MARY

MORNING PRAYER—IMMACULATE HEART OF MARY

MORNING PRAYER—IMMACULATE HEART OF MARY

MARY

மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்.

ஒ.! மரியாயின் மாசற்ற இருதயமே! இயேசுவின் திருஇருதயத்தின் மாதாவே ! எங்கள் இல்லத்தின் அரசியும் அன்னையுமாகிய மாமரியே ! உமது அதிமிகு விருப்பத்தின்படி எங்களை உம்மிடம் அர்பணிக்கின்றோம்.🙏 நீரே எங்கள் குடும்பங்களை ஆண்டருளும். எங்கள் ஒவ்வொருவரையும் வழிநடத்தும். இயேசுவின் திருஇருதயம் எவ்வாறு உம்மை ஆண்டு நடத்தினாரோ, அது போல் எங்களையும் ஆண்டு வழிநடத்தும்படி செய்தருளும். ஒ அன்பு நிறைந்த அன்னையே! நாங்கள் எப்பொழுதும் வளமையிலும், வறுமையிலும், இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும், வாழ்விலும், மரணத்திலும், உம்முடையவர்களாகவே இருக்கும்படி செய்தருளும்.

ஒ இரக்கமுள்ள மாதாவே! கன்னியர்களின் அரசியே! எங்கள் ஆன்மாக்களையும், இருதயங்களையும் காத்தருளும். அகங்காரம், கற்புக்கெதிரான சிந்தனைகள், அஞ்ஞானம் போன்ற தீமைகள் எங்களை நெருங்காதவாறு செய்தருளும். மாதாவே தேவரீருக்கும், தேவரீருடைய திருமகனுக்கும் எதிராக செய்யப்படும் எண்ணற்ற பாவங்களை பரிகரிக்க ஆவல் கொண்டுள்ளோம். தாயே ! எமது இல்லங்களிலும், உலகெங்குமுள்ள இல்லங்களிலும் இயேசு கிறிஸ்து நாதரின் அன்பையும், அருளையும் பிரகாசிக்க செய்தருளும். 🙏

ஆண்டவரே, உமது புண்ணிய மாதிரிகையை நாங்கள் கண்டு பாவிக்கவும், ஓர் உண்மையான கிறிஸ்துவ வாழ்வு வாழவும், அடிக்கடி தேவநற்கருணை வாங்கவும், முகத்தாட்சன்யத்தை புறந்தள்ளவும் வாக்களிக்கின்றோம். வரப்பிரசாதத்தின் சிம்மாசனமே! அரிய நேசத்தினுடைய மாதாவே நம்பிக்கையோடு உம்மை அண்டி வருகிறோம். உமது மாசற்ற இருதயத்தில் பற்றி எரியும் தெய்வீக நெருப்பு எமது இருதயத்திலும் பற்றியெரியச் செய்யும்.

தாயே! பரிசுத்ததனமும், ஆன்ம தாகமும், பரிசுத்த கிறிஸ்தவ வாழ்வும் என்மேல் சுமத்தும். அத்துணை சுமைகளையும் பரிகார கருத்தோடு தவமுயற்சியாக நாங்கள் உமது மாசற்ற இருதயத்தின் வழியாக இயேசுவின் திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம். இயேசுவின் திருஇருதயத்திற்கும் மரியன்னையின் மாசற்ற இருதயத்திற்கும் முடிவில்லாத காலமும் நேசமும், புகழ்ச்சியும் மகிமையும் உண்டாவதாக.

Human hands praying to god on mountain sunset background

MORNING PRAYER

MORNING PRAYER

PRAYER1

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

கடவுளை நோக்கி உரத்த குரலில் மன்றாடுகின்றேன்; கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள வேண்டுமென்று அவரை நோக்கி மன்றாடுகின்றேன்.

என் துன்ப நாளில் என் தலைவரை நாடினேன்; இரவில் அயராது கைகூப்பினேன்; ஆனாலும் என் ஆன்மா ஆறுதல் அடையவில்லை.

