வழக்கமாக வைத்திருந்தான்.

அவன் மிகச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால், துறவு வாழ்க்கையில் தெரிந்து கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது என்று, இந்தக் குருவிடம் சீடனாகச் சேர்ந்துள்ளான். அதனால், எப்பொழுதும் தான் உயர்ந்தவன் என்ற அவனுள் இருக்கும்.

ஒரு நாள் குரு தன் 10 சீடர்களையும் அழைத்து அவர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார். அந்தப் போட்டி என்னவெனில் உங்களுக்குக் கடுமையான ஒரு உறுதி மொழியை நீங்களே எடுத்துக்கொண்டு அதை நீங்கள் 30 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார். இதைக்கேட்ட மற்ற சீடர்கள் ஏற்றுக்கொண்டு உறுதிமொழியைப் பின்பற்ற ஆரம்பித்தனர்.

கர்ணனுக்கு ஒரு எண்ணம் நான் இவர்களை விடச் சிறந்த சீடன். அதனால், என் உறுதிமொழி எதுவாக இருந்தாலும் அது எளிமையாகத் தான் இருக்கும். அதனால் குருவிடம் சென்று அவர் கூறும் உறுதி மொழியை நாம் பின் பற்றுவோம் என்று முடிவு எடுத்து குருவைக் காணச் சென்றான்.

குருவிடம் சென்று கர்ணன் கூற, “குரு சிரித்தவாறு சரி நான் உனக்கு ஒரு உறுதிமொழியைத் தருகிறேன். அதை நீ 30 நாட்கள் கடைப்பிடி என்றார். என்ன உறுதிமொழி என்றால் 30 நாட்களும் நீ பேசாமல் மௌனமாக இருக்க வேண்டும். இதைக் கேட்ட கர்ணனுக்கு இவ்வளவுதானா? நான் இதை எளிமையாக முடித்துக்காட்டுகிறேன்” என்று குருவிடம் கூறிவிட்டுச் சென்றான்.

 

முதல் நாள் அவனுக்கு இந்த உறுதிமொழி அவ்வளவு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. இரண்டாவது நாள் அவன் உடன் இருக்கும் நண்பர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அவனுக்குப் பேச வேண்டும் என்ற எண்ணம் வந்தது அதனால் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் கோவிலில் சென்றான். “குருவே நீங்கள் கூறிய உறுதி மொழியை என்னால் கடைப்பிடிக்க முடியாதது போல் தோன்றுகிறது. அதனால், நான் இதை இப்பொழுதே விட்டுவிடவா? “என்று எழுதிக் காண்பித்துக் கேட்டான். குரு இவனைப் பரிகாசித்துச் சிரிப்பது போல் பார்த்துவிட்டு. “உன்னால் முடியாது என்று எனக்குத் தெரியும் ஆனால் முயற்சி செய்துபார்” என்று கூறினார்.

குருவின் சிரிப்பினை ஏற்றுக் கொள்ள முடியாதவன்.” சரி நான் செய்கிறேன்” என்று மீண்டும் தன் குடிலை நோக்கிச் சென்றான். வீட்டிலேயே அமைதியாக யாருடனும் பேசாமல் இருந்தான். இவனுடன் இருந்த சீடர்களுக்கு எல்லாம் மிகுந்த ஆச்சரியம் “கர்ணனா இப்படி மாறிப்போனது. அவனால் பேசாமல் ஒரு கணம் கூட இருக்க முடியாது. ஆனால் எப்படி இவன் பேசாமல் இருக்கிறான்” என்று வியப்பாகப் பார்த்தனர்.

 

30 நாள் நெருங்க நெருங்க இவன் மனதில் பல கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது. அவனால் அந்தக் கேள்விகளை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், மீண்டும் குருவைக் காணச் சென்றான்.” குருவே என்னால் இப்பொழுது அமைதியாக இருக்க முடிகிறது. ஆனால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை, என்னுள் பல கேள்விகள் இருக்கிறது. இந்த நிலை இப்படித்தான் இருக்குமா இல்லை நான் இன்னும் ஆழ்ந்து அமைதியாக இருக்க வேண்டும்” என்று கேட்டான்.

குரு சிரித்துக்கொண்டே நீ மனதளவிலும் அமைதியாக இருக்க வேண்டும் அது இங்கு இருக்கும் சத்தங்களால் உனக்குக் கிடைக்காது. அதனால் நீ காட்டை நோக்கிச் செல் அங்குக் கொஞ்சக் காலம் இருந்துவிட்டு வா என்றார். சீடனும் இது நல்ல யோசனையாக இருக்கிறது என்று காட்டை நோக்கிச் செல்கிறான்.

இவன் சென்று 30 நாட்கள் மேலாகிறது ஆனால், இன்னும் ஆசிரமத்திற்குத் திரும்பவில்லை. உடன் இருந்த சீடர்கள் காட்டிலிருந்த விலங்கு ஏதாவது இவனை அடித்து உண்டு இருக்கும் என்று நினைத்தனர். இதைக் குருவிடமும் கேட்டனர். அவன் சரியான காலத்தில் இங்கு வருவான். அதனால் யாரும் பயப்பட வேண்டாம் என்றார்.

ஒரு நாள் கர்ணன் காட்டிலிருந்து நடந்து வந்தான். அவனது உடல் மட்டுமின்றி கண்ணும் சாந்தத்தின் ரூபமாகச் சீடர்களுக்குத் தெரிகிறது. இதைப் பார்த்த ஆச்சரியத்தில் கர்ணனிடம் சென்று நீ எப்படி இப்படி மாறினாய்? என்று கேள்விகள் எழுப்பினர். என் மனக் கேள்விகளைக் கட்டுப்படுத்தி அமைதியை பெற்றதனால், என்னால் அமைதியாக இருக்க முடிந்தது என்றான்.

முன்பு ஏதேனும் கேள்வி கேட்டால், அதிகமாகப் பேசுபவன், இன்று கேட்டதற்குச் சரியாகவும் தத்துவார்த்தமாகவும் பதில் சொல்கிறான் என்று சீடர்கள் கர்ணனை வியந்து பார்த்தனர். குருவிடம் சென்று ஆசீர்வாதம் பெற்றுவிட்டு மீண்டும் காட்டிற்கே சென்று விட்டான்.

அமைதி மனிதனை என்ன செய்துவிடும் என்பதற்கு இந்த கர்ணன் ஒரு உதாரணம்.

வார்த்தைகளை குறைத்து வாழ்க்கையை மேம்படுத்துங்கள்.