MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

MOR.PRAYER 1

காலை ஜெபம் – 21/01/26

திருப்பாடல் : 144

என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே! போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே! என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே! இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன். அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே!

(திருப்பாடல் 144: 1-2, 9-10)

🌿 ஜெபம் 🌿

எங்கள் கற்பாறையும், கோட்டையும் ஆனவரே! எங்கள் பாதுகாப்பாளரும், மீட்பரும் ஆனவரே! எங்கள் கேடயமும், புகலிடமும் ஆனவரே! இந்த அதிகாலை வேளையில் உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதனை செய்கின்றோம்.

இறைவா, இந்த புதிய நாளை எங்களுக்குக் கொடையாகக் கொடுத்தமைக்கு உமக்கு நன்றி. நேற்று முழுவதும் எங்களோடு இருந்து எங்களைக் காத்து வழி நடத்திய உமது மேலான கிருபைக்காக நன்றி தகப்பனே! 🙏

இறைவா! அன்று உம்மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையின் நிமித்தம் பலம் குன்றிய இளம் தாவீது, பலமிக்க பெலிஸ்தியனை அடியோடு வீழ்த்த முடிந்தது.

நம்பிக்கையின் ஊற்றே எம் இறைவா! இன்று நம்பிக்கை குன்றிய உம் பிள்ளைகளைக் கண்ணோக்கிப் பாரும். நாங்கள் நம்பிக்கையில் என்றும் நிலைத்திருந்து எங்கள் வாழ்க்கைப் போராட்டங்களில் வெற்றி பெற தயைகூர்ந்து அருள் புரிவீராக! 🙏

இறைவா, தேவையில் இருப்போர்க்கு நாங்கள் நன்மை செய்ய வேண்டிய நேரங்களில் பிறர் என்ன நினைப்பார்களோ என எண்ணி நன்மை செய்யாமல் பின் வாங்கிய தருணங்களுக்காக நாங்கள் மனம் வருந்தி உம்மிடம் மன்னிப்புக் கேட்கிறோம்.

இனிய இயேசுவே, அன்று பரிசேயர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் கை சூம்பியவரை நலமாக்கி நன்மை செய்தீர். ஆண்டவரே, அன்பிலும், இரக்கத்திலும் நாங்கள் உம்மைப் போல இருக்க அருள்புரியும்.

இந்த நாளை நாங்கள் உமது பெயரால் துவக்குகின்றோம். தூய ஆவியின் வழிநடத்துதல் எங்களுக்கு முழுவதும் கிடைக்கப் பெற அருள்புரிவீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

MORNING PRAYER

MORNING PRAYER

இன்று ஒரு சிந்தனை!

அறிவு என்பது, புதையல் பெட்டகம் என்றால், பயிற்சியே அதன் திறவுகோல்; முயற்சி இருந்தால், செல்லும் பாதையெல்லாம், வெல்லும் பாதைகள் தான்!

வாழ்க்கை என்பது, பந்தயம் அல்ல ஓடி சென்று முதலிடம் பிடிக்க, அது ஒரு அழகான பயணம், ஒவ்வொன்றையும் அனுபவித்து ரசித்து நகர வேண்டும், அது காட்டும் பாதையில்!!

சிலருக்கு வரும் துன்பமும், துயரமும் பொதுவானதுதான், கையாளும் விதம்தான் வெவ்வேறானது; சிலர் தடுமாறி முயலாமல் முடங்கிடலாம், சிலர் விடாமல் முயன்று சாதித்து தடம் பதிக்கின்றனர்!!!

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

“மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே”.

(திருப்பாடல்கள் 24: 1-6)

என்றும் வாழும் எங்கள் தந்தையே! இந்த அதிகாலை வேளையில் உம்மைப் போற்றுகின்றேன், நன்றி கூறுகின்றேன். நேற்றைய நாள் முழுவதும் என்னைக் காத்து, வழிநடத்திய உம் அன்பிற்காக நன்றி அப்பா.

