GOD BLESS

MORNING PRAYER

MORNING PRAYER

GOD BLESS

 

How wonderful you are, O God, who dwells among the faithful. Even the psalmist long ago knew that you are not only this overwhelming God who made heaven and earth, but the indwelling God who walks with us and is present with us.

Teach me to cherish your presence, which I have come to know because you came to live with us in the person of Jesus, whom we call the Christ. As I offer my heart in prayer and prepare to face this day help me to remember that morning has broken, and I am whole!

GOD BLESS BLESS

MORNING PRAYER

MORNING PRAYER

 

GOD BLESS BLESS

காலை ஜெபம் 

திருப்பாடல் : 105

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். ஆண்டவர் தம் மக்களைப் பல்கிப் பெருகச் செய்தார்; அவர்களின் எதிரிகளைவிட அவர்களை வலிமைமிக்கவர்கள் ஆக்கினார். தம் மக்களை வெறுக்கும்படியும், தம் அடியார்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும்படியும் அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார். அவர் தம் ஊழியராகிய மோசேயையும், தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார். அவர்கள் எகிப்தியரிடையே அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்; காம் நாட்டில் வியத்தகு செயல்களைச் செய்து காட்டினர்.

 

(திருப்பாடல் 105: 1,5. 8-9. 24-27)

🛐 ஜெபம்🛐

எப்போதும் எங்களை அரவணைக்கும் எங்கள் அன்பு ஆண்டவரே! உம்மை இந்த அதிகாலை வேளையில் வாழ்த்தி போற்றி ஆராதிக்கின்றோம். உமக்கு நன்றி செலுத்துகின்றோம். உம்மை மகிழ்விப்பதே எங்கள் இதயத் துடிப்பாகட்டும். உமது கட்டளைகளை நாங்கள் கடைபிடிப்பதே எங்கள் உயிர் மூச்சாகட்டும்.

ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்! ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.

““பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”என கூறிய எம் இயேசுவே! நிலையான, மகிழ்வான இளைப்பாறுதல் உம்மிடம் மட்டுமே உள்ளன.

மீளாத் துயரம், கண்ணீர், கடும் வேதனை ஆகியவற்றின் நடுவே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் எண்ணற்ற மக்களின் துன்ப துயரங்களை நீர் அறிவீர். அவர்கள் செய்த பாவங்களை மன்னித்து உம் திருக்கரங்களால் அரவணைத்து அவர்களைத் தேற்றும் எங்கள் தகப்பனே! அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும். புதிய நம்பிக்கையை துளிர்விடச் செய்யும்.!

u r precious

MORNING PRAYER

MORNING PRAYER

u r precious

காலை ஜெபம் –

புனித லூர்து மாதாவுக்கு ஜெபம்

அமலோற்பவ கன்னி மாதாவே ! சொல்லொணா சோதிக் கதிர் வீச, சூரியன் ஒளி தங்கிய சுத்த வெள்ளை உடை அணிந்து, தெய்வீக வடிவு அலங்காரத்தோடு அன்று எழுந்தருளி வந்து, தன்னந்தனிமையான லூர்து மலைக் கெபியில் காட்சி தரக் கருணை புரிந்த உமது கிருபாகடாட்சத்தை நினைத்தருளும். உமது திருக்குமாரன் உமக்குக் கட்டளையிட்ட மட்டற்ற வல்லமையையும் நினைவு கூர்ந்தருளும். புதுமையில் பிரபல்லியமான லூர்து மலை மாதாவே , உமது பேறு பலன்களின் மீது நிறைந்த நம்பிக்கை வைத்து உமது தயவு ஆதரவை அடைய இதோ ஓடி வந்தோம் . உமது தரிசன வரலாறுகளின் உண்மையை உணர்ந்து ஸ்திரப்படுத்தின பரிசுத்த பாப்பானவரை உமது திருக்கர வல்லபத்தால் காத்தருளும்.

தேவ இரக்க நேச மனோகரம் அடங்கிய இரட்சண்ணிய பொக்கிஷங்களைத் திறந்து அவைகளை எங்கள் மீது பொழிந்தருளும். உம்மை மன்றாடிக் கேட்கும் எங்கள் விண்ணப்பங்கள் எதுவும் வீண் போக விடாதேயும் . மாசற்ற கன்னிகையான லூர்து மலை மாதாவே , தேவரீர் எங்கள் தாயாராகையால், எங்கள் மன்றாட்டுக்களைத் தயவாய்க் கேட்டருளும்.

