Saint of the broom

Saint of the broom

Portraits, pictures or statues of people, in general, depict and reveal their character and personality.

Usually, if people are asked to have…
… a photograph taken
… or a picture drawn
… or a statue created

They would either prefer just by themselves…
… or posing with some expensive artefacts/costly goods.

What if there is a person in history who preferred instead to pose with a broom!
>> And has most of his images/statues holding a broom…
… along with a cat and dog around him!

So much is his association with the “broom” that he is called as the “Saint of the broom!”

This person is St Martin de Porres.

Born in Lima, Peru, in the 16th century, this saint – being of a mixed race and cast lower as belonging to an inferior social caste – was able to raise his life with the great virtue of selflessness!

So much was his zeal to dedicate his life for the Lord, that he would willingly accept to be a “donado” – a volunteer who performed menial tasks in the monastery…
… in return for the privilege of wearing the religious habit in the community.

He devoted his life to penance, charity and humility…
… spending nights in prayer and penitential practices
… dedicated days in nursing for the sick and caring for the poor – regardless of their color, race, or status
… and reflecting extraordinary gifts: ecstasies that lifted him into the air, light filling the room where he prayed, bi-location, miraculous knowledge, instantaneous cures, and a remarkable rapport with animals!

In St Martin de Porres, humility shone through selfless giving
… expecting nothing in return
… just as the Lord invites us in today’s Gospel.

 

DO GOOD OUT OF THE WAY

DO GOOD OUT OF THE WAY

அன்புடன் நன்மை செய்வதற்கு விதிவிலக்குகள் கூட விதி ஆகலாம்!
ஓய்வுநாளில் இயேசு நலம்தரும் இன்னொரு நிகழ்வை இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். இந்த நிகழ்வு பரிசேயர் ஒருவருடைய வீட்டில் நடந்தேறுகிறது. அவருடைய வீட்டுக்கு விருந்துக்கு வருகின்ற இயேசு, நீர்க்கோவை நோய் பீடித்திருந்த ஒருவருக்கு நலம் தருகின்றார்.
வெளியிலிருந்து நமக்கு வரும் விதிகள் அல்லது விதிமுறைகளை விட நமக்கு நாமே பல சட்டங்களையும் விதிமுறைகளையும் விதித்து, ‘இப்படி! அப்படி!’ என்று வரையறைகளை இட்டுக்கொள்கின்றோம். வரையறைகளை மீறாமல் இருப்பது நலம் என்றும், வரையறைகளை மீறுதல் தவறு என்றும் பாடம் கற்பிக்கின்றோம். ஆனால், ஒவ்வொரு சூழலும் புதிய பதிலிறுப்பை நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது. “அன்பிலும் போரிலும் விதிகள் இல்லை” என்பார்கள்.
தான் கொண்ட அன்பினால் விதிவிலக்கையும் விதி என மாற்றி, விதியைக் கடந்து குனமளிக்கிறார் இயேசு.
நீர்க்கோவை என்னும் நோய் ஆங்கிலத்தில் ‘ட்ராப்ஸி’ என்று அழைக்கப்படுகின்றது. ‘ஹைட்ராப்ஸி’ (‘ஹைட்ரோ’ என்றால் தண்ணீர்) என்ற வார்த்தையே சுருங்கி ‘ட்ராப்ஸி’ என்றழைக்கப்படுகின்றது. ‘நீர்க்கோவை’ என்னும் இந்த நோய் இன்று ‘எடேமா’ என்று அழைக்கப்படுகின்றது. நம் உடலில் தண்ணீர் இரண்டு இடங்களில் சேகரிக்கப்படுகின்றது: ஒன்று, குருதிக் குழல்கள் அல்லது இரத்தக் குழாய்கள்ளூ இரண்டு, திசுக்களுக்கு இடையே உள்ள பகுதி. இந்த இரு இடங்களிலும் தேவைக்கு அதிகமான தண்ணீர் தேங்கி நிற்கும்போது, அந்த இடத்தில் விரலால் அமுக்கினால் அந்த இடத்தில் குழி விழும். இந்த நோய் வரக்காரணம் இதயக்குழாய்களில் ஏற்படும் நெரிசல்.
இந்த இடத்தில் இயேசுவின் இயல்பான, எதார்த்தமான பழகுதல் நமக்கு வியப்பளிக்கிறது. அதாவது, எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கே அந்த இடத்தின் தலைவராக அவர் மாறிவிடுகின்றார். இது வெகு சிலருக்கு உள்ள பண்பு. சிலர் எந்த வீட்டுக்குப் போனாலும் உடனடியாக அங்கிருக்கும் அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு அனைவரையும் தங்கள் பக்கம் ஈர்த்துக்கொள்வார்கள். இயேசு இந்தப் பண்பைப் பெற்றுள்ளார்.
தன் முன்னே ஒருவர் நலமற்று அமர்ந்திருக்க, தான் உண்டு குடித்து மகிழ்வதா? என்ற நிலையில் இயேசு அவருக்கு உடனே நலம் தர விழைகின்றார். ஓய்வுநாள் அவருக்குத் தடையாக இருக்கிறது. தான் தன் மனதில் அதைத் தடையாகக் கருதவில்லை என்றாலும், அங்கிருக்கும் பரிசேயர்களின் பொருட்டு அவர்களிடம் வினாத் தொடுக்கின்றார்: ‘ஓய்வு நாளில் குணப்படுத்துவது முறையா? இல்லையா?’ கேள்விக்கு விடை அளிக்காமல் அனைவரும் மௌனம் காக்க, இயேசு நலமற்றவரின் கரத்தைப் பிடித்து அவருக்கு நலம் தருகின்றார்.
ஓய்வுநாளில் விதிவிலக்கு என்று இருந்த ஒன்றை இயேசு விதி என மாற்றுகின்றார். நலமற்றவருக்கு நலம் தருகிறது என்றால், தேவையில் இருப்பவருக்கு உதவி செய்தல் என்றால், அன்பு காட்டுவதில் விதிவிலக்குகள் கூட விதி ஆகலாம் என்பது இயேசு நமக்குத்‌ தரும் செய்தியாக இருக்கின்றது. ஆமென்.

