ENVIRONMENT

World Environment Day

World Environment Day

ENVIRONMENT

இன்று ஜூன் 05. உலக சுற்றுச் சூழல் தினம் World Environment Day. சுற்றுச் சூழல் தினம் 2025 ‘நெகிழி மாசை முடிவுக்கு கொண்டு வருவோம் – Beat Plastic Pollution’ என்கிற மையச் சிதன்னையில் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியது போல நம் சொந்த வீடாகிய இப்பூமியையும் மானுடத்தையும் பேணிக் காக்க அழைப்பு பெறும் நாள். சுற்றுச் சூழல் சார்ந்த நம் பார்வைகளையும், பணிகளையும் நேர்மையாக பரிசீலனை செய்யும் நாள். சுற்றுச் சூழல் ஆன்மீகத்தை உருவாக்கி, வளர்க்க வேண்டியதை பற்றி சிந்திக்க வேண்டிய நாள். பெருகி வரும் நெகிழி மாசை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட வேண்டிய நாள்.

நிலம், நீர், காற்று, ஆகாயம் மிக அதி வேகமாக மீட்க முடியாத வகையில் மாசுப்படுத்தப்படுகிறது. ஒலி மாசு, ஒளி மாசு, நெகிழி மாசு, மின்னணு மாசு, உணவு மாசு போன்றவை வரைமுறையின்றி அதிகரித்து வருகிறது. நுண் நெகிழி துகள்கள் – Micro and Nano Plastics மனித உடலில் புகுந்து வருகின்றன. இது மனிதனுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் ஆபாயம் அதிகரித்து வருகிறது.

பூமியில் உயிர் வாழ்வுக்கு தேவையான பல்லுயிரியம் மிகவேகமாக அழிந்து கொண்டிருக்கிறது. சூழலியலின் முக்கிய அம்சங்களாகிய வனங்களும், கடல்களும் திட்டமிட்டு வளர்ச்சி என்கிற போர்வையில் அழிக்கப் படுகின்றன. பூமி வெப்பமாதல் பெரும் காலநிலை நெருக்கடியை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. பூமியை காக்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

சுற்று சூழல் பிரச்னை களால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவது ஏழை நாடுகள் மற்றும் ஏழை மக்களே. மேலும் லாபம், சுரண்டல் மற்றும் வணிகமயம் ஆகியவற்றை மையப்படுத்திய அதிதீவிர முதலாளித்துவ போக்கு சுற்றுச் சூழல் சீர்க்கேடுகளுக்கு முக்கிய காரணம் என்பதை உணர வேண்டும்.

இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். பூமியை சிதைத்து, சுரண்டி அழிப்பதால் பூமிக்கு பிரச்னை இல்லை. தொல்லியல் காலத்தில் இருந்தே பூமி சிதைவுகளை சந்தித்து மீண்டு எழுந்துள்ளது. பூமி சிதைவதால் மனிதகுலம் தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

இறைவனின் உன்னத படைப்பாகிய இந்த அழகிய பூமியையும், அதன் இயற்கை வழங்களையும், சுற்றுச் சூழலை யும், படைப்பின் மகுடம் எனப்படும் மானுடத்தையும் பேணிக் காக்க மற்றும் நிலைத்த நீடித்த வளர்ச்சிக்காக என்ன திட்டங்கள் வைத்திருக்கிறோம்? அடுத்த தலைமுறைக்கு நாம் எத்தகைய பூமியை கொடுக்க போகிறோம்?

நம் நற்செய்திப் பணியில், அருட்பணி திட்டத்தில் நம் அனைவரின் சொந்த இல்லமாகிய பூமியையும் அதன் வளங்கள் அனைத்தையும் பேணி காக்க தெளிந்த இலக்குகள் மற்றும் கொள்கைகளுடன் கூடிய திட்டம் இருக்கிறதா?

ஐக்கிய நாடுகள் அவையின் நீடித்த நிலை வளர்ச்சிக்கான 17 இலக்குகள் பற்றி நம் பணித்தளங்களில் விழிப்புணர்வு கொடுக்கிறோமா? செயல்படுத்த திட்டங்கள் வகுத்து இருக்கிறோமா? திருத்தந்தை பிரான்சிஸ் 10 ஆண்டுகளுக்கு முன் நமக்கு தந்த ” புகழ் அனைத்தும் உமக்கே ” திருமடல் நம் மக்களிடம் சென்று சேர்ந்து இருக்கிறதா? திருமடலை வாசித்து, விவாதித்து செயல் திட்டங்கள் வகுக்க முயற்சி செய்தோமா? நிலைத்த நீடித்த நிறை வளர்ச்சிக் காக சிந்திப்போம்.

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

MOR.PRAYER

இயேசுவின் திருஇருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்

இயேசுவின் திருஇருதயமே ! கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும் சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம். நேசமுள்ள இயேசுவே ! எங்கள் குடும்பங்களில் உள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம் .தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திருஇருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும். தவறி எங்களில் எவனாவது உமது திருஇருதயத்தை நோகச் செய்திருந்தால் அவன் குற்றங்களுக்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவனுக்கு கிருபை செய்தருளும். இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், ஊனமுற்றோர்களுக்கு ஊன்றுகோலும் ,விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்து காத்திருப்பீராக.

இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே ! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தரே, இந்த ஊரில் உள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும், அவர்களுடைய திருஇருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வபயத்தையும் வளரச் செய்யும். சீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும், மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம்.

திவ்விய இயேசுவே !முறைமுறையாய் உமது திரு சிநேகத்தில் சீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும் .

ஆமென்.🙏

APPRECIATE

Life Is What We Make It.

Life Is What We Make It...

APPRECIATE

Life is a game—enjoy the ride.
Laugh out loud, let joy be your guide.
Tears will fall, and pain will stay,
But we choose how we face each day.

Life is a song—dance with grace.
Sadness comes, but joy has its place.
A smile can heal, a kind word uplift,
Let this be our gift: life is what we make it.

Life holds both right and wrong,
We grow through struggles, tough and strong.
Your life and mine, both simple and grand,
It’s in our hands—life is what we make it..

PSALM 68

PSALM 68 PRAYER

PSALM 68 PRAYER

 

திருப்பாடல் : 68PSALM 68

கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும். எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர். உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். வானங்களின் மேல், தொன்மைமிகு வானங்களின் மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்; இதோ! அவர் தம் குரலில், தம் வலிமைமிகு குரலில், முழங்குகின்றார். கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள். அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது; அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது. கடவுள் போற்றி! போற்றி!

(திருப்பாடல் 68: 28-29, 32-35c)

🛐 ஜெபம் 🛐

நம்பிக்கையைத் தருகின்ற நல்அமுதே! என் வாழ்வை நம்பிக்கையில் துலங்க செய்பவரே! உம்மை தாழ்ந்து பணிந்து ஆராதிக்கின்றோம். உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

“பெற்றுக் கொள்வதைவிடக் கொடுத்தலே பேறுடைமை” என்று கூறிய எம் இயேசுவே, பிறருக்கு அதிக அளவில் உதவி செய்ய தகுந்த சூழ்நிலையை எங்களுக்குத் தந்தருளும். அன்னை மரியின் அரவணைப்பில், தூதர்களின் பாதுகாப்பில் கண்விழித்து நாங்கள் மீண்டும் வாழவும், உம்மைப் போற்றிப் புகழவும், எங்களின் ஆன்மாவின் மீட்புக்காகவும் மீண்டும் ஒரு புதிய நாளைத் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இறைவா! உம் திருமுகத்தைத் தேடவும், உம் திருவழியில் நடக்கவும், எங்கள் முழு உள்ளத்தோடும், ஆன்மாவோடும் உம்மை அன்பு செய்யவும், உமக்காக வாழவும், பாவத்தை விட்டு நாங்கள் விலகவும் அருள்புரியும்.

இயேசு, மரி!, சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

NIGHT PRAYER

NIGHT PRAYER

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரக்கமிகு ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் நீர் எங்களுக்காக செய்யும் அனைத்து வல்லமைமிக்க மற்றும் அற்புதமான காரியங்களுக்காகவும் நாங்கள் உம்மை நேசிக்கிறோம், நன்றி செலுத்துகிறோம்!

எங்கள் எதிரிகளின் அனைத்து தாக்குதல்களையும் தடுக்க உமது வலிமைமிக்க சம்மனசுக்களை எங்களைச் சூழ்ந்திருக்கச் செய்ததற்காக நன்றி. கடினமான பகல்வேளைப் பணிகளின் பிறகு, பல சவால்களை எதிர்கொண்டு, உமது அளவற்ற அன்பு, கவனிப்பு மற்றும் பாதுகாப்பில், முழுமையாக ஓய்வெடுக்க எங்களுக்கு உதவி புரியும். இப்போது நாங்கள் உறங்கச் செல்லும்போது, ​​இரவில் எங்களைக் காத்துக்கொள்ளவும், கவனிக்கவும், பாதுகாக்கவும், விடியற்காலையில் எங்களை எழுப்பவும் உம்மை பிரார்திக்கிறோம்.

அப்பா, எங்கள் கவலைகளை நீர் அறிவீர்! எங்கள் கஷ்டங்களை கவனித்துக்கொள்கிறீர். எனவே எங்களுடைய கடினமான கவலைகள் அனைத்தையும் நாங்கள் உம்மிடம் ஒப்படைக் கிறோம். எமது கடின சூழ்நிலைகளை நாங்கள் உமது காலடியில் வைக்கிறோம். ஒரு புதிய நாள் தொடங்கும்வரை எங்களுக்கு அமைதியான உறக்கத்தைக் கொடுத்தருளும். இவை அனைத்தையும் எங்கள் இரட்சகராகிய இயேசுவின் தூய திருநாமத்தில் ஜெபிக்கிறோம்.
ஆமென்.!

night-prayers

MORNING PRAYER

MORNING PRAYER

PEACE OF MIND

Day 3 (June 05, 2025) – PURPOSE

📖 Key Verse: “You will receive power when the Holy Spirit has come upon you; and you will be my witnesses…” (Acts 1:8)

💭 Reflection: The Holy Spirit gives us courage and clarity in our Christian calling. At the Pentecost, the disciples of Christ were transformed into being ‘lion-hearted’ as they discovered the purpose of their life. Many times, we get lost and fail to grasp the true meaning of life. Our lives are to be lived for God, to share His Love with one another and to help others to love God more!

