MOR.PRAYER

MORNING PRAYER, PSALM 139

 

MORNING PRAYER

  PSALM 139

MOR.PRAYER

திருப்பாடல் : 139

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.
நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர்.

(திருப்பாடல் 139: 1-3. 13-15.)

🛐 ஜெபம் 🛐

அகில உலகையும் படைத்த எம் இறைவா! இந்த காலை வேளையில் நீர் படைத்த படைப்பு அனைத்தோடும் சேர்ந்து உம்மை போற்றுகிறேன். துதிக்கிறேன். ஆராதிக்கின்றேன்.

இறைவா, நீர் என்னோடு இருக்கிறீர் என்பதை நான் பல நேரங்களில் உணராமல், விசுவசிக்காமல் தேவையற்ற உலகக் கவலைகளில் மூழ்கி இருந்து இருக்கிறேன். உமது குரலுக்கு செவிமடுக்காமல் பற்பல பணிகளில் பரபரப்பாகி உம்மைப் புறக்கணித்த தருணங்களுக்காக மனம் வருந்தி உம்மிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

இயேசுவே உம்முடைய வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட தங்களது பணிகளில் ஆர்வமாய் இருக்கும் எண்ணற்ற மக்களுக்காக இன்று விஷேசமாக செபிக்கிறேன்.

ஆண்டவரே! அன்று நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட மரியாவைப் போல நாங்களும் விளங்க அருள் புரிவீராக.

தந்தை, மகன், தூய ஆவி என்ற மூவொரு கடவுளாகிய எம் இறைவா! உமது பிரசன்னம் எங்களோடு என்றும் இருக்க அருள் புரியும்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

 

psalm 111

MORNING PRAYER —–PRAY PSALM 111

psalm 111

MORNING PRAYER

                                                                             PRAY PSALM 111

 

திருப்பாடல் : 111

நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது. அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்;
வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.

(திருப்பாடல் 111: 1-6)

🛐 ஜெபம் 🛐

அனைத்துலகின் வேந்தரே! உம்மை போற்றுகிறோம். உம்மைப் புகழ்கிறோம். நன்றி கூறுகிறோம்.
இறைவா, உம் திருமுன் பணிந்து உம்மை ஆராதிக்கின்றோம்.

இறைவா, எங்களோடு உடனிருக்க, எங்களை வழிநடத்த நீர் தூய ஆவியானவரை எங்கள் மத்தியில் அனுப்பியது போல, அலகையை நாங்கள் வல்லமையோடு எதிர்க்க அன்னை மரியாளின் மூலம் தூய செபமாலையை எங்களுக்கு அளித்தமைக்கு நன்றி தந்தையே..🙏

இறைவா, செபமாலையை முழு கவனத்துடன், பொருள் உணர்ந்து, நிதானமாக ஒருமித்த மனதோடு சொல்லாமல், கவன சிதறலோடு கடமைக்கு விரைவாக செபித்த தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறோம்.

இனி செபமாலை செபிப்பதை எங்கள் தினசரி வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக்கிக் கொள்ளுவதோடு மட்டுமல்லாது செபமாலை பக்தியை பரப்பும் இறைப்பணியையும் முக்கிய கடமையாகக் எண்ணி நிறைவேற்றுவோம்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

MORNING PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்; இறைப்பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்; வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும்.

ஏனெனில் கடவுளே! நீரே என் ஆற்றல்; ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துயருடன் நடமாடவேண்டும்?

உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும்.

அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன்.

என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு; என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.

(திருப்பாடல்கள் 43:1-5)

அணுக முடியாத ஒளியில் வாழும் இறைவா! இந்த காலை வேலையிலே உம்மை போற்றுகிறோம், புகழுகிறோம், வாழ்த்துகிறோம், வணங்குகிறோம், ஆராதிக்கின்றோம், மகிமைப்படுத்துகின்றோம்.

 

இந்த நேரம் வரை எங்களை வழிநடத்தி வந்த, உமது இரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.

தூய்மையின் பிறப்பிடமே இறைவா! நாங்கள் பாவத்திலிருந்து மீட்பு பெற்று, தூய்மையான நிலையில் உம்மிடம் வந்து சேர வேண்டும் என்பதற்காகவே நீர் பாடுகள் பட்டீர். ஆனால் நாங்கள், எங்களின் இயலாமையினால் மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுகின்றோம்.

