NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம் †

இன்றைய ஆசீர்வாதத்திற்கு நன்றி செலுத்துவதற்கும், நாளைக்கான நம்பிக்கைக்காக ஜெபிப்பதற்கும் சரியான வழி, படுக்கை நேர ஜெபம் ஆகும்!

எங்களை என்றும் நேசிக்கும் விண்ணகத் தந்தையே, இன்று, இந்த புதிய நாளில், உமது அன்பு, கவனிப்பு மற்றும் பாதுகாப்புடன் நீர் வழங்கிய பல ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். நாள் முழுவதும் எங்கள் குடும்பங்களையும் எங்களையும் கவனித்துக்கொண்டதற்கு நன்றி. அப்பா, இரவு முழுவதும் எங்களை உமது மேலான கண்காணிபில் எம்மை வைத்திருக்க வேண்டிக்கொள்கிறோம். அன்புள்ள ஆண்டவரே, இந்த மணிநேர ஓய்வை அடைய நீர் எங்களுக்கு உதவியதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பலவித இடர்பாடுகளின் பயத்துடன் இணைந்து, இன்றைய நாளின் வெயிலின் தாக்கம் மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால் நீர் இவைகளிலிருந்து எங்களை பாதுகாத்தீர். நாங்கள் இப்போது மிகவும் அசதியாகவும் சோர்வாகவும் இருக்கிறோம். எங்கள் மனதில் பதட்டமான எண்ணங்கள் நிறைந்திருக்கின்றன.

ஆண்டவரே, இன்றிரவு உம்முடைய மேலான பாதுகாப்பின் உண்மையான ஓய்வைக் கண்டுணர எங்களுக்கு உதவி புரியும். இந்த கவலையான எண்ணங்களிலிருந்து எங்களை விடுவித்து, உமது அமைதி, நிதானம், மற்றும் மனநிம்மதியால் எங்களை நிரப்பவும். உமது அன்பான குமாரனின் திருஇரத்தத்தால் எங்களை சுத்தப்படுத்தி, உமது வழிகளில் நடக்க எங்களுக்கு உதவி புரியும். இயேசுவே, இரவின் பயங்களிலிருந்தும், இருளில் நடக்கும் கொள்ளை நோயிலினின்றும் எங்களைக் காப்பாற்றும். இந்த இரவில் எந்த தீமையும் எங்களை அண்டாது என்பதையும், எந்தவொரு கெடுதலும் எங்கள் இல்லத்தின் அருகில் வராது என்பதையும் அறிந்து நாங்கள் தூங்க உதவி புரியும். புத்துணர்ச்சியுடன் விடியலில் எழுந்து, மற்றொரு நாளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எங்கள் இனிய ஜெபங்களுக்கு பதிலளித்ததற்கு நன்றி, ஆமென்! †

NIGHT PRAYER

இரவு நேர பிரார்த்தனை

எல்லாம் வல்ல தந்தை, மகன், தூய ஆவியானவரே, நாங்கள் உம்மை வணங்குகிறோம், மகிமைப்படுத்துகிறோம்! உம்முடைய தெய்வீக மகத்துவத்திற்கு நாங்கள் எம்மை அர்ப்பணிக்கின்றோம். எங்களிடம் இருந்தும் மற்றும் அனைத்து விசுவாசிகளிடமிருந்தும், நீர் விரும்பாதவைகளை எம்மிலிருந்து களைந்தருளும். உம்முடைய பார்வையில் நன்றியுள்ளவற்றை மாத்திரமே எங்களுக்கு வழங்கிடவும் பணிவுடன் மன்றாடுகிறோம்.

நீர் கட்டளையிடுவனவற்றை நாங்கள் இங்கே செய்யவும், நீர் வாக்குறுதியளிப்பதைப் பெறவும், உமக்கு நாங்கள் எங்கள் ஆத்மாக்களையும் உடலையும் அர்ப்பணிக்கின்றோம். பிறருக்கு, அவர்களின் அனைத்துத் தேவைகளையும், ஆறுதலையும் தந்து, அவர்களின் அனைத்து சோதனைகளிலும், துன்பங்களிலிருந்தும் அவர்களை விடுவித்து, அவர்கள் உண்மையை அறிந்துகொள்ளவும், அனைவரையும் அன்பு செய்யவும், உமக்கே சேவை செய்யவும், இனிமேல் உமது பரலோக இராச்சியத்தை அனுபவிக்கவும் அருள்புரிவீராக.

