காலை ஜெபம் 

காலை ஜெபம் 

திருப்பாடல் : 114

எகிப்து நாட்டை விட்டு இஸ்ரயேலர் வெளியேறியபொழுது, வேற்று மொழி பேசிய மக்களை விட்டு யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது, யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று; இஸ்ரயேல் அவரது ஆட்சித் தளம் ஆனது. செங்கடல் கண்டது; ஓட்டம் பிடித்தது; யோர்தான் பின்னோக்கிச் சென்றது.
மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும் துள்ளிக் குதித்தன. கடலே! நீ விலகி ஓடும்படி உனக்கு நேர்ந்தது என்ன? யோர்தானே! நீ பின்னோக்கிச் சென்றது ஏன்? மலைகளே! நீங்கள் செம்மறிக் கிடாய்கள் போல் குதித்தது ஏன்? குன்றுகளே! நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல் துள்ளியது ஏன்?

(திருப்பாடல் 114: 1-6)

ஜெபம்:

எப்போதும் எங்களை அரவணைக்கும் எங்கள் அன்பு ஆண்டவரே! இந்த காலை வேளையில், துதி உண்டாவதாக. அல்லேலூயா. மகிமை உண்டாவதாக. அல்லேலூயா.

உலகனைத்தின் ஆண்டவரே! எங்கள் மேல் கொண்ட நம்பிக்கையின் நிமித்தம் மேலும் ஒரு புதிய நாளை எங்களுக்கு அளித்துள்ளீரே! நன்றி அப்பா ! எங்களைப் படைத்த எங்கள் தந்தையே! உம்மை வாழ்த்திப் போற்றி தாழ்ந்து பணிந்து ஆராதிக்கின்றோம். கடந்த இரவு முழுவதும் எங்களைக் கண்ணின் மணி போல எங்கள் அருகில் இருந்து எங்களைப் பாதுகாத்துக்கொண்ட உமது மேலான கிருபைக்காக உமக்கு நன்றி. 🙏

மன்னிப்பதில் தாராளமானவரே! “மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.” என்ற உமது இறைவார்த்தையை நான் அறிந்திருந்தும், தெரிந்திருந்தும் அதை என் வாழ்வில் செயல்படுத்தத் தவறிய தருணங்களுக்காக மனம் வருந்துகிறேன். பிறர் செய்யும் சிறு தவறுகளுக்குக் கூட சினம் கொள்ளும் நான், உமக்கு எதிராகப் பாவம் செய்தபோதெல்லாம் என்னை நீர் மனமிரங்கி மன்னித்தீர் என்பதை நான் பல நேரங்களில் மறந்து விடுகிறேன். பிறர் செய்த குற்றங்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதியாக என்னை நானே நியமித்ததை எண்ணி வெட்கமடைகிறேன்.

இறைவா என் கடின உள்ளத்தினை மாற்றியருளும். அன்பில் விளைந்த ‘மன்னிப்பு’ என்னும் மகத்துவமான பண்பை கொண்ட ஈர உள்ளதினனாய் என்னை மாற்றியருளும். மற்றவரை மனதார மன்னிக்கும் தருணைத்தில் கிடைக்கும் மன நிம்மதி, மன நிறைவு, மன அமைதி ஆகியவற்றை நான் நாள்தோறும் சுவைக்கச் செய்தருளும்.

ஏனெனில் இயேசுவே, ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை எங்களை நீர் மன்னிக்கச் சொல்லி இருக்கிறீர்.

இயேசு, மரி! சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்

ஆமென்.

காலை ஜெபம்

காலை ஜெபம்

இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்.

உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!

உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.

என்னை ஒழிக்கத் தேடும் பொல்லாரிடமிருந்தும் என்னைச் சூழ்ந்து கொண்ட எதிரிகளிடமிருந்தும் என்னை மறைத்துக் கொள்ளும்.

(திருப்பாடல்கள் 17:9)

ஜெபிப்போமாக :

விண்ணுலகில் வாழும், எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளே! இதோ இந்த இனிய காலை பொழுதினிலே, உம்மை போற்றி புகழுகின்றோம், வாழ்த்தி வணங்குகின்றோம்.