ஆண்டவரே! எங்கள் உடல் ஒருநாளும் பாவத்திற்கு இடம் கொடாதவாறும், எங்கள் உடல் ஒருநாளும் பாவத்திற்கு துணை போகாதவாரும், நீர் உமது தூதரை அனுப்பி எங்களை காத்தருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

இவ்வாறு நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும், சாத்தானுக்கு இடம் கொடாமலும், அவனது தீய வலையில் விழாமலும் காப்பாற்றப் படுவோமாக! இதுவிதமே நாங்கள் உமது பிள்ளைகளாக, உமக்கு சாட்சியான பிள்ளைகளாக வாழும் வரம்தர வேண்டும் என்று..

இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.

 

PSALM 85

MORNING PRAYER—PSALM 85

 

MORNING PRAYER

திருப்பாடல் : 84

PSALM 85

என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர். அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார்.

(திருப்பாடல் 84: 2-5, 11)

🛐 ஜெபம் 🛐

என்றும் வாழும் தந்தையே எம் இறைவா! மேலும் ஒரு புதிய நாளை எங்களுக்கு அளித்து நாங்கள் மனம் திரும்ப மேலும் ஒரு புதிய சந்தர்ப்பத்தை எங்களுக்கு அளித்திருக்கிறீர். நன்றி இறைவா! 🙏

 

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

MOR.PRAYER

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.

யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;

புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள்.

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கை

அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் ப+வுலகு நிறைந்துள்ளது.

(திருப்பாடல்கள் 33:1-5)

உலகை படைத்து, பராமரித்து வழிநடத்தி வரும் இறைவா! இதோ இந்த காலை நேரத்திலே, உம்மை போற்றி புகழுகிறோம்.

உம்மோடு பேசவும், உம்து அன்பை அனுபவிக்கவும், இன்னொரு புதிய நாளை எங்களுக்கு தந்தமைக்காக, உமக்கு நன்றி கூறுகிறோம்.

ஆண்டவரே! உமது அன்பை மறந்து நாங்கள் செய்த அனைத்து செயல்களுக்காகவும், இந்த நேரத்தில் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறோம். உமது அன்பிலிருந்து விலகி சென்றதற்காக மனம் வருந்துகிறோம். உமது பேரிரக்கத்தை முன்னிட்டு எங்களை மன்னித்தருளும் அப்பா.

எங்கள் வாழ்க்கை பயணத்தில் துணையாய் இரும்; எங்கள் அன்றாட செயல்களில், நேர்மையுடன் நடக்க எங்களுக்கு துணை புரியும்; இரக்க செயல்கள் செய்ய எங்களை ஈடுபடுத்தும்.

இவ்வாறு, எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பணிபுரிந்து, எங்கள் வாழ்வின் மூலம் உம்மை பிறருக்கு வெளிப்படுத்தி வாழ, எங்களுக்கு தேவையான அருள் வரங்களை தந்துருளும்.

 

PSALM 19 —-MORNING PRAYER

திருப்பாடல் : 19

MORNING PRAYER

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர்அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளி மயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.

(திருப்பாடல் 19: 7-10)

🛐 ஜெபம் 🛐

கருணையும், அன்பின் செல்வந்தரும், படைப்பின் ஆண்டவருமான என் இறைவா! நீர் எனக்குத் தந்துள்ள அனைத்து ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் நினைத்து நான் உமக்கு நன்றி கூறுகின்றேன். படைப்பு அனைத்தோடும் சேர்ந்து நான் உம்மை போற்றித் துதித்து ஆராதிக்கின்றேன்.

என் இயேசுவே! இன்று நான் காண்பதையும், கேட்பதையும், சிந்திப்பதையும், செயல்படுவதையும், நேரிடுவதையும், அதற்கு ஏதுவான அனைத்தையும், என் இதயத்தைப் பாதிப்பவைகளையும் இன்று உலகமெங்கும் ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியோடு இணைந்து பரிசுத்த அன்னையின் மாசற்ற திரு இருதயத்தின் வழியாக உமக்கு நான் காணிக்கையாக்குகின்றேன்.

