NIGHT PRAYER

NIGHT PRAYER

NIGHT PRAYER

NIGHT PRAYER

என்னை நேசிக்கின்ற அன்புத் தகப்பனே! நீர் கொடுத்த இந்த அருமையான நாளுக்காக நன்றி செலுத்துகின்றேன்! உம்முடைய ஆசீர் இன்று முழுவதும் என்னோடு தங்கியிருந்து என்னை வழிநடத்தி, என்னைப் பாதுகாத்துக்கொண்டீரே ஐயா, உமக்கு நன்றி!

உம்முடைய ஆசீராலும், இரக்கத்தினாலும், தயவினாலும் இந்த நாளை நான் கடந்து வர எனக்கு உதவி செய்தீரே உமக்கு நன்றி!

இதோ இந்த இரவு நேரத்தில் களைப்போடும், சோர்வோடும், நான் உறங்கச் செல்கின்ற வேளையில் நீரும், நீர் எனக்கு கொடுத்த பாதுகாவலரும், அன்னை மரியாளும், என் அருகில் இருந்து என்னை தேற்றுவீர்களாக!

உமது இரக்கம் இந்த நேரத்தில், இந்த இரவிலே, எனக்கு என் அருகிருந்து என்னை பாதுகாக்கட்டும்! இரவில் வருகின்ற கனவுகளில் உமது தயவு எனக்கு இருக்கட்டும்! காலையில் நான் விழிக்கின்ற வரைக்கும் தகப்பனே, என்னோடு தங்கியிருக்க போவதற்காக உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்! நன்றி இயேசுவே, நன்றி! ஆமென்!

உறக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் உறங்கினால் சுகமான உறக்கம் பெறுவது உறுதி! இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்!

நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது; உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய்! நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு! வைகறையில் விழித்தெழுந்து, நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை, மானிடர் தம் கடவுளின் அன்பர், தேவையானதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்!

 

NIGHT PRAYER 1

NIGHT PRAYER —PRAYER FOR NIGHT

NIGHT PRAYER –PRAYER FOR NIGHT

NIGHT PRAYER

இரவு செபம்

எங்களை ஒவ்வொரு நாளும், அற்புதமாய் வழிநடத்தும் அன்பு தகப்பனே, உம்மை நன்றியுள்ள இருதயத்தோடு போற்றுகின்றோம், புகழ்கின்றோம், ஆராதிக்கின்றோம், உமக்கு நன்றி செலுத்துகின்றோம் அப்பா.

இன்றைய நாள் முழுவதும், எம்மை கண்ணின் மணிபோல் காத்து, யாதொரு தீங்கும் எம்மை அனுகாமல் பாதுகாத்த, உம் இரக்கத்திற்காக, உமக்கு நன்றி செலுத்துகின்ன்றோம் அப்பா.

காலை முதல் இந்நேரம் வரை, எங்களின் அன்றாடப் பணிகளை செவ்வனே செய்து முடிக்க எங்களுக்கு ஆற்றலையும், ஞானத்தையும் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்ன்றோம் அப்பா.

எங்களுக்கு சின்ன சின்ன உடல்நல பிரச்சனைகள் இருந்த போதிலும், உமது இறைஇரக்கத்தின் இரத்தத்தால், எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்த உம் தாயினும் மேலான அன்பிற்காக நன்றி செலுத்துகின்றோம் அப்பா.

ஆண்டவரே, இந்த இரவுப்பொழுதை ஆசீர்வதியுங்க. உமது காவல் தூதர்களை அனுப்பி எங்களை பாதுகாத்திடுங்க. எங்களுக்கு ஆழ்ந்த நித்திரையையும், மனஅமைதியையும் தாரும் அப்பா. நாங்கள் அதிகாலை புதிய ஆற்றலோடும், புத்துணர்ச்சியோடும் எழுந்து, உம்மை போற்றி புகழ வரம் தாரும்.

அன்பு தகப்பனே! இன்று நாங்கள் உமக்கு எதிராக, அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்காக, பாவங்களுக்காக மனம்வருந்தி மன்னிப்பு கேட்கின்றோம் அப்பா. எங்களை தயைகூர்ந்து மன்னித்து, உமது பிள்ளையாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென, சிரம் தாழ்த்தி வணங்கி மன்றாடுகின்றோம். ஆமென்.

