இரவு ஜெபம்

இரவு ஜெபம்

எங்களை என்றும் நேசிக்கும் அன்பு தகப்பனே, இந்த நல்ல நாளுக்காகவும், நீர் எங்களை எப்போதும் கவனித்துக்கொள்ளும் சிறப்பு வழிக்காகவும், இந்த இரவு வேளைக்காகவும் நன்றி கூறுகிறோம்.

இறைவார்த்தையின் ஊற்றான தந்தையே, உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தையால்; எங்களை வளப்படுத்துவதற்காக நன்றி. இறைவார்த்தையில் நாங்கள் காட்டும் ஆர்வத்தை, அதை வாழ்ந்து காட்டுவதிலும் காட்ட அருள் தாரும். துன்பங்கள் வந்தாலும், நிலைகுலையாது உம் வார்த்தையில் நிறைவாக வாழ்வோமாக.

இந்த நாள் முழுவதும் எங்களை கண்ணின் மணிபோல பாதுகாத்து, வழிகாட்டி மற்றும் எங்கள் கூடவே இருந்ததற்காக நன்றி ஆண்டவரே, நாங்கள் உறங்கும்போதும் இரவிலும் அதை நீடிக்கவும் உங்கள் பிடியில் இருந்து நழுவியதற்கு எங்களை மன்னியுங்கள் ஆண்டவரே, எங்கள் உள்ளம் பண்பட்ட நிலமாக இருந்து உம் வார்த்தையை ஏற்றுப் பலன் நல்கிட அருள்தாரும்.

நாங்கள் உமக்கு கீழ்ப்படியாதபோதும் அல்லது மற்ற காரியங்களை எங்கள் சொந்த வழியில் செய்ய முயற்சித்தபோதும் கூட எங்களைத் தொடர்ந்து நேசித்ததற்கு நன்றி ஆண்டவரே, நாங்கள் இருக்க ஒரு வீடு மற்றும் உறங்க சுகமான ஒரு இடம் மற்றும் சாப்பிட நல்ல உணவை ஆசீர்வாதமாக தந்ததற்கு நன்றி ஆண்டவரே, எங்களுக்கு நல்ல, அமைதியான கனவுகள் நிறைந்த உறக்கத்தையும் எங்களுக்குக் கொடுத்து, இரவு முழுவதும் எங்களைப் பாதுகாக்க உமது தேவதூதர்களை எங்கள் வீட்டைச் சுற்றி அனுப்பியருளும். உம்மை நம்பவும் உம்மை மேலும் மேலும் நேசிக்கவும் எங்களுக்கு அருள் தாரும். இயேசுவின் விலைமதிப்பற்ற பெயரில்,

புதன் கிழமை நற்செய்தி

செப்.3, 2025, புதன் கிழமை நற்செய்தி மறைச்சாரல்! *

கொலோசையர் 1: 1-8
லூக்கா  4: 38-44

எளிமையும் சேவையும் திருச்சபையின் இரு கண்கள்!

இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுலடியார் தெசலோனிகேய மக்களை,  “சகோதர, சகோதரிகளே, நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளரவேண்டாம்” என்று வலியுறுத்துகிறார். மக்களுக்கு ‘நன்மை’ அளிக்கும் பணிகளை மேற்கொள்ளும் போது நாம் நற்செய்தி அறிவிக்கறோம். இதில் என்றும் மனந்தளரக் கூடாது என்பதே பவுலடியாரின் அன்பான எச்சரிக்கையாக தரப்பட்டுள்ளது.
இன்றைய நற்செய்தியில் இயேசு ஓய்வினலறி நற்செய்திப் பணியாற்றுகிறார். தொழுகைக்கூடத்தில் போதித்தப் பிறகு இயேசு, ஓய்வின்றி சீடரான பேதுருவின் மாமியாரைக் குணமாக்கினதோடு, வீட்டிற்கு வெளியே இருந்த சுற்றத்தாரை, மற்றும் வெளியூர் மக்களோடு நற்செய்தியைப் பகிர்கிறார். தொடர்ந்து சற்றும் ஓய்வும் இல்லாமல் கொண்ட பணியை நிறைவேற்றியதை வாசிக்கிறோம்.
திருச்சபையில் இன்றும் பிறர் அன்பு பணிதான் இயேசுவின் சீடத்துவத்தை பெருகச் செய்கிறது. கிறிஸதுவத்தில் பணி வாழ்வும் அர்ப்பணிப்பும் இன்றியமையாதவை. எளிமையும் சேவையும் திருச்சபையின் இரு கண்கள். மாறாக, இன்று நம்மில் பெரும்பாலோர், தனிமனித ஆசைகளையும் தேவைகளையும் மட்டுமே முன்னிறுத்தி பெருமைகொள்ளும் பண்பாட்டில் மூழ்கியுள்ளஓம். இதனால் கிறிஸ்துவின் ஆன்மாவை நாம் நாளுக்கு நாள் இழந்துவருகிறோம் என்றால் மிகையாகாது.
மேளாள் திருத்தந்தை பிரான்சிஸ், அவரது ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’ எனும் திருத்தூது மடல், எண் 6-ல், “உயிர்ப்பு இல்லாத தவக்காலம்போல கிறிஸ்தவர்களின்  வாழ்வு உள்ளது” என்று தமது வேதனையை வெளிப்படுத்தினார். தவக்காலத்தின் முடிவானது ஆண்டவரின் உயிர்ப்பில்தான் மகிழ்ச்சியாக மாறுகிறது. ஆனால், இன்றைய கிறிஸ்தர்களின் வாழ்வில் அத்தகைய நற்செய்தி மகிழ்ச்சியை நாம் காண்பதில்லை. இதற்கு அடிப்படை காரணம், பிறர் அன்பு சேவைக்கான அர்ப்பணிப்பு நம்மில் குறைந்துகொண்டே போகிறது.
ஆலயத்துக்கு காணிக்கை செழுத்துவது, கோயில் கட்டுவது, ஞாயிறு திருப்பலிக்கு வருவது இயேசுவை நமக்குள் வைத்துக்கொள்ள உதவலாம். பிறர் அன்பு பணிகள் வாயிலாகவே இயேசுவின் நற்செய்தி உலகமெங்கும் மணம் கமழச் செய்ய முடியும். ஆமென்

இன்று ஒரு சிந்தனை! *

இன்று ஒரு சிந்தனை! *

விதைத்தது எதுவானாலும், அறுவடைக்கு வந்தே தீரும், விதையானாலும் சரி, வினையானாலும் சரி!

ஒரு இடத்தில், உனக்கு தரப்படும் முக்கியத்துவம் குறையும் போது, நீயாகவே விலகி நிற்பதுதான், உனக்கு மரியாதை!!

நேர்மையாக, கடினமாக, உழைத்து , உயர்ந்துவிட்டால், பொறாமையில் பேசுவர், உழைக்காமல் தாழ்ந்து, வீழ்ந்துவிட்டால், கேவலமாக பேசுவார், இவ்வளவுதான் உலகம்!!!

MORNING PRAYER

MORNING PRAYER

Disturb us, Lord, when
We are too well pleased with ourselves,
When our dreams have come true
Because we have dreamed too little,
When we arrived safely
Because we sailed too close to the shore.

Disturb us, Lord, when
With the abundance of things we possess
We have lost our thirst
For the waters of life;
Having fallen in love with life,
We have ceased to dream of eternity
And in our efforts to build a new earth,
We have allowed our vision
Of the new Heaven to dim.

Disturb us, Lord, to dare more boldly,
To venture on wider seas
Where storms will show your mastery;
Where losing sight of land,
We shall find the stars.

We ask You to push back
The horizons of our hopes;
And to push into the future
In strength, courage, hope, and love.

Paradox of love

Paradox of love

A young nurse once shared her experience after a grueling night shift.
She said: “I walked into the hospital drained, weary and almost broken…
… but I walked out stronger, renewed, and strangely at peace.”

Someone asked her in surprise: “How can you be more energized after giving yourself away the whole night?”

And she replied:
“Because every time I wiped a patient’s tears…
… every time I offered a glass of water
. . every time I simply held a trembling hand
I felt my own heart being healed.
My tiredness melted away.
My weakness turned into strength!”

Isn’t that the paradox of love?
When we pour ourselves out for others…
… God fills us back in.
When we serve…
… we are the ones renewed.
When we give…
… we receive more than we can imagine.