தந்தையே! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.

இறைவா! எங்கே பகைமை நிறைந்துள்ளதோ, அங்கே அன்பையும்; எங்கே கயமை நிறைந்துள்ளதோ, அங்கே மன்னிப்பையும் விதைத்திட அருள்புரியும். இதனால் இயேசுவே! நீர் விதைத்த இறையாட்சி, இப்பூவுலகெங்கும் செழித்து வளர்தோங்குக. உமது இறையாட்சியில் நாங்கள் பங்கு கொள்ளும் பேற்றினை கொடுக்கவிருப்பதற்காக நன்றி அப்பா.

இறைவா! கடந்த 12 மாதங்களில், எங்களது இக்கட்டான காலக்கட்டங்களில் எல்லாம், எங்களோடு இருந்து எங்களைக் காத்து வழி நடத்தினீரே. நன்றி தகப்பனே.

இந்த ஆண்டு, நாங்கள் அலகையின் தூண்டுதல்களினால் செய்த அனைத்து பாவங்களையும் மனமிரங்கி மன்னிப்பீராக.

இறைவா! இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். நான் துவங்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருளும்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

MORNING PRAYER

MORNING PRAYER

இறைப்பற்றுள்ளவர்களோடு, உனக்குத் தெரிந்தவரை கட்டளைகளைக் கடைப்பிடித்தவர்களோடு, ஒத்த கருத்து உடைவர்களோடு, நீ தவறினால் உன்னுடன் சேர்ந்து வருந்துபவர்களோடு, எவ்பொழுதும் இணைந்திரு.உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில்;

அதைவிட நம்பத்தக்கது உனக்கு வேறெதுவுமில்லை.இவை எல்லாவற்றுக்கும்மேலாக, உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்.
சீராக் 37:12,13,15.
இன்நாள் ஆசீர்வாதமாக அமைவதாக
இன்றைய இறைவார்த்தையை ஒருவருக்காவது பகிர்வோம்

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

“ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்”.

(திருப்பாடல் 98 : 1-3. 7-9)

கண்ணீரோடு விதைப்பவர்களுக்கு, அக்களிப்பின் அறுவடையை அளிப்பவரே! எங்கள் அடிமனதின் அச்சத்தினை அகற்றுபவரே! எங்கள் அடிமை நிலையை மாற்றுபவரே! உம்மைப் போற்றுகின்றோம். புகழ்கின்றோம். உமக்கு நன்றி கூறுகின்றோம்.

தாயின் கருவில் நான் உருவான நாள் முதல், இன்று வரை என்னைக் கண்ணின் மணிபோலக் காத்து, வழிநடத்தும் என் நல்ல தெய்வமே உமக்கு நன்றி அப்பா.

இறைவா! “உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்ற உமது இறைவார்த்தையை மறந்து, துன்ப வேளைகளில் நான் மனம் சோர்ந்து, அவநம்பிக்கையில் துவண்ட நேரங்களை எண்ணி மனம் வருந்துகிறேன். மன்னிக்கும் தேவனே! மனமிரங்கி என்னை மன்னித்தருளும். தந்தையே! உம் மீது கொண்ட விசுவாசம் தொய்வுற்ற தருணங்கள், என் வாழ்வின் மோசமான காலக்கட்டங்கள் அப்பா.

“இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்” என்ற உமது இறைவார்த்தையை, நான் இன்று முதல் இறுக பற்றிக்கொள்ள இறைவா அருள் புரிவீராக!

தந்தையே! எனக்கு நல்ல நாவன்மையையும், சிறந்த ஞானத்தையும், குறையாத மனத்துணிவினையும் தந்தருள்வீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

காலை ஜெபம்

“ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்”.

(திருப்பாடல் 98 : 1-3. 7-9)

கண்ணீரோடு விதைப்பவர்களுக்கு, அக்களிப்பின் அறுவடையை அளிப்பவரே! எங்கள் அடிமனதின் அச்சத்தினை அகற்றுபவரே! எங்கள் அடிமை நிலையை மாற்றுபவரே! உம்மைப் போற்றுகின்றோம். புகழ்கின்றோம். உமக்கு நன்றி கூறுகின்றோம்.