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம்

ஆண்டவரே! இன்றைய நாளுக்காக நன்றி. இந்நாளை அமைதியோடு முடிக்க வழிநடத்தியதற்கு நன்றி அப்பா. நாங்கள் செய்த நல்ல காரியங்கள் அனைத்தையும், உமது கரங்களில் ஒப்படைக்கிறோம்.
இன்றைய நாளின் எனது தவறுகளை மன்னித்து, என்னை ஏற்றுக்கொள்ளும்.
இன்று களைப்புற்ற எனது மனமும், உடலும் உம்மில் ஓய்வு பெறட்டும்.

எங்கள் குடும்பத்தையும், உறவுகளையும் உமது பாதுகாப்பில் காப்பாற்ற வேண்டுகிறேன். நோயுற்றவர்களுக்கு ஆரோக்கியத்தையும், துயருருவோருக்கு ஆறுதலையும் தந்தருளும். நாளைய தினத்திற்கான நம்பிக்கையும், ஆற்றலும் எங்களுள் புதுப்பித்தருளும்.
எங்கள் மனதில் அமைதியும், எங்கள் வீட்டில் சமாதானமும் நிலைத்திருக்க அருள் தாரும். துன்மார்க்கத்திலிருந்து எங்களை விலக்கி, உமது ஒளியில் நடத்தும்.

இன்றைய இரவில் எங்கள் கனவுகள், உமது அமைதியால் நிரம்பட்டும். எங்கள் வாழ்வில், உமது சித்தம் நிறைவேறட்டும். இயேசுவின் நாமத்தில் இவற்றையெல்லாம் உம்மிடம் ஒப்படைக்கின்றோம். – ஆமென்.

“Horse-sense?”

“Horse-sense?”

There is a simple little poem, which goes thus:
“A horse can’t pull, while kicking,
This fact we merely mention.
And he can’t kick, while pulling,
Which is our chief contention!

Let’s therefore, imitate the good horse
And lead a life that’s fitting;
Just pull an honest load, and then
There’ll be no time for kicking!”

These few lines of the poem explain in interesting terms…
… on how the aspect of criticism and bad-mouthing is a result of a lack of focus and proper attitude!

Are we sometimes people who fail to have such “horse-sense?”

This lack of a “horse-sense” can lead to the…
… habit of spitting out unpleasant words at others, without the least concern.
… practise of spitting out harsh and judgmental words, with minimal mercy.
… tendency to spitting out critical words to put down people in humiliation.

 

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு செபம்..

ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.

(எசாயா 64:8-9)

குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாதம் வைக்கிறோம். எந்தத் தீங்கும் நேரிடா வண்ணம் எங்களை காத்துக் கொள்ளும்.

ஒன்றுமில்லாத களிமண்ணாய் இருந்த எங்களை நீரே வனைந்து உம் திட்டத்தின் படி எங்களை வழிநடத்தி, பயன்படுத்தி வருகின்றீர்.

ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும், குணப்படுத்தலுக்காகவும் தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும்.

ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே. நன்றி.

– ஆமென்!