கடவுளை நினைத்தேன்; பெருமூச்சு விட்டேன்; அவரைப்பற்றி சிந்தித்தேன்; என் மனம் சோர்வுற்றது.

என் கண் இமைகள் மூடாதபடி செய்துவிட்டீர்; நான் கலக்கமுற்றிருக்கிறேன்; என்னால் பேச இயலவில்லை.

கடந்த நாள்களை நினைத்துப் பார்க்கின்றேன்; முற்கால ஆண்டுகளைப்பற்றிச் சிந்திக்கின்றேன்.

(திருப்பாடல்கள் 77:1-5)

✝️ஜெபிப்போமாக : 🛐

விண்ணக தந்தையே இறைவா! உம்மை போற்றுகிறோம்! நீரே விண்ணையும், மண்ணையும் படைத்தவர். அனைத்தையும் வழிநடத்தி வருபவரும், ஆள்பவரும் நீரே! உமக்கே அனைத்தும் அடிபணிகின்றன, உமக்கே மகிமையும், மாட்சியும் உரித்தாகுக ஆமென்!

அன்பு ஆண்டவரே! இந்த நேரம் வரை எங்களை பராமரித்து, வழிநடத்தி வந்த உமது இரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்!

இயேசுவே! எனக்கு வாழ்வே நீர்தான். நீர் என் வாழ்வில் இல்லை என்றால், நான் இருளில் வீழ்ந்து விடுவேன். அப்பா! உம்மை அதிகமாக நேசிக்கவும், எப்போதும் உமது அன்பு உறவில் வாழவுமே ஆசிக்கின்றேன். அன்பு இதயமும், பரிசுத்தமான உள்ளத்தையும் எனக்கு தந்தருளும்.

அப்பா! இன்றைய நாளில் பிறருக்கு வேதனையோ, வருத்தமோ, பெயரை கெடுக்கும் யாதொன்றும் என்னில் இருந்து ஏற்படாதவாறும்,

நாங்கள் பேசும் போது கவனத்தோடும், என் செயல்கள் விவேகத்தோடும் செயலாற்ற எனக்கு உதவியருளும். தீமையானது எதுவும், என் நாவில் இருந்து வராதபடி எனது சிந்தனையை பரிசுத்தமாக்கும்.

🙏🏻ஆமென்.🙏🏻

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

திருப்பாடல் : 103

MOR.PRAYER 1

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினம் கொள்பவரல்லர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.

(திருப்பாடல் 103: 1-4, 8-11)

🛐 ஜெபம் 🛐

அகில உலகையும் படைத்தவரே! இரக்கமும் அருளும் கொண்டவரே !
பேரன்பையும், இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றவரே! உம்மை இந்த காலை வேளையில் வாழ்த்தி, வணங்கி, போற்றி ஆராதனை செய்கிறோம்.

என்றென்றும் வாழும் எல்லாம்வல்ல எம் இறைவா! இந்த புதிய நாளை எங்களைக் காணச் செய்த உமது கிருபைக்காக நன்றி. நேற்றைய ஒய்வு நாளில் உமது இறைவார்த்தையைக் கேட்டு, உமது மகனும், எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் திருவுடலை உண்ணும் பெரும் பாக்கியத்தை எங்களுக்கு அளித்தீரே. நன்றி இறைவா!

இனிய இயேசுவே! அனுதினமும் உம் வழி நடக்க, உம்மைக் காண, உம்மைப் பின்பற்ற நாங்கள் ஆவல் கொண்டுள்ளோம். “என்னைப் பின்பற்றி வா..” என்ற உமது குரலைக் கேளாது, உமது அழைப்பை உணராது இருந்த எங்களது கடந்த கால தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிபைக் கேட்கிறோம். மன்னிக்கும் தேவனே மனமிரங்கி எங்களை மன்னித்தருளும். 🙏

ஆண்டவரே! நாங்கள் விசுவாசத்தில் என்றென்றும் நிலைத்திருந்து எந்த சூழ்நிலைகளிலும் உம் அழைப்பை ஏற்று நாங்கள் உம்மைப் பின்பற்ற எங்களுக்கு அருள் புரிவீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

Mistakes are lessons

Mistakes are lessons

Mistakes are lessons, not definitions of our past, They shape us, mold us, and forever last.