ஆமென்.

லூர்து ஆண்டவளே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

GOD BLESS BLESS BLESS

Morning prayer

                                                                             Morning prayer

GOD BLESS BLESS BLESS

Eternal One, as I wake to the dawning of this day , I know you surround me with your love and protection. You have forgiven all my shortcomings and for that, I rejoice.

As I journey my life of faith, no matter what challenges may come my way, help me to remember that your grace is sufficient for me and your tender mercy is new every morning.

As I lift my voice to you in prayer, help me to rest in the assurance that you hear me.

Thank you, God for being ever present in my life. Help me to guard my heart and enlighten the eyes of my understanding that I may serve you better.

May my earnest desire this day be to live my life in a manner that glorifies you. My hope is in you this day: help me to follow your will.

 

 

GOD BLESS

MORNING PRAYER

MORNING PRAYER

GOD BLESS BLESS

காலை✝️ஜெபம்🌤️🌴

🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்.!

ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.

ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்; கிளைகளைக் கையிலேந்தி விழாவினைத் தொடங்குங்கள்; பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.

என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

(திருப்பாடல்கள் 118:25-29)

✝️ஜெபிப்போமாக :🛐

ஆண்டவரே! இரக்கமாயிரும். ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம், எங்கள் மீது இரக்கமாயிரும்!

கற்பனைகளுக்கு சிறிதும் எட்டாத, அளவில்லா மாட்சியோடு, பல கோடி ஆண்டுகள் பயணம் செய்தாலும் சென்று சேரமுடியாத, விண்ணுலகில் அரசராக வீற்றிருந்து, இவ்வுலகிற்கு மனிதனாக வந்த எங்கள் அன்பு நேசரே! உம்மை ஆராதிக்கின்றோம்.

எங்களின் புகழ்ச்சி, ஆராதனையை ஏற்றுக்கொள்ளும் அப்பா. ஏனெனில், விண்ணகத்தில் பல கோடி தூதர்கள், உம் முன் உமக்கு ஓயாமல் புகழ் கீதங்கள் பாடுகிறார்கள், எந்நேரமும் உமக்கு ஆராதனை செய்கிறார்கள். ஆயினும் ஆண்டவரே! எங்களின் சிறு ஆராதனை, புகழ்ச்சியை ஏற்றுக்கொண்டு எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.

நாங்கள் பெரும் பாவிகள், ஏனெனில் நீர் தூயவர்; நாங்கள் பெரும்பாலும் நேர்மையாளர்கள் அல்ல, ஏனெனில் நீர் உண்மையுள்ளவர், நேர்மையானவர்; நாங்கள் பெரும் சுயநலவாதிகள், ஏனெனில் நீர் அன்புக்காக உயிரையே கொடுத்தீர்; இவ்வாறு நீர், உமது நினைவில் வைக்கக்கூட நாங்கள் தகுதி அற்றவர்கள் அப்பா.

என் அன்பு நேசரே! இப்படிபட்ட எங்களை, உமது உறைவிடமான விண்ணகத்திற்கு அழைத்து செல்ல, எங்களைத் தேடி நீர் மண்ணகம் வந்தீர். ஆனால் நாங்கள், உம்மை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டோம். ஆயினும் நீர், எங்களை கைவிடவில்லை. எங்களுக்காக உமது உயிரையே கொடுத்து, எங்களுக்கு தெரியாமலேயே எங்களை மீட்டுக் கொண்டீர். நன்றி அப்பா.

ஆண்டவரே! இவ்வாறு இவ்வுலக சாத்தானிடமிருந்து விடுதலை பெற்ற நாங்கள், இனிவரும் ஒவ்வொரு நாட்களிலும் சுயநலத்தோடு, எங்களுக்காக மட்டும் வாழாமல்; உம்மை பின்பற்றி, மற்றவர்களின் ஆன்ம வளர்ச்சியிலும் துணை செய்வோம் என்ற உறுதியோடு, இந்நாளை தொடங்குகிறோம். எங்கள் வேண்டுதலை ஏற்று, எங்களுக்கு உதவி செய்தருளும் அப்பா!

GOD BLESS BLESS BLESS

    Morning prayer

    Morning prayer

GOD BLESS BLESS BLESS
God of creation, how great you are and how worthy you are to be praised! You are the Creator of the universe and everything in it.

You are the Giver and Sustainer of all all life, and I am humbled that you knew me in my mother’s womb and count the very number of the hairs on my head.

So often I get caught up with what the day throws at me. Days come and go without my taking time to behold the beauty of your creation. Your creation is so full of the songs of nature, which sing your praises.

