GOD BLESS BLESS BLESS

    Morning prayer

    Morning prayer

GOD BLESS BLESS BLESS
God of creation, how great you are and how worthy you are to be praised! You are the Creator of the universe and everything in it.

You are the Giver and Sustainer of all all life, and I am humbled that you knew me in my mother’s womb and count the very number of the hairs on my head.

So often I get caught up with what the day throws at me. Days come and go without my taking time to behold the beauty of your creation. Your creation is so full of the songs of nature, which sing your praises.

Open my eyes to the beauty of the world around me. Help me to pause and take the time to receive and enjoy your free gifts.

GOD BLESS

Morning prayer

                                                                 Morning prayer

GOD BLESS
God, all creation rejoices in you this morning! Eternal One, you know how much we rely on outward appearances, how much we judge one another by culture, skin color, and social class. You know how enamored we are by success and celebrity.

Help us to understand more clearly what is really important and to repent of our reliance on the superficial.

Grant to us the mind of good people that we may see beneath the surface and find in all your children the enduring worth that is valuable in your sight. Grant us this day, O God, deeper insight into what is really important in life.

GOD BLESS BLESS

Life is worth every moment, Enjoy to the fullest extent.

                                                          Life is worth every moment

GOD BLESS BLESS

Life is like that❗

📍When the axe came to the forest, the trees said the handle was one of us. Until they felt its cuts:. BETRAYAL IS within.

📍When a kid grows up, a pencil is replaced by a pen just to make the kid realize that now it is not easy to erase the mistake.

📍 One day, the ground we walk on will be our roof

📍 If loyalty was real, water is not supposed to cook the fish.

📍 How I wish RIP means Return If Possible.

📍 One sad truth about life is that you may not even be part of the future you’re stressed about.

📍 The sheep lived all her life, fearing the wolf, but it was the shepherd that finally ate it.

📍 When we were kids, we cried loudly to be noticed. But now we cry silently because we don’t want anyone to know.

📍Just because you’re a good person, doesn’t mean the world owes you kindness.

📍 When the blind man sees, he throws away the stick that has been helping him for years.

📍 FAMILY is like a FOREST from a distance. They are all close until you get closer to see how SEPARATED the trees are…

And yet, Life is worth every moment….it is fantastic. Enjoy to the fullest extent.

GOD BLESS

WISDOM WEDNESDAY

 

  WISDOM WEDNESDAY

தினமும் ஒரு நல்வார்த்தை .
09-07-2025
புதன்கிழமை

GOD BLESS
கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக! நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவர்.

எபேசியர் 3:19&20

PEACE OF MIND

MORNING PRAYER

                                                                                        MORNING PRAYER

PEACE OF MIND

காலை✝️ஜெபம்🌤️🌴

🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.

அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது.

மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் ப+வென அவர்கள் மலர்கின்றார்கள்.

அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது.

ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும்.

அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.

(திருப்பாடல்கள் 103:13-18)

✝️ஜெபிப்போமாக :🛐

விண்ணக தந்தையே இறைவா! இந்த காலை வேளையிலே உம்மை போற்றுகின்றோம், புகழ்கின்றோம், வாழ்த்துகின்றோம், வணங்குகின்றோம், உம்மை ஆராதிக்கின்றோம்.

இந்நேரம் வரை எங்களை காத்து, வழிநடத்தி வந்த உமது இரக்கத்திற்காக, உமக்கு நன்றி கூறுகின்றோம்.

எங்கள் அன்பான தந்தையே! இதோ உலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொரு ஆன்மாவும், இறுதிநாளில் உம்மிடம் வந்து சேர வேண்டும் என்று நீர் ஆவல் கொண்டீரே! அதற்காக உமது மகனையே பலியாக்கினீரே!

இதோ பாவம் செய்து, உம்மை விட்டு பிரிந்த, அனைத்து ஆன்மாக்களுக்காகவும், உம்மிடம் மனதார மன்னிப்பு வேண்டி ஜெபம் செய்கிறோம் அப்பா!

சாத்தானின் மாய வலையில், உமது ஆன்மாக்கள் விழுந்து கொண்டிருப்பதை காண்கிறோம், எங்களை மீட்டுக் கொள்ளும் ஆண்டவரே! நாங்கள் பலவீனமான மனிதர்கள் ஏமாற்றப்படுகிறோம்! எங்களை காத்தருளும்; எங்களை வழிநடத்தும்; எங்களுக்கு அருள் புரியும்; எங்களுக்கு துணையாய் இரும்; உமது தூதர்களை அனுப்பி எங்களை காப்பாற்றும்.