உமது மேன்மையான படைப்புகள் அனைத்தையும், உமது வார்த்தையால் உருவாக்கினீர்; ஆனால் மனிதனை, உம் விருப்பப்படி உமது சாயலில் உருவாக்கினீர், ஆகவே உமது திருமகனின் விலைமதிக்க முடியாத இரத்தத்தால், எங்களை மீட்க திருவுளம் கொண்டு அவரை பலியாக்கினீர். நன்றி அப்பா! நன்றி ஆண்டவரே! நன்றி தேவனே!

அப்பா! உம்மிடமிருந்து எங்களை பிரிப்பதற்காக, சாத்தான் கர்ஜிக்கும் சிங்கம் போல அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து எங்களை விலக்கி காத்தருளும். சாத்தானின் சோதனைகள் மூலம், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் அனைவரையும் மீட்டருளும்.

இவ்விதம், நாங்கள் எந்த சூழ்நிலையிலும், சாத்தானுக்கும் பாவத்திற்கும் அடிமை ஆகாதபடி வாழ்வோமாக! இவ்வாறு ஆண்டவரே, உமக்கு சாட்சியான பிள்ளைகளாக, எப்போதுமே வாழும் வரத்தை எங்களுக்கு தந்தருளும்.

இன்றைய நாளை, உம்மிடம் ஒப்படைக்கின்றோம். நீரே எங்களை வழிநடத்தும், ஆசீர்வதியும், காத்துக்கொள்ளுங்க அப்பா.

இரவு செபம் 

இரவு செபம் 

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென். ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. ஜெபிப்போமாக..

அன்பும், பாசமும் நிறைந்த தெய்வமே இறைவா! உம்மை நன்றியோடு போற்றுகிறோம் அப்பா. உழன்ற எலும்புகளுக்கு உயிர் கொடுப்பவர் நீரே. மீண்டும் எமக்கு வாழ்வு கொடுக்கின்றாய். உள்ளத்தின் ஆழத்திலிருந்து உம்மை புகழ்கின்றோம். உமது வல்லமையும் பாதுகாப்பும், இரக்கமும், அருளும் எங்கள் வாழ்வையும், குடும்பங்களையும் ஆசீர்வதிக்க, ஆளுகை செய்ய உருவாக்க, உருமாற்ற உடனிருந்தீரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன்மீது அன்பு செலுத்த.. அப்பா எங்கள் மீது நாங்கள் அன்பு கூறுவதுபோல, எங்களுக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூறவும் கற்றுக் கொடுத்தீரே.. எங்கள் வாழ்வை உருவாக்கினீரே.. இந்த ஆசீர்வாதத்தை நாங்கள் வளர்க்க, தெய்வமாய் எங்களுக்கு துணையாய் இருந்தீரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்!

இந்த நாள் முழுவதும் உம்முடைய அருள் கொடைகளால், எங்கள் வாழ்வை நிரப்பினீரே.. ஆசீர்வாதத்தின் பிரசன்னத்தில் எங்களை உருவாக்கினீரே.. உமக்கு நன்றி செலுத்துகிறோம் அப்பா!

இந்த இரவுப் பொழுதை ஆசீர்வதிப்பீராக. தாகம் உற்றவர்க்கு நீராய் வருகிறீர்.. பசியுற்றோரை உணவால் நிரப்புகிறீர்.. உம்முடைய பேரன்பை முன்னிட்டு, உம்முடைய நன்மை தனங்ளுக்காக.. உமது பிள்ளைகளாக நாங்கள் மாற.. எங்களை ஆசீர்வதியும்.

