PEACE OF MIND

MORNING PRAYER

MORNING PRAYER

PEACE OF MIND

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்ச மாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக. சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

எசாயா 12 : 2-6

ஜெபம்

உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருபவரே! வலியோரை அரியணையினின்று தூக்கி எறிபவரே! தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துபவரே! பசித்தோரை நலன்களால் நிரப்புபவரே! செல்வரை வெறுங்கையராய் அனுப்புகிறவரே! உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதனை செய்கிறோம்.

ஆண்டவரே! தாழ்ச்சியிலும், தூய அன்பிலும், பிறரன்பு பணியிலும் அன்னை மரியாளை உதாரணமாக எங்கள் அனைவருக்கும் அளித்தீர். ஆனால் அகம்பாவம், ஆணவம், சுயநலம், கடும்சினம் ஆகிய அலகையின் அஸ்திரங்களினால் அவ்வப்போது நான் வீழ்ந்த தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். இரக்கத்தின் இறைவா! உன் அன்பு பிள்ளையாகிய என்னை மனமிரங்கி மன்னித்தருளும்.

ஆண்டவரின் தாயாகிய அன்னை மரியா, எங்களுக்காக பரிந்து பேச, எங்களுக்காக மன்றாட, எங்களுக்காக இரக்கம் கொள்ள பாவிகளாகிய நாங்கள் யார்? அகில உலகுக்கும் அன்னையவளை எங்களுக்குத் தாயாக தந்த எங்கள் தந்தையே உமக்குக் கோடி நன்றி.

இயேசுவே! நீர் கூறியவற்றை அனைத்தும் நாங்கள் செய்வதே அன்னையவளுக்கு நாங்கள் செலுத்தும் உண்மையான அன்பு. அது ஒன்றே அவளை என்றென்றும் மகிழ்விக்கும்.

ஆண்டவரே, உம்மை ஈன்றெடுத்த நம் அன்னை மரியாளின் புனித நாமம் என்றென்றும் போற்றப்படுவதாக.

PEACE OF MIND

DAILY PRAYER

DAILY PRAYER

PEACE OF MIND

Presence

I hear the Lord whispering my name, inviting me into this time of prayer. I let all other distractions fall away as I bask in the blessing of the nearness of God.

Freedom

I try to let go of concerns and worries that may be dragging me down at this present moment. I place any concerns I have in God’s hands – at least for these few minutes of prayer.

Consciousness

We are all pilgrims on a journey to You, Lord. May we contemplate Your time on earth, and, with Your help, follow in Your footsteps.

The Word of God
John 16:12-15

“I still have many things to say to you, but you cannot bear them now. When the Spirit of truth comes, he will guide you into all the truth, for he will not speak on his own but will speak whatever he hears, and he will declare to you the things that are to come.

He will glorify me because he will take what is mine and declare it to you. All that the Father has is mine. For this reason I said that he will take what is mine and declare it to you.

Inspiration

The first disciples of Jesus were essentially simple, uneducated men. That they found it hard to take in what Jesus was saying to them is an understatement.

Even today, we still find it difficult, and it has taken centuries of study and brilliant minds to help us grow in our understanding of Jesus’ words.

We need the guarantee of the Holy Spirit that our Church will not err in what it teaches. We give thanks for the gift of the Holy Spirit and pray to be open to his leading us in the truth.

Conversation

The gift of speech is a wonderful gift. May I use this gift with kindness. May I be slow to utter harsh words, hurtful words, and words spoken in anger.

Conclusion

I thank God for these few moments we have spent alone together and for any insights I may have been given concerning the text.

LIVING

MORNING PRAYER

MORNING PRAYER

LIVING

Creator God, remind me that you have not only created this day, but you have also created me to live in it. Help me pause in this moment of prayer, that I may hear your voice and seek your call and purpose for the journey that is ahead of me this day.

May my thoughts and deeds this day lead me to look to you, O God, as my strength and my guide. Lord, in humility, I ask you to guide my steps, forgive my sins and cleanse my heart for your Name’s sake. Help me to lean into you, O God, that my ways may be your ways, my thoughts your thoughts, and my words, your words.

MORNING PRAYER

PSALM 93, MORNING PRAYER, DIVINE MORNING

PSALM 93, MORNING PRAYER, DIVINE MORNING

MORNING PRAYER 1

திருப்பாடல் : 93

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது. உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும்.