ஆண்டவரே! உலகெங்கும் உள்ள, உமது பிள்ளைகளாகிய நாங்கள், சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறோம்; சோதனையில் விழுந்து விடுகிறோம்; சோதனையில் சிக்கிக் கொள்கிறோம்; எங்களால் மீண்டு வர இயலவில்லை; நீரே எங்களுக்கு துணை செய்யுமாறு உன்னிடம் பணிந்து வேண்டுகிறோம் அப்பா! எங்களை கைவிட்டு விடாதேயும். சாத்தானிடம் கையளித்து விடாதேயும். உம்மிடமிருந்து நாங்கள் விலகி விடாமல், எங்களை பாதுகாத்துக் கொள்ளும்; அரவணைத்துக் கொள்ளுங்க அப்பா!

நாங்கள் சோதனையில் விழுந்து விடாமல் காப்பாற்றப்பட்டு, அதன் மூலம் உமக்கு சாட்சியான பிள்ளைகளாக, எப்போதுமே வாழும் வரத்தையும், பாக்கியத்தையும் எங்களுக்கு அளித்தருளுமாறு உம்மிடம் மன்றாடுகிறோம் .

இன்றைய நாளின் எம் ஒவ்வொரு செயல்களையும் ஆசீர்வதித்து, உம் இறைவார்த்தை வழியில் நடக்க எமக்கு அருள் புரியும்.

🙏🏻ஆமென்.🙏🏻

freedom-quotes-swl-240507-01-44054f

  HAPPINESS MATTERS

  HAPPINESS MATTERS

freedom quotes swl 240507 01 44054f

 

ஓடுகிறோம் ஓடுகிறோம்

எதை தேடி ஓடுகிறோம்
எதை சாதிக்க ஓடுகிறோம்

அடிப்படை தேவைகள்
எல்லாம் இருந்தும் ஓடுகிறோம்.

பணமே பிரதானமென்று ஆனபின்பு பாசத்தைப் புறம் தள்ளி ஓடுகிறோம்.

உறவுகளைப் புறம்
ஒதுக்கி ஓடுகிறோம்.

நியாயம், நேர்மை, பக்தி
இவற்றையும் கைவிட்டு பல நாள் கடந்தாகியது.

யாருக்காக எதற்காக
ஏன் ஓடுகிறோம் எனத் தெரியாமலே ஓடுகிறோம்.

நின்று நிதானிக்க்கூட விருப்பமின்றி ஏனிந்த ஓட்டம்.

ஓடி ஓய்ந்து முடியாது என்று நின்ற போதுதான் நாம் இழந்து போன சந்தோசங்கள் எவ்வளவு என வருத்தம்
“நம்முள் எட்டிப்பார்க்கிறது.

வருந்தினால் மட்டும் இனி அந்த அன்பு,உறவு,நேர்மை
பக்தி இனி கிடைத்திட வாய்ப்பில்லை.

நாம் வந்ததற்கும்,வாழ்ந்ததற்கும் ஓடியதற்கும் அடையாளமில்லாமலே
முடிந்து போகிறது என்பதே உண்மை.

எஞ்சிய நாட்களிலாவது
நம்மைச்சுற்றியுள்ள இயற்கைகளையும்,
சுற்றங்களையும் நேசிப்போம், ரசிப்போம், மகிழ்வோம், மதிப்போம்.
ஆசீர்வதிப்போம்.

u r precious

MORNING PRAYER

MORNING PRAYER

PRAYER1

காலை✝️ஜெபம்🌤️🌴

🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்; அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது.

அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள்.

ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள்.

ஆண்டவரின் ஆட்சித் தலத்தில் வாழும் அனைத்துப் படைப்புகளே! ஆண்டவரைப் போற்றுங்கள்! என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

(திருப்பாடல்கள் 103:19-22)

✝️ஜெபிப்போமாக :🛐

படைப்புகளின் பரம்பொருளே! உயிர்களின் ஊற்றே இறைவா! உம்மை புகழ்ந்து ஆராதிக்கின்றேன். இந்த இனிய காலை வேளையில், உம்மை நினைத்து ஜெபிக்கும் வரம்தந்த உமது மேலான இரக்கத்திற்காக, நன்றி செலுத்துகின்றேன்.

என் வாழ்வு, இறை வேண்டுதலில் என்றும் உம்மோடு இணைந்திருந்து, என் சிந்தனை, சொல், செயல் அனைத்திலும், உம்மை மட்டுமே பிரதிபலிப்பவையாக அமையட்டும்.

இயேசுவே! உங்கள் ஆசியால் இன்று நான் யாதொரு பொல்லாப்பையும் காணாமல், நினையாமலும், செய்யாமலும் இருக்கச் செய்தருளும்.

