grateful

MORNING PRAYER

MORNING PRAYER

grateful

 

காலை✝️ஜெபம்🌤️🌴

🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன்.

மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்; எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்? தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்.

இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறிதவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்; அது என்னைப் பற்றிக்கொள்ளாது.

வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலைவில் இருக்கும்; தீதான எதையும் நான் அறியேன்.

தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன்; கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின் செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்;

(திருப்பாடல்கள் 101:1-5)

✝️ஜெபிப்போமாக :🛐

அன்பான தந்தையே! இதோ இந்த காலை நேரத்தில், உமது இரக்கத்தை தேடி ஓடி வந்திருக்கும் என்னை ஆசீர்வதித்தருளும். இந்த புதிய நாளை எனக்கு தந்தமைக்காக, உமக்கு நன்றி ஆண்டவரே!

எங்கள் மேய்ப்பரே! உமது மந்தையில் இருந்து விலகி சென்ற ஆடு நான். ஆயனாகிய உமது பின்னே செல்லாமல், தவறான வழியில் நடந்து நொந்து போன ஆடு நான். எங்கள் மீது பரிவு கொள்ளுங்கள்! எங்களை மீண்டும், உமது மந்தையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

செழிப்பான இடத்திற்கு எங்களை கூட்டி செல்பவரே! எங்களைத் தாக்க வரும் கொடிய ஓநாய்களிடமிருந்து, எங்களைக் காப்பவரே! ஓ நல்ல ஆயனே! எங்கள் கடவுளே! நன்றி ஆண்டவரே!

அலகையின் மூலம் ஏமாற்றப்பட்டு, பாவ வலையில் சிக்கி துன்பப்படும் எங்களை கண்ணோக்கும். இவ்வுலக ஆசைகள், எங்களை நெருக்குகிறது, நேர்மையின் வழியில் வாழ முடியவில்லை, சில நேரங்களில் உண்மைக்கு மாறாக நடக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது, ஆண்டவரே! இந்த மாதிரியான நேரங்களில், எங்களுக்கு உமது உதவி தேவைப்படுகிறது. உமது திடன், எங்களுக்கு தேவைப்படுகிறது. விண்ணிலிருந்து எங்களுக்கு உதவி செய்யும் அப்பா.

அலகையின் அனைத்து துன்பங்களிலிருந்தும் எங்களை காப்பவரே! எங்கள் பாவத்தால் உம்மை கொன்றோம், இப்போது நீர் இறந்து, மீண்டும் உயிர்த்தெழுந்து, நாங்கள் மன்னிப்பை பெற்றுள்ளோம். இனிமேல் நாங்கள் தூய்மையின் பிள்ளைகள், இனி நீர் இறக்க போவதில்லை, வாழ்கிறீர், என்றென்றும் அரசராக வாழ்கிறீர். நீர் நீதி வழங்கும்போது, நாங்கள் மகிழ்வுடன் உமது நீதி அரியணை முன் நிற்க, எங்களை நாங்கள் தகுதிப்படுத்த, உமது துணை தேவைப்படுகிறது. விண்ணிலிருந்து எமக்கு உதவி செய்வீராக!

🙏🏻ஆமென்.🙏🏻

NIGHT PRAYER

   NIGHT PRAYER

   NIGHT PRAYER

இரவு செபம்..

NIGHT PRAYER

ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.

(எசாயா 64:8-9)

குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாதம் வைக்கிறோம். எந்தத் தீங்கும் நேரிடா வண்ணம் எங்களை காத்துக் கொள்ளும்.

ஒன்றுமில்லாத களிமண்ணாய் இருந்த எங்களை நீரே வனைந்து உம் திட்டத்தின் படி எங்களை வழிநடத்தி, பயன்படுத்தி வருகின்றீர்.

ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும், குணப்படுத்தலுக்காகவும் தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும்.

ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே. நன்றி.

u r precious

 MOTHER’S PURE LOVE

 MOTHER’S PURE LOVE

u r precious

A little boy had to walk around two kilometers to his school, through the congested and bustling city.

His mother had arranged a servant to accompany the child – while going and coming back from school – to ensure the child’s safety.
For this the servant was paid 30 rupees a day.

But when the child reached Third Standard  of school, he rebelled and told his mother: “I’ll walk myself to school!
And if you give me 10 rupees a day, I will be extra careful.
The rest of the money we can save and we all will be better off!”

After sometime of pleading and begging, the little boy finally got his way.
For the next three years, he walked himself – back and forth from school.

Years later, at a family party, the boy bragged about his independence and boasted to his family…
… about how he had taken care of himself as a little boy, travelling alone to school.

His mother, on hearing the story, laughed and said: “Did you really think you were alone?
Every morning when you left for school, I left with you. I walked behind you all the way.
Every evening when you got out of school, I was there. I set my eyes on you and protected you.

I always kept myself hidden; but I was there and I followed you all the way home.
I was always there for you, especially when you needed me!”

Similar is the case of God as well, in our spiritual walk…
…. We are never left alone
… We are always followed by the Lord!
There are moments when we think we can manage alone
There are other times when we feel there is none with me, in our journey

But the Lord always walks with us…!
He is our “God who accompanies us, in our journey of life!”