🌹இனிய இரவு வணக்கம் 🌹

NIGHT PRAYER

NIGHT PRAYER

 

இரவு செபம்

NIGHT PRAYER

இரவு நேரங்களில் ஆண்டவரின் இல்லத்தில் பணி செய்யும் ஆண்டவரின் ஊழியரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.

(திருப்பாடல்கள்134:1)

இந்த நாள் முழுவதும் எங்களை வழிநடத்தி வந்த, உமது மேலான இரக்கத்திற்காக கோடான கோடி நன்றி அப்பா! நன்றி ஆண்டவரே! நன்றி மீட்பரே! எங்களைப் பாவம் ஒருநாளும் மேற்கொள்ளாதவாறு, எங்களை காத்திடுமாறு உம்மிடம் மன்றாடுகிறோம்.

இதோ இந்த இரவு நேரத்தில், உம்முடன் பேச வந்திருக்கும் எங்களை ஆசீர்வதித்தருளும். ஆண்டவரே! மாலையில் மலையில் நீர் தனிமையில் சென்று, கடவுளோடு பேசிக் கொண்டிருந்தீர், அதுபோல ஆண்டவரே, உம்மோடு பேச நாங்கள் வந்திருக்கிறோம்.

அப்பா இந்த இரவு வேளையில், எத்தனையோ குடும்பங்கள் உண்பதற்கு உணவில்லாமல், பட்டினியோடு தூங்கும் நிலையில் இருப்பதை நாங்கள் காண்கிறோம், குறிப்பாக அகதிகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், கவனிக்க யாருமில்லாத மனிதர்கள் ஆகியவர்களை நாங்கள் நினைவு கூறுகிறோம்.

அப்பா நீரே அவர்களுக்கு துணையாய் இரும். அவர்களுக்கும் நீரே கடவுள், அவர்களும் உம் பிள்ளைகள் தானே! அவர்களோடு இருந்துருளும். சாத்தானின் சோதனையில் இருந்து அவர்களை காப்பாற்றும்.

அன்பு இயேசுவே! எங்கள் மீட்பரே! இரவில் தூங்குவதற்கு கூட வழியில்லாமல் இருக்கும், ஒவ்வொரு மனிதர்களையும் நினைவு கூர்ந்து ஜெபிக்கிறோம் அப்பா. ஆசீர்வதித்தருளும், பாதுகாத்தருளும், அரவணைத்தருளும், வழிநடத்தும்.

 

தீய கனவுகள் காணாமலும், அமைதியான தூக்கம் கிடைக்கவும், காலையில் எழுந்து உம்மை மகிமைப்படுத்த எமக்கு வரமருளும். ஆமென்.

 

 

NIGHT PRAYER 1

NIGHT PRAYER—இரவு நேர பிரார்த்தனை †

NIGHT PRAYER

இரவு நேர பிரார்த்தனை †

NIGHT PRAYER 1

எல்லாம் வல்ல தந்தை, மகன், தூய ஆவியானவரே, நாங்கள் உம்மை வணங்குகிறோம், மகிமைப்படுத்துகிறோம்! உம்முடைய தெய்வீக மகத்துவத்திற்கு நாங்கள் எம்மை அர்ப்பணிக்கின்றோம். எங்களிடம் இருந்தும் மற்றும் அனைத்து விசுவாசிகளிடமிருந்தும், நீர் விரும்பாதவைகளை எம்மிலிருந்து களைந்தருளும். உம்முடைய பார்வையில் நன்றியுள்ளவற்றை மாத்திரமே எங்களுக்கு வழங்கிடவும் பணிவுடன் மன்றாடுகிறோம்.

நீர் கட்டளையிடுவனவற்றை நாங்கள் இங்கே செய்யவும், நீர் வாக்குறுதியளிப்பதைப் பெறவும், உமக்கு நாங்கள் எங்கள் ஆத்மாக்களையும் உடலையும் அர்ப்பணிக்கின்றோம். பிறருக்கு, அவர்களின் அனைத்துத் தேவைகளையும், ஆறுதலையும் தந்து, அவர்களின் அனைத்து சோதனைகளிலும், துன்பங்களிலிருந்தும் அவர்களை விடுவித்து, அவர்கள் உண்மையை அறிந்துகொள்ளவும், அனைவரையும் அன்பு செய்யவும்,

உமக்கே சேவை செய்யவும், இனிமேல் உமது பரலோக இராச்சியத்தை அனுபவிக்கவும் அருள்புரிவீராக.