இயேசுவே! உமதன்பில் பாவிகள் மனம் திரும்பவும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிராக செய்யப்படும் பாவங்களுக்கு பரிகாரமாகவும், இந்த நாளை ஒப்புக் கொடுக்கிறேன்.

🙏🏻ஆமென்.🙏🏻

NIGHT PRAYER

NIGHT PRAYER

                                                                              NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு செபம்..

ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.

(எசாயா 64:8-9)

குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாதம் வைக்கிறோம். எந்தத் தீங்கும் நேரிடா வண்ணம் எங்களை காத்துக் கொள்ளும்.

ஒன்றுமில்லாத களிமண்ணாய் இருந்த எங்களை நீரே வனைந்து உம் திட்டத்தின் படி எங்களை வழிநடத்தி, பயன்படுத்தி வருகின்றீர்.

ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும், குணப்படுத்தலுக்காகவும் தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும்.

ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே. நன்றி.

grateful

MORNING PRAYER

MORNING PRAYER

grateful

 

காலை✝️ஜெபம்🌤️🌴

🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன்.

மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்; எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்? தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்.

இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறிதவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்; அது என்னைப் பற்றிக்கொள்ளாது.

வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலைவில் இருக்கும்; தீதான எதையும் நான் அறியேன்.

தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன்; கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின் செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்;

(திருப்பாடல்கள் 101:1-5)

✝️ஜெபிப்போமாக :🛐

அன்பான தந்தையே! இதோ இந்த காலை நேரத்தில், உமது இரக்கத்தை தேடி ஓடி வந்திருக்கும் என்னை ஆசீர்வதித்தருளும். இந்த புதிய நாளை எனக்கு தந்தமைக்காக, உமக்கு நன்றி ஆண்டவரே!

எங்கள் மேய்ப்பரே! உமது மந்தையில் இருந்து விலகி சென்ற ஆடு நான். ஆயனாகிய உமது பின்னே செல்லாமல், தவறான வழியில் நடந்து நொந்து போன ஆடு நான். எங்கள் மீது பரிவு கொள்ளுங்கள்! எங்களை மீண்டும், உமது மந்தையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

செழிப்பான இடத்திற்கு எங்களை கூட்டி செல்பவரே! எங்களைத் தாக்க வரும் கொடிய ஓநாய்களிடமிருந்து, எங்களைக் காப்பவரே! ஓ நல்ல ஆயனே! எங்கள் கடவுளே! நன்றி ஆண்டவரே!

அலகையின் மூலம் ஏமாற்றப்பட்டு, பாவ வலையில் சிக்கி துன்பப்படும் எங்களை கண்ணோக்கும். இவ்வுலக ஆசைகள், எங்களை நெருக்குகிறது, நேர்மையின் வழியில் வாழ முடியவில்லை, சில நேரங்களில் உண்மைக்கு மாறாக நடக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது, ஆண்டவரே! இந்த மாதிரியான நேரங்களில், எங்களுக்கு உமது உதவி தேவைப்படுகிறது. உமது திடன், எங்களுக்கு தேவைப்படுகிறது. விண்ணிலிருந்து எங்களுக்கு உதவி செய்யும் அப்பா.

அலகையின் அனைத்து துன்பங்களிலிருந்தும் எங்களை காப்பவரே! எங்கள் பாவத்தால் உம்மை கொன்றோம், இப்போது நீர் இறந்து, மீண்டும் உயிர்த்தெழுந்து, நாங்கள் மன்னிப்பை பெற்றுள்ளோம். இனிமேல் நாங்கள் தூய்மையின் பிள்ளைகள், இனி நீர் இறக்க போவதில்லை, வாழ்கிறீர், என்றென்றும் அரசராக வாழ்கிறீர். நீர் நீதி வழங்கும்போது, நாங்கள் மகிழ்வுடன் உமது நீதி அரியணை முன் நிற்க, எங்களை நாங்கள் தகுதிப்படுத்த, உமது துணை தேவைப்படுகிறது. விண்ணிலிருந்து எமக்கு உதவி செய்வீராக!

🙏🏻ஆமென்.🙏🏻

NIGHT PRAYER

   NIGHT PRAYER

   NIGHT PRAYER

இரவு செபம்..

NIGHT PRAYER

ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.

(எசாயா 64:8-9)

குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாதம் வைக்கிறோம். எந்தத் தீங்கும் நேரிடா வண்ணம் எங்களை காத்துக் கொள்ளும்.

ஒன்றுமில்லாத களிமண்ணாய் இருந்த எங்களை நீரே வனைந்து உம் திட்டத்தின் படி எங்களை வழிநடத்தி, பயன்படுத்தி வருகின்றீர்.

ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும், குணப்படுத்தலுக்காகவும் தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும்.

ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே. நன்றி.