NIGHT PRAYER

THANKSGIVING PRAYER

                                                                THANKSGIVING PRAYER

மாத இறுதி இரவு நன்றி ஜெபம்

NIGHT PRAYER

அன்பின் விண்ணகத் தந்தையே இறைவா! இந்த மாதம் முழுவதும் உமது இரக்கப் பெருக்கத்தினாலும், புனித அன்னை மரியாளின் பரிந்துரையாலும், எங்களுக்கு ஏராளமான அற்புதங்களை செய்துள்ளீர்கள் அப்பா. இதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். மேலும், இந்த மாதத்தில் உமக்கு விரோதமாக செய்த பாவங்களுக்காக, குறிப்பாக பிறரன்பிற்கு விரோதமாக செய்த பாவங்களுக்காகவும், பிறரை மன்னிக்காமல் இருந்ததற்காகவும், பிறருக்கு உதவி செய்யும் சூழ்நிலை எனக்கு இருந்தும், உதவி செய்ய தவறியதற்காகவும் உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறோம் அப்பா. எங்களை மன்னித்தருளும் இறைவா.

பிறக்க இருக்கும் புதிய மாதத்தில், உம்முடைய அளவற்ற அன்பினாலும், இரக்கத்தினாலும் எங்களை ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமாய் இறைஞ்சி மன்றாடுகின்றோம். வரும் நாட்களில் எங்களுக்கு என்ன தேவை என்பது உமக்கு தெரியும் ஆண்டவரே. எங்களின் விண்ணப்பங்களை ஏற்று, உமது சித்தத்தின் படி எங்களுக்கு தயவாய் அருள் புரிந்தருளும் அப்பா.

இந்த இரவு நேரத்தையும் உம்முடைய பாதத்தில் ஒப்படைக்கின்றோம். எங்களுக்கு எந்த மனஅழுத்தமும் இல்லாமல், ஆழ்ந்த உறக்கம் தந்து, காலையில் முழு ஆன்ம, உடல் சுகத்தோடு விழித்தெழுந்து, உமது திருமுகத்தை கண்டு புதிய மாதத்தைக் காண எங்களை வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

– ஆமென்.

NIGHT PRAYER

NIGHT PRAYER —- THANKSGIVING PRAYER

                                                                                 NIGHT PRAYER

                                                                         THANKSGIVING PRAYER

NIGHT PRAYER

 

எங்களை என்றும் நேசிக்கும் அன்பு தகப்பனே, இந்த நல்ல நாளுக்காகவும், நீர் எங்களை எப்போதும் கவனித்துக்கொள்ளும் சிறப்பு வழிக்காகவும், இந்த இரவு வேளைக்காகவும் நன்றி கூறுகிறோம்.

இறைவார்த்தையின் ஊற்றான தந்தையே, உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தையால்; எங்களை வளப்படுத்துவதற்காக நன்றி. இறைவார்த்தையில் நாங்கள் காட்டும் ஆர்வத்தை, அதை வாழ்ந்து காட்டுவதிலும் காட்ட அருள் தாரும். துன்பங்கள் வந்தாலும், நிலைகுலையாது உம் வார்த்தையில் நிறைவாக வாழ்வோமாக இந்த நாள் முழுவதும் எங்களை கண்ணின் மணிபோல பாதுகாத்து, வழிகாட்டி மற்றும் எங்கள் கூடவே இருந்ததற்காக நன்றி ஆண்டவரே, நாங்கள் உறங்கும்போதும் இரவிலும் அதை நீடிக்கவும் உங்கள் பிடியில் இருந்து நழுவியதற்கு எங்களை மன்னியுங்கள் ஆண்டவரே, எங்கள் உள்ளம் பண்பட்ட நிலமாக இருந்து உம் வார்த்தையை ஏற்றுப் பலன் நல்கிட அருள்தாரும்.

நாங்கள் உமக்கு கீழ்ப்படியாதபோதும் அல்லது மற்ற காரியங்களை எங்கள் சொந்த வழியில் செய்ய முயற்சித்தபோதும் கூட எங்களைத் தொடர்ந்து நேசித்ததற்கு நன்றி ஆண்டவரே, நாங்கள் இருக்க ஒரு வீடு மற்றும் உறங்க சுகமான ஒரு இடம் மற்றும் சாப்பிட நல்ல உணவை ஆசீர்வாதமாக தந்ததற்கு நன்றி ஆண்டவரே, எங்களுக்கு நல்ல,

அமைதியான கனவுகள் நிறைந்த உறக்கத்தையும் எங்களுக்குக் கொடுத்து, இரவு முழுவதும் எங்களைப் பாதுகாக்க உமது தேவதூதர்களை எங்கள் வீட்டைச் சுற்றி அனுப்பியருளும். உம்மை நம்பவும் உம்மை மேலும் மேலும் நேசிக்கவும் எங்களுக்கு அருள் தாரும். இயேசுவின் விலைமதிப்பற்ற பெயரில்,

– ஆமென்!