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

திருப்பாடல் : 68

கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்!தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர்.

(திருப்பாடல் 68: 1,3. 5-6ab. 19-20)

🛐 ஜெபம் 🛐

அப்பா, தந்தையே! அன்பும், கருணையும், இரக்கமும் நிறைந்த எங்கள் பரலோக பிதாவே! இந்த புதிய நாளின் அதிகாலை வேளையில் உம்மை வணங்குகிறோம். வாழ்த்துகிறோம். ஆராதிக்கின்றோம். நன்றி செலுத்துகின்றோம். இன்றைய நாளில் உமது திருச்சட்டத்திலிருந்து நாங்கள் சற்றும் விலகாதிருக்க அருள் புரிவீராக.

‘அப்பா’, ‘தந்தையே’ என அன்போடும், பாசத்தோடும் உம்மை அழைக்கும் பேற்றினை பிள்ளைகளாகிய எங்களுக்கு அளித்தீரே. நன்றி தந்தையே. 🙏

அப்பா! நான் என் நம்பிக்கையின்மையின் நிமித்தம் எதிர்மறை எண்ணங்களால் சவால்களை எதிர்கொள்ள இயலாமல் வாழ்வில் பின்வாங்கிய தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். மனமிரங்கி மன்னித்தருளும். 🙏

தந்தையே! என் நம்பிக்கையை வளரச் செய்து எனது நேர்மறை எண்ணங்களால் எனது வலுவின்மையை வலிமை மிக்கதாக மாற்றியருளும். 🙏

இயேசுவே! இன்று தீய ஆவியின் பிடியில் சிக்குண்டு வாழ்வில் துன்புறும் எண்ணற்ற மக்களுக்காக வேண்டுகிறோம். உமது பரிசுத்த திருநாமத்தினால் அந்த தீயஆவிகளை கடிந்து கொள்கிறோம். அவைகள் அம்மனிதர்களை விட்டு வெளியேறுவதாக. தூய ஆவியானவர் அம்மக்களின் மனதில் என்றென்றும் குடிகொள்ள ஆசீர்வதிப்பாராக.

இறைவா, நீர் அருளின இப்புதிய வாரத்தை உமது பெயரால் துவக்குகின்றேன். ஆசீர்வதித்து வழிநடத்துவீராக.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

Children hold a special place in the heart of Jesus.

Children hold a special place in the heart of Jesus.
Their honesty, trust, and joy mirror the purity that God desires for all His children.
When Jesus said, “Let the little children come to me,” He wasn’t just inviting them — He was teaching us how to approach Him.

A child trusts without doubt, forgives quickly, and loves freely.
This is the kind of faith that opens heaven’s door — simple, sincere, and full of wonder.
As parents, teachers, and believers, we are called to protect this innocence and guide the young toward Christ, not only by words but by example.

Let us also rediscover our own childlike heart — humble before God, grateful for His blessings, and open to His love.
For the Kingdom of God belongs to those who come to Him with hearts as pure and trusting as a child’s.

Each apostle has his own attraction.

Each apostle has his own attraction.

A garden of flowers delights most people!
>> A garden consists of a variety of flowers, with varied colours, sizes, shapes.

Some flowers tend to capture our attention more…
… some escape the gaze of our eyes.

However, this in no way, reduces or increases their relevance and importance.
Each flower has its own specialty.
Each flower has its own attraction.

Jesus in His garden of ministry, chose twelve apostles.
>> Some apostles tend to capture our attention more…
… some escape the gaze of our eyes.

However, this in no way, reduces or increases their relevance and importance.
Each apostle has his own specialty
Each apostle has his own attraction.

 

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம் †

இன்றைய ஆசீர்வாதத்திற்கு நன்றி செலுத்துவதற்கும், நாளைக்கான நம்பிக்கைக்காக ஜெபிப்பதற்கும் சரியான வழி, படுக்கை நேர ஜெபம் ஆகும்!

எங்களை என்றும் நேசிக்கும் விண்ணகத் தந்தையே, இன்று, இந்த புதிய நாளில், உமது அன்பு, கவனிப்பு மற்றும் பாதுகாப்புடன் நீர் வழங்கிய பல ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். நாள் முழுவதும் எங்கள் குடும்பங்களையும் எங்களையும் கவனித்துக்கொண்டதற்கு நன்றி. அப்பா, இரவு முழுவதும் எங்களை உமது மேலான கண்காணிபில் எம்மை வைத்திருக்க வேண்டிக்கொள்கிறோம். அன்புள்ள ஆண்டவரே, இந்த மணிநேர ஓய்வை அடைய நீர் எங்களுக்கு உதவியதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பலவித இடர்பாடுகளின் பயத்துடன் இணைந்து, இன்றைய நாளின் வெயிலின் தாக்கம் மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால் நீர் இவைகளிலிருந்து எங்களை பாதுகாத்தீர். நாங்கள் இப்போது மிகவும் அசதியாகவும் சோர்வாகவும் இருக்கிறோம். எங்கள் மனதில் பதட்டமான எண்ணங்கள் நிறைந்திருக்கின்றன.

