உங்களைத் தேற்றுவேன்

I WILL COMFORT YOU
ISAIAH 66:13
“ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்.”
– ஏசாயா 66:13
இன்று உலகம் முழுவதும் போர் பதற்றம், பொருளாதார நெருக்கடி, குடும்பப் பிரச்சினைகள், தனிமை, மனஅழுத்தம், பாதுகாப்பின்மை ஆகியவை மனிதர்களின் இதயத்தை சோர்வடையச் செய்கின்றன. பலருக்கு தங்கள் வேதனையை கேட்டு ஆறுதல் கூற யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட நேரத்தில், தேவன் நமக்குக் கொடுக்கும் இந்த வாக்குறுதி எவ்வளவு ஆறுதலானது! ஒரு தாய் தன் குழந்தையை அணைத்து, கண்ணீரைத் துடைத்து, பயத்தைப் போக்கி, பாதுகாப்பாக உணர வைப்பதுபோல், கர்த்தர் நம்மைத் தேற்றுவேன் என்று உறுதியளிக்கிறார்.
சிந்திக்க:-
மனிதர்கள் விலகலாம்; நண்பர்கள் மாறலாம்; சூழ்நிலைகள் கலங்கலாம். ஆனால் தேவனுடைய அன்பும் தேற்றுதலும் ஒருபோதும் மாறாது. இன்று நீங்கள் தனிமையில் இருந்தாலும், மனம் உடைந்திருந்தாலும், எதிர்காலம் குறித்து பயந்தாலும், கர்த்தர் உங்களோடு இருக்கிறார். அவருடைய கரங்களில் உண்மையான பாதுகாப்பும், நிலையான சமாதானமும், புதிய நம்பிக்கையும் இருக்கிறது.ஆமென்.