 

Your character is who you are.

Your character is who you are.

Worry about your character, not your reputation.

Your character is who you are. Your reputation is who people think you are.” (John Wooden)

Focus on cultivating your character, for it is the essence of who you truly are—your values, integrity, and how you treat others when no one is watching.

Reputation, by contrast, is merely the perception others hold of you, often shaped by opinions, assumptions, or circumstances beyond your control. While reputation may fade, shift, or be misunderstood, your character remains steadfast, defining your authenticity and guiding your actions.

When you prioritize your character, you build a foundation of self-respect and inner peace, knowing that who you are matters far more than how others perceive you.

இன்று ஒரு சிந்தனை!

இன்று ஒரு சிந்தனை!

பூனைக்கு, அதிகமாக கவனம் கொடுத்தால், அது தன்னை சிங்கமாக, நினைக்கத் தொடங்கி விடும்!

நல்ல பாம்பிடம், ஒருபோதும் நீதி கிடைக்காது, கடித்த பாம்பை தேடாமல், மருந்தை தேடினால், நன்மை உண்டு!!

பதற்றப்படாதே, மெல்ல மெல்ல தான், எல்லாம் நடக்கும்; தோட்டக்காரன், நூறு குடம் நீர் ஊற்றினாலும், பருவம் வந்தால் தான், பழம் பழுக்கும்!!!

காலை ஜெபம்

காலை ஜெபம்

முறையான பலிகளைச் செலுத்துங்கள்; ஆண்டவரை நம்புங்கள்.

‘நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?” எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.

தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.

இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்.

(திருப்பாடல்கள் 4:5-8)

✝️ஜெபிப்போமாக:🛐

ஒவ்வொரு நாளும் என்னை காத்து, வழிநடத்துகிற அன்பு ஆண்டவரே! இந்தக் காலைப் பொழுதினிலே உம்மை போற்றி, புகழ்ந்து ஆராதனை செய்கின்றோம்!

ஒவ்வொரு நாளும் உமது மேலான இரக்கத்தை முன்னிட்டு, எங்களை மன்னிப்பதற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்!

அப்பா! ஒவ்வொரு நாளும் எங்களை இரக்கத்தோடு கண்ணோக்குவதாலே, நாங்கள் இந்நேரம் வரை நலமுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிவோம். நன்றி அப்பா!

என் ஆண்டவர் என்னோடு இருக்கும் பொழுது, நான் எதற்காக அஞ்ச வேண்டும்; கலங்க வேண்டும் என்று, உள்வாங்கும் மனப்பக்குவத்தை எங்களுக்கு தாரும். அப்பா! நாங்கள் நன்மை செய்தாலும், அது எங்களுக்கு தீமையாகவே நிகழ்கிறது.

அப்பா! எங்கள் வெளித்தோற்றத்தை பார்க்காமல், எங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருப்பதை பார்ப்பவர் நீர் ஒருவரே. அப்பா! யார் எங்களை குற்றம் சாட்டினாலும், உமக்கு எல்லாம் தெரியுமே. எங்கள் உள்ளத்தில் இருக்கும் வேதனைகளையும், வருத்தங்களையும் தெரிந்தவர் நீங்க ஒருவரே!

அப்பா! நீங்க எங்க கூட இருக்கும் போது, அற்ப மனிதர்கள் எங்களுக்கு எதிராக என்ன தான் செய்ய முடியும்? இறைவா! பிறர் எங்களை வேதனை படுத்தும்போது, அவர்களை மன்னிக்கும் தன்மையை எங்களுக்கு தாரும்.

என் அன்பு இறைவா! எங்களை வெறுக்கும் அனைவரையும், நாங்கள் அன்பு செய்ய வரமருளும். எங்கள் மீது வைத்துள்ள தவறான எண்ணங்களை அவர்கள் மாற்றி கொள்ளவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் எங்களுக்கு வரமருளும்.

இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

காலை ஜெபம் 

காலை ஜெபம் 

திருப்பாடல் : 117

பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது.