உம்முடைய தெய்வீகப் பாதுகாப்பிற்காக உலகளாவிய ரீதியில் நாங்கள் அனைத்து மக்களுக்காகவும் மன்றாடுகிறோம். நீர் அவர்களுடைய பாவங்களுக்கான உயிருள்ள மன்னிப்பை வழங்கிடவும், மேலும், மரித்து, இவ்வுலகிலிருந்து விலகிச் சென்ற அனைத்து ஆன்மாக்களும் உம்முனுடைய நித்திய அமைதியில் இளைப்பாறிடவும் அருள்வீராக! என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி புரிபவர் நீரே! ஆமென்! †

எங்கள் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் தூய திருநாமத்திலும், அவருடைய அதி பரிசுத்த அன்னை, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பரிந்துரைகள் மூலமும், தாழ்மையுடன் செபிக்கிறோம், ஆமென்! †

NIGHT PRAYER

NIGHT PRAYER

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம் †

இன்றைய ஆசீர்வாதத்திற்கு நன்றி செலுத்துவதற்கும், நாளைக்கான நம்பிக்கைக்காக ஜெபிப்பதற்கும் சரியான வழி, படுக்கை நேர ஜெபம் ஆகும்!

எங்களை என்றும் நேசிக்கும் விண்ணகத் தந்தையே, இன்று, இந்த புதிய நாளில், உமது அன்பு, கவனிப்பு மற்றும் பாதுகாப்புடன் நீர் வழங்கிய பல ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். நாள் முழுவதும் எங்கள் குடும்பங்களையும் எங்களையும் கவனித்துக்கொண்டதற்கு நன்றி. அப்பா, இரவு முழுவதும் எங்களை உமது மேலான கண்காணிபில் எம்மை வைத்திருக்க வேண்டிக்கொள்கிறோம். அன்புள்ள ஆண்டவரே, இந்த மணிநேர ஓய்வை அடைய நீர் எங்களுக்கு உதவியதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பலவித இடர்பாடுகளின் பயத்துடன் இணைந்து, இன்றைய நாளின் வெயிலின் தாக்கம் மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால் நீர் இவைகளிலிருந்து எங்களை பாதுகாத்தீர். நாங்கள் இப்போது மிகவும் அசதியாகவும் சோர்வாகவும் இருக்கிறோம். எங்கள் மனதில் பதட்டமான எண்ணங்கள் நிறைந்திருக்கின்றன.

ஆண்டவரே, இன்றிரவு உம்முடைய மேலான பாதுகாப்பின் உண்மையான ஓய்வைக் கண்டுணர எங்களுக்கு உதவி புரியும். இந்த கவலையான எண்ணங்களிலிருந்து எங்களை விடுவித்து, உமது அமைதி, நிதானம், மற்றும் மனநிம்மதியால் எங்களை நிரப்பவும். உமது அன்பான குமாரனின் திருஇரத்தத்தால் எங்களை சுத்தப்படுத்தி, உமது வழிகளில் நடக்க எங்களுக்கு உதவி புரியும். இயேசுவே, இரவின் பயங்களிலிருந்தும், இருளில் நடக்கும் கொள்ளை நோயிலினின்றும் எங்களைக் காப்பாற்றும். இந்த இரவில் எந்த தீமையும் எங்களை அண்டாது என்பதையும், எந்தவொரு கெடுதலும் எங்கள் இல்லத்தின் அருகில் வராது என்பதையும் அறிந்து நாங்கள் தூங்க உதவி புரியும். புத்துணர்ச்சியுடன் விடியலில் எழுந்து, மற்றொரு நாளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எங்கள் இனிய ஜெபங்களுக்கு பதிலளித்ததற்கு நன்றி, ஆமென்! †

இனிய இரவு வணக்கம்! 🌹
கடவுள் நம் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! †