தாயின் கருவில் நான் உருவான நாள் முதல், இன்று வரை என்னைக் கண்ணின் மணிபோலக் காத்து, வழிநடத்தும் என் நல்ல தெய்வமே உமக்கு நன்றி அப்பா.

இறைவா! “உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்ற உமது இறைவார்த்தையை மறந்து, துன்ப வேளைகளில் நான் மனம் சோர்ந்து, அவநம்பிக்கையில் துவண்ட நேரங்களை எண்ணி மனம் வருந்துகிறேன். மன்னிக்கும் தேவனே! மனமிரங்கி என்னை மன்னித்தருளும். தந்தையே! உம் மீது கொண்ட விசுவாசம் தொய்வுற்ற தருணங்கள், என் வாழ்வின் மோசமான காலக்கட்டங்கள் அப்பா.

“இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்” என்ற உமது இறைவார்த்தையை, நான் இன்று முதல் இறுக பற்றிக்கொள்ள இறைவா அருள் புரிவீராக!

தந்தையே! எனக்கு நல்ல நாவன்மையையும், சிறந்த ஞானத்தையும், குறையாத மனத்துணிவினையும் தந்தருள்வீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

MORNING PRAYER

MORNING PRAYER

Dear God, the week ahead, please give me:
COURAGE for the days where I feel small.
WISDOM for the choices I will have to make.
STRENGTH for the pain that will try to crush me.
HOPE for the moments that will seem impossible.
PEACE for the storms that will come to overwhelm me.
KINDNESS for the mornings where I am struggling.
PATIENCE for the lessons that will come to teach me.
LOVE for all the souls who desperately require it.
Help me to hold on. To walk with intention.

To give with a big heart. And to shine wherever I am needed.”

May the new week be a gateway to peace, personal growth and brighter days!

MORNING PRAYER

MORNING PRAYER

ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை!காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!ஆண்டவரே என் பங்கு என்று என் மனம் சொல்கின்றது!

எனவே, நான் அவரில் நம்பிக்கை கொள்கின்றேன்.ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும், அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்!ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கட்டுகளை உடைக்கும் செபம்.

இயேசுவின் நாமத்தினாலும், இயேசுவின் வார்த்தையினாலும், இயேசுவின் பரிசுத்த இரத்தத்தாலும், என்னையும் என் குடும்பத்தில் உள்ளவர்களையும் தாக்கியுள்ள ஆவிகளின் கட்டுகளை உடைத்து செபிக்கிறேன். இயேசுவே, என்னையும், என் குடும்பத்தினரையும் உமது பரிசுத்த இரத்த கோட்டைக்குள் வைத்து மறைத்துக் கொள்ளும். இயேசுவே, உமது சிறகுகளால் மூடிக் கொள்ளும். இயேசுவே, உமது தூய ஆவியால் மறைத்துக் கொள்ளும். உமது தூதர்களைச் சுற்றி காவல் புரியும்படி கட்டளையிட்டருளும்.

இயேசுவே, உமது நாமத்தினால், எங்கள் இல்லத்தில் உள்ள எல்லா தீமைகளையும், வெறுப்பின் ஆவி, குழப்பத்தின் ஆவி, இன்னும் உமக்கு விருப்பமில்லாதது எதுவோ அனைத்தையும் உமது பாதத்தில் வைக்கிறேன். இயேசுவே, உமது நாமத்தினால் கட்டி, உமது பரிசுத்த இரத்தத்தால் சுட்டெரித்தருளும்.

இயேசுவே, உமது பரிசுத்த இரத்தத்தால் என்னை அபிஷேகம் செய்யும் (33 முறை).

ஆமென்.

