NIGHT PRAYER 1

NIGHT PRAYER—இரவு நேர பிரார்த்தனை †

NIGHT PRAYER

இரவு நேர பிரார்த்தனை †

NIGHT PRAYER 1

எல்லாம் வல்ல தந்தை, மகன், தூய ஆவியானவரே, நாங்கள் உம்மை வணங்குகிறோம், மகிமைப்படுத்துகிறோம்! உம்முடைய தெய்வீக மகத்துவத்திற்கு நாங்கள் எம்மை அர்ப்பணிக்கின்றோம். எங்களிடம் இருந்தும் மற்றும் அனைத்து விசுவாசிகளிடமிருந்தும், நீர் விரும்பாதவைகளை எம்மிலிருந்து களைந்தருளும். உம்முடைய பார்வையில் நன்றியுள்ளவற்றை மாத்திரமே எங்களுக்கு வழங்கிடவும் பணிவுடன் மன்றாடுகிறோம்.

நீர் கட்டளையிடுவனவற்றை நாங்கள் இங்கே செய்யவும், நீர் வாக்குறுதியளிப்பதைப் பெறவும், உமக்கு நாங்கள் எங்கள் ஆத்மாக்களையும் உடலையும் அர்ப்பணிக்கின்றோம். பிறருக்கு, அவர்களின் அனைத்துத் தேவைகளையும், ஆறுதலையும் தந்து, அவர்களின் அனைத்து சோதனைகளிலும், துன்பங்களிலிருந்தும் அவர்களை விடுவித்து, அவர்கள் உண்மையை அறிந்துகொள்ளவும், அனைவரையும் அன்பு செய்யவும்,

உமக்கே சேவை செய்யவும், இனிமேல் உமது பரலோக இராச்சியத்தை அனுபவிக்கவும் அருள்புரிவீராக.

உம்முடைய தெய்வீகப் பாதுகாப்பிற்காக உலகளாவிய ரீதியில் நாங்கள் அனைத்து மக்களுக்காகவும் மன்றாடுகிறோம். நீர் அவர்களுடைய பாவங்களுக்கான உயிருள்ள மன்னிப்பை வழங்கிடவும், மேலும், மரித்து, இவ்வுலகிலிருந்து விலகிச் சென்ற அனைத்து ஆன்மாக்களும் உம்முனுடைய நித்திய அமைதியில் இளைப்பாறிடவும் அருள்வீராக! என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி புரிபவர் நீரே! ஆமென்! †

எங்கள் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் தூய திருநாமத்திலும், அவருடைய அதி பரிசுத்த அன்னை, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பரிந்துரைகள் மூலமும், தாழ்மையுடன் செபிக்கிறோம், ஆமென்! †

NIGHT PRAYER

NIGHT PRAYER

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம் †

இன்றைய ஆசீர்வாதத்திற்கு நன்றி செலுத்துவதற்கும், நாளைக்கான நம்பிக்கைக்காக ஜெபிப்பதற்கும் சரியான வழி, படுக்கை நேர ஜெபம் ஆகும்!

எங்களை என்றும் நேசிக்கும் விண்ணகத் தந்தையே, இன்று, இந்த புதிய நாளில், உமது அன்பு, கவனிப்பு மற்றும் பாதுகாப்புடன் நீர் வழங்கிய பல ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். நாள் முழுவதும் எங்கள் குடும்பங்களையும் எங்களையும் கவனித்துக்கொண்டதற்கு நன்றி. அப்பா, இரவு முழுவதும் எங்களை உமது மேலான கண்காணிபில் எம்மை வைத்திருக்க வேண்டிக்கொள்கிறோம். அன்புள்ள ஆண்டவரே, இந்த மணிநேர ஓய்வை அடைய நீர் எங்களுக்கு உதவியதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பலவித இடர்பாடுகளின் பயத்துடன் இணைந்து, இன்றைய நாளின் வெயிலின் தாக்கம் மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால் நீர் இவைகளிலிருந்து எங்களை பாதுகாத்தீர். நாங்கள் இப்போது மிகவும் அசதியாகவும் சோர்வாகவும் இருக்கிறோம். எங்கள் மனதில் பதட்டமான எண்ணங்கள் நிறைந்திருக்கின்றன.

ஆண்டவரே, இன்றிரவு உம்முடைய மேலான பாதுகாப்பின் உண்மையான ஓய்வைக் கண்டுணர எங்களுக்கு உதவி புரியும். இந்த கவலையான எண்ணங்களிலிருந்து எங்களை விடுவித்து, உமது அமைதி, நிதானம், மற்றும் மனநிம்மதியால் எங்களை நிரப்பவும். உமது அன்பான குமாரனின் திருஇரத்தத்தால் எங்களை சுத்தப்படுத்தி, உமது வழிகளில் நடக்க எங்களுக்கு உதவி புரியும். இயேசுவே, இரவின் பயங்களிலிருந்தும், இருளில் நடக்கும் கொள்ளை நோயிலினின்றும் எங்களைக் காப்பாற்றும். இந்த இரவில் எந்த தீமையும் எங்களை அண்டாது என்பதையும், எந்தவொரு கெடுதலும் எங்கள் இல்லத்தின் அருகில் வராது என்பதையும் அறிந்து நாங்கள் தூங்க உதவி புரியும். புத்துணர்ச்சியுடன் விடியலில் எழுந்து, மற்றொரு நாளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எங்கள் இனிய ஜெபங்களுக்கு பதிலளித்ததற்கு நன்றி, ஆமென்! †

இனிய இரவு வணக்கம்! 🌹
கடவுள் நம் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! †