We stumble, we fall, we rise again,
And in the process, wisdom we obtain.

You are not the errors of your yesteryear, But the growth, the strength, the lessons clear.
The scars you’ve earned, the trials you’ve faced, Have made you wiser, more resilient in every place.

Keep growing, keep evolving, don’t be defined, By the mistakes that shaped your mind.

You are the sum of all you’ve learned,
The person you’ve become, the wisdom you’ve earned.

So let go of the shame, the guilt, the pain, And focus on the lessons you’ve gained.

You are more than your mistakes, you’re strong and free, A work in progress, evolving with glee.

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு செபம்..

அன்பு இறைவா! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம். எங்களை ஒரு குழுவாக, குடும்பமாக, நண்பர்களாக உறவை வளர்க்கும் கருவியாக, உறவோடு உமது ஞான வார்த்தைகளை பகிர்ந்து கடமையைச் செய்ய, உறவில் நாங்கள் மகிழ்ச்சியைக் காணச் செய்ததற்காக நன்றி கூறுகின்றோம்.

பிறருக்கு ஆறுதல் அளிக்க மறந்ததற்காகவும்; பாராட்ட மறந்ததற்காகவும்; நன்றி சொல்ல மறந்ததற்காகவும்; உற்சாகப்படுத்த மறந்ததற்காகவும் எங்களை மன்னியும்.

தேவையான நேரத்தில் பிறருக்கு உதவி செய்ய, பிறருக்கு நன்மை செய்யத் தவறியதற்காக எங்களை மன்னியும். பிறருடைய கடைமைகளிலே, நாங்கள் தடையாக இருந்திருந்தால் அல்லது சிரமம் கொடுத்தற்காக எங்களை மன்னியும்.

எங்கள் பெற்றோரிடமும், சகோதர சகோதரியிடமும், நண்பர்களிடமும், பிள்ளைகளிடமும் மனம் புண்படும்படியாக எதாவது செய்திருந்தால், எங்களை மன்னியும்.

தாயும் தந்தையுமான இறைவா! இந்த இரவில் நல்ல தூக்கத்தைத் தந்தருளும். நாளை காலை மீண்டும் எழுந்து, உம்மைப் போற்றிப் புகழவும் உம்மோடு இன்னும் நெருங்கி வாழவும் அருள்புரியும்.

MORNING PRAYER, PSALM 116

MORNING PRAYER

திருப்பாடல் : 116

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;
இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.

(திருப்பாடல் 116: 12-13. 15-16. 17-18)

🛐 ஜெபம் 🛐

என் அன்பிற்குரிய இயேசு கிறிஸ்துவே, இப்புதிய ஓய்வு நாளை எங்களைக் காணச் செய்த உமது மேலான கிருபைக்காக நன்றி.

இயேசுவே உமது திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவான இன்று ஆலயத்தில் திருப்பலியில் உமது திருவுடலை புசிக்க நாங்கள் ஆவலாக உள்ளோம். உமது ஆன்மீக உணவு எங்களது ஆன்மா, உடல் இரண்டிற்கும் பெலனையும், சக்தியையும் தர நீர் அருள் புரிவீராக.

உமது திருவுடலை நாங்கள் உண்ணும்போதெல்லாம் உமது சாவினை அறிவிக்கும் பேற்றினை எங்களுக்கு நீர் அளித்துள்ளீர்.

இறைவா உமது திரு இரத்தம் எங்கள் அனைவரின் பாவங்களைக் கழுவிடவும், உமது திருவுடல் அனைத்து நோயாளிகளையும் பரிபூரண சுகமாக்கிடவும் அருள் புரிவீராக.

இயேசு, மரி!, சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு செபம்..

ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.

(எசாயா 64:8-9)

குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாதம் வைக்கிறோம். எந்தத் தீங்கும் நேரிடா வண்ணம் எங்களை காத்துக் கொள்ளும்.