ஆண்டவரே, இன்றிரவு உம்முடைய மேலான பாதுகாப்பின் உண்மையான ஓய்வைக் கண்டுணர எங்களுக்கு உதவி புரியும். இந்த கவலையான எண்ணங்களிலிருந்து எங்களை விடுவித்து, உமது அமைதி, நிதானம், மற்றும் மனநிம்மதியால் எங்களை நிரப்பவும். உமது அன்பான குமாரனின் திருஇரத்தத்தால் எங்களை சுத்தப்படுத்தி, உமது வழிகளில் நடக்க எங்களுக்கு உதவி புரியும். இயேசுவே, இரவின் பயங்களிலிருந்தும், இருளில் நடக்கும் கொள்ளை நோயிலினின்றும் எங்களைக் காப்பாற்றும். இந்த இரவில் எந்த தீமையும் எங்களை அண்டாது என்பதையும், எந்தவொரு கெடுதலும் எங்கள் இல்லத்தின் அருகில் வராது என்பதையும் அறிந்து நாங்கள் தூங்க உதவி புரியும். புத்துணர்ச்சியுடன் விடியலில் எழுந்து, மற்றொரு நாளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எங்கள் இனிய ஜெபங்களுக்கு பதிலளித்ததற்கு நன்றி, ஆமென்! †

ALL SOULS DAY

ALL SOULS DAY

அனைத்து ஆன்மாக்கள் விழா

இறந்தவர்கள் உடலைக் கடந்தவர்களாதலால், அவர்கள் காலத்தையும், இடத்தையும் வென்றவர்களாகிறார்கள். நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வுக்கு அழுத்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வின் உந்து சக்தியும் இறப்பு. நம் வாழ்வின் இலக்கின் தொடக்கமும் இறப்பே. இறுதி நாளில் இறப்பை எப்படி சந்திக்கிறோமோ அப்படி வாழ்ந்துள்ளோம் என்று பொருள். இறப்பை மன நிறைவோடு மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் மனிதன்,இவ்வுலக வாழ்வை ஆண்டவர் எதிர்பார்க்கும் விதத்தில் வாழ்ந்துள்ளான், புது வாழ்வுக்குத் தன்னை தயாரித்துள்ளான் என வெளிப்படுகிறது.

இயேசுவின் பார்வையில் இறப்பு ஒரு திருமுழுக்கு. புது வாழ்வின் தொடக்கம். இயேசு, ஒவ்வொரு சாவையும் வாழ்வின் உதயமாகக் கண்டார். இலாசரின் இறப்பு கடவுளின் மாட்சி வெளிப்படும் நிகழ்வாகக் காண்கிறார்.(யோவா 11’4) பன்னிரெண்டு வயது சிறுமியை உயிர்பெறச் செய்தபோது, “விலகிப் போங்கள், சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்”( மத் 9 :24) என்றபோது, இறப்பை, புத்துயிர் பெற உறங்கி விழிக்கும் அன்றாட நிகழ்வாகக் காண்கிறார். அவ்வகையில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாள்களில் சிறப்பிக்கப்படும் அனைத்து புனிதர்கள் மற்றும் அனைத்து ஆன்மாக்கள் திருவிழா பற்றியக் கருத்துக்களை இன்றைய நமது நிகழ்வில் நாம் காணலாம். இவ்விழா பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்தந்தை பால் ராஜ் அவர்கள் பாண்டிச்சேரி கடலூர் உயர் மறைமாவட்டத்தை சார்ந்தவர் 1991ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். கடந்த 34 ஆண்டுகளாக உயர் மறைமாவட்டத்தில் அரும்பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தந்தை அவர்கள், பல பெரிய பங்குகளிலும் திருத்தலங்களிலும் தனது பணியினைத் திறம்படச் செய்துள்ளார். தற்போது திருக்கோவிலூர் மறைவட்டத்தின் முதன்மை குருவாகவும், உயர்மறைமாவட்டத்தின் மிகப்பெரிய பங்கான இரையூர் பங்கின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார் தந்தை அவர்களை அனைத்து புனிதர்கள் மற்று அனைத்து ஆன்மாக்கள் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.