(திருப்பாடல் 93: 1-2)

🛐 ஜெபம் 🛐

எல்லாம் வல்ல இறைவா! அனைத்துக்கும் முதலும் முடிவுமான ஆண்டவரே! உம்மை ஆராதிக்கின்றேன். என்னை உருவாக்கி , கிறிஸ்தவராக்கி, உம் ஒரே மகனின் இரத்தத்தால் என்னை மீட்டதோடு, இந்த இரவு நேரத்தில் என்னைக் காப்பாற்றிய உமது கருணைக்காக என் முழுமனதோடு உமக்கு நன்றி கூறுகிறேன். இன்று பாவத்தில் விழாமல் என்னை காப்பாற்றி, எல்லா தீமைகளில் இருந்தும் மீட்டருள வேண்டும் என்று உம்மிடம் மன்றாடுகின்றேன். அன்னை மரியே, என் அன்புத் தாயே! இறைவனின் புனிதர்களே! எனக்கு இறைவனிடமிருந்து மீட்பையும், அருட்கொடைகளையும் பெற்றுத்தாருங்கள். உங்கள் மன்றாட்டின் பலனால் உங்கள் அனைவரோடும், நான் முடிவில்லாமல் கடவுளின் புகழ்பாடி மகிழ்ந்திருக்கும் பேறுபலன் கிடைப்பதாக.

இறைவா, திருத்தூதர்கள் காலத்தில், நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்ததைப் போல திருஅவையில் ஒன்று கூடும் நாங்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருக்க அருள் புரிவீராக.

இந்த நாள் முழுவதும் என்னோடு இருந்து என்னை அசீர்வதித்து வழி நடத்தும்.

MORNING PRAYER

MORNING PRAYER, DIVINE DAY

MORNING PRAYER, DIVINE DAY

MORNING PRAYER

திருப்பாடல் : 93

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது. உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும்.

(திருப்பாடல் 93: 1-2)

🛐 ஜெபம் 🛐

எல்லாம் வல்ல இறைவா! அனைத்துக்கும் முதலும் முடிவுமான ஆண்டவரே! உம்மை ஆராதிக்கின்றேன். என்னை உருவாக்கி , கிறிஸ்தவராக்கி, உம் ஒரே மகனின் இரத்தத்தால் என்னை மீட்டதோடு, இந்த இரவு நேரத்தில் என்னைக் காப்பாற்றிய உமது கருணைக்காக என் முழுமனதோடு உமக்கு நன்றி கூறுகிறேன். இன்று பாவத்தில் விழாமல் என்னை காப்பாற்றி, எல்லா தீமைகளில் இருந்தும் மீட்டருள வேண்டும் என்று உம்மிடம் மன்றாடுகின்றேன். அன்னை மரியே, என் அன்புத் தாயே! இறைவனின் புனிதர்களே! எனக்கு இறைவனிடமிருந்து மீட்பையும், அருட்கொடைகளையும் பெற்றுத்தாருங்கள். உங்கள் மன்றாட்டின் பலனால் உங்கள் அனைவரோடும், நான் முடிவில்லாமல் கடவுளின் புகழ்பாடி மகிழ்ந்திருக்கும் பேறுபலன் கிடைப்பதாக.

இறைவா, திருத்தூதர்கள் காலத்தில், நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்ததைப் போல திருஅவையில் ஒன்று கூடும் நாங்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருக்க அருள் புரிவீராக.

இந்த நாள் முழுவதும் என்னோடு இருந்து என்னை அசீர்வதித்து வழி நடத்தும்.

PSALM 27

PSALM 118, MORNING PRAYER

திருப்பாடல் : 118

PSALM 27

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்! ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்.

(திருப்பாடல் 118:1-2,4. 22-27)

🛐 ஜெபம் 🛐

என்றென்றும் எங்கள் மீது அளவில்லா பேரன்பு கொண்ட எங்கள் அன்பு ஆண்டவரே! அந்த அளவற்ற அன்பின் நிமித்தம் உமது மகனை மனுக்குலத்தின் மீட்பிற்காக அளித்த முன்வந்த எம் இறைவா ! உம்மை வாழ்த்தி வணங்கி போற்றி ஆராதனை செய்கின்றேன்.

இறைவா! என் வாழ்நாளில் பிறர் என்னை என்ன நினைப்பார்களோ? என்று எண்ணி நான் நற்செய்தியை துணிவோடு அறிவிக்காது இருந்த தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். மன்னிக்கும் தேவனே! என்னை மனமிரங்கி மன்னித்தருளும். 🙏

இயேசுவே! அகில உலகின் மீட்பரே! திருத்தூதர்கள் பேதுருவுக்கும், யோவானுக்கும் தூய ஆவியின் வழி நடத்துதலும், மனத் துணிவினையும் நீர் அளித்தது போல எங்களுக்கும் அளித்தருளும்.

