Morning prayer

Morning prayer
God of wisdom, in the stillness of this new day, I pause to discern your way among competing claims for my allegiance and my time. Only you are true, only you are deserving of my devotion because you are the only God who can give life. Help me to remember this as my allegiance to you is tested through the events of this day.

Guide my steps in seeking the well-being of others. Show me what it means to be a righteous person, a follower of your ways. Give me strength and discernment to follow You as I should and live according to your truth and ways. In the matchless name of Jesus I pray.

Put down the bag of worries

Put down the bag of worries

grateful

Put down the bag of worries that you are carrying forward with you into this new day.

And set down the sack of regrets that you’ve been dragging along behind you for as long as you can remember.

It is all so heavy.
And carrying it so far for so long is crushing you.

The worries are a future that may not happen and the regrets are a past that is gone.

And you are not there.
You are here, in the present.
Don’t be pulled so far backwards or forwards that you forget to live here.

Don’t be kept so paralysed by fear of the future and pieces of the past that you avoid the now.

So even if it’s only for a short while,
even if it’s only for a moment.

Put it down.
Put it all down.

காலை ஜெபம் 

காலை ஜெபம் 

திருப்பாடல் : 106

ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, மக்களினங்களை அவர்கள் அழிக்கவில்லை. வேற்றினத்தாரோடு கலந்துறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர். அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்; அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின. அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர். அவர்கள் தங்கள் செயல்களால் தங்களைக் கறைப்படுத்திக் கொண்டனர்; தங்கள் செயல்கள்மூலம் வேசித்தனம் செய்தனர். எனவே, ஆண்டவரின் சினம் அவர்தம் மக்களுக்கு எதிராகப் பற்றியெரிந்தது; தமது உரிமைச் சொத்தை அவர் அருவருத்தார். பன்முறை அவர் அவர்களை விடுவித்தார்; அவர்களோ திட்டமிட்டே அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்; தங்கள் தீச்செயல்களினால் அவர்கள் தாழ்நிலை அடைந்தனர். எனினும் அவர் அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, அவர்களது துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார்.

(திருப்பாடல் 106: 34-37. 39-40. 43,44)

ஜெபம்

மனிதர்கள் செய்த பாவங்களை மனமிரங்கி மன்னிப்பவரே! இரக்கப் பெருக்கத்தினால் இவ்வுலகை அழிக்காமல் காத்துவருபவரே! அளவற்ற அன்பின் பொருட்டு கடலளவு பொறுமை கொண்டவரே! உம்மை வாழ்த்தி வணங்கி ஆராதிக்கிறோம். நீர் படைத்த படைப்புகளோடு சேர்ந்து உம்மைப் போற்றி துதிக்கிறோம். நன்றி கூறுகிறோம்.

இறைவா! என்னிடம் இருப்பவை எல்லாம் பிறருக்கு ஈவதற்காக, நீர் எனக்கு அருளியது என்ற உண்மையை நான் உணர்ந்திருந்தும், அதை மறந்து இவை அனைத்தும் நான் உழைத்துச் சேர்த்தவை என்ற என்ற ஆணவத்தோடு நான் ஏழைகளை கண்டும் காணாதது போல இருந்த தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன்.

இயேசுவே, “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.” என அன்று அந்த இளைஞனுக்கு கூறினீர்.

நாங்கள் விண்ணகத்தில் செல்வராக இருக்க இம்மண்ணகத்தில் நாங்கள் எங்களை முன் தயாரித்துக் கொண்டு நிறையுள்ளவராக இருக்க அருள்புரியும்.

இப்புதிய வாரத்தில் நாங்கள் செய்ய வேண்டிய பணிகளை எங்களுக்குத் தூய ஆவியின் மூலம் அறிவுறுத்தும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் ஜெயத்தைத் தாரும்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென். †

காலை ஜெபம்

காலை ஜெபம்

புனித அந்தோணியாரை நோக்கி செபம்

ஓ ! பரிசுத்தத்தின் வெண்மையான லீலி புஷ்பமே ! உன்னதத் தரித்திரத்தின் முன் மாதிரிகையே ! மெய்யான தாழ்ச்சியின் கண்ணாடியே! பரிசுத்தத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே! ஓ ! மகிமையிலங்கும் புனித அந்தோணியாரே ! உமது திருக்கரங்களில் பாலனாக இயேசு எழுந்தருளி வாரும். விஷேசித்த சுதந்திரம் பெற்று அகமகிழ்தீரல்லோ ! அதுபோல் வல்லமையுள்ள உம்முடைய ஆதரவில் என்னையும் வைத்து காப்பாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக்கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய் பிரகாசிக்கிறதல்லவோ ! தேவரீர் என்பேரில் இரங்கி எனக்கு அவசியமான இந்த காரியத்தில் உதவி செய்ய வாரும்…..