உம்முடைய தெய்வீகப் பாதுகாப்பிற்காக உலகளாவிய ரீதியில் நாங்கள் அனைத்து மக்களுக்காகவும் மன்றாடுகிறோம். நீர் அவர்களுடைய பாவங்களுக்கான உயிருள்ள மன்னிப்பை வழங்கிடவும், மேலும், மரித்து, இவ்வுலகிலிருந்து விலகிச் சென்ற அனைத்து ஆன்மாக்களும் உம்முனுடைய நித்திய அமைதியில் இளைப்பாறிடவும் அருள்வீராக! என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி புரிபவர் நீரே! ஆமென்! †

எங்கள் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் தூய திருநாமத்திலும், அவருடைய அதி பரிசுத்த அன்னை, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பரிந்துரைகள் மூலமும், தாழ்மையுடன் செபிக்கிறோம், ஆமென்! †

இனிய இரவு வணக்கம்! 🌹
கடவுள் நம் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! †

NIGHT PRAYER

NIGHT PRAYER

Dear God, we praise, glorify, and worship you. We thank you for being with us throughout the day, protecting us, guiding us, and giving us health. We thank you for allowing us to experience joy in our relationships and for sharing your wisdom with us.

We thank you for being our refuge in times of weariness and for embracing us with your love. We thank you for filling us with the gifts of your Spirit and for guiding us to reflect your love.

Forgive us for forgetting to console, appreciate, thank, and encourage others. Forgive us for failing to help and do good to others when needed. Forgive us for being an obstacle or causing difficulty in others’ duties.

Forgive us for hurting the feelings of our parents, siblings, friends, and children in any way. Dear God, our Mother and Father, grant us a good night’s sleep and allow us to wake up tomorrow morning to praise and glorify you once again. Grant us the grace to live closer to you.

Night Prayer

Night Prayer

Dear God, our refuge and protector, we thank you for guiding us on the path of your light and protecting us from harm throughout the day. We are grateful for your presence in our lives, and we entrust our souls to you as we sleep.

Lord Jesus Christ, you are our comfort and strength in times of trouble. We thank you for your protection and care, and we ask that you grant us peaceful rest and refreshment during the night.

May we wake up tomorrow morning with renewed spirit and body, ready to face the challenges of a new day. We ask this in your name, Amen.

Night Prayer

Night Prayer
Loving God! We praise You, glorify You, worship You, and give You thanks. We thank You for making us a group, a family, friends – a tool to foster relationships, to share Your words of wisdom within those relationships and fulfill our duties, and for allowing us to find joy in those connections.
Forgive us for forgetting to comfort others; for forgetting to appreciate; for forgetting to say thank you; for forgetting to encourage.
Forgive us for failing to help others in their time of need, for failing to do good for others. Forgive us if we have been a hindrance or caused difficulty in others’ duties.
Forgive us if we have done anything to hurt the hearts of our parents, siblings, friends, or children.
God, our Mother and Father! Grant us good sleep this night. And tomorrow morning, enable us to rise again, to praise and glorify You, and to live even closer to You.

   NIGHT PRAYER

   NIGHT PRAYER

இரவு ஜெபம்

எம் இரக்கத்தின் ஊற்றே இறைவா! எங்கள் மூதாதையரான இஸ்ரேல் மக்கள், உம்மை விட்டு பலதடவை விலகிச் சென்றாலும், அவர்களை மன்னித்து என்னிலடங்கா அற்புதங்களை செய்தீர்கள். செங்கடலை இரண்டாக பிரித்து, தரையிலே நடக்கச் செய்தீர். பாறையைப் பிளந்து, தண்ணீர் பொங்கிவர செய்தீர். வானத்திலிருந்து மன்னா என்ற உணவை, இஸ்ரேல் மக்கள் உண்பதற்கு வேண்டிய மட்டும் பொழியச் செய்தீர் அப்பா. நன்றி ஆண்டவரே.

அதே போல் நாங்களும், பலதடவை உம்மை விட்டுச் சென்றாலும், எங்களை கைவிடாமல், எங்கள் தேவைகள் அனைத்தையும், எங்களுக்காக கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அப்பா. ஒரு தாய் தன் பிள்ளையை தேற்றி பாதுகாப்பது போல், ஒவ்வொரு நாளும் எம்மை அரவணைத்து வழிநடத்தி வருகிறீர் அப்பா. நன்றி ஆண்டவரே.

இன்றைய நாள் முழுவதும், உம்மை விட்டு விலகிச் செல்லாமல், உம்முடைய வலது கரத்தால் எங்கள் கைகளை பிடித்து, எங்களை அற்புதமாக வழிநடத்தியதற்காக, உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றைய இரவு வேளையிலும், எங்களை உமது அடைக்கலத்திலே ஒப்படைக்கின்றோம். இயேசுவே! எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், அமைதியான மனநிலையையும் தாரும் அப்பா. அதிகாலையில் முழு ஆன்ம, உடல் நலத்துடன் விழித்தெழுந்து, உமது திருமுகத்தைக் கானும் வரத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்

Night Prayer

Night Prayer
Oh Lord, Fountain of our mercy! Even though our ancestors, the people of Israel, turned away from You many times, You forgave them and performed countless miracles. You parted the Red Sea, allowing them to walk on dry land. You split the rock, and water gushed forth. You rained down manna from heaven, enough for the people of Israel to eat. Thank You, Lord.

