Each apostle has his own attraction.

Each apostle has his own attraction.

A garden of flowers delights most people!
>> A garden consists of a variety of flowers, with varied colours, sizes, shapes.

Some flowers tend to capture our attention more…
… some escape the gaze of our eyes.

However, this in no way, reduces or increases their relevance and importance.
Each flower has its own specialty.
Each flower has its own attraction.

Jesus in His garden of ministry, chose twelve apostles.
>> Some apostles tend to capture our attention more…
… some escape the gaze of our eyes.

However, this in no way, reduces or increases their relevance and importance.
Each apostle has his own specialty
Each apostle has his own attraction.

 

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம் †

இன்றைய ஆசீர்வாதத்திற்கு நன்றி செலுத்துவதற்கும், நாளைக்கான நம்பிக்கைக்காக ஜெபிப்பதற்கும் சரியான வழி, படுக்கை நேர ஜெபம் ஆகும்!

எங்களை என்றும் நேசிக்கும் விண்ணகத் தந்தையே, இன்று, இந்த புதிய நாளில், உமது அன்பு, கவனிப்பு மற்றும் பாதுகாப்புடன் நீர் வழங்கிய பல ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். நாள் முழுவதும் எங்கள் குடும்பங்களையும் எங்களையும் கவனித்துக்கொண்டதற்கு நன்றி. அப்பா, இரவு முழுவதும் எங்களை உமது மேலான கண்காணிபில் எம்மை வைத்திருக்க வேண்டிக்கொள்கிறோம். அன்புள்ள ஆண்டவரே, இந்த மணிநேர ஓய்வை அடைய நீர் எங்களுக்கு உதவியதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பலவித இடர்பாடுகளின் பயத்துடன் இணைந்து, இன்றைய நாளின் வெயிலின் தாக்கம் மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால் நீர் இவைகளிலிருந்து எங்களை பாதுகாத்தீர். நாங்கள் இப்போது மிகவும் அசதியாகவும் சோர்வாகவும் இருக்கிறோம். எங்கள் மனதில் பதட்டமான எண்ணங்கள் நிறைந்திருக்கின்றன.

ஆண்டவரே, இன்றிரவு உம்முடைய மேலான பாதுகாப்பின் உண்மையான ஓய்வைக் கண்டுணர எங்களுக்கு உதவி புரியும். இந்த கவலையான எண்ணங்களிலிருந்து எங்களை விடுவித்து, உமது அமைதி, நிதானம், மற்றும் மனநிம்மதியால் எங்களை நிரப்பவும். உமது அன்பான குமாரனின் திருஇரத்தத்தால் எங்களை சுத்தப்படுத்தி, உமது வழிகளில் நடக்க எங்களுக்கு உதவி புரியும். இயேசுவே, இரவின் பயங்களிலிருந்தும், இருளில் நடக்கும் கொள்ளை நோயிலினின்றும் எங்களைக் காப்பாற்றும். இந்த இரவில் எந்த தீமையும் எங்களை அண்டாது என்பதையும், எந்தவொரு கெடுதலும் எங்கள் இல்லத்தின் அருகில் வராது என்பதையும் அறிந்து நாங்கள் தூங்க உதவி புரியும். புத்துணர்ச்சியுடன் விடியலில் எழுந்து, மற்றொரு நாளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எங்கள் இனிய ஜெபங்களுக்கு பதிலளித்ததற்கு நன்றி, ஆமென்! †

ALL SOULS DAY

ALL SOULS DAY

அனைத்து ஆன்மாக்கள் விழா

இறந்தவர்கள் உடலைக் கடந்தவர்களாதலால், அவர்கள் காலத்தையும், இடத்தையும் வென்றவர்களாகிறார்கள். நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வுக்கு அழுத்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வின் உந்து சக்தியும் இறப்பு. நம் வாழ்வின் இலக்கின் தொடக்கமும் இறப்பே. இறுதி நாளில் இறப்பை எப்படி சந்திக்கிறோமோ அப்படி வாழ்ந்துள்ளோம் என்று பொருள். இறப்பை மன நிறைவோடு மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் மனிதன்,இவ்வுலக வாழ்வை ஆண்டவர் எதிர்பார்க்கும் விதத்தில் வாழ்ந்துள்ளான், புது வாழ்வுக்குத் தன்னை தயாரித்துள்ளான் என வெளிப்படுகிறது.