(தேவையானதை உறுதியோடு கேட்கவும்)

அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும், சக மனிதர் அனைவரையும் உருக்கமாய் நேசித்து வரவும் எனக்கு வேண்டிய வரத்தை அளித்தருளும். இவ்விதமாய் நான் இம்மையில் ஆண்டவரைப் பிரமாணிக்கமாய் சேவித்து, மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய் தரிசித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தக்கடவேனாக.

ஆமென். †

காலை ஜெபம் 

காலை ஜெபம் 

GOD BLESS BLESS

திருப்பாடல் : 21

ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்; நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்! அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்; அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை. உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர் கொண்டீர்; அவர் தலையில் பசும் பொன்முடி சூட்டினீர். அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்; நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர். நீர்அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று. மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர். உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்; உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர்.

(திருப்பாடல் 21: 1-6)

ஜெபம்

எல்லாம் வல்ல எம் இறைவா! உம் திருமுன் பணிந்து உம்மை ஆராதிக்கின்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை அன்பு செய்கின்றோம். இறைவா! உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இல்லிடமும் அளித்து எங்களை உமது பிள்ளைகளாக அரவணைத்து காத்து வருகிறீர். நன்றி தந்தையே!

ஆயினும் இறைவா, முன்பு நீர் எனக்கு அளித்தவற்றில் நான் மனநிறைவு கொள்ளாது பிறருக்கு உள்ளவற்றோடு ஒப்பீடு செய்து குறை கூறும் உள்ளத்தோடு இருந்த தருணங்களுக்காக உம்மிடம் நான் மனம் வருந்துகிறேன். எனக்கு என்ன தேவை என்பதும், எப்போது தேவை என்பதையும் படைத்தவர் நீர் ஒருவரே அறிவீர் என்பதை உணராத நேரங்களுக்காக உம்மிடம் மன்னிப்புக் கேட்கிறேன். மன்னிக்கும் தேவனே! மனமிரங்கி என்னை மன்னித்தருளும்.

வேலைக்கு அதிகாலையில் வந்தவருக்கும், மாலை ஐந்து மணிக்கு வந்தவருக்கும் ஒரு தெனாரியம் வழங்குவது என்பது எப்படி நிலக்கிழாரின் விருப்பத்திற்கு உட்பட்டதோ அவ்வாறே ஒவ்வொருவருக்கும் நீர் அருள்பவை உமது சித்தத்திற்கு உமது விருப்பத்திற்கு உட்பட்டது என்ற உண்மையை நாங்கள் உணரும்படி செய்தருளும். பிறரோடு ஒப்பீடு செய்தல், எதிலும் குறை காணும் நிறைவற்ற உள்ளம் இவற்றை எங்களிடமிருந்து முற்றிலும் அகற்றியருளும்.

இறைவா! இந்த நாளை ஆசீர்வதியும். நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்திலும் ஜெயத்தைத் தாரும்.

இயேசு மரி! சூசை! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென். †

காலை ஜெபம்

காலை ஜெபம்

இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்.

உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!

உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.

என்னை ஒழிக்கத் தேடும் பொல்லாரிடமிருந்தும் என்னைச் சூழ்ந்து கொண்ட எதிரிகளிடமிருந்தும் என்னை மறைத்துக் கொள்ளும்.

(திருப்பாடல்கள் 17:9)

✝️ஜெபிப்போமாக :🛐

விண்ணுலகில் வாழும், எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளே! இதோ இந்த இனிய காலை பொழுதினிலே, உம்மை போற்றி புகழுகின்றோம், வாழ்த்தி வணங்குகின்றோம்.

உமது மேன்மையான படைப்புகள் அனைத்தையும், உமது வார்த்தையால் உருவாக்கினீர்; ஆனால் மனிதனை, உம் விருப்பப்படி உமது சாயலில் உருவாக்கினீர், ஆகவே உமது திருமகனின் விலைமதிக்க முடியாத இரத்தத்தால், எங்களை மீட்க திருவுளம் கொண்டு அவரை பலியாக்கினீர். நன்றி அப்பா! நன்றி ஆண்டவரே! நன்றி தேவனே!

அப்பா! உம்மிடமிருந்து எங்களை பிரிப்பதற்காக, சாத்தான் கர்ஜிக்கும் சிங்கம் போல அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து எங்களை விலக்கி காத்தருளும். சாத்தானின் சோதனைகள் மூலம், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் அனைவரையும் மீட்டருளும்.