ஒன்றுமில்லாத களிமண்ணாய் இருந்த எங்களை நீரே வனைந்து உம் திட்டத்தின் படி எங்களை வழிநடத்தி, பயன்படுத்தி வருகின்றீர்.

ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும், குணப்படுத்தலுக்காகவும் தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும்.

ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே. நன்றி.

MORNING PRAYER, PSALM 33

MORNING PRAYER

திருப்பாடல் : 33

ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப் போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

(திருப்பாடல் 33: 12-13. 18-19. 20,22)

🛐 ஜெபம் 🛐

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப் போரையும் கண்ணோக்குபவரே!
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றவரே! அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றவரே! உம்மை வாழ்த்திப் போற்றி, ஆராதனை செய்கிறோம்.

தந்தையே! பிறரை குற்றவாளிகளாக சித்தரித்த, புறம் பேசிய, தீர்ப்பிட்ட தருணங்களுக்காக உம்மிடம் நான் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். ஏனெனில் தீர்ப்பிடுவது உமக்கு மட்டுமே உரியது என்பதை நான் அறிந்திருந்தும் அதை உணரத் தவறிய தருணங்கள் என் வாழ்க்கையில் ஏராளம். மன்னிக்கும் தேவனே! மனமிரங்கி மன்னித்தருளும். 🙏

“நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.” என்ற உமது இறைவார்த்தையை நாங்கள் எல்லாத் தருணங்களிலும் நினைவில் கொண்டு அதன்படி நடக்க அருள் புரிவீராக.🙏

ஆண்டவரே! மேலும் ஒரு புதிய நாளை, புதிய வாரத்தை எங்களுக்கு அளித்துள்ளீர். இந்த வாரம் முழுவதும் எங்களைத் தூய ஆவியின் துணை கொண்டு வழி நடத்தி உமது திருச்சட்டத்தில் இருந்து சற்றும் நாங்கள் விலகாதிருக்க அருள் புரிவீராக.🙏

அன்னை மரியே, எங்கள் அன்புத் தாயே உமது மாசற்ற இதயம் பாவிகளாகிய எங்களுக்கு அடைக்கலமாகவும், கடவுளிடம் எங்களை அழைத்துச் செல்லும் வழியாகவும் இருக்க உம்மை வேண்டுகிறோம். 🙏

இயேசு மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

SPECIAL

The way you treat your mother is the way life will treat you.

The way you treat your mother is the way life will treat you.

APPRECIATE

A mother is the heart of love and life itself. She embodies unconditional love—a love like no other. Do not judge her. Have you ever taken the time to sit with her, to truly listen to her stories, to understand the life she lived before you came along?

Perhaps she never told you about the struggles she endured, the silent battles she fought, or the scars she carries—scars that reopen every time memories resurface. She may have faced a painful childhood, a difficult youth, moments of loneliness, mistreatment, and hardship. Yet, she chose to keep her pain hidden, not wanting to burden you, not wanting you to see the shadows of her past.

Out of love, she remained silent. Maybe silence became her refuge, her way of protecting herself from reliving the suffering.

Honor her. Treasure her. Treat her with kindness, for she is a gift beyond measure. In doing so, you will invite blessings, peace, joy, stability, and a long, fulfilling life.

And remember, how you treat your mother will reflect in the way others treat you. The love and respect you show will shape the way the world responds to you.

There is only one mother. If you fail to cherish her now, regret may follow you in the years to come. And when sleepless nights come, it won’t be her presence keeping you awake—it will be the weight of your own neglect, the echoes of words unspoken, and the pain of missed chances that refuse to let you rest.

grateful

BE TOO MUCH

grateful

BE TOO MUCH

Be too much.
Be extra.
Live large.
Smile big.
Laugh hard.
Celebrate yourself.
Open your heart.
Express your emotions.
Use your words.
Giggle. Dance.
Soak in the Sun.
Splash in the waves.
Breathe deep, and love your life, you only get one.

Give yourself permission to take up space and be who you truly are.

Life isn’t meant to be tiptoed through – it’s meant to be felt, expressed, and celebrated.

So be bold, be real, and love the life that’s yours to live .