HUMBLE

The sergeant and Military service

The sergeant and Military service

HUMBLE

A young man joined the military service as a soldier.

One morning, he was ordered by the sergeant to report for duty at the canteen.
He, however refused.

The sergeant threatened to report him to the officer that day.
“All right,” said the young man, “go ahead. I did not enlist to be a bartender but a soldier, and I will not report at the canteen!”

His action of refusal was duly reported to the major who sent for him.
His companions taunted him as being “adamant” and “snobbish”

The young man went to the Major – with trembling knees but a steady heart – for he knew he was right.

The officer asked him, ‘Are you the young man who disobeyed orders this morning?’
“Yes, sir, I am.”

“Why did you do it?”
“Simply because I do not believe it is right to do what I was asked to do.
I enlisted to be a soldier and not a bartender.’

The officer arose quickly from his chair.
A trickle of fear went down the spine of the young man!

However, the officer extending his hand, said: “Young man, you are the kind of man we want.
I am glad to see a fellow who has the courage of his convictions.
You are not obliged to report at the canteen.
I am proud of your convictions!”

The young man was supposedly considered by others as being “adamant” and “proud”…
But the officer realized the worth of this young man – as having a courageous character of convictions!

True commitment and steadfast faithfulness in life requires the power of convictions and certainty!

 

DOG

THE MOON AND THE DOG

THE MOON AND THE DOG

DOG

A man, occupying an important and influential position in the society was often criticized for his honest and just way of dealing with things.

Once his friend enquired of him: “Why don’t you give fitting replies to your critics?”

To that the person replied:
“In my native town lives a widow who has a dog.
Whenever the moon shines, it goes outside and barks all night.”

The friend, confused on that example, asked: “ I didn’t get you…
… what is it about the dog and the moon?”

“Oh,” the man continued, “the moon went on shining — that’s all.”

MOR.PRAYER

MORNING PRAYER

                                                                                     MORNING PRAYER

காலை✝️ஜெபம்🌤️🌴

MOR.PRAYER 1

🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🌹🙏🏻

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!

ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்!

ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.

(திருப்பாடல்கள் 100:1-5)

✝️ஜெபிப்போமாக:🛐

எல்லாம் வல்ல என் அன்பு இயேசுவே, உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதிக்கின்றேன்.

ஒவ்வொரு காலையும் கண் விழிக்கும்போதும், நான் உள்வாங்கும் ஒவ்வொரு மூச்சின் போதும், ஒவ்வொரு மணித்துளியின் போதும், நான் உமது வல்லமையின் பாதுகாப்பில் இருக்கின்றேன்!

இறைவா! உமது வல்லமையினால் நான் படைக்கப்பட்டேன். அதே வல்லமையில் நீர் என்னை தொடவேண்டுமென, உம்மை பணிந்து மன்றாடுகின்றேன்.

ஒன்றுமில்லாமையிலிருந்து என்னை உருவாக்கிய நீர், மீண்டும் என்னை புதுப்படைப்பாக்க உம்மால் கூடும்.

இறைவா..! என் உள்ளத்திற்கும், உடலுக்கும், ஆத்துமாவுக்கும் முழுநலனை தாரும். இதனால் எஞ்சியுள்ள எனது வாழ்நாளில், உமக்கு உகந்தவனாக நான் பணி புரிவேனாக.

🙏🏻ஆமென்.🙏🏻

GOOD DAY

MORNING PRAYER

                                                                                 MORNING PRAYER

GOOD DAY

காலை ஜெபம்

ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.

காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.

எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச் செய்யும்.

உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.

எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!

(திருப்பாடல்கள் 90:13-17)

அனைத்துலகின் இறைவா! இந்த காலை வேளையிலே, உண்மை போற்றி புகழ்கிறோம். நற்கருணையில் எங்களோடு வாழும் உமக்கு, நன்றி ஆராதனை செய்கிறோம்.

அன்பான தந்தையே, எங்கள் மீது கொண்ட தீராத அன்பினால், உமது திருமகனையே எங்களுக்காக பலியாக்கினீர். ஆனால் நாங்கள், உமது அன்பில் இருந்து பல நேரங்களில் விலகிச் சென்று விடுகிறோம்.

அன்பான தந்தையே! நாங்கள் உமது அன்பிலிருந்து நீங்காமலும், உமது அரவணைப்பிலிருந்து வெளியே வராமலும் இருக்க, எங்களுக்கு துணை செய்யும்.

ஆண்டவரே! நாங்கள் படுக்கையில் இருந்து விழித்தெழுவது போல, பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர்களாக, சாத்தானின் எல்லா விதமான சூழ்ச்சிகளையும் அறிந்தவர்களாய், அவனது வலையில் இனி ஒருநாளும் சிக்காமல் இருப்போமாக. உமது அரவணைப்பில் எங்களை வைத்து பாதுகாத்தருளும்.