இயேசுவின் பார்வையில் இறப்பு ஒரு திருமுழுக்கு. புது வாழ்வின் தொடக்கம். இயேசு, ஒவ்வொரு சாவையும் வாழ்வின் உதயமாகக் கண்டார். இலாசரின் இறப்பு கடவுளின் மாட்சி வெளிப்படும் நிகழ்வாகக் காண்கிறார்.(யோவா 11’4) பன்னிரெண்டு வயது சிறுமியை உயிர்பெறச் செய்தபோது, “விலகிப் போங்கள், சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்”( மத் 9 :24) என்றபோது, இறப்பை, புத்துயிர் பெற உறங்கி விழிக்கும் அன்றாட நிகழ்வாகக் காண்கிறார். அவ்வகையில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாள்களில் சிறப்பிக்கப்படும் அனைத்து புனிதர்கள் மற்றும் அனைத்து ஆன்மாக்கள் திருவிழா பற்றியக் கருத்துக்களை இன்றைய நமது நிகழ்வில் நாம் காணலாம். இவ்விழா பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்தந்தை பால் ராஜ் அவர்கள் பாண்டிச்சேரி கடலூர் உயர் மறைமாவட்டத்தை சார்ந்தவர் 1991ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். கடந்த 34 ஆண்டுகளாக உயர் மறைமாவட்டத்தில் அரும்பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தந்தை அவர்கள், பல பெரிய பங்குகளிலும் திருத்தலங்களிலும் தனது பணியினைத் திறம்படச் செய்துள்ளார். தற்போது திருக்கோவிலூர் மறைவட்டத்தின் முதன்மை குருவாகவும், உயர்மறைமாவட்டத்தின் மிகப்பெரிய பங்கான இரையூர் பங்கின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார் தந்தை அவர்களை அனைத்து புனிதர்கள் மற்று அனைத்து ஆன்மாக்கள் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

ALL SAINTS DAY

ALL SAINTS DAY

புனிதர்கள் என்பவர்கள் வானத்திலிருந்து வந்துதித்த வானதூதர்கள் கிடையாது, அவர்கள் இந்த மண்ணுலகில் தோன்றியவர்கள். மண்ணுலகில் தோன்றினாலும் தங்களுடைய மண்ணக வாழ்க்கையை கடவுளுக்கு உகந்ததாய் மாற்றியமைத்துக்கொண்டு, இறைத்திருவுளத்தை தங்களுடைய வாழ்வால், வார்த்தையால் நிறைவேற்றியவர்கள் அவர்கள்தான் புனிதர்கள், தூயவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். புனிதர்களை எதற்காக நாம் நினைவுகூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு ” உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுள்ளவர்களாய் இருங்கள்” ” (எபி 13:7) என்ற விவிலிய வார்த்தை நமக்கு பதில் அளிக்கின்றது.

புண்ணிய வாழ்வு அல்லது சாட்சிய வாழ்வு வாழ்ந்து வந்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாடும் வழக்கம் 155- 156 ஆம் ஆண்டிலிருந்தே இருந்து வந்திருக்கிறது. கமிர்னா நகரின் ஆயராக இருந்த போலிக்கார்ப்பின் எலும்புகளை எடுத்து, அதனை பத்திரமாக வைத்து இறைமக்கள் அவருடைய விண்ணகப் பிறப்பு விழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள். மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சிப்ரியான் என்பவரும் புனிதர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இப்படி இருந்த வழக்கம் திருத்தந்தை ஆறாம் போனிபேஸ் காலத்தில் பந்தயோன் ஆலயம் அனைத்துப் புனிதர்களின் ஆலயமாக மாற்றப்பட்டபிறகு அனைத்துப் புனிதர்களின் விழா திருச்சபை முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இவ்விழாவானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் நாள் கொண்டாடப் பட்டு வருகின்றது.

Let positive emotions flow.

Let positive emotions flow.

In a world that’s turning hard,
Keep softness in your heart,
It’s not a flaw to show kindness,
It’s time we all made a start.