Similarly, even though we have turned away from You many times, You have not abandoned us and continue to provide for all our needs. Just as a mother comforts and protects her child, You embrace and guide us every day. Thank You, Lord.

For guiding us wonderfully throughout this day, holding our hands with Your right hand so we would not stray from You, we offer our thanks. This night, we surrender ourselves into Your refuge. Jesus! Grant us deep sleep and a peaceful mind. We humbly pray that You grant us the grace to wake up in the early morning with full spiritual and physical well-being, and to behold Your holy face. Amen.

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே! ஒளிமிக்க உம்முடைய ஆசீர்வாதங்களை, எங்கள் மீது பிரகாசிக்கச் செய்தருளும்! மகா அற்புதமான கடவுளே, அனைத்தையும் படைத்தவரே, உமது வல்லமைமிக்க கரங்களின் நிழலில் எங்களைப் பாதுகாத்தருளும். நீரே உலகை ஆளும் நீதியின் தேவன்! நீரே அமைதியின் இளவரசர்! நீரே கருணையின் சிகரமான கடவுள்! தந்தையே, எங்களுடைய அன்றாடப் பிரச்சனைகள், கவலைகள், கஷ்டங்கள் அனைத்தையும் நீர் அறிந்துள்ளீர். எனவே, எங்களுடைய இந்த கனமான கவலைகள் அனைத்தையும், நாங்கள் உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். எங்கள் வாழ்வின் சூழ்நிலைகளை, நாங்கள் உமது காலடியில் அர்ப்பணிக்கின்றோம், உமது அன்பு, எங்கள் வாழ்க்கையில் எதையும் மாற்றும் வல்லமை பெற்றது என்பதற்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் இந்த புதிய நாளின் அமைதியையும், புதுப்பிக்கப்பட்ட பலத்தையும், எங்கள் நம்பிக்கையையும், உம்மிடத்தில் ஒப்படைக்கின்றோம்!

அன்புள்ள ஆண்டவரே! நாங்கள் உறங்குவதற்காக படுக்கும்போது, ​​எங்கள் உடலின் பதற்றத்தைத் தணித்தருளும்; எங்கள் மனதின் அமைதியின்மையை அமைதிப்படுத்தும்; கவலையடையச் செய்யும் எண்ணங்களைத் தவிர்க்கச் செய்யும். நாங்கள் நன்கு ஓய்வெடுக்க எங்களுக்கு உதவி புரியும். நாங்கள் உறங்கும்போது உமது ஆவியானவர் எங்கள் மனதுடனும், இருதயத்துடனும் பேசட்டும். ஆகவே, நாங்கள் காலையில் எழுந்திருக்கும்போது, ​​இரவு நேரத்தில் நாங்கள் பெற்ற, எங்கள் வழிகளுக்கு வெளிச்சம்; எங்கள் பணிகளுக்கு வலிமை; எங்கள் கவலைகளுக்கு அமைதி; மற்றும், எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு, ஆகியவற்றினை உணர்வோமாக. இன்றிரவு எங்களுக்கு நல்ல அமைதியான உறக்கத்தை ஆசீர்வதியும். அதுவே நாளை, நாங்கள் வாழ்வதற்கான எங்கள் சக்தியும், வலிமையாக மாறுவதாக! ஆமென்! †

எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் தூய திருநாமத்திலும், அவருடைய மகா பரிசுத்த அன்னை, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பரிந்துரைகள் மூலமும், தாழ்மையுடன் செபிக்கிறோம், ஆமென்! †

NIGHT PRAYER

NIGHT PRAYER

                                                                              NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு செபம்..

ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.

(எசாயா 64:8-9)

குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாதம் வைக்கிறோம். எந்தத் தீங்கும் நேரிடா வண்ணம் எங்களை காத்துக் கொள்ளும்.

ஒன்றுமில்லாத களிமண்ணாய் இருந்த எங்களை நீரே வனைந்து உம் திட்டத்தின் படி எங்களை வழிநடத்தி, பயன்படுத்தி வருகின்றீர்.

ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும், குணப்படுத்தலுக்காகவும் தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும்.

ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே. நன்றி.

NIGHT PRAYER

   NIGHT PRAYER

   NIGHT PRAYER

இரவு செபம்..

NIGHT PRAYER

ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.

(எசாயா 64:8-9)

குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாதம் வைக்கிறோம். எந்தத் தீங்கும் நேரிடா வண்ணம் எங்களை காத்துக் கொள்ளும்.

ஒன்றுமில்லாத களிமண்ணாய் இருந்த எங்களை நீரே வனைந்து உம் திட்டத்தின் படி எங்களை வழிநடத்தி, பயன்படுத்தி வருகின்றீர்.

ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும், குணப்படுத்தலுக்காகவும் தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும்.

ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே. நன்றி.