GOOD DAY

MORNING PRAYER

                                                                                 MORNING PRAYER

GOOD DAY

காலை ஜெபம்

ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.

காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.

எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச் செய்யும்.

உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.

எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!

(திருப்பாடல்கள் 90:13-17)

அனைத்துலகின் இறைவா! இந்த காலை வேளையிலே, உண்மை போற்றி புகழ்கிறோம். நற்கருணையில் எங்களோடு வாழும் உமக்கு, நன்றி ஆராதனை செய்கிறோம்.

அன்பான தந்தையே, எங்கள் மீது கொண்ட தீராத அன்பினால், உமது திருமகனையே எங்களுக்காக பலியாக்கினீர். ஆனால் நாங்கள், உமது அன்பில் இருந்து பல நேரங்களில் விலகிச் சென்று விடுகிறோம்.

அன்பான தந்தையே! நாங்கள் உமது அன்பிலிருந்து நீங்காமலும், உமது அரவணைப்பிலிருந்து வெளியே வராமலும் இருக்க, எங்களுக்கு துணை செய்யும்.

ஆண்டவரே! நாங்கள் படுக்கையில் இருந்து விழித்தெழுவது போல, பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர்களாக, சாத்தானின் எல்லா விதமான சூழ்ச்சிகளையும் அறிந்தவர்களாய், அவனது வலையில் இனி ஒருநாளும் சிக்காமல் இருப்போமாக. உமது அரவணைப்பில் எங்களை வைத்து பாதுகாத்தருளும்.

இவ்வாறு எங்கள் வாழ்நாள் எல்லாம் உமக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பணிபுரிந்து, எங்கள் வாழ்வின் மூலம் உம்மை வெளிப்படுத்தி வாழ, எங்களுக்கு தேவையான வரங்களை தந்துருளும்.

இன்றைய எங்களின் ஒவ்வொரு செயல்களையும் ஆசீர்வதியும். சோர்வின்றி எங்களின் அன்றாடப் பணிகளை, உமது ஞானத்தின் வழியில் நிறைவுடன் செய்ய, தேவையான அருளை வேண்டி மன்றாடுகிறோம்.

இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.

PEACE OF MIND

Morning prayer

                                                                            Morning prayer

PEACE OF MIND
Father, what joy it is to awake to a new day of liberty in you! Thank you for the refreshment of the night. Help me to face the day with purpose and with confidence in your Holy Spirit’s ever-freeing and ever-living power.

Thank you for the path you have placed before me this day. Thank you, also, for the gifts of your Holy Spirit, which operate in me and keep me from being dominated by my fears. You are the God of power and love, and I have received your power by adoption into your family.

Help me to always remember that I am an heir to greatness and not mediocrity! Give me clarity of focus and singleness heart today that I may be completely be centered on you and your will. In the name of the Father, the Son, and the Holy Spirit.

MOR.PRAYER

MORNING PRAYER

                                                                          MORNING PRAYER

MOR.PRAYER 1

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;

மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

(திருப்பாடல்கள் 23:1-6)

✝️ஜெபிப்போமாக :🛐

எங்கள் பாதுகாவலரான புனித தோமையாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே, கிறிஸ்துவை தொட்டறிந்து கிறிஸ்துவின் மீது நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை அறிந்து பறைசாற்ற பேறுபெற்ற தூயவரே, எம் பாரத பூமியில் நற்செய்தியை ஆர்வமுடன் போதித்த போதகரே.! தப்பறைகளை உடைத்த திருத்தூதரே..!, இறைவனின் அருளால் பல வாரங்களை இந்திய மக்களுக்கு அளித்து கிறிஸ்துவின் அன்பை விதைத்த புனிதரே..! இந்த காலை வேளையில் உம்மோடு உறவாட வந்துள்ளேன். என்னை ஆசீர்வதித்தருளும். என் உள்ளத்தின் குரலை கேட்டு எனக்கு உதவியருளும்.

இறைவனை அறிந்து நீரே என் கடவுள் நீரே என் ஆண்டவர் என மொழிந்து அவர் வழியில் நடந்த புனித தோமையாரே..!நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள எங்களை, கடன் தொல்லை, தொழிலின்மை போன்ற இக்கட்டுகளில் இருந்து பாதுகாத்தருளும். உமது பரிந்துரை வழியாக துன்பம், வறுமை, அவமானம், ஏமாற்றம் ஆகியவற்றால், வாடி நிற்கும் எங்களுக்கு உதவியருளும். வறுமையால் துயருற்று அழுவோரின் கண்ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.