What are some of the fears and doubts that prevent me from living for Christ completely
What can I do to help others to discover greater meaning and joy in life?

🗣️ Quote from Early Church Fathers: “The Spirit is not given for idleness but for service – for the building up of the Church and the salvation of souls.” (St. John Chrysostom)

🙏 Prayer: O Holy Spirit, fill me with Your Power that I may have greater conviction in the Gospel Message and to be Your powerful witness of Love and Mercy, Amen!

COME HOLY SPIRIT, FILL MY HEART!
COME HOLY SPIRIT, LEAD MY LIFE!

MORNING PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

APPRECIATE

ஆற்றலுள்ள குழந்தை இயேசுவுக்கு நவமணி செபம்:

(ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி, மணிக்கு ஒருமுறையாக 9 முறை குழந்தைக்குரியப் பற்றுதலோடு தொடர்ச்சியாக செபிக்க வேண்டும்)

ஓ இயேசுவே! “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.” என்று மொழிந்தீரே. உமது திருத்தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக நான் கேட்கிறேன், தேடுகிறேன், தட்டுகிறேன். நான் கேட்கும் இந்த வரங்களைக் கொடுத்தருளுமாறு பணிவுடன் மன்றாடுகிறேன்.

(தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்)

ஓ இயேசுவே! “என் பெயரால் நீங்கள் தந்தையைக் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருளுவார்” என்று மொழிந்தீரே. உமது திருத்தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக எனக்கு அவசரமான இந்த மன்றாட்டை அளித்தருளுமாறு, உமது பெயரால் தாழ்ந்த உள்ளத்துடன் தந்தையை கெஞ்சி மன்றாடுகிறேன்.

(தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்)

ஓ இயேசுவே! “விண்ணும் மண்ணும் அழிந்து போகும். ஆனால் என் சொற்களோ ஒருபோதும் அழியா” என்று மொழிந்தீரே. உமது திருத்தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக என் செபம் கேட்கப்படுமென்று நான் உறுதியாக நம்புகிறேன்.

(தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்)

smile

SMILE PLEASE

SMILE PLEASE

smile

Today is National Smile Day. So this little poem…..
Smiling is infectious,
We catch it like the flu.
Someone smiled at me today;
I started smiling too.
I walked around the corner
And someone saw me grin,
When he smiled I realised
I had passed it on to him!
I thought about the smile
And then realised its worth;
A single smile like mine
Could travel round the earth.
So if you feel a smile begin,
Don’t leave it undetected;
Start an epidemic
And get the world infected!

𝐏𝐫𝐚𝐲𝐞𝐫 𝐟𝐨𝐫 𝐒𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡

𝐏𝐫𝐚𝐲𝐞𝐫 𝐟𝐨𝐫 𝐒𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡

 

Dear Lord, I come to you today in need of your strength and guidance. I am feeling overwhelmed and I need your help to face the challenges before me.

Grant me the grace to remain steadfast in the face of adversity, and to trust in your love. Fill me with your peace and calm my restless mind and heart.

Grant me the courage to stand up for what is right, and to be a witness to your truth in all I do. Give me the strength to endure any hardship with grace and dignity.

May your Holy Spirit be my guide, giving me the wisdom and fortitude I need to face each day with confidence. I trust in you, Lord, and I know that with your help, I can overcome any obstacle.

PSALM 68

PSALM 68

திருப்பாடல் : 68

கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; புகை அடித்துச் செல்லப்படுவதுபோல அடித்துச் செல்லப்படுவர்; நெருப்புமுன் மெழுகு உருகுவது போல கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர். நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; ‘ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம். திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்!தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்.

(திருப்பாடல் 68:1-6ab)

ஜெபம்

திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருக்கும் எம் இறைவா, இந்த காலை வேளையில் உம்மைப் போற்றுகின்றோம். துதிக்கின்றோம். ஆராதிக்கின்றோம். நன்றி செலுத்துகின்றோம்.

“உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்.” என்று கூறிய எம் இயேசுவே, தூய ஆவியின் மூலம் அனுதின வாழ்க்கையில் எங்களுக்கு அலகையை எதிர்த்து நிற்கும் துணிவினையும், ஆற்றலையும் தந்தருளும்.

இப்புதிய வாரத்தில் நாங்கள் செய்ய வேண்டிய வேலைகளைத் திறன்பட குறித்த நேரத்தில் செய்து முடித்திட நல்ல ஞானத்தையும், திறனையும் தந்தருளும்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.