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!” என்று திருப்பாடல்களின் வரிகளுக்கேற்ப சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட அனைவரும் சமூகத்தில் மூலைக் கற்களாக மாற இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.

இயேசுவே, துவண்டு கிடந்த உமது சீடர்களுக்கு நீர் மூன்றாம் முறையாக காட்சி அளித்து அவர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் நீர் ஊட்டியது போல எங்கள் உடலும், உள்ளமும் சோர்ந்த வேளைகளில் நீர் எங்களோடு இருந்து எங்களைக் கைதூக்கி விடும்.

உயிர்த்த இயேசுவே! மகதலா மரியா உம்மை அடையாளம் கண்டு கொண்டது போல நாங்கள் இன்று சந்திக்கும் நபர்களில் உம்மை இனம் கண்டு கொள்ள அருள்புரியும்.

 

grateful

PSALM 103, MORNING PRAYER

திருப்பாடல் : 103

MOR.PRAYER 1

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.

(திருப்பாடல் 103: 1-4. 9-12)

🛐 ஜெபம் 🛐

எங்கள் குற்றங்களை எல்லாம் மன்னிப்பவரே! எங்கள் நோய்களை எல்லாம் குணமாக்குபவரே! எங்கள் பாவங்களை எல்லாம் ஆழ்கடலில் எறிபவரே! உம்மை போற்றுகின்றோம். உம்மைப் புகழ்கின்றோம். நன்றி கூறுகின்றோம். 🙏

தந்தையே! எங்களுக்கு நல்லதொரு சிறந்த ஆயனை கடந்த 12 ஆண்டுகளாக அளித்தீர். நன்றி இறைவா. திருச்சபையை திறம்பட வழி நடத்தத் தேவையான சிறந்த ஞானத்தையும், சீரிய குணநலன்களையும் அவருக்கு அளித்தீர்.

உயர்ந்த இரக்க குணத்தையும், தாழ்ச்சியையும், எளிமையையும் அவரிடமிருந்து நாங்கள் கண்டுணர்ந்து கற்றுக் கொள்ளுமாறு எங்களுக்கு எங்களின் சமகாலத்து வாழும் புனிதரை அளித்தீரே உமக்கு நன்றி.

“உன் பெயர் பேதுரு. இந்த பாறையின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன்” என்று கூறிய எம் இயேசுவே! உமது திருச்சபையின் முதல் திருத்தந்தை பேதுரு முதல் 266-வது திருத்தந்தை பிரான்சிஸ் வரை உமது அருளினால் திருச்சபை அற்புதமாக வளரச் செய்தீர். நன்றி இயேசுவே.

இரக்கத்தின் இறைவா, நேற்று உம்மிடம் அழைத்துக் கொண்ட எங்கள் திருத்தந்தை பிரான்சிஸை உமது சிறகுகளில் அணைத்துக் கொள்ளும். அவருக்கு நித்திய இளைப்பாற்றியைத் தந்தருளும்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

MOR.PRAYER

PSALM 16 , MORNING PRAYER

திருப்பாடல் : 16

MOR.PRAYER 1

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்’ என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.

(திருப்பாடல் 16: 1-2. 5, 7-11)

🛐 ஜெபம் 🛐

உயிர்த்த என் இறைவனே ! என் ஆண்டவரே ! என் தேவனே! நீரே என் கடவுள்.

ஆண்டவரே உம்மை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; நீர் எப்பொழுதும் என் வலப்பக்கம் உள்ளீர். எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.’

உயிர்த்த இயேசுவே, அன்று உம்மை கல்லறையில் உம்மைக் காணாது திரும்பிய பெண்களிடம் “அஞ்சாதீர்கள்” என ஆறுதல் கூறி அவர்களை தைரியமூட்டினீர்.

இன்று எண்ணற்ற பெண்கள் தங்களது குடும்பகளில், பணிபுரியும் இடங்களில், பொதுவெளிகளில் பலவித காரணங்களால் அஞ்சி நடுங்கும் நிலை உள்ளது. ஆண்டவரே, அவர்களது அச்சத்தை அகற்றி அவர்களுக்கு அருகில் ஆறுதலாக இருப்பீராக.

இறைவா, இன்று தாழ்ச்சியுள்ளவர்களாகவும், சிறுபிள்ளைகள் போல கபடமற்றவர்களாகவும் எங்களைப் புதுப்பித்து, உமது திருவுளத்திற்கு கீழ்படிந்து நடக்க அருள் புரிந்தருளும்.

