night-prayers

MORNING PRAYER

MORNING PRAYER

PEACE OF MIND

Day 3 (June 05, 2025) – PURPOSE

📖 Key Verse: “You will receive power when the Holy Spirit has come upon you; and you will be my witnesses…” (Acts 1:8)

💭 Reflection: The Holy Spirit gives us courage and clarity in our Christian calling. At the Pentecost, the disciples of Christ were transformed into being ‘lion-hearted’ as they discovered the purpose of their life. Many times, we get lost and fail to grasp the true meaning of life. Our lives are to be lived for God, to share His Love with one another and to help others to love God more!

What are some of the fears and doubts that prevent me from living for Christ completely
What can I do to help others to discover greater meaning and joy in life?

🗣️ Quote from Early Church Fathers: “The Spirit is not given for idleness but for service – for the building up of the Church and the salvation of souls.” (St. John Chrysostom)

🙏 Prayer: O Holy Spirit, fill me with Your Power that I may have greater conviction in the Gospel Message and to be Your powerful witness of Love and Mercy, Amen!

COME HOLY SPIRIT, FILL MY HEART!
COME HOLY SPIRIT, LEAD MY LIFE!

MORNING PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

APPRECIATE

ஆற்றலுள்ள குழந்தை இயேசுவுக்கு நவமணி செபம்:

(ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி, மணிக்கு ஒருமுறையாக 9 முறை குழந்தைக்குரியப் பற்றுதலோடு தொடர்ச்சியாக செபிக்க வேண்டும்)

ஓ இயேசுவே! “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.” என்று மொழிந்தீரே. உமது திருத்தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக நான் கேட்கிறேன், தேடுகிறேன், தட்டுகிறேன். நான் கேட்கும் இந்த வரங்களைக் கொடுத்தருளுமாறு பணிவுடன் மன்றாடுகிறேன்.

(தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்)

ஓ இயேசுவே! “என் பெயரால் நீங்கள் தந்தையைக் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருளுவார்” என்று மொழிந்தீரே. உமது திருத்தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக எனக்கு அவசரமான இந்த மன்றாட்டை அளித்தருளுமாறு, உமது பெயரால் தாழ்ந்த உள்ளத்துடன் தந்தையை கெஞ்சி மன்றாடுகிறேன்.

(தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்)

ஓ இயேசுவே! “விண்ணும் மண்ணும் அழிந்து போகும். ஆனால் என் சொற்களோ ஒருபோதும் அழியா” என்று மொழிந்தீரே. உமது திருத்தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக என் செபம் கேட்கப்படுமென்று நான் உறுதியாக நம்புகிறேன்.

(தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்)

smile

SMILE PLEASE

SMILE PLEASE

smile

Today is National Smile Day. So this little poem…..
Smiling is infectious,
We catch it like the flu.
Someone smiled at me today;
I started smiling too.
I walked around the corner
And someone saw me grin,
When he smiled I realised
I had passed it on to him!
I thought about the smile
And then realised its worth;
A single smile like mine
Could travel round the earth.
So if you feel a smile begin,
Don’t leave it undetected;
Start an epidemic
And get the world infected!

𝐏𝐫𝐚𝐲𝐞𝐫 𝐟𝐨𝐫 𝐒𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡

𝐏𝐫𝐚𝐲𝐞𝐫 𝐟𝐨𝐫 𝐒𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡

 

Dear Lord, I come to you today in need of your strength and guidance. I am feeling overwhelmed and I need your help to face the challenges before me.

Grant me the grace to remain steadfast in the face of adversity, and to trust in your love. Fill me with your peace and calm my restless mind and heart.

Grant me the courage to stand up for what is right, and to be a witness to your truth in all I do. Give me the strength to endure any hardship with grace and dignity.

May your Holy Spirit be my guide, giving me the wisdom and fortitude I need to face each day with confidence. I trust in you, Lord, and I know that with your help, I can overcome any obstacle.

PSALM 68

PSALM 68

திருப்பாடல் : 68

கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; புகை அடித்துச் செல்லப்படுவதுபோல அடித்துச் செல்லப்படுவர்; நெருப்புமுன் மெழுகு உருகுவது போல கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர். நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; ‘ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம். திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்!தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்.

(திருப்பாடல் 68:1-6ab)

ஜெபம்

திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருக்கும் எம் இறைவா, இந்த காலை வேளையில் உம்மைப் போற்றுகின்றோம். துதிக்கின்றோம். ஆராதிக்கின்றோம். நன்றி செலுத்துகின்றோம்.

“உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்.” என்று கூறிய எம் இயேசுவே, தூய ஆவியின் மூலம் அனுதின வாழ்க்கையில் எங்களுக்கு அலகையை எதிர்த்து நிற்கும் துணிவினையும், ஆற்றலையும் தந்தருளும்.

இப்புதிய வாரத்தில் நாங்கள் செய்ய வேண்டிய வேலைகளைத் திறன்பட குறித்த நேரத்தில் செய்து முடித்திட நல்ல ஞானத்தையும், திறனையும் தந்தருளும்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

PSALM 47

திருப்பாடல் : 47

PSALM 47

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார்.