Open my eyes to the beauty of the world around me. Help me to pause and take the time to receive and enjoy your free gifts.

GOD BLESS

Morning prayer

                                                                 Morning prayer

GOD BLESS
God, all creation rejoices in you this morning! Eternal One, you know how much we rely on outward appearances, how much we judge one another by culture, skin color, and social class. You know how enamored we are by success and celebrity.

Help us to understand more clearly what is really important and to repent of our reliance on the superficial.

Grant to us the mind of good people that we may see beneath the surface and find in all your children the enduring worth that is valuable in your sight. Grant us this day, O God, deeper insight into what is really important in life.

PEACE OF MIND

MORNING PRAYER

                                                                                        MORNING PRAYER

PEACE OF MIND

காலை✝️ஜெபம்🌤️🌴

🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.

அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது.

மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் ப+வென அவர்கள் மலர்கின்றார்கள்.

அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது.

ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும்.

அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.

(திருப்பாடல்கள் 103:13-18)

✝️ஜெபிப்போமாக :🛐

விண்ணக தந்தையே இறைவா! இந்த காலை வேளையிலே உம்மை போற்றுகின்றோம், புகழ்கின்றோம், வாழ்த்துகின்றோம், வணங்குகின்றோம், உம்மை ஆராதிக்கின்றோம்.

இந்நேரம் வரை எங்களை காத்து, வழிநடத்தி வந்த உமது இரக்கத்திற்காக, உமக்கு நன்றி கூறுகின்றோம்.

எங்கள் அன்பான தந்தையே! இதோ உலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொரு ஆன்மாவும், இறுதிநாளில் உம்மிடம் வந்து சேர வேண்டும் என்று நீர் ஆவல் கொண்டீரே! அதற்காக உமது மகனையே பலியாக்கினீரே!

இதோ பாவம் செய்து, உம்மை விட்டு பிரிந்த, அனைத்து ஆன்மாக்களுக்காகவும், உம்மிடம் மனதார மன்னிப்பு வேண்டி ஜெபம் செய்கிறோம் அப்பா!

சாத்தானின் மாய வலையில், உமது ஆன்மாக்கள் விழுந்து கொண்டிருப்பதை காண்கிறோம், எங்களை மீட்டுக் கொள்ளும் ஆண்டவரே! நாங்கள் பலவீனமான மனிதர்கள் ஏமாற்றப்படுகிறோம்! எங்களை காத்தருளும்; எங்களை வழிநடத்தும்; எங்களுக்கு அருள் புரியும்; எங்களுக்கு துணையாய் இரும்; உமது தூதர்களை அனுப்பி எங்களை காப்பாற்றும்.

ஆண்டவரே! உலகெங்கும் உள்ள, உமது பிள்ளைகளாகிய நாங்கள், சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறோம்; சோதனையில் விழுந்து விடுகிறோம்; சோதனையில் சிக்கிக் கொள்கிறோம்; எங்களால் மீண்டு வர இயலவில்லை; நீரே எங்களுக்கு துணை செய்யுமாறு உன்னிடம் பணிந்து வேண்டுகிறோம் அப்பா! எங்களை கைவிட்டு விடாதேயும். சாத்தானிடம் கையளித்து விடாதேயும். உம்மிடமிருந்து நாங்கள் விலகி விடாமல், எங்களை பாதுகாத்துக் கொள்ளும்; அரவணைத்துக் கொள்ளுங்க அப்பா!

நாங்கள் சோதனையில் விழுந்து விடாமல் காப்பாற்றப்பட்டு, அதன் மூலம் உமக்கு சாட்சியான பிள்ளைகளாக, எப்போதுமே வாழும் வரத்தையும், பாக்கியத்தையும் எங்களுக்கு அளித்தருளுமாறு உம்மிடம் மன்றாடுகிறோம் .

இன்றைய நாளின் எம் ஒவ்வொரு செயல்களையும் ஆசீர்வதித்து, உம் இறைவார்த்தை வழியில் நடக்க எமக்கு அருள் புரியும்.

🙏🏻ஆமென்.🙏🏻

u r precious

MORNING PRAYER

MORNING PRAYER

PRAYER1

காலை✝️ஜெபம்🌤️🌴

🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்; அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது.

அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள்.

ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள்.

