PSALM 85

MORNING PRAYER—PSALM 85

 

MORNING PRAYER

திருப்பாடல் : 84

PSALM 85

என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர். அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார்.

(திருப்பாடல் 84: 2-5, 11)

🛐 ஜெபம் 🛐

என்றும் வாழும் தந்தையே எம் இறைவா! மேலும் ஒரு புதிய நாளை எங்களுக்கு அளித்து நாங்கள் மனம் திரும்ப மேலும் ஒரு புதிய சந்தர்ப்பத்தை எங்களுக்கு அளித்திருக்கிறீர். நன்றி இறைவா! 🙏

 

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

MOR.PRAYER

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.

யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;

புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள்.

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கை

அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் ப+வுலகு நிறைந்துள்ளது.

(திருப்பாடல்கள் 33:1-5)

உலகை படைத்து, பராமரித்து வழிநடத்தி வரும் இறைவா! இதோ இந்த காலை நேரத்திலே, உம்மை போற்றி புகழுகிறோம்.

உம்மோடு பேசவும், உம்து அன்பை அனுபவிக்கவும், இன்னொரு புதிய நாளை எங்களுக்கு தந்தமைக்காக, உமக்கு நன்றி கூறுகிறோம்.

ஆண்டவரே! உமது அன்பை மறந்து நாங்கள் செய்த அனைத்து செயல்களுக்காகவும், இந்த நேரத்தில் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறோம். உமது அன்பிலிருந்து விலகி சென்றதற்காக மனம் வருந்துகிறோம். உமது பேரிரக்கத்தை முன்னிட்டு எங்களை மன்னித்தருளும் அப்பா.

எங்கள் வாழ்க்கை பயணத்தில் துணையாய் இரும்; எங்கள் அன்றாட செயல்களில், நேர்மையுடன் நடக்க எங்களுக்கு துணை புரியும்; இரக்க செயல்கள் செய்ய எங்களை ஈடுபடுத்தும்.

இவ்வாறு, எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பணிபுரிந்து, எங்கள் வாழ்வின் மூலம் உம்மை பிறருக்கு வெளிப்படுத்தி வாழ, எங்களுக்கு தேவையான அருள் வரங்களை தந்துருளும்.

 

PSALM 145

திருப்பாடல் : 145

திருப்பாடல் : 145

MORNING PRAYER

PSALM 145

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர். ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார்.

(திருப்பாடல் 145 : 8-14)

🛐 ஜெபம் 🛐

இரக்கமும், கனிவும், பேரன்பும் கொண்ட எம் இறைவா! இந்த காலை வேளையில் உம்மைப் போற்றுகின்றேன்! உம்மைப் புகழ்கின்றேன்! நன்றி கூறுகின்றேன்.

இறைவா! இந்நாள் முழுவதும் எனக்குத் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் கிடைக்கப் பெற அருள் புரிவீராக. அப்போதுதான் என் வாய் மனித ஞானத்தால் கற்றுக் கொண்ட சொற்களைப் பேசாமல் தூய ஆவியானவர் கற்றுத் தரும் சொற்களையே பேசும்.

இயேசுவே! பல குடும்பங்களில் ஏற்படும் குழப்பம், சமாதானமின்மை, சண்டை, சச்சரவு ஆகியவற்றிற்குக் காரணமான தீய ஆவிகளை உமது வானளாவிய அதிகாரத்தால், வல்லமையால் விரட்டிவிடும். அக்குடும்பங்களில் குடும்ப செபமாலை சொல்லும் வழக்கத்தினால் நிலையான அமைதி, சமாதானம் குடிகொள்ள அருள் புரிவீராக.

இறைவா, இந்த நாள் முழுவதும் எங்களோடு இருந்து எங்களைக் காத்து வழி நடத்துவீராக.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

MORNING PRAYER

MORNING PRAYER      —-                WINGS OF PRAYER                                  

MORNING PRAYER

WINGS OF PRAISES

MORNING PRAYER

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.

அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!

அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!

ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!

அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.

(திருப்பாடல்கள் 105:1-5)

என் அன்பிற்குரிய இறைவா! உம்மை புகழ்கின்றேன், வணங்குகின்றேன், ஆராதிக்கின்றேன்.

இந்த இனிய காலை வேளையை மீண்டும் காணச்செய்து, உம்மை தாழ்ச்சியுடன் ஜெபிக்க, வரம் தந்த மேலான ஆசீருக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.

இந்த நாள் ஒரு புனித நாளாக மலரட்டும். இந்நாளில் எது நடந்தாலும், அது என் நன்மைக்காகத்தான் என்று ஏற்றுக்கொள்ள கூடிய நல்ல உள்ளத்தை எனக்குத் தாரும். என்ன நேர்ந்தாலும், உமக்கு நன்றி சொல்லக்கூடிய மனப்பக்குவத்தை என்னில் மலரச் செய்யும்.

என் அன்பு இயேசுவே! என் சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் ஆசீர்வதியும். உலக நாட்டங்களில் சிக்கி கொள்ளாமல், நேர்மையான உள்ளத்தோடு, பரிசுத்தமாக வாழ.. உமது ஆவியின் கனிகளால் எம்மை நிரப்பிப் பாதுகாப்பீராக.

இயேசு மரியாயே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.