A harsh word or insensitive joke,
Can hurt more than you know,
Choose a gentler way to be,
Let positive emotions flow.

With every smile, we build a bridge,
A held hand, can help to heal,
With a simple act of compassion
A better world, we can reveal.

So let us be mindful in our thoughts,
And share the warmth that kindness brings,
For in our hearts, there beats a truth,
That love can grow on gentle wings ..

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

திருப்பாடல் : 19

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. அவற்றிற்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.

(திருப்பாடல் 19: 1-4)

🛐 ஜெபம் 🛐

அப்பா, தந்தையே! அன்பும், கருணையும், இரக்கமும் நிறைந்த எங்கள் பரலோக பிதாவே! இந்த புதிய நாளின் அதிகாலை வேளையில் உம்மை வணங்குகிறோம். வாழ்த்துகிறோம். ஆராதிக்கின்றோம். நன்றி செலுத்துகின்றோம். 🙏

இன்றைய நாளில் உமது திருச்சட்டத்திலிருந்து நாங்கள் விலகாதிருக்க அருள் புரியும்.

இயேசுவே! உமது பன்னிரு சீடர்களை தேர்ந்தெடுக்கும் முன் இரவெல்லாம் இறை வேண்டலில் நீர் கழித்தீரே! எங்கள் வாழ்வில் இனி நாங்கள் செய்யும் முக்கிய செயல்களுக்கு முன் இறைவேண்டல் செய்து, உமது திருவுளத்தை அறியக் கூடிய ஞானத்தை எங்களுக்குக் கொடையாக கொடுத்தருளும். இது நாள்வரை இறைவேண்டல் செய்யாது துவக்கிய பல காரியங்களுக்காக நாங்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறோம். அக்காரியங்களில் பெரும்பாலும் உமது விருப்பமின்றி எங்களது சுய விருப்பமே மேலோங்கி இருந்ததால் அவைகளில் குழப்பங்களும், தடைகளும், அவமானங்களும் மிகுந்திருந்தன.

எங்கள் இனிய இயேசுவே !, இனி வரும் காலங்களில் எங்களது வாழ்வில் நிகழும் அனைத்தும் உமது விருப்பமே. எங்களது விருப்பமன்று.

இறைவா, இந்த புதிய நாளை உமது பெயரால் துவக்குகின்றோம். தூய ஆவியின் துணை கொண்டு எங்களைக் காத்து வழி நடத்தியருளும். எங்கள் இறுதி மூச்சு வரை உம் பிள்ளைகளாக, உம் அன்பில் என்றும் நிலைத்திருக்க வரம் தாரும்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

 

NIGHT PRAYER

இரவு நேர பிரார்த்தனை

எல்லாம் வல்ல தந்தை, மகன், தூய ஆவியானவரே, நாங்கள் உம்மை வணங்குகிறோம், மகிமைப்படுத்துகிறோம்! உம்முடைய தெய்வீக மகத்துவத்திற்கு நாங்கள் எம்மை அர்ப்பணிக்கின்றோம். எங்களிடம் இருந்தும் மற்றும் அனைத்து விசுவாசிகளிடமிருந்தும், நீர் விரும்பாதவைகளை எம்மிலிருந்து களைந்தருளும். உம்முடைய பார்வையில் நன்றியுள்ளவற்றை மாத்திரமே எங்களுக்கு வழங்கிடவும் பணிவுடன் மன்றாடுகிறோம்.

நீர் கட்டளையிடுவனவற்றை நாங்கள் இங்கே செய்யவும், நீர் வாக்குறுதியளிப்பதைப் பெறவும், உமக்கு நாங்கள் எங்கள் ஆத்மாக்களையும் உடலையும் அர்ப்பணிக்கின்றோம். பிறருக்கு, அவர்களின் அனைத்துத் தேவைகளையும், ஆறுதலையும் தந்து, அவர்களின் அனைத்து சோதனைகளிலும், துன்பங்களிலிருந்தும் அவர்களை விடுவித்து, அவர்கள் உண்மையை அறிந்துகொள்ளவும், அனைவரையும் அன்பு செய்யவும், உமக்கே சேவை செய்யவும், இனிமேல் உமது பரலோக இராச்சியத்தை அனுபவிக்கவும் அருள்புரிவீராக.

