இன்று ஒரு சிந்தனை!

இன்று ஒரு சிந்தனை!

அடக்கமாக உள்ளவரின் வலிமையை அறியாமல், அவரை எளிதாக வெல்ல நினைப்பவனுக்கு, தப்பாது கேடு நேரும்!

வாழ்க்கை கடினமாகதான் இருக்கும், எதிர்த்து போராட, அதற்கேற்ப உன்னை, மேலும், மேலும் உறுதியாக்கி கொள்!!

எனக்கு இது வராது, என்னால் முடியாது, என நினைப்பவரால், எதையும் சாதிக்க இயலாது, வெற்றிக்கனியை எட்டும் வரை, முயற்சி வேண்டும்,!!!

Morning prayer

Morning prayer
Comforting God, my breath for this day is yours. My life for this day is yours. All that I have and all that I am I offer to you.

You draw me near you and I am comforted and strengthened. Gracious God, these days are challenged by instant gratification and temporary answers. These seductions grip us. I call to you to save our spirits from webs of self-indulgence as well as self-deprivation and remit them to your ready hand of care. As the dawn of this hour wakes some to loss and others to hopefulness, give us confidence to trust you. Remind us that we never walk alone.

MY DAD IS MY HERO

MY DAD IS MY HERO

அப்பாவை பெயர் சொல்லிக்கூப்பிடும் மகள்கள் ஒருவித அழகு.
மகளை தன் அம்மாவாக பார்க்கின்ற அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவுக்கு மேக்கப் போட்டு ரசிக்கும் மகள்கள் ஒருவித அழகு.
மகளுக்கு தன் கையால் உணவூட்டி மகிழும் அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவின் கழுத்தில் தொங்கி விளையாடும் மகள்கள் ஒருவித அழகு.
மகளின் கால்களில் கொஞ்சி விளையாடும் அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பா சொல்லும் அத்தனை உண்மைகளையும் ஆர்வமாய் கேட்கின்ற மகள்கள் ஒருவித அழகு.
மகள் சொல்லும் அத்தனை பொய்களையும் சிரிக்காமல் ரசிக்கின்ற அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவைத் தேடவைத்து மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளும் மகள்கள் ஒருவித அழகு.
மகளைக் கண்டபிறகும் மரத்தையே கண்டுபிடிக்க முடியாதவர்களாய் தேடும் அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவை ஹீரோவாக பார்க்கும் மகள்கள் ஒருவித அழகு.
மகளை இளவரசியாக நடத்தும் அப்பாக்கள் அதைவிட அழகு.
கையை விடும்படி அப்பாவை கெஞ்சும் மகள்கள் ஒருவித அழகு.
யாருக்காகவும் மகளை விட்டுக்கொடுக்காத அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவுக்குத் தன் சோகங்களை சொல்லி ஆறுதல்தேடும் மகள்கள் ஒருவித அழகு.
மகளின் முகத்தைப் பார்த்துத் தன் சோகங்களை மறந்துவிடும் அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவுக்கு மகளாக அடுத்த ஜென்மத்திலும் பிறக்க விரும்பும் மகள்கள் ஒருவித அழகு.
மகளுக்கே பிள்ளையாக அடுத்த ஜென்மத்தில் பிறக்க விரும்பும் அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவுக்கு முன் ஆண்போல வேஷமிட்டு வீரம் பேசும் மகள்கள் ஒருவித அழகு.
மகளுக்கு முன் எந்த வேஷமும் இல்லாமல் பெண்மையை வெளிப்படுத்தும் அப்பாக்கள் அதைவிட அழகு.
வயதான அப்பாவை தன் பிள்ளைபோல நினைக்கும் மகள்கள் ஒருவித அழகு.
வயதான பின்னரும் தன் மகளை குழந்தையாகவே நினைக்கும் அப்பாக்கள் அதைவிட அழகு.
கடவுள் தந்த வரம் என் அப்பா என நினைக்கும் மகள்கள் ஒருவித அழகு.
அந்தக் கடவுளே என் மகள்தான் என நினைக்கும் அப்பாக்கள் அதைவிட அழகு.

அவளின் தேவைகளுக்கு கேட்காமலே கொடுப்பாள்…!!!
அவளின் முத்தம் எனக்கு தேவையென்றால் தங்கம் ஒன்னே ஒன்னுன்னு கெஞ்சனும் அதிர்ஷ்ட முத்தமாச்சே….!!!

How we interpret what happens to us

How we interpret what happens to us

A young salesman became discouraged because he had been rejected by many of the customers that he approached.

He asked a more experienced salesman for some advice.
“Why is it that every time I make a call on someone I get rejected?”