எங்கள் அன்புக்குரிய புனித தோமையாரே..! இறைவனின் சித்தம் எதுவெனக் கண்டு, எப்பொழுதும் நீர் பரிசுத்தமாக நடந்தது போல, நாங்களும் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப எப்போதும் நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும், தீமையை அகற்றி தூயோராய் வாழவும்; மக்கள் யாவரும் மெய்யங் கடவுளைக் கண்டறிந்து தக்க முறையில் அவரை வழிபடவும், எங்களுக்காக இயேசு ஆண்டவரிடம் வேண்டியருளும்.

எங்களையும் எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும், உழைப்பினையும் ஆசிர்வதித்தருளும். எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற, எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசியருளும்.

உமக்கு திருவிழா எடுத்து கொண்டாடும் இவ்வேளையில், எங்களை நீர் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். எங்களை எப்போதும் தீயோனிடமிருந்து காத்திடுமாறு வேண்டுகிறோம். சாத்தானின் வஞ்சக சூழ்ச்சியில் நாங்கள் விழாமல் உம்மீது விசுவாசத்தில் நிலைத்திட உம்மை மன்றாடுகிறோம்.

🙏🏻ஆமென்.🙏🏻

MOR.PRAYER

Morning prayer

                                                                                Morning prayer

MOR.PRAYER 1

Wonder-working God, I enter your day with thanksgiving and begin this day with praise. I honor and adore you. I exalt you for your goodness and your mercy. Again, this new morning, your new mercies I beseech.

One of the things I fail to see are the blessings that you have in store for me. Help me to slow down enough in this day to recognize not only your blessings, but simply your constant presence in my life. Grant me the serenity to walk in your peace.

Lord, help me to be the Light that you have called me to be to the world in which I find myself.

MORNING PRAYER

MORNING PRAYER

காலை✝️ஜெபம்🌤️🌴

🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

அவர் அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, அவர்களது துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார்.

அவர்களுக்கு உதவுமாறு, அவர் தமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்; தமது பேரன்பிற்கேற்பக் கழிவிரக்கம் கொண்டார்;

அவர்களைச் சிறைசெய்த அனைவர் முன்னிலையிலும் அவர்கள் இரக்கம் பெறும்படி செய்தார்.

எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! எங்களை விடுவித்தருளும்; வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும்; அப்பொழுது நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்; உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம்.

இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக! மக்கள் அனைவரும் “ஆமென்” எனச் சொல்வார்களாக! அல்லேலூயா!

(திருப்பாடல்கள் 106:44-48)

✝️ஜெபிப்போமாக:🛐

அனைத்தையும் படைத்து, காத்து, வழிநடத்தி வரும் இறைவா! இந்த காலை வேளையிலே உம்மை போற்றுகின்றோம்.

இவ்வுலகில் உமது வல்லமை விளங்கும்படி, முற்காலத்தில் மக்களை வழிநடத்தி வந்தீர். இக்காலத்தில், உமது மகனையே எங்களுக்காக அனுப்பி, எங்களை மீட்டுக் கொண்டீர். உமது எல்லையற்ற அன்பால், நாங்கள் விண்ணகத்துக்கு உரிமை பெற்றுள்ளோம். நன்றி ஆண்டவரே!

அன்பான தந்தையே! உமது தூய ஆவியார், எங்களின் உள்ளங்களை ஆட்கொள்ளட்டும். உமது அரசை, இவ்வுலகில் வெளிப்படுத்தும் பிள்ளைகளாக நான் வாழ, எங்கள் மீது இறங்கச் செய்தருளும்.

வேதனைகள், சோதனைகள் வரும் வேளைகளில், இனி சோர்ந்து போகாமல், அடுத்து கிடைக்கவிருக்கும் மகிமையை காண, வழிநடக்க உமது வல்லமையை எமக்குத் தாரும்.

🙏🏻ஆமென்.🙏🏻

MORNING PRAYER

MORNING PRAYER

“காற்றும் கடலும் இவருக்குக் கீழ்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?” என்று வியந்தார்கள்.
(மத்தேயு 8;23-27)

❤️ தியானிப்போம்❤️
✝️ என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மை மிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர். வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர்.
✝️ நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்! காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர். தீப்பிழம்புகளை உம் பணியாளராய் கொண்டுள்ளவர்.
✝️ நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின் மீது நிலை நாட்டினீர்.அது என்றென்றும் அசைவுறாது. அதனை ஆழ்கடல் ஆடையென மூடி இருந்தது. மலைகளுக்கும் மேலாக நீர் திரள் நின்றது. நீவிர் கண்டிக்கவே அது விலகி ஓடியது; நீவிர் இடியென முழங்க அது திகைப்புற்று ஓடியது.(திபா104)
✝️❤️ புதிய மாதம் கடவுளின் கருணை. அவரது ஞானம் வியப்புக்குரியது, நம் அறிவுக்கு எட்டாதது. மாட்சிமை மிகுந்த அவரது மேன்மைக்கு பணிந்து, எல்லையற்ற அவரது கருணையை புகழ்ந்து வணங்கி ஆராதித்து நல்வாழ்வை சுத்திகரித்துக் கொள்வோம்.