(திருப்பாடல் 47: 1-2. 5-8)

ஜெபம்

எல்லாம் வல்ல இறைவா! உம் திருமுன் பணிந்து உம்மை ஆராதிக்கின்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை அன்பு செய்கின்றோம். நீர் எங்களுக்கு அளித்துள்ள அனைத்து நன்மைகளுக்கும் உமக்கு நன்றி கூறுகின்றோம். கடந்த மே மாதம் முழுவதும் எங்களை உமது கண்ணின் மணி போல காத்து வழிநடத்தி வந்தீர். நன்றி தந்தையே..

இன்றைய ஓய்வு நாளில் உம்மை மகிமைப்படுத்த எங்களை மீண்டும் எழுப்பியுள்ளீரே ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றைய ஓய்வு நாளை உம்மிடமே ஒப்படைக்கிறோம். உம் திருவுடலை உணவாக உட்கொள்ள ஆவலாய் இருக்கும் எங்களை உமது அன்பினால் வழிநடத்தும்.

நல்லாயனாகிய இயேசுவே ! நாங்கள் உம் மந்தையின் ஆடுகள். நாங்கள் ஆயனாகிய உம்மீது நம்பிக்கை கொள்ளவும், ஒளியாகிய உம்மை எல்லா சூழ்நிலையிலும் முழுமையாக நம்பிடவும், துன்ப வேளைகளிலும் சோர்ந்த நேரங்களிலும் உம்மை இறுகப் பற்றிக்கொண்டு, உமது வழியில் நாங்கள் பயணிக்கவும் எங்களுக்கு அருள்புரியும்.

பிறந்த இந்த ஜூன் மாதம் முழுவதும் உமது ஆசீர்வாதங்களை எங்கள் மீது அபரிதமாகப் பொழியச் செய்தருளும்.

இயேசு மரி சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

NIGHT PRAYER

இரவு செபம்

எங்களை ஒவ்வொரு நாளும், அற்புதமாய் வழிநடத்தும் அன்பு தகப்பனே, உம்மை நன்றியுள்ள இருதயத்தோடு போற்றுகின்றோம், புகழ்கின்றோம், ஆராதிக்கின்றோம், உமக்கு நன்றி செலுத்துகின்றோம் அப்பா.

இன்றைய நாள் முழுவதும், எம்மை கண்ணின் மணிபோல் காத்து, யாதொரு தீங்கும் எம்மை அனுகாமல் பாதுகாத்த, உம் இரக்கத்திற்காக, உமக்கு நன்றி செலுத்துகின்ன்றோம் அப்பா.

காலை முதல் இந்நேரம் வரை, எங்களின் அன்றாடப் பணிகளை செவ்வனே செய்து முடிக்க எங்களுக்கு ஆற்றலையும், ஞானத்தையும் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்ன்றோம் அப்பா.

எங்களுக்கு சின்ன சின்ன உடல்நல பிரச்சனைகள் இருந்த போதிலும், உமது இறைஇரக்கத்தின் இரத்தத்தால், எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்த உம் தாயினும் மேலான அன்பிற்காக நன்றி செலுத்துகின்றோம் அப்பா.

ஆண்டவரே, இந்த இரவுப்பொழுதை ஆசீர்வதியுங்க. உமது காவல் தூதர்களை அனுப்பி எங்களை பாதுகாத்திடுங்க. எங்களுக்கு ஆழ்ந்த நித்திரையையும், மனஅமைதியையும் தாரும் அப்பா. நாங்கள் அதிகாலை புதிய ஆற்றலோடும், புத்துணர்ச்சியோடும் எழுந்து, உம்மை போற்றி புகழ வரம் தாரும்.

அன்பு தகப்பனே! இன்று நாங்கள் உமக்கு எதிராக, அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்காக, பாவங்களுக்காக மனம்வருந்தி மன்னிப்பு கேட்கின்றோம் அப்பா. எங்களை தயைகூர்ந்து மன்னித்து, உமது பிள்ளையாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென, சிரம் தாழ்த்தி வணங்கி மன்றாடுகின்றோம். ஆமென்.

LIVING

Live in peace , Not in pieces.

Live in peace , Not in pieces.

 

LIVING

Not everyone thinks the way you think,

Know the things you know,

Believe the things you believe,

Nor act the way you would act.

Remember This

and you will go a long way

in getting along with people.

Live in peace , Not in pieces.
Having a sharp memory is a good quality of the brain.

But the ability to forget the unwanted thing is a far better quality of the heart .

Live in peace , Not in pieces.