“I just don’t understand that,” answered the older salesman…
… “I’ve been hit on the head, called dirty names, and thrown out the door, but I’ve never been rejected!
Remember, my son: Rejection isn’t what happens to us…
… but how we interpret what happens to us!”

இரவு செபம்

இரவு செபம்

(திபா 84: 2. 3. 4-5a,7a. 10)

ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது!

வானகத் தந்தையே இறைவா!
இந்த மாலை வேளையில் என் உடலும், உள்ளமும் ஆழ்ந்த ஏக்கத்துடன் உம்மை நோக்கித் திரும்புகிறது.

உமது தூய பலிபீடத்தின் அருகே, ஓய்வைத் தேடும் சோர்வடைந்த பறவையைப் போல, என் ஆன்மா இந்த இரவுப் பொழுதில் உமது உடனிருப்புக்காக ஏங்குகிறது. நீரே என் உண்மையான அடைக்கலம், என் அமைதி, என் ஆறுதல், என் பாதுகாப்பான மறைவிடம்.

உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். ஆதலால் அவர்களின் இதயங்களை நீர் மகிழ்ச்சியினால் நிரப்புகிறீர். உலகம் இருண்டு போனாலும்,
நீரே இன்னும் என் ஒளி.
நான் பலவீனமாக உணர்ந்தாலும், நீரே என் பலம். ஆண்டவரே, இன்றைய நாளில் எனது பலவீனத்தால் உமக்கெதிராகவும், சக மானிடருக்கெதிராகவும் நான் கட்டிக்கொண்ட பாவங்களுக்காக என்னை மன்னியும்.

வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும், உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது; எனவே, இன்றிரவு உமது கருணையால் என்னைச் சூழ்ந்து கொள்ளுங்கள். என் தலையணை உமது உறுதி தரும் வார்த்தைகளாகவும் , என் போர்வை, உமது தூதர்களின் இறக்கைகளின் நிழலாகவும் இருக்கட்டும்.

நான் நாளை, புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் எழுந்திருப்பேன் என்னும் நம்பிக்கையில், இந்த இரவினை உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன் – ஆமென்

(திபா 84: 2. 3. 4-5a,7a. 10)

ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது!

வானகத் தந்தையே இறைவா!
இந்த மாலை வேளையில் என் உடலும், உள்ளமும் ஆழ்ந்த ஏக்கத்துடன் உம்மை நோக்கித் திரும்புகிறது.

உமது தூய பலிபீடத்தின் அருகே, ஓய்வைத் தேடும் சோர்வடைந்த பறவையைப் போல, என் ஆன்மா இந்த இரவுப் பொழுதில் உமது உடனிருப்புக்காக ஏங்குகிறது. நீரே என் உண்மையான அடைக்கலம், என் அமைதி, என் ஆறுதல், என் பாதுகாப்பான மறைவிடம்.

உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். ஆதலால் அவர்களின் இதயங்களை நீர் மகிழ்ச்சியினால் நிரப்புகிறீர். உலகம் இருண்டு போனாலும்,
நீரே இன்னும் என் ஒளி.
நான் பலவீனமாக உணர்ந்தாலும், நீரே என் பலம். ஆண்டவரே, இன்றைய நாளில் எனது பலவீனத்தால் உமக்கெதிராகவும், சக மானிடருக்கெதிராகவும் நான் கட்டிக்கொண்ட பாவங்களுக்காக என்னை மன்னியும்.

வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும், உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது; எனவே, இன்றிரவு உமது கருணையால் என்னைச் சூழ்ந்து கொள்ளுங்கள். என் தலையணை உமது உறுதி தரும் வார்த்தைகளாகவும் , என் போர்வை, உமது தூதர்களின் இறக்கைகளின் நிழலாகவும் இருக்கட்டும்.

நான் நாளை, புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் எழுந்திருப்பேன் என்னும் நம்பிக்கையில், இந்த இரவினை உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன்

இன்று ஒரு சிந்தனை!

இன்று ஒரு சிந்தனை!

இன்று நீ சக்திவாய்ந்தவராக இருக்கலாம், ஆனால் நினைவில் கொள், காலம் உன்னை விட சக்தி வாய்ந்தது!

காலமும், சூழ்நிலையும், எப்போது வேண்டுமானாலும் மாறலாம்; யாரையும் வாழ்க்கையில் குறைத்து மதிப்பிடவோ, காயப்படுத்தவோ வேண்டாம்!!

ஒரு பறவை உயிருடன் இருக்கும்போது, எறும்புகளைத் தின்னும், ஒரு நாள் பறவை இறக்கும், இறந்தவுடன், எறும்புகள் பறவையை தின்னும்!!!