🙏 ஜெபம் 🙏
✝️🧎‍♀️ என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உள்ளமே அவரது திருப்பெயரை ஏத்திடு!
+🧎‍♀️ ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
+🧎‍♀️ தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பி இருக்கின்றன. நீர் கொடுக்க அவை சேகரித்துக் கொள்கின்றன. நீர் உமது கையை திறக்க அவை நலன்களால் நிறைவுறுகின்றன.
+🧎‍♀️ நான் வாழும் நாளெல்லாம் ஆண்டவரை போற்றி பாடுவேன்; என் உயிர் உள்ள வரையிலும் என் கடவுளுக்கு புகழ் சாற்றிடுவேன்.
+🧎‍♀️ என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக. நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.(திபா104) ஆமென் அல்லேலூயா..
🙏 இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏
🌹 மரியே வாழ்க🌹

Human hands praying to god on mountain sunset background

MORNING PRAYER

MORNING PRAYER

PRAYER1

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

கடவுளை நோக்கி உரத்த குரலில் மன்றாடுகின்றேன்; கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள வேண்டுமென்று அவரை நோக்கி மன்றாடுகின்றேன்.

என் துன்ப நாளில் என் தலைவரை நாடினேன்; இரவில் அயராது கைகூப்பினேன்; ஆனாலும் என் ஆன்மா ஆறுதல் அடையவில்லை.

கடவுளை நினைத்தேன்; பெருமூச்சு விட்டேன்; அவரைப்பற்றி சிந்தித்தேன்; என் மனம் சோர்வுற்றது.

என் கண் இமைகள் மூடாதபடி செய்துவிட்டீர்; நான் கலக்கமுற்றிருக்கிறேன்; என்னால் பேச இயலவில்லை.

கடந்த நாள்களை நினைத்துப் பார்க்கின்றேன்; முற்கால ஆண்டுகளைப்பற்றிச் சிந்திக்கின்றேன்.

(திருப்பாடல்கள் 77:1-5)

✝️ஜெபிப்போமாக : 🛐

விண்ணக தந்தையே இறைவா! உம்மை போற்றுகிறோம்! நீரே விண்ணையும், மண்ணையும் படைத்தவர். அனைத்தையும் வழிநடத்தி வருபவரும், ஆள்பவரும் நீரே! உமக்கே அனைத்தும் அடிபணிகின்றன, உமக்கே மகிமையும், மாட்சியும் உரித்தாகுக ஆமென்!

அன்பு ஆண்டவரே! இந்த நேரம் வரை எங்களை பராமரித்து, வழிநடத்தி வந்த உமது இரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்!

இயேசுவே! எனக்கு வாழ்வே நீர்தான். நீர் என் வாழ்வில் இல்லை என்றால், நான் இருளில் வீழ்ந்து விடுவேன். அப்பா! உம்மை அதிகமாக நேசிக்கவும், எப்போதும் உமது அன்பு உறவில் வாழவுமே ஆசிக்கின்றேன். அன்பு இதயமும், பரிசுத்தமான உள்ளத்தையும் எனக்கு தந்தருளும்.

அப்பா! இன்றைய நாளில் பிறருக்கு வேதனையோ, வருத்தமோ, பெயரை கெடுக்கும் யாதொன்றும் என்னில் இருந்து ஏற்படாதவாறும்,

நாங்கள் பேசும் போது கவனத்தோடும், என் செயல்கள் விவேகத்தோடும் செயலாற்ற எனக்கு உதவியருளும். தீமையானது எதுவும், என் நாவில் இருந்து வராதபடி எனது சிந்தனையை பரிசுத்தமாக்கும்.

🙏🏻ஆமென்.🙏🏻

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

திருப்பாடல் : 103

MOR.PRAYER 1

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினம் கொள்பவரல்லர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.

(திருப்பாடல் 103: 1-4, 8-11)

🛐 ஜெபம் 🛐

அகில உலகையும் படைத்தவரே! இரக்கமும் அருளும் கொண்டவரே !
பேரன்பையும், இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றவரே! உம்மை இந்த காலை வேளையில் வாழ்த்தி, வணங்கி, போற்றி ஆராதனை செய்கிறோம்.