GOOD

அமைதி அனைவருக்கும் சொந்தமானது

அமைதி அனைவருக்கும் சொந்தமானது

GOOD

அமைதி என்பது ஒரு பிரிக்க முடியாத நன்மை, அது அனைவருக்கும் சொந்தமானது என்றும், மக்களின் மனச்சான்றுகளில், பொது நன்மைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள உறுதியான மற்றும் விடாமுயற்சியுடன் கூடிய உறுதிப்பாடு இருந்தால் மட்டுமே, அமைதியை உண்மையிலேயே அடையவும், வாழ்க்கையின் எதார்த்தமாகவும், ஒருங்கிணைந்த வளர்ச்சியாகவும் அனுபவிக்கவும் முடியும் என்றும், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் மொழிந்ததையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மேலும் நம்முடைய பரபரப்பான இன்றைய உலகில், இந்தச் செயல்முறை நிகழ்வதற்குத் தேவையான பொறுமையை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார் திருத்தந்தை, இடங்கள், சமூகங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் தொடங்கி, அவைகள் நமக்குச் சொல்ல வேண்டியதைக் கேட்பதன் வழியாக, உண்மையான அமைதி அடித்தளத்திலிருந்து வடிவம் பெறுகிறது என்பதை வரலாறும் நடைமுறை அனுபவமும் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளன என்றும், இந்த வழியில், கருத்து வேறுபாடுகள் மற்றும் அவை ஏற்படுத்தும் முரண்பாடுகள் ஒதுக்கி வைக்கப்படாமல், ஒப்புக்கொள்ளப்பட்டு, புரிந்து கொள்ளப்பட்டு, சமாளிக்கப்படும்போது அமைதி சாத்தியமாகும் என்பதை நாம் உணருகிறோம் என்றும் உரைத்தார் திருத்தந்தை.

சான்று வாழ்க்கை வாழ வேண்டும்

உலகிலும் நமது சமூகங்களிலும் வன்முறை நிலவுகிறது என்றும், போர்கள், பயங்கரவாதம், மனித வர்த்தகம் மற்றும் பரவலான ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில், நமது குழந்தைகளும் இளைஞர்களும் வாழ்க்கை கலாச்சாரம், உரையாடல் மற்றும் ஒருவருக்கொருவர்மீதான மரியாதையை அனுபவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, எல்லாவற்றிற்கும் மேலாக, வித்தியாசமான மற்றும் வன்முறையற்ற வாழ்க்கை முறையைக் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களின் சான்று வாழ்வு அவைகளுக்குத் தேவை என்பதையும் அடிக்கோடிட்டுக்காட்டினார்.

நற்செய்தியும் மறைப்படிப்பினைகளும் அகிம்சை என்பது, ஒரு வழிமுறையாகவும் பாணியாகவும் நமது முடிவுகள், உறவுகள் மற்றும் நமது செயல்களை வேறுபடுத்திக் காட்ட கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று விண்ணப்பித்த திருத்தந்தை, இந்த முயற்சியில் கிறிஸ்தவர்களுக்கு நற்செய்தியும் திருஅவையின் சமூக மறைப்படிப்பினையும் நிலையான ஆதரவின் ஆதாரமாக உள்ளன என்றும் எடுத்துரைத்தார்.

அமைதியின் கலாச்சாரத்தை வளர்ப்பது என்பது நம்பிக்கையாளர்கள் மற்றும் நம்பிக்கையற்றவர்கள் என அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்ட பணி என்பதால், அவர்கள் அனைவருக்கும் நற்செய்தியும் திருஅவையின் சமூக மறைப்படிப்பினையும் ஒரு திசைகாட்டியாகவும் செயல்பட முடியும் என்பதால், அவர்கள் அதை ஆலோசனை மற்றும் நடைமுறை வழியாக, நபரின் மாண்பு மற்றும் பொது நன்மையால் ஈர்க்கப்பட்டு முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

MOR.PRAYER

PRAYER FOR THE DAY

PRAYER FOR THE DAY

MOR.PRAYER

வல்லமையும் விடுதலையும் தருகின்ற எங்கள் அன்புத் தந்தையே!

இந்த அற்புதமான நாளிலே உம்மை ஏறெடுத்து நோக்குகின்றோம்!

நீர் எங்களுக்கு இந்த கடினமான நாட்களிலே நோய்களிலிருந்து விடுதலை கொடுத்து பாதுகாத்துகொண்டிருக்கின்றீர். அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
அன்புத் தந்தையே! விடுதலை பயண நூலில் மோசே,

ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.

(வி.ப.15:2) என்று பாடியதுபோல, நாங்களும் மகிழ்ச்சியோடு இந்தப்பாடலை பாடி,
நீர் எங்களுக்கு விடுதலையாகவும், ஆற்றலாகவும், நாங்கள் மகிழ்ச்சியோடு பாடுகின்ற பாடலாகவும், இருந்து ஆசீர்வதிக்கின்றீர். நன்றி தந்தையே!

இதோ இந்த இரவு பொழுதிலே நாங்கள் உறக்கத்திற்கு செல்கின்றபொழுது, உம்முடைய ஆற்றல், உம்முடைய விடுதலை, உம்முடைய பாடல், எங்களோடு தங்கட்டும் தந்தையே!

எதிர்பார்க்காத எல்லா காரியங்களும் நீர் எங்களுக்கு வாய்க்கப் பன்னுவதற்காக, நன்றி செலுத்துகின்றோம் ஆண்டவரே.