MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

MOR.PRAYER

இயேசுவின் திருஇருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்

இயேசுவின் திருஇருதயமே ! கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும் சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம். நேசமுள்ள இயேசுவே ! எங்கள் குடும்பங்களில் உள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம் .தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திருஇருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும். தவறி எங்களில் எவனாவது உமது திருஇருதயத்தை நோகச் செய்திருந்தால் அவன் குற்றங்களுக்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவனுக்கு கிருபை செய்தருளும். இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், ஊனமுற்றோர்களுக்கு ஊன்றுகோலும் ,விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்து காத்திருப்பீராக.

இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே ! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தரே, இந்த ஊரில் உள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும், அவர்களுடைய திருஇருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வபயத்தையும் வளரச் செய்யும். சீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும், மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம்.

திவ்விய இயேசுவே !முறைமுறையாய் உமது திரு சிநேகத்தில் சீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும் .

ஆமென்.🙏

PSALM 68

PSALM 68 PRAYER

PSALM 68 PRAYER

 

திருப்பாடல் : 68PSALM 68

கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும். எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர். உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். வானங்களின் மேல், தொன்மைமிகு வானங்களின் மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்; இதோ! அவர் தம் குரலில், தம் வலிமைமிகு குரலில், முழங்குகின்றார். கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள். அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது; அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது. கடவுள் போற்றி! போற்றி!

(திருப்பாடல் 68: 28-29, 32-35c)

🛐 ஜெபம் 🛐

நம்பிக்கையைத் தருகின்ற நல்அமுதே! என் வாழ்வை நம்பிக்கையில் துலங்க செய்பவரே! உம்மை தாழ்ந்து பணிந்து ஆராதிக்கின்றோம். உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

“பெற்றுக் கொள்வதைவிடக் கொடுத்தலே பேறுடைமை” என்று கூறிய எம் இயேசுவே, பிறருக்கு அதிக அளவில் உதவி செய்ய தகுந்த சூழ்நிலையை எங்களுக்குத் தந்தருளும். அன்னை மரியின் அரவணைப்பில், தூதர்களின் பாதுகாப்பில் கண்விழித்து நாங்கள் மீண்டும் வாழவும், உம்மைப் போற்றிப் புகழவும், எங்களின் ஆன்மாவின் மீட்புக்காகவும் மீண்டும் ஒரு புதிய நாளைத் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இறைவா! உம் திருமுகத்தைத் தேடவும், உம் திருவழியில் நடக்கவும், எங்கள் முழு உள்ளத்தோடும், ஆன்மாவோடும் உம்மை அன்பு செய்யவும், உமக்காக வாழவும், பாவத்தை விட்டு நாங்கள் விலகவும் அருள்புரியும்.

இயேசு, மரி!, சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

night-prayers

MORNING PRAYER

MORNING PRAYER

PEACE OF MIND

Day 3 (June 05, 2025) – PURPOSE

📖 Key Verse: “You will receive power when the Holy Spirit has come upon you; and you will be my witnesses…” (Acts 1:8)

💭 Reflection: The Holy Spirit gives us courage and clarity in our Christian calling. At the Pentecost, the disciples of Christ were transformed into being ‘lion-hearted’ as they discovered the purpose of their life. Many times, we get lost and fail to grasp the true meaning of life. Our lives are to be lived for God, to share His Love with one another and to help others to love God more!

What are some of the fears and doubts that prevent me from living for Christ completely
What can I do to help others to discover greater meaning and joy in life?

🗣️ Quote from Early Church Fathers: “The Spirit is not given for idleness but for service – for the building up of the Church and the salvation of souls.” (St. John Chrysostom)

🙏 Prayer: O Holy Spirit, fill me with Your Power that I may have greater conviction in the Gospel Message and to be Your powerful witness of Love and Mercy, Amen!

COME HOLY SPIRIT, FILL MY HEART!
COME HOLY SPIRIT, LEAD MY LIFE!

MORNING PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

APPRECIATE

ஆற்றலுள்ள குழந்தை இயேசுவுக்கு நவமணி செபம்:

(ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி, மணிக்கு ஒருமுறையாக 9 முறை குழந்தைக்குரியப் பற்றுதலோடு தொடர்ச்சியாக செபிக்க வேண்டும்)

ஓ இயேசுவே! “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.” என்று மொழிந்தீரே. உமது திருத்தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக நான் கேட்கிறேன், தேடுகிறேன், தட்டுகிறேன். நான் கேட்கும் இந்த வரங்களைக் கொடுத்தருளுமாறு பணிவுடன் மன்றாடுகிறேன்.

(தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்)

ஓ இயேசுவே! “என் பெயரால் நீங்கள் தந்தையைக் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருளுவார்” என்று மொழிந்தீரே. உமது திருத்தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக எனக்கு அவசரமான இந்த மன்றாட்டை அளித்தருளுமாறு, உமது பெயரால் தாழ்ந்த உள்ளத்துடன் தந்தையை கெஞ்சி மன்றாடுகிறேன்.

(தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்)

ஓ இயேசுவே! “விண்ணும் மண்ணும் அழிந்து போகும். ஆனால் என் சொற்களோ ஒருபோதும் அழியா” என்று மொழிந்தீரே. உமது திருத்தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக என் செபம் கேட்கப்படுமென்று நான் உறுதியாக நம்புகிறேன்.

(தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்)

𝐏𝐫𝐚𝐲𝐞𝐫 𝐟𝐨𝐫 𝐒𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡

𝐏𝐫𝐚𝐲𝐞𝐫 𝐟𝐨𝐫 𝐒𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡

 

Dear Lord, I come to you today in need of your strength and guidance. I am feeling overwhelmed and I need your help to face the challenges before me.

Grant me the grace to remain steadfast in the face of adversity, and to trust in your love. Fill me with your peace and calm my restless mind and heart.

Grant me the courage to stand up for what is right, and to be a witness to your truth in all I do. Give me the strength to endure any hardship with grace and dignity.

May your Holy Spirit be my guide, giving me the wisdom and fortitude I need to face each day with confidence. I trust in you, Lord, and I know that with your help, I can overcome any obstacle.

PSALM 47

திருப்பாடல் : 47

PSALM 47

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார்.

(திருப்பாடல் 47: 1-2. 5-8)

ஜெபம்

எல்லாம் வல்ல இறைவா! உம் திருமுன் பணிந்து உம்மை ஆராதிக்கின்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை அன்பு செய்கின்றோம். நீர் எங்களுக்கு அளித்துள்ள அனைத்து நன்மைகளுக்கும் உமக்கு நன்றி கூறுகின்றோம். கடந்த மே மாதம் முழுவதும் எங்களை உமது கண்ணின் மணி போல காத்து வழிநடத்தி வந்தீர். நன்றி தந்தையே..

இன்றைய ஓய்வு நாளில் உம்மை மகிமைப்படுத்த எங்களை மீண்டும் எழுப்பியுள்ளீரே ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றைய ஓய்வு நாளை உம்மிடமே ஒப்படைக்கிறோம். உம் திருவுடலை உணவாக உட்கொள்ள ஆவலாய் இருக்கும் எங்களை உமது அன்பினால் வழிநடத்தும்.

நல்லாயனாகிய இயேசுவே ! நாங்கள் உம் மந்தையின் ஆடுகள். நாங்கள் ஆயனாகிய உம்மீது நம்பிக்கை கொள்ளவும், ஒளியாகிய உம்மை எல்லா சூழ்நிலையிலும் முழுமையாக நம்பிடவும், துன்ப வேளைகளிலும் சோர்ந்த நேரங்களிலும் உம்மை இறுகப் பற்றிக்கொண்டு, உமது வழியில் நாங்கள் பயணிக்கவும் எங்களுக்கு அருள்புரியும்.

பிறந்த இந்த ஜூன் மாதம் முழுவதும் உமது ஆசீர்வாதங்களை எங்கள் மீது அபரிதமாகப் பொழியச் செய்தருளும்.

இயேசு மரி சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

MOR.PRAYER

PRAYER FOR THE DAY

PRAYER FOR THE DAY

MOR.PRAYER

வல்லமையும் விடுதலையும் தருகின்ற எங்கள் அன்புத் தந்தையே!

இந்த அற்புதமான நாளிலே உம்மை ஏறெடுத்து நோக்குகின்றோம்!

நீர் எங்களுக்கு இந்த கடினமான நாட்களிலே நோய்களிலிருந்து விடுதலை கொடுத்து பாதுகாத்துகொண்டிருக்கின்றீர். அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
அன்புத் தந்தையே! விடுதலை பயண நூலில் மோசே,

ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.

(வி.ப.15:2) என்று பாடியதுபோல, நாங்களும் மகிழ்ச்சியோடு இந்தப்பாடலை பாடி,
நீர் எங்களுக்கு விடுதலையாகவும், ஆற்றலாகவும், நாங்கள் மகிழ்ச்சியோடு பாடுகின்ற பாடலாகவும், இருந்து ஆசீர்வதிக்கின்றீர். நன்றி தந்தையே!