என்றென்றும் வாழும் எல்லாம்வல்ல எம் இறைவா! இந்த புதிய நாளை எங்களைக் காணச் செய்த உமது கிருபைக்காக நன்றி. நேற்றைய ஒய்வு நாளில் உமது இறைவார்த்தையைக் கேட்டு, உமது மகனும், எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் திருவுடலை உண்ணும் பெரும் பாக்கியத்தை எங்களுக்கு அளித்தீரே. நன்றி இறைவா!

இனிய இயேசுவே! அனுதினமும் உம் வழி நடக்க, உம்மைக் காண, உம்மைப் பின்பற்ற நாங்கள் ஆவல் கொண்டுள்ளோம். “என்னைப் பின்பற்றி வா..” என்ற உமது குரலைக் கேளாது, உமது அழைப்பை உணராது இருந்த எங்களது கடந்த கால தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிபைக் கேட்கிறோம். மன்னிக்கும் தேவனே மனமிரங்கி எங்களை மன்னித்தருளும். 🙏

ஆண்டவரே! நாங்கள் விசுவாசத்தில் என்றென்றும் நிலைத்திருந்து எந்த சூழ்நிலைகளிலும் உம் அழைப்பை ஏற்று நாங்கள் உம்மைப் பின்பற்ற எங்களுக்கு அருள் புரிவீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

MORNING PRAYER, PSALM 116

MORNING PRAYER

திருப்பாடல் : 116

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;
இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.

(திருப்பாடல் 116: 12-13. 15-16. 17-18)

🛐 ஜெபம் 🛐

என் அன்பிற்குரிய இயேசு கிறிஸ்துவே, இப்புதிய ஓய்வு நாளை எங்களைக் காணச் செய்த உமது மேலான கிருபைக்காக நன்றி.

இயேசுவே உமது திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவான இன்று ஆலயத்தில் திருப்பலியில் உமது திருவுடலை புசிக்க நாங்கள் ஆவலாக உள்ளோம். உமது ஆன்மீக உணவு எங்களது ஆன்மா, உடல் இரண்டிற்கும் பெலனையும், சக்தியையும் தர நீர் அருள் புரிவீராக.

உமது திருவுடலை நாங்கள் உண்ணும்போதெல்லாம் உமது சாவினை அறிவிக்கும் பேற்றினை எங்களுக்கு நீர் அளித்துள்ளீர்.

இறைவா உமது திரு இரத்தம் எங்கள் அனைவரின் பாவங்களைக் கழுவிடவும், உமது திருவுடல் அனைத்து நோயாளிகளையும் பரிபூரண சுகமாக்கிடவும் அருள் புரிவீராக.

இயேசு, மரி!, சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

MORNING PRAYER, PSALM 33

MORNING PRAYER

திருப்பாடல் : 33

ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப் போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

(திருப்பாடல் 33: 12-13. 18-19. 20,22)

🛐 ஜெபம் 🛐

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப் போரையும் கண்ணோக்குபவரே!
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றவரே! அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றவரே! உம்மை வாழ்த்திப் போற்றி, ஆராதனை செய்கிறோம்.

தந்தையே! பிறரை குற்றவாளிகளாக சித்தரித்த, புறம் பேசிய, தீர்ப்பிட்ட தருணங்களுக்காக உம்மிடம் நான் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். ஏனெனில் தீர்ப்பிடுவது உமக்கு மட்டுமே உரியது என்பதை நான் அறிந்திருந்தும் அதை உணரத் தவறிய தருணங்கள் என் வாழ்க்கையில் ஏராளம். மன்னிக்கும் தேவனே! மனமிரங்கி மன்னித்தருளும். 🙏

“நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.” என்ற உமது இறைவார்த்தையை நாங்கள் எல்லாத் தருணங்களிலும் நினைவில் கொண்டு அதன்படி நடக்க அருள் புரிவீராக.🙏

ஆண்டவரே! மேலும் ஒரு புதிய நாளை, புதிய வாரத்தை எங்களுக்கு அளித்துள்ளீர். இந்த வாரம் முழுவதும் எங்களைத் தூய ஆவியின் துணை கொண்டு வழி நடத்தி உமது திருச்சட்டத்தில் இருந்து சற்றும் நாங்கள் விலகாதிருக்க அருள் புரிவீராக.🙏

அன்னை மரியே, எங்கள் அன்புத் தாயே உமது மாசற்ற இதயம் பாவிகளாகிய எங்களுக்கு அடைக்கலமாகவும், கடவுளிடம் எங்களை அழைத்துச் செல்லும் வழியாகவும் இருக்க உம்மை வேண்டுகிறோம். 🙏

இயேசு மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.