Site icon Life Setter Saluja

இரவு செபம் 

இரவு செபம் 

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென். ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. ஜெபிப்போமாக..

அன்பும், பாசமும் நிறைந்த தெய்வமே இறைவா! உம்மை நன்றியோடு போற்றுகிறோம் அப்பா. உழன்ற எலும்புகளுக்கு உயிர் கொடுப்பவர் நீரே. மீண்டும் எமக்கு வாழ்வு கொடுக்கின்றாய். உள்ளத்தின் ஆழத்திலிருந்து உம்மை புகழ்கின்றோம். உமது வல்லமையும் பாதுகாப்பும், இரக்கமும், அருளும் எங்கள் வாழ்வையும், குடும்பங்களையும் ஆசீர்வதிக்க, ஆளுகை செய்ய உருவாக்க, உருமாற்ற உடனிருந்தீரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன்மீது அன்பு செலுத்த.. அப்பா எங்கள் மீது நாங்கள் அன்பு கூறுவதுபோல, எங்களுக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூறவும் கற்றுக் கொடுத்தீரே.. எங்கள் வாழ்வை உருவாக்கினீரே.. இந்த ஆசீர்வாதத்தை நாங்கள் வளர்க்க, தெய்வமாய் எங்களுக்கு துணையாய் இருந்தீரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்!

இந்த நாள் முழுவதும் உம்முடைய அருள் கொடைகளால், எங்கள் வாழ்வை நிரப்பினீரே.. ஆசீர்வாதத்தின் பிரசன்னத்தில் எங்களை உருவாக்கினீரே.. உமக்கு நன்றி செலுத்துகிறோம் அப்பா!

இந்த இரவுப் பொழுதை ஆசீர்வதிப்பீராக. தாகம் உற்றவர்க்கு நீராய் வருகிறீர்.. பசியுற்றோரை உணவால் நிரப்புகிறீர்.. உம்முடைய பேரன்பை முன்னிட்டு, உம்முடைய நன்மை தனங்ளுக்காக.. உமது பிள்ளைகளாக நாங்கள் மாற.. எங்களை ஆசீர்வதியும்.

இந்த இரவிலே எங்கள் வாழ்வையும், குடும்பத்தையும் நீரே
பொறுப்பெடுப்பீராக. இந்த இரவு முழுவதும் உமது அன்பும் ஆசிர்வாதமும், எங்களோடும் குடும்பத்தோடும் இருப்பதாக. எங்கள் உள்ளங்களை, இல்லங்களை நிரப்புவதாக. இரவு முழுவதும் நிம்மதியான உறக்கமும், ஆசீர்வாதமான கனவுகளும், நாங்கள் அதிகமாய் பெற்றுக்கொள்ள அருள்புரியும். காவல் தூதர்கள் எங்களோடும், எங்கள் குடும்பத்தோடும் இருப்பார்களாக.

எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன் தூய ஆவியார், உங்கள் அனைவரையும் இந்த இரவு முழுவதும் பாதுகாப்பாராக. ஆமென்.! ஆமென்.!!

Exit mobile version