இவ்வாறு எங்கள் வாழ்நாள் எல்லாம் உமக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பணிபுரிந்து, எங்கள் வாழ்வின் மூலம் உம்மை வெளிப்படுத்தி வாழ, எங்களுக்கு தேவையான வரங்களை தந்துருளும்.

இன்றைய எங்களின் ஒவ்வொரு செயல்களையும் ஆசீர்வதியும். சோர்வின்றி எங்களின் அன்றாடப் பணிகளை, உமது ஞானத்தின் வழியில் நிறைவுடன் செய்ய, தேவையான அருளை வேண்டி மன்றாடுகிறோம்.

இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.

PEACE OF MIND

Morning prayer

                                                                            Morning prayer

PEACE OF MIND
Father, what joy it is to awake to a new day of liberty in you! Thank you for the refreshment of the night. Help me to face the day with purpose and with confidence in your Holy Spirit’s ever-freeing and ever-living power.

Thank you for the path you have placed before me this day. Thank you, also, for the gifts of your Holy Spirit, which operate in me and keep me from being dominated by my fears. You are the God of power and love, and I have received your power by adoption into your family.

Help me to always remember that I am an heir to greatness and not mediocrity! Give me clarity of focus and singleness heart today that I may be completely be centered on you and your will. In the name of the Father, the Son, and the Holy Spirit.

CLEANING

HOME MATTERS

                                                                             HOME MATTERS

CLEANING

Having your home in order isn’t about wealth, it’s about mindset.

Whether you live in a mansion or a one-room home with a dirt floor, what matters is how you care for it. Your surroundings often mirror your inner world. When your space is messy and neglected, it drains you. But when you tidy up, even just a corner, you feel something shift inside.

Cleaning isn’t just a chore; it’s a declaration: “This is mine. I value it. My life matters.”

You don’t need riches to live with dignity. A swept floor, clean dishes, a made bed, these quiet acts show strength. They say you haven’t given up. They reflect respect, resilience, and self-worth.

Order is self-care. It’s how we say, “I’m still standing.”
Because when you put your house in order, you’re really putting your soul in order.

Having our home in order

*heals you

*purifies you

*beautifies you

*adorns you

And that’s priceless.

                                                                   HOME MATTERS

Please subscribe. God bless

 

 

 

MOR.PRAYER

MORNING PRAYER

                                                                          MORNING PRAYER

MOR.PRAYER 1

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;

மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

(திருப்பாடல்கள் 23:1-6)

✝️ஜெபிப்போமாக :🛐

எங்கள் பாதுகாவலரான புனித தோமையாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே, கிறிஸ்துவை தொட்டறிந்து கிறிஸ்துவின் மீது நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை அறிந்து பறைசாற்ற பேறுபெற்ற தூயவரே, எம் பாரத பூமியில் நற்செய்தியை ஆர்வமுடன் போதித்த போதகரே.! தப்பறைகளை உடைத்த திருத்தூதரே..!, இறைவனின் அருளால் பல வாரங்களை இந்திய மக்களுக்கு அளித்து கிறிஸ்துவின் அன்பை விதைத்த புனிதரே..! இந்த காலை வேளையில் உம்மோடு உறவாட வந்துள்ளேன். என்னை ஆசீர்வதித்தருளும். என் உள்ளத்தின் குரலை கேட்டு எனக்கு உதவியருளும்.

இறைவனை அறிந்து நீரே என் கடவுள் நீரே என் ஆண்டவர் என மொழிந்து அவர் வழியில் நடந்த புனித தோமையாரே..!நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள எங்களை, கடன் தொல்லை, தொழிலின்மை போன்ற இக்கட்டுகளில் இருந்து பாதுகாத்தருளும். உமது பரிந்துரை வழியாக துன்பம், வறுமை, அவமானம், ஏமாற்றம் ஆகியவற்றால், வாடி நிற்கும் எங்களுக்கு உதவியருளும். வறுமையால் துயருற்று அழுவோரின் கண்ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.

எங்கள் அன்புக்குரிய புனித தோமையாரே..! இறைவனின் சித்தம் எதுவெனக் கண்டு, எப்பொழுதும் நீர் பரிசுத்தமாக நடந்தது போல, நாங்களும் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப எப்போதும் நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும், தீமையை அகற்றி தூயோராய் வாழவும்; மக்கள் யாவரும் மெய்யங் கடவுளைக் கண்டறிந்து தக்க முறையில் அவரை வழிபடவும், எங்களுக்காக இயேசு ஆண்டவரிடம் வேண்டியருளும்.

எங்களையும் எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும், உழைப்பினையும் ஆசிர்வதித்தருளும். எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற, எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசியருளும்.

உமக்கு திருவிழா எடுத்து கொண்டாடும் இவ்வேளையில், எங்களை நீர் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். எங்களை எப்போதும் தீயோனிடமிருந்து காத்திடுமாறு வேண்டுகிறோம். சாத்தானின் வஞ்சக சூழ்ச்சியில் நாங்கள் விழாமல் உம்மீது விசுவாசத்தில் நிலைத்திட உம்மை மன்றாடுகிறோம்.

🙏🏻ஆமென்.🙏🏻