இவ்விதம், நாங்கள் எந்த சூழ்நிலையிலும், சாத்தானுக்கும் பாவத்திற்கும் அடிமை ஆகாதபடி வாழ்வோமாக! இவ்வாறு ஆண்டவரே, உமக்கு சாட்சியான பிள்ளைகளாக, எப்போதுமே வாழும் வரத்தை எங்களுக்கு தந்தருளும்.

இன்றைய நாளை, உம்மிடம் ஒப்படைக்கின்றோம். நீரே எங்களை வழிநடத்தும், ஆசீர்வதியும், காத்துக்கொள்ளுங்க அப்பா.

🙏🏻ஆமென்.🙏🏻

SHORT STORY —CROW AND SPARROW

SHORT STORY —CROW AND SPARROW

காக்கையும் குருவியும் இரை தேடியது.

குருவிக்கு நெல்மணி கிடைத்தது
காக்கைக்கு முத்து கிடைத்தது.

நெல்லைத் தின்றுவிட்டது குருவி,
முத்தை வைத்து விளையாடியது காக்கை,

எனக்கு அதைக் கொடு என்று அதிகார தோரணையில் கேட்டது குருவி,
தர மறுத்த காக்கை, மரத்தில் போய் உட்கார்ந்தது.

காக்கையை விரட்டு என்று மரத்திடம் சொன்னது குருவி. மறுத்தது மரம்.

மரத்தை வெட்டு என்று மரவெட்டியிடம் சொன்னது குருவி. அவன் மறுத்தான்.

மர வெட்டிக்கு தண்டனை கொடு என்று பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டது. மறுத்தார் தலைவர்.

பஞ்சாயத்து தலைவரை நீக்க அரசனிடம் சொன்னது. அரசன் மறுத்தான்.

ராஜாவை திட்ட ராணியிடம் சொன்னது.
ராணி மறுத்தாள்.

ராணியின் ஆடையை கடிக்க எலியிடம் சொன்னது.
எலி மறுத்தது.

எலியைக் கொல் என்று பூனையிடம் சொன்னது.
பூனை மறுத்தது.

பூனையைக் கடி என்று நாயிடம் சொன்னது.
நாய் மறுத்தது.

பக்கத்தில் கிடந்த குச்சியிடம் அந்த நாயை அடி என்றது. குச்சி மறுத்தது.

தீயிடம் சென்று குச்சியை எரி என்றது. தீ மறுத்தது.

கடலிடம் சென்று நெருப்பை அணைக்கச் சொன்னது. கடல் மறுத்தது.

யானையிடம் சென்று கடலை குடி என்றது.
யானை மறுத்தது.

கொசுவிடம் சென்று யானையைக் கடி என்றது. கொசு ஒப்புக் கொண்டது.( எந்தத் தகுதியும் இல்லாதவன் எதைச் செய்யவும் தயாராய் இருப்பான்)

என்னைக் கடிக்காதே, கடலை குடித்துவிடுகிறேன் என்றது யானை.

கடல் தீயை அணைக்கவும், நெருப்பு குச்சியை எரிக்கவும், குச்சி நாயை அடிக்கவும் நாய் பூனையைக் கடிக்கவும் பூனை எலியைக் கவ்வவும் எலி ராணியின் ஆடையைக் கடிக்கவும் ராணி ராஜாவை கண்டிக்கவும் ராஜா பஞ்சாயத்துத் தலைவரைத் தண்டிக்கவும் பஞ்சாயத்துத் தலைவர் மரவெட்டியைத் தண்டிக்கவும் மர வெட்டி மரத்தை வெட்ட ஒப்புக் கொள்ளவும் மரம் காக்கையை விரட்டவும் ஒப்புக் கொண்டன.

ஒரு சின்ன விஷயத்தை எப்படி ஊதிப் பெரிதாக்கி இருக்கிறாய். அன்போடு கேட்டு இருந்தால் நானே தந்திருப்பேன். உனது முதிர்ச்சி இன்மையால் எத்தனை பேருக்கு துன்பம்” என்றது காக்கை.

குருவி மன்னிப்புக் கேட்டது. காக்கை முத்தை தந்தது. குருவி முத்தை வைத்து விளையாடியது.

இந்திய வரலாற்று ஆசிரியர்களில் தலைசிறந்தவரான ரொமிலா தாப்பர் சொன்ன கதை இது. அவரது ஆய்வின் போது கிடைத்த தொன்மக் கதை இது.

சுயநலம்/ அதிகாரம்/ புரிந்து கொள்ளாமை/ ஆணவம்/ பழிவாங்கல்/ முட்டாள்தனம் இவற்றால் மனிதம் அழிந்து வருவதை தாப்பர் சொல்கிறார்.

குருவிகள் அழிந்து வருகிறது என்று யார் சொன்னது?
இந்தக் குருவிகள் அதிகமாகி வருகிறது!