MORNING PRAYER, PSALM 119

காலை ஜெபம்

திருப்பாடல் : 119

ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப் போல் அது நிலைத்துள்ளது.
தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை; நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர், அது நிலைபெற்றுள்ளது. உம் ஒழுங்குமுறைகளின்படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன; ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன. உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும்.
உயிர் பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக! உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக!

(திருப்பாடல் 119: 89-91,130. 135,175)

🛐 ஜெபம் 🛐

என்றும் வாழும் எங்கள் தந்தையே! இந்த அதிகாலை வேளையில் உம்மைப் போற்றுகிறேன். நன்றி கூறுகிறேன். நேற்றைய நாள் முழுவதும் என்னைக் காத்து வழிநடத்திய உம் கிருபைக்காக நன்றி.

தந்தையே உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.

இறைவா, எங்கே பகைமை நிறைந்துள்ளதோ அங்கே அன்பையும், எங்கே கயமை நிறைந்துள்ளதோ அங்கே மன்னிப்பையும் விதைத்திட அருள்புரியும். இதனால் இயேசுவே ! நீர் விதைத்த இறையாட்சி இப்பூவுலகெங்கும் செழித்து வளர்தோங்குக.
உமது இறையாட்சியில் நாங்கள் பங்கு கொள்ளும் பேற்றினை அளித்தமைக்கு நன்றி.

மீட்பின் தேவனே! இன்று விஷேசமாக, வாழ்ந்து மரித்த எங்கள் வாழ்வின் சிற்பிகளான எங்கள் ஆசிரியர்கள், ஞான வழிகாட்டிகள் ஆகியோரின் நித்திய இளைபாற்றிக்காக மன்றாடுகிறேன்.

இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். நான் துவங்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருளும்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

திருப்பாடல் : 68

கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்!தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர்.

(திருப்பாடல் 68: 1,3. 5-6ab. 19-20)

🛐 ஜெபம் 🛐

அப்பா, தந்தையே! அன்பும், கருணையும், இரக்கமும் நிறைந்த எங்கள் பரலோக பிதாவே! இந்த புதிய நாளின் அதிகாலை வேளையில் உம்மை வணங்குகிறோம். வாழ்த்துகிறோம். ஆராதிக்கின்றோம். நன்றி செலுத்துகின்றோம். இன்றைய நாளில் உமது திருச்சட்டத்திலிருந்து நாங்கள் சற்றும் விலகாதிருக்க அருள் புரிவீராக.

‘அப்பா’, ‘தந்தையே’ என அன்போடும், பாசத்தோடும் உம்மை அழைக்கும் பேற்றினை பிள்ளைகளாகிய எங்களுக்கு அளித்தீரே. நன்றி தந்தையே. 🙏

அப்பா! நான் என் நம்பிக்கையின்மையின் நிமித்தம் எதிர்மறை எண்ணங்களால் சவால்களை எதிர்கொள்ள இயலாமல் வாழ்வில் பின்வாங்கிய தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். மனமிரங்கி மன்னித்தருளும். 🙏

தந்தையே! என் நம்பிக்கையை வளரச் செய்து எனது நேர்மறை எண்ணங்களால் எனது வலுவின்மையை வலிமை மிக்கதாக மாற்றியருளும். 🙏

இயேசுவே! இன்று தீய ஆவியின் பிடியில் சிக்குண்டு வாழ்வில் துன்புறும் எண்ணற்ற மக்களுக்காக வேண்டுகிறோம். உமது பரிசுத்த திருநாமத்தினால் அந்த தீயஆவிகளை கடிந்து கொள்கிறோம். அவைகள் அம்மனிதர்களை விட்டு வெளியேறுவதாக. தூய ஆவியானவர் அம்மக்களின் மனதில் என்றென்றும் குடிகொள்ள ஆசீர்வதிப்பாராக.

இறைவா, நீர் அருளின இப்புதிய வாரத்தை உமது பெயரால் துவக்குகின்றேன். ஆசீர்வதித்து வழிநடத்துவீராக.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.