இந்த இரவிலே எங்கள் வாழ்வையும், குடும்பத்தையும் நீரே
பொறுப்பெடுப்பீராக. இந்த இரவு முழுவதும் உமது அன்பும் ஆசிர்வாதமும், எங்களோடும் குடும்பத்தோடும் இருப்பதாக. எங்கள் உள்ளங்களை, இல்லங்களை நிரப்புவதாக. இரவு முழுவதும் நிம்மதியான உறக்கமும், ஆசீர்வாதமான கனவுகளும், நாங்கள் அதிகமாய் பெற்றுக்கொள்ள அருள்புரியும். காவல் தூதர்கள் எங்களோடும், எங்கள் குடும்பத்தோடும் இருப்பார்களாக.

எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன் தூய ஆவியார், உங்கள் அனைவரையும் இந்த இரவு முழுவதும் பாதுகாப்பாராக. ஆமென்.! ஆமென்.!!

Pain passes, but beauty remains! Short story

Pain passes, but beauty remains!

An incident is told about a master painter, who had a very fervent student-disciple.

The master was suffering from a severe bout of arthritis.
>> It was very painful for him to paint.
He had to hold his brush between his thumb and index finger.
>> And as he painted, the student-disciple often heard him crying out in pain.

On one such occasion, the student asked the old master:
“Why do you go on painting, if it hurts so much?”

The master looked up to his disciple, and with an assuring smile replied:
“Remember always, son…
… Pain passes, but beauty remains!”

 

இரவு செபம்..

இரவு செபம்..

ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.

(எசாயா 64:8-9)

குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாதம் வைக்கிறோம். எந்தத் தீங்கும் நேரிடா வண்ணம் எங்களை காத்துக் கொள்ளும்.

ஒன்றுமில்லாத களிமண்ணாய் இருந்த எங்களை நீரே வனைந்து உம் திட்டத்தின் படி எங்களை வழிநடத்தி, பயன்படுத்தி வருகின்றீர்.

ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும், குணப்படுத்தலுக்காகவும் தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும்.

ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே. நன்றி.

இரவு ஜெபம் 

இரவு ஜெபம் 

அன்டி வந்தோரை ஆதரிக்கும் எங்கள் அடைக்கலமான ஆண்டவரே! இன்றைய நாள் முழுவதும் உம்மீது நாங்கள் வைத்த நம்பிக்கையினால், உமது ஒளியின் பாதையிலே எங்களை வழிநடத்தி, எங்களுடைய செயல்கள், வேலை, பயணம் போன்ற எல்லாவித சூழ்நிலைகளிலும், எந்த பொல்லாப்புகளும் எங்களை நெருங்காமல் பாதுகாத்து வந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

மலைபோல் வரும் துன்பத்தை, பனிபோல் நீக்கிவிடும் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே! ஒவ்வொரு நாள் முழுவதும், எவ்வளவோ இடையூர்கள், மன உளச்சல், பணிச்சுமை, கடினமான உழைப்பு, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் எங்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. ஆனாலும், உம்மீது நாங்கள் வைத்த நம்பிக்கையினால், எல்லாவித பிரச்சனைகளில் இருந்தும் எங்களை விடுவித்து, உமது சிறகுகளின் நிழலில் எங்களை பாதுகாத்து வருகின்றீர் இயேசுவே. நன்றி அப்பா.

இயேசுவே! இன்றைய இந்த இரவு வேளையிலும், எங்கள் ஆன்மாவை உமது கரங்களில் ஒப்படைக்கின்றோம். இறைவா! எங்களுக்கு ஆழ்ந்த, மன அமைதியின் உறக்கத்தை தந்தருளும். காலையில் முழு ஆன்ம, உடல் சுகத்தோடு விழித்தெழுந்து, உமது திருமுகத்தை கானும் வரத்தை, எங்களுக்கு தந்தருள உம்மை வேண்டி மன்றாடுகின்றோம்.

இன்று ஒரு சிந்தனை!

இன்று ஒரு சிந்தனை!

திறமையினால் சாதிப்பதை விட, பொறுமையினால் அதிகம் சாதிக்கலாம்; வலியும் வேதனையும் இல்லையெனில்,
வெற்றிக்கு இடமில்லை!

உதிர்ந்தப் பிறகும், பொறுமையோடு காத்திருக்கும் மரம்தான், துளிர்கிறது; தோல்வியுற்றாலும் பொறுமையோடு காத்திரு, வெற்றியானது துளிர்க்கும்!!