உம்முடைய தெய்வீகப் பாதுகாப்பிற்காக உலகளாவிய ரீதியில் நாங்கள் அனைத்து மக்களுக்காகவும் மன்றாடுகிறோம். நீர் அவர்களுடைய பாவங்களுக்கான உயிருள்ள மன்னிப்பை வழங்கிடவும், மேலும், மரித்து, இவ்வுலகிலிருந்து விலகிச் சென்ற அனைத்து ஆன்மாக்களும் உம்முனுடைய நித்திய அமைதியில் இளைப்பாறிடவும் அருள்வீராக! என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி புரிபவர் நீரே! ஆமென்! †

எங்கள் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் தூய திருநாமத்திலும், அவருடைய அதி பரிசுத்த அன்னை, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பரிந்துரைகள் மூலமும், தாழ்மையுடன் செபிக்கிறோம், ஆமென்! †

இனிய இரவு வணக்கம்! 🌹
கடவுள் நம் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! †

BLESSED DAY

BLESSED DAY

மேலும், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.இதற்குமேல் நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?.
உரோமையர் 8:28,30,31.
இந்த நாள் ஆசீர்வாதமாக அமைவதாக
இன்றைய இறைவார்த்தையை ஒருவருக்காவது பகிர்வோம்

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

திருப்பாடல் : 144

என் பாறையாகிய ஆண்டவர் போற்றி!போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே!போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே.! என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே. இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன். அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே.

(திருப்பாடல் 119 : 1-2, 9-10)

🛐 ஜெபம் 🛐

அகில உலகையும், அண்ட சராசரங்களையும் படைத்த எல்லாம் வல்ல எம் இறைவா! இந்த அதிகாலை வேளையில் உம்மை போற்றுகிறேன். புகழ்கிறேன். நன்றி கூறுகிறேன்.

இறைவா, அலகையின் சூழ்ச்சிகளிலும், அதன் தந்திரங்களிலும் சிக்கித் துன்புறுவோருக்காக இன்று விஷேசமாக செபிக்கிறேன்.

ஆண்டவரே! உலகில் நடக்கும் எல்லாத் தீமைகளுக்கும், பாவ காரியங்களுக்கும் காரணமான அலகையை எதிர்த்து நிற்க எங்களுக்கு நிறைந்த வல்லமையைத் தந்தருளும்.

நீதியை மார்புக் கவசமாகவும், உண்மையை இடைக் கச்சையாகவும், நம்பிக்கையை கேடயமாகவும், மீட்பை தலை சீராகவும், உமது இறைவார்த்தையை தூய ஆவி அருளும் போர் வாளாகவும் கொண்ட படைக்கலன்களை நாங்கள் அணிந்து கொண்டு அலகைக்கு எதிரான போரில் நாங்கள் துணிவுடனும், வல்லமையுடனும் போராட எங்களுக்குத் துணை புரிவீராக.

எங்கள் கற்பாறையும், கோட்டையுமான ஆண்டவரே நீரே எங்களுக்குத் துணை. எங்களுக்கு பாதுகாப்பாளரும், மீட்பருமான நீரே எங்கள் அரண்.

இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். ஆசீர்வதித்து வழிநடத்துவீராக.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

 

In pursuit of more, we loose what matters most

In pursuit of more, we loose what matters most

A poor farmer believed that if he had enough land, he would be happy.

Once he heard of someone selling land at very low prices. The rule was: For a fixed price, one could have as much land as he could walk around from sunrise to sunset, but had to return to the same spot by sunset. Failure means a loss of both money and land.

The farmer walked, marking boundaries. Every time he thought of returning, he saw more beautiful land ahead and thought, “Just a little more…”

At sunset he realized he had gone too far. He ran towards the starting point, desperate to reach before sunset. But as the sun disappeared, he collapsed and dropped dead.

The seller said, “Bury him. That’s all the land he needs.”

Greed, promises happiness, but takes peace away.

We chase money, property and status.

No one truly owns anything.

In pursuit of more, we loose what matters most — health, relationships, peace and time.

Earth is vast, our needs are small. We expand boundaries, forgetting that all we need is land to rest.