இறைவா, இன்றைய ஞாயிறு திருப்பலியை பக்தியோடு பங்குபெற்று உமது திருவுடலை விசுவாசத்தோடு பெற்றுக் கொள்ளும் அனைத்து மக்களையும் நீர் ஆசீர்வதிப்பீராக. பல்வேறு பிணிகளால் வறுந்தும் பலரை உமது திருக்கரங்களால் தொட்டுக் குணமாக்கிடும். உமது பிள்ளைகளாகிய எங்களுக்கு நல்ல உடல், உள்ள சுகத்தினைத் தந்தருளும். 🙏

இறைவா, பிறந்த இந்த புதிய மாதத்தில் பிறருக்கு வேதனையோ, வருத்தமோ, பெயரைக் கெடுக்கும் யாதொன்றும் என்னில் இருந்து ஏற்படாதவாறு என் பேச்சுக்களில் கவனத்தோடும், என் செயல்பாடுகளில் விவேகத்தோடும் செயலாற்ற எனக்கு உதவியருளும். ஆன்ம பலத்தால்

கோபத்தை அன்பாகப் பகிர்ந்திடவும், அன்பால் பழிவாங்கும் சிந்தனைகளை வெற்றி கொள்ளவும், பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் சமாதானத்தை இழந்து விடாமல் உம்மையே அடைக்கலமாக்கி நான் வாழ எனக்கு உதவியருளும்.🙏

ஆண்டவரே! நன்மை தீமைகளை பகுத்தறியும் நல்ல ஞானத்தை எனக்குத் தந்தருளும். மேலும் தூய ஆவியானவர் என்னுள் தங்கியிருக்க, என்னுள் இருந்து செயலாற்ற அருள் புரிவீராக. 🙏

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

PSALM 145

திருப்பாடல் : 145

திருப்பாடல் : 145

MORNING PRAYER

PSALM 145

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர். ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார்.

(திருப்பாடல் 145 : 8-14)

🛐 ஜெபம் 🛐

இரக்கமும், கனிவும், பேரன்பும் கொண்ட எம் இறைவா! இந்த காலை வேளையில் உம்மைப் போற்றுகின்றேன்! உம்மைப் புகழ்கின்றேன்! நன்றி கூறுகின்றேன்.

இறைவா! இந்நாள் முழுவதும் எனக்குத் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் கிடைக்கப் பெற அருள் புரிவீராக. அப்போதுதான் என் வாய் மனித ஞானத்தால் கற்றுக் கொண்ட சொற்களைப் பேசாமல் தூய ஆவியானவர் கற்றுத் தரும் சொற்களையே பேசும்.

இயேசுவே! பல குடும்பங்களில் ஏற்படும் குழப்பம், சமாதானமின்மை, சண்டை, சச்சரவு ஆகியவற்றிற்குக் காரணமான தீய ஆவிகளை உமது வானளாவிய அதிகாரத்தால், வல்லமையால் விரட்டிவிடும். அக்குடும்பங்களில் குடும்ப செபமாலை சொல்லும் வழக்கத்தினால் நிலையான அமைதி, சமாதானம் குடிகொள்ள அருள் புரிவீராக.

இறைவா, இந்த நாள் முழுவதும் எங்களோடு இருந்து எங்களைக் காத்து வழி நடத்துவீராக.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

MORNING PRAYER

MORNING PRAYER      —-                WINGS OF PRAYER                                  

MORNING PRAYER

WINGS OF PRAISES

MORNING PRAYER

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.

அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!

அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!

ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!

அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.

(திருப்பாடல்கள் 105:1-5)

என் அன்பிற்குரிய இறைவா! உம்மை புகழ்கின்றேன், வணங்குகின்றேன், ஆராதிக்கின்றேன்.

இந்த இனிய காலை வேளையை மீண்டும் காணச்செய்து, உம்மை தாழ்ச்சியுடன் ஜெபிக்க, வரம் தந்த மேலான ஆசீருக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.

இந்த நாள் ஒரு புனித நாளாக மலரட்டும். இந்நாளில் எது நடந்தாலும், அது என் நன்மைக்காகத்தான் என்று ஏற்றுக்கொள்ள கூடிய நல்ல உள்ளத்தை எனக்குத் தாரும். என்ன நேர்ந்தாலும், உமக்கு நன்றி சொல்லக்கூடிய மனப்பக்குவத்தை என்னில் மலரச் செய்யும்.

என் அன்பு இயேசுவே! என் சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் ஆசீர்வதியும். உலக நாட்டங்களில் சிக்கி கொள்ளாமல், நேர்மையான உள்ளத்தோடு, பரிசுத்தமாக வாழ.. உமது ஆவியின் கனிகளால் எம்மை நிரப்பிப் பாதுகாப்பீராக.

இயேசு மரியாயே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.