நீ எப்படி இருந்தாலும், வாழ்ந்தாலும், உன் எண்ணம் உயர்வாக இருந்தால் போதும்; உன் நல் எண்ணமே, ஒரு நாள் உன் வெற்றிக்கு காரணமாக அமையும்!!!

இரவு செபம்

இரவு செபம்

அன்பும், இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பு ஆண்டவரே,

இந்த இரவு நேரத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். மனிதரின் வார்த்தைகள் மற்றவர்களை விழச்செய்யும், செயலற்று போகச்செய்யும். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகள் வல்லமையுள்ளது; அவரின் வார்த்தைகள், எங்கள் வாழ்வில் காணப்படும் எல்லா பிரச்சனைகளையும் மாற்றவும், அமைதிப்படுத்தவும், விடுதலை தரவும், வல்லமையுள்ளதாகவும் எங்களுக்கு உமது ஆசீராக இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

ஆண்டவரே, நாங்கள் எப்போதும் உம்முடைய குரலுக்கு செவி கொடுக்கிறவர்களாகவும், உம்முடைய இறை வார்த்தைகள், எங்கள் வாழ்வில் ஆசீர்வாதமாகவும் இருக்க உமது அன்பை எங்களுக்கு தந்தருள வேண்டுகிறோம்.

இன்றைய எங்கள் அன்றாட பணிகளை, எங்கள் குடும்பத்தினரை ஆசீர்வதித்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இந்த நாள் முழுவதும், எம் வாழ்க்கை பயணத்தில் சிறப்பாக பயணிக்க, நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியான மனநிலையையும் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இன்று இரவு எமக்கு மன அமைதியையும், நல்ல உறக்கத்தையும் தந்தருளும். அதிகாலை எழுந்து, உம்முடைய பாதத்தில் அமர்ந்து, செபித்து, நாளைய எங்கள் பணிகளை இனிதே துவங்க, உமது மேலான இரக்கத்தின் ஆசீரை எமக்கு அளித்தருளும்.

எங்கள் தாழ்மையின் நன்றிகளையும், வேண்டுதல்களையும் ஏற்று, உமது அன்பின் ஊற்றால், இறை இரக்கத்தினால் எம்மை நிரப்பி ஆசீர்வதியும்.

காலை செபம் 

காலை செபம் 

பனிமய மாதா ஜெபம்

சர்வஜீவ கோடிகளுக்கு உணவைத் தந்து காப்பாற்றும் சர்வேசுரனுக்கு அமுதூட்டிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, உமது உபய திருவடிகளே எங்கள் அடைக்கலம்.🙏
(3 முறை).

எங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே, உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையை வேண்டி வந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், எங்கள் சந்தோஷமும்,எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ? உம்மைத் தேடி வந்த நிர்ப்பாக்கியர்களுக்கு உதவியாயிரும். அழுகிற பேர்களை அரவணையும், அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும்.

நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் பேரில் தயவாயிரும். தாயே! தயைக் கடலே! தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்குத் தஞ்சமே! உம்முடைய சந்நிதானம் தேடி வந்தோம். ஆறு, காடு, கடல்களைக் கடந்து ஓடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடி நொந்தோம்.

எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ அம்மா? அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா! தஸ்நேவிஸ் மரியே அம்மா! எங்கள் குடும்பங்கள் முழுவதையும் இன்று உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும் தாயே!.

PRAYER FOR PRIESTS

PRAYER FOR PRIESTS

Gracious and loving God, we thank you for the gift of our priests . Through them, we experience your presence in the sacraments. Help our priests to be strong in their vocation. Set their souls on fire with love for your people. Grant them the wisdom, understanding, and strength they need to follow in the footsteps of Jesus. Inspire them with the vision of your Kingdom. Give them the words they need to spread the Gospel. Allow them to experience joy in their ministry. Help them to become instruments of your divine grace. We ask this through Jesus Christ, who lives and reigns as our Eternal Priest.