இதோ இந்த இரவு பொழுதிலே நாங்கள் உறக்கத்திற்கு செல்கின்றபொழுது, உம்முடைய ஆற்றல், உம்முடைய விடுதலை, உம்முடைய பாடல், எங்களோடு தங்கட்டும் தந்தையே!

எதிர்பார்க்காத எல்லா காரியங்களும் நீர் எங்களுக்கு வாய்க்கப் பன்னுவதற்காக, நன்றி செலுத்துகின்றோம் ஆண்டவரே.

PEACE OF MIND

MORNING PRAYER

MORNING PRAYER

PEACE OF MIND

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்ச மாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக. சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

எசாயா 12 : 2-6

ஜெபம்

உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருபவரே! வலியோரை அரியணையினின்று தூக்கி எறிபவரே! தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துபவரே! பசித்தோரை நலன்களால் நிரப்புபவரே! செல்வரை வெறுங்கையராய் அனுப்புகிறவரே! உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதனை செய்கிறோம்.

ஆண்டவரே! தாழ்ச்சியிலும், தூய அன்பிலும், பிறரன்பு பணியிலும் அன்னை மரியாளை உதாரணமாக எங்கள் அனைவருக்கும் அளித்தீர். ஆனால் அகம்பாவம், ஆணவம், சுயநலம், கடும்சினம் ஆகிய அலகையின் அஸ்திரங்களினால் அவ்வப்போது நான் வீழ்ந்த தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். இரக்கத்தின் இறைவா! உன் அன்பு பிள்ளையாகிய என்னை மனமிரங்கி மன்னித்தருளும்.

ஆண்டவரின் தாயாகிய அன்னை மரியா, எங்களுக்காக பரிந்து பேச, எங்களுக்காக மன்றாட, எங்களுக்காக இரக்கம் கொள்ள பாவிகளாகிய நாங்கள் யார்? அகில உலகுக்கும் அன்னையவளை எங்களுக்குத் தாயாக தந்த எங்கள் தந்தையே உமக்குக் கோடி நன்றி.

இயேசுவே! நீர் கூறியவற்றை அனைத்தும் நாங்கள் செய்வதே அன்னையவளுக்கு நாங்கள் செலுத்தும் உண்மையான அன்பு. அது ஒன்றே அவளை என்றென்றும் மகிழ்விக்கும்.

ஆண்டவரே, உம்மை ஈன்றெடுத்த நம் அன்னை மரியாளின் புனித நாமம் என்றென்றும் போற்றப்படுவதாக.

PEACE OF MIND

DAILY PRAYER

DAILY PRAYER

PEACE OF MIND

Presence

I hear the Lord whispering my name, inviting me into this time of prayer. I let all other distractions fall away as I bask in the blessing of the nearness of God.

Freedom

I try to let go of concerns and worries that may be dragging me down at this present moment. I place any concerns I have in God’s hands – at least for these few minutes of prayer.

Consciousness

We are all pilgrims on a journey to You, Lord. May we contemplate Your time on earth, and, with Your help, follow in Your footsteps.

The Word of God
John 16:12-15

“I still have many things to say to you, but you cannot bear them now. When the Spirit of truth comes, he will guide you into all the truth, for he will not speak on his own but will speak whatever he hears, and he will declare to you the things that are to come.

He will glorify me because he will take what is mine and declare it to you. All that the Father has is mine. For this reason I said that he will take what is mine and declare it to you.

Inspiration

The first disciples of Jesus were essentially simple, uneducated men. That they found it hard to take in what Jesus was saying to them is an understatement.

Even today, we still find it difficult, and it has taken centuries of study and brilliant minds to help us grow in our understanding of Jesus’ words.

We need the guarantee of the Holy Spirit that our Church will not err in what it teaches. We give thanks for the gift of the Holy Spirit and pray to be open to his leading us in the truth.

Conversation

The gift of speech is a wonderful gift. May I use this gift with kindness. May I be slow to utter harsh words, hurtful words, and words spoken in anger.

Conclusion

I thank God for these few moments we have spent alone together and for any insights I may have been given concerning the text.

LIVING

MORNING PRAYER

MORNING PRAYER

LIVING

Creator God, remind me that you have not only created this day, but you have also created me to live in it. Help me pause in this moment of prayer, that I may hear your voice and seek your call and purpose for the journey that is ahead of me this day.

May my thoughts and deeds this day lead me to look to you, O God, as my strength and my guide. Lord, in humility, I ask you to guide my steps, forgive my sins and cleanse my heart for your Name’s sake. Help me to lean into you, O God, that my ways may be your ways, my thoughts your thoughts, and my words, your words.