ONE THING IN LIFE IS PERMANENT——IT’S YOU

ONE THING IN LIFE IS PERMANENT——IT’S YOU

Whatever happens, stay alive.
Don’t die before you’re dead.
Don’t lose yourself, don’t lose hope, don’t lose direction. Stay alive, with yourself, with every cell of your body, with every fiber of your skin.

Stay alive, learn, study, think, read, build, invent, create, speak, write, dream, design.
Stay alive, stay alive inside you, stay alive also outside, fill yourself with colors of the world, fill yourself with peace, fill yourself with hope.
Stay alive with joy.

There is only one thing you should not waste in life,
and that’s life itself.

Morning prayer

                                                                              Morning prayer
Loving God, I enter this morning with praise on my lips for I know that this day is a divine gift from you. I ask that you open the eyes of my heart that I might discern the movement of your Spirit and live a life of faithfulness.

Help me to remember that I am your ambassador in this earthly journey. As such, may the world see you through me as my life gives witness to the Author and Giver of all life. Through this day, may I love you more fully and may I sow seeds of love, mercy, and grace that will draw my neighbor to you. Bless my day and give me the strength to hold steady in my resolve to be your disciple in this world. In the matchless name of Jesus I pray.

இரவு நன்றி ஜெபம் 

இரவு நன்றி ஜெபம் 

வல்லமையும் விடுதலையும் தருகின்ற எங்கள் அன்புத் தந்தையே!

இந்த அற்புதமான நாளிலே உம்மை ஏறெடுத்து நோக்குகின்றோம்!

நீர் எங்களுக்கு இந்த கடினமான நாட்களிலே நோய்களிலிருந்து விடுதலை கொடுத்து பாதுகாத்துகொண்டிருக்கின்றீர். அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
அன்புத் தந்தையே! விடுதலை பயண நூலில் மோசே,

ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.

(வி.ப.15:2) என்று பாடியதுபோல, நாங்களும் மகிழ்ச்சியோடு இந்தப்பாடலை பாடி,
நீர் எங்களுக்கு விடுதலையாகவும், ஆற்றலாகவும், நாங்கள் மகிழ்ச்சியோடு பாடுகின்ற பாடலாகவும், இருந்து ஆசீர்வதிக்கின்றீர். நன்றி தந்தையே!

இதோ இந்த இரவு பொழுதிலே நாங்கள் உறக்கத்திற்கு செல்கின்றபொழுது, உம்முடைய ஆற்றல், உம்முடைய விடுதலை, உம்முடைய பாடல், எங்களோடு தங்கட்டும் தந்தையே!

எதிர்பார்க்காத எல்லா காரியங்களும் நீர் எங்களுக்கு வாய்க்கப் பன்னுவதற்காக, நன்றி செலுத்துகின்றோம் ஆண்டவரே,

காலை செபம் 

                                                                                  காலை செபம் 

புனித இஞ்ஞாசியார் செய்த செபம்

அன்பான ஆண்டவரே! தாராள உள்ளதோடு வாழ எனக்குக் கற்றுத்தாரும். காயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் நான் என் வாழ்நாளில் பணி புரிவேனாக! ஊதியத்தை எதிர் நோக்காமல் நான் உழைப்பேனாக! ஒன்று மட்டும் போதும் ஓ என் இறைவா! உமது திருவுளத்தை நிறைவேற்றுவதால் வரும் இன்பமொன்றையே நான் ஆசிக்கிறேன்.

ஆமென்.

♦️ புனித இஞ்ஞாசியாரை நோக்கி செபம்

இறைவனின் அதிமிகப் புகழை இப்பூவுலகில் பரவச் செய்வதற்கும், எண்ணிக்கையில்லாத மக்களை விண்ணுலகில் சேர்ப்பதற்கும் இறைவன் தேர்ந்தெடுத்த புனித இஞ்ஞாசியாரே!

எளியேன் எனக்குத் தகுதியில்லை என்றாலும், உம் பேரிலுள்ள நம்பிக்கையாலும் உமது செல்வாக்கு வல்லபத்தாலும் ஏவப்பட்டு உமது சரணமாய் ஓடி வந்தேன். நீர் என் பாதுகாவலராயிருந்து என்னைக் காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். சோதனை வேளையில் எனக்கு ஆதரவாயிரும். இறைவன் திருமுன் பரித்துரைத்து என் குறைகளைப் போக்கியருளும். சிறப்பாக என் செயல்களையெல்லாம் அர்ச்சித்து பேறுபலனுள்ளனவாக்கி விண்ணுலகப் பரிசை உறுதிப்படுத்தும். வலிமையாகிய உத்தம இறையன்பை எனக்காகக் கேட்டுத் தந்தருளும்.

ஆமென்.