ஆண்டவரின் ஆட்சித் தலத்தில் வாழும் அனைத்துப் படைப்புகளே! ஆண்டவரைப் போற்றுங்கள்! என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

(திருப்பாடல்கள் 103:19-22)

✝️ஜெபிப்போமாக :🛐

படைப்புகளின் பரம்பொருளே! உயிர்களின் ஊற்றே இறைவா! உம்மை புகழ்ந்து ஆராதிக்கின்றேன். இந்த இனிய காலை வேளையில், உம்மை நினைத்து ஜெபிக்கும் வரம்தந்த உமது மேலான இரக்கத்திற்காக, நன்றி செலுத்துகின்றேன்.

என் வாழ்வு, இறை வேண்டுதலில் என்றும் உம்மோடு இணைந்திருந்து, என் சிந்தனை, சொல், செயல் அனைத்திலும், உம்மை மட்டுமே பிரதிபலிப்பவையாக அமையட்டும்.

இயேசுவே! உங்கள் ஆசியால் இன்று நான் யாதொரு பொல்லாப்பையும் காணாமல், நினையாமலும், செய்யாமலும் இருக்கச் செய்தருளும்.

இயேசுவே! உமதன்பில் பாவிகள் மனம் திரும்பவும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிராக செய்யப்படும் பாவங்களுக்கு பரிகாரமாகவும், இந்த நாளை ஒப்புக் கொடுக்கிறேன்.

🙏🏻ஆமென்.🙏🏻

grateful

MORNING PRAYER

MORNING PRAYER

grateful

 

காலை✝️ஜெபம்🌤️🌴

🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன்.

மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்; எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்? தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்.

இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறிதவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்; அது என்னைப் பற்றிக்கொள்ளாது.

வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலைவில் இருக்கும்; தீதான எதையும் நான் அறியேன்.

தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன்; கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின் செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்;

(திருப்பாடல்கள் 101:1-5)

✝️ஜெபிப்போமாக :🛐

அன்பான தந்தையே! இதோ இந்த காலை நேரத்தில், உமது இரக்கத்தை தேடி ஓடி வந்திருக்கும் என்னை ஆசீர்வதித்தருளும். இந்த புதிய நாளை எனக்கு தந்தமைக்காக, உமக்கு நன்றி ஆண்டவரே!

எங்கள் மேய்ப்பரே! உமது மந்தையில் இருந்து விலகி சென்ற ஆடு நான். ஆயனாகிய உமது பின்னே செல்லாமல், தவறான வழியில் நடந்து நொந்து போன ஆடு நான். எங்கள் மீது பரிவு கொள்ளுங்கள்! எங்களை மீண்டும், உமது மந்தையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

செழிப்பான இடத்திற்கு எங்களை கூட்டி செல்பவரே! எங்களைத் தாக்க வரும் கொடிய ஓநாய்களிடமிருந்து, எங்களைக் காப்பவரே! ஓ நல்ல ஆயனே! எங்கள் கடவுளே! நன்றி ஆண்டவரே!

அலகையின் மூலம் ஏமாற்றப்பட்டு, பாவ வலையில் சிக்கி துன்பப்படும் எங்களை கண்ணோக்கும். இவ்வுலக ஆசைகள், எங்களை நெருக்குகிறது, நேர்மையின் வழியில் வாழ முடியவில்லை, சில நேரங்களில் உண்மைக்கு மாறாக நடக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது, ஆண்டவரே! இந்த மாதிரியான நேரங்களில், எங்களுக்கு உமது உதவி தேவைப்படுகிறது. உமது திடன், எங்களுக்கு தேவைப்படுகிறது. விண்ணிலிருந்து எங்களுக்கு உதவி செய்யும் அப்பா.

அலகையின் அனைத்து துன்பங்களிலிருந்தும் எங்களை காப்பவரே! எங்கள் பாவத்தால் உம்மை கொன்றோம், இப்போது நீர் இறந்து, மீண்டும் உயிர்த்தெழுந்து, நாங்கள் மன்னிப்பை பெற்றுள்ளோம். இனிமேல் நாங்கள் தூய்மையின் பிள்ளைகள், இனி நீர் இறக்க போவதில்லை, வாழ்கிறீர், என்றென்றும் அரசராக வாழ்கிறீர். நீர் நீதி வழங்கும்போது, நாங்கள் மகிழ்வுடன் உமது நீதி அரியணை முன் நிற்க, எங்களை நாங்கள் தகுதிப்படுத்த, உமது துணை தேவைப்படுகிறது. விண்ணிலிருந்து எமக்கு உதவி செய்வீராக!

🙏🏻ஆமென்.🙏🏻