உம்மை உண்மையுடன் அன்பு செய்பவர்களுக்கு, நீர் வாக்களித்திருக்கும் நிலையான வாழ்வை நாங்களும் பெறத் தகுதியுள்ளவர்களாக இருக்க அருள் புரிந்தருளும்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

smile

MORNING PRAYER

MORNING PRAYER

LAUGH

உம் வயிற்றின் கனியும் ஆசி பெற்றதே!
(லூக்கா 1;39-45)

❤ தியானிப்போம்❤
✝🌲 “மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்.(மத்12;33)
✝❤🌲 உண்மையான திராட்சைச் செடி நானே; என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். நீங்கள் அதன் கொடிகள், ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். (யோவா15:1-5) தந்தையின் திராட்சை செடியாக, அன்னை மரியின் கனியாக, சூசை தந்தையின் கொடியாக இம்மண்ணில் ஏழ்மையின் வடிவில் மலர்ந்து, நிலை வாழ்வின் நற்செய்தியை நற்கனிகளாக தந்து தம் பிறப்பால் உலகிற்கு ஒளியூட்டிய மெசியாவின் முதல் வருகையை நினைவூட்டும் திருவருகைக்கால நான்காம் மெழுகுத்திரி.

🙏ஜெபம்🙏
✝🧎‍♀ விண்ணின் விடியலாக,உலகின் ஒளியாக, நிலை வாழ்வின் நற்செய்தியாக எம்மை தேடி வந்த இயேசுவே! உம்மை அன்பு செய்கின்றோம். உமது மீட்பின் வருகைக்காக நன்றி கூறுகிறோம்.
+🧎‍♀ உங்களை நான் நண்பர்கள் என்றேன். ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.
+🧎‍♀ நீங்கள் என்னை தேர்ந்து கொள்ளவில்லை; நான் தான் உங்களை தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்.
+🧎‍♀ ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்கு கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.(யோவான் 15;15-17)

அன்பு இயேசுவே! திருவருகைக் காலம் தரும் புத்துணர்வால் ஊட்டம் பெற்றுள்ள நாங்கள் அன்னை மரியா சூசை தந்தையை போன்று இடர்களுக்கு மத்தியிலும் நற்கனிகள் பல தந்து உமது நண்பர்களாக திகழவும், அன்னை மரியின் பிள்ளைகளாக, இயேசுவின் சகோதரர்களாக, எங்கள் சொல்லாலும், செயலாலும் இயேசுவை நாள்தோறும் ஈன்று வளர்த்தெடுக்கவும் அருள் தாரும் ஆமென் அல்லேலூயா. ..
🌸( பிறரை அன்பு செய்து, மன்னித்து, நன்மைகள் புரியும் பொழுது இயேசுவை நாமும் ஈன்றெடுக்கின்றோம்.)

grateful

MORNING PRAYER, PSALM 30

திருப்பாடல் : 30

 MORNING PRAYER

grateful

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.

(திருப்பாடல் 30 : 1,3. 4-5. 10-12)

👼 ஜெபம் 👼

உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடிப்பவரே! வலியோரை அரியணையினின்று தூக்கி எறிபவரே!
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறவரே! பசித்தோரை நலன்களால் நிரப்புபவரே! செல்வரை வெறுங்கையராய் அனுப்புகிறவரே!
வாரும். இறங்கி வாரும்!
இந்த வையகத்தை வளப்படுத்த இறங்கி வாரும்.! வல்லவராம் கடவுளே வாரும். அரும் பெரும் செயல்கள் செய்ய இப்பூமிக்கு இறங்கி வாரும்.

இறைவா! சாராவுக்கும், ரெபேக்காவுக்கும், மனோவாகுவின் மனைவிக்கும், செக்கரியாவின் மனைவி எலிசபெத்திற்கும் நீர் மனமிரங்கி குழந்தைப் பேறு அளித்து அக்குழந்தைகளை உமது இறைத்திட்டத்திற்கு பயன்படுத்தியது போல அன்னாவின் அழுகுரலுக்கும் செவிசாய்த்து சாமுவேலை அளித்து அவரையும் உமது இறைத்திட்டத்திற்கு பயன்படுத்தினீர்.

இரக்கத்தின் இறைவா இன்று விஷேசமாக மகப்பேறின்றி தவிக்கும் எண்ணற்ற பெண்களுக்காக செபிக்கிறோம். புலம்பி அழும் அவர்களது அழு குரல்களைக் கேளும். மனமிரங்கி அவர்களைத் தொட்டு ஆசீர்வதித்து மக்கட்பேற்றினை அளித்தருளும். உமது இறைத்திட்டத்தை நிறைவேற்றும் கருவிகளாக அக்குழந்தைகளை மாற்றியருளும்.