(திருப்பாடல் 117: 1,2)

ஜெபம்

கருணையும், அன்பின் செல்வந்தரும், படைப்பின் ஆண்டவருமான என் இறைவா! நீர் எனக்குத் தந்துள்ள அனைத்து ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் நினைத்து நான் உமக்கு நன்றி கூறுகின்றேன். படைப்பு அனைத்தோடும் சேர்ந்து நான் உம்மை போற்றித் துதித்து ஆராதிக்கின்றேன்.

என் இயேசுவே! இன்று நான் காண்பதையும், கேட்பதையும், சிந்திப்பதையும், செயல்படுவதையும், நேரிடுவதையும், அதற்கு ஏதுவான அனைத்தையும், என் இதயத்தைப் பாதிப்பவைகளையும் இன்று உலகமெங்கும் ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியோடு இணைந்து பரிசுத்த அன்னையின் மாசற்ற திரு இருதயத்தின் வழியாக உமக்கு நான் காணிக்கையாக்குகின்றேன்.

இறைவா, இன்றைய ஞாயிறு திருப்பலியை பக்தியோடு பங்குபெற்று உமது திருவுடலை விசுவாசத்தோடு பெற்றுக் கொள்ளும் அனைத்து மக்களையும் நீர் ஆசீர்வதிப்பீராக. பல்வேறு பிணிகளால் வருந்தும் பலரை உமது திருக்கரங்களால் தொட்டுக் குணமாக்கிடும். உமது பிள்ளைகளாகிய எங்களுக்கு நல்ல உடல், உள்ள சுகத்தினைத் தந்தருளும். 🙏

இறைவா, இந்த புதிய வாரத்தில் பிறருக்கு வேதனையோ, வருத்தமோ, பெயரைக் கெடுக்கும் யாதொன்றும் என்னில் இருந்து ஏற்படாதவாறு என் பேச்சுக்களில் கவனத்தோடும், என் செயல்பாடுகளில் விவேகத்தோடும் செயலாற்ற எனக்கு உதவியருளும். ஆன்ம பலத்தால் கோபத்தை அன்பாகப் பகிர்ந்திடவும், அன்பால் பழிவாங்கும் சிந்தனைகளை வெற்றி கொள்ளவும், பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் சமாதானத்தை இழந்து விடாமல் உம்மையே அடைக்கலமாக்கி நான் வாழ எனக்கு உதவியருளும்.🙏

ஆண்டவரே! நன்மை தீமைகளை பகுத்தறியும் நல்ல ஞானத்தை எனக்குத் தந்தருளும். மேலும் தூய ஆவியானவர் என்னுள் தங்கியிருக்க, என்னுள் இருந்து செயலாற்ற அருள் புரிவீராக. 🙏

காலை ஜெபம்

காலை ஜெபம்

திருப்பாடல் : 149

ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக!
அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது.

(திருப்பாடல் 149: 1-6a,9b)

ஜெபம்

தாழ்நிலையில் உள்ளவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைபடுத்தும் என்றும் வாழும் எல்லாம்வல்ல எம் இறைவா! எல்லாவிதமான புகழ்ச்சிக்கும் ஆராதனைக்கும் உரியவர் நீர்! இந்த காலை வேளையில் தந்தையே உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம்.

இறைவா, புதிய வாரத்தில் துவக்கத்திலிருக்கும் எங்களுக்கு இந்த வாரத்தில் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் அறிவுறுத்தும். இந்த வாரம் முழுவதும் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் எங்களுக்குக் கிடைக்கப் பெற அருள் புரிவீராக.

“ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.” என இறைவா எங்களை அழைத்தீர்.

இயேசுவே, நீர் ஒருவர் மட்டுமே உலகின் ஒளி என்பதை மக்கள் உணர்ந்தவர்களாய் உம் பாதையில் எந்நாளும் நடந்திட அருள்புரிவீராக.

குருட்டு வழிகாட்டிகளை நம்பி, ஒளியென நினைத்து அவர்கள் பின்னே இருளை நோக்கிப் பயணம் செய்யும் எண்ணற்ற நபர்களின் அகக் கண்களைத் திறந்தருளும். அவர்கள் செய்து கொண்டிருக்கும் தவறினை அவர்களுக்கு உணர்த்தியருளும். அலகையின் கைகளில் இருந்து அந்த ஆன்மாக்களைப் பாதுகாத்தருளும்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.