இன்று ஒரு சிந்தனை

இன்று ஒரு சிந்தனை

தவற விட்டதற்கும் இழந்து விட்டதற்கும் எதையும் யாரையும் காரணம் காட்டி விடாதீர்கள். எல்லாமே வாழ்க்கை நம்மோடு விளையாடும் சின்னச் சின்ன விளையாட்டு.

ஆகையால் எதிர்காலத்தை, நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கடந்த காலத்தை நினைவாக வைத்துக் கொள்ளுங்கள். நிகழ்காலம் நிறைவாக இருக்கும்.

அதாவது உறங்கினால் எழறமோ
தெரியல, ஓரு நிலை இல்லாத வாழ்க்கை. அதுக்குள்ள எவ்வளவு வெறுப்பு கோவம் பிரிவு. இருக்குற வரைக்குமாவது சந்தோஷமாஇருங்க.

பண நோய் இல்லையென்றால் மன நோய் உனைத் தீண்டாது. பிணமாய் முடியும் இந்த வாழ்க்கை‌ப் பயணத்தில் கவனமாய் இருங்கள். வானம் என்றால் வெய்யில் மழை, பனி எல்லாம் வரும்.

காலை ஜெபம் 

காலை ஜெபம் 

திருப்பாடல் : 114

எகிப்து நாட்டை விட்டு இஸ்ரயேலர் வெளியேறியபொழுது, வேற்று மொழி பேசிய மக்களை விட்டு யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது, யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று; இஸ்ரயேல் அவரது ஆட்சித் தளம் ஆனது. செங்கடல் கண்டது; ஓட்டம் பிடித்தது; யோர்தான் பின்னோக்கிச் சென்றது.
மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும் துள்ளிக் குதித்தன. கடலே! நீ விலகி ஓடும்படி உனக்கு நேர்ந்தது என்ன? யோர்தானே! நீ பின்னோக்கிச் சென்றது ஏன்? மலைகளே! நீங்கள் செம்மறிக் கிடாய்கள் போல் குதித்தது ஏன்? குன்றுகளே! நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல் துள்ளியது ஏன்?

(திருப்பாடல் 114: 1-6)

ஜெபம்:

எப்போதும் எங்களை அரவணைக்கும் எங்கள் அன்பு ஆண்டவரே! இந்த காலை வேளையில், துதி உண்டாவதாக. அல்லேலூயா. மகிமை உண்டாவதாக. அல்லேலூயா.

உலகனைத்தின் ஆண்டவரே! எங்கள் மேல் கொண்ட நம்பிக்கையின் நிமித்தம் மேலும் ஒரு புதிய நாளை எங்களுக்கு அளித்துள்ளீரே! நன்றி அப்பா ! எங்களைப் படைத்த எங்கள் தந்தையே! உம்மை வாழ்த்திப் போற்றி தாழ்ந்து பணிந்து ஆராதிக்கின்றோம். கடந்த இரவு முழுவதும் எங்களைக் கண்ணின் மணி போல எங்கள் அருகில் இருந்து எங்களைப் பாதுகாத்துக்கொண்ட உமது மேலான கிருபைக்காக உமக்கு நன்றி. 🙏

மன்னிப்பதில் தாராளமானவரே! “மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.” என்ற உமது இறைவார்த்தையை நான் அறிந்திருந்தும், தெரிந்திருந்தும் அதை என் வாழ்வில் செயல்படுத்தத் தவறிய தருணங்களுக்காக மனம் வருந்துகிறேன். பிறர் செய்யும் சிறு தவறுகளுக்குக் கூட சினம் கொள்ளும் நான், உமக்கு எதிராகப் பாவம் செய்தபோதெல்லாம் என்னை நீர் மனமிரங்கி மன்னித்தீர் என்பதை நான் பல நேரங்களில் மறந்து விடுகிறேன். பிறர் செய்த குற்றங்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதியாக என்னை நானே நியமித்ததை எண்ணி வெட்கமடைகிறேன்.

இறைவா என் கடின உள்ளத்தினை மாற்றியருளும். அன்பில் விளைந்த ‘மன்னிப்பு’ என்னும் மகத்துவமான பண்பை கொண்ட ஈர உள்ளதினனாய் என்னை மாற்றியருளும். மற்றவரை மனதார மன்னிக்கும் தருணைத்தில் கிடைக்கும் மன நிம்மதி, மன நிறைவு, மன அமைதி ஆகியவற்றை நான் நாள்தோறும் சுவைக்கச் செய்தருளும்.

ஏனெனில் இயேசுவே, ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை எங்களை நீர் மன்னிக்கச் சொல்லி இருக்கிறீர்.

இயேசு, மரி! சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்

ஆமென்.

காலை ஜெபம்

காலை ஜெபம்

இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்.

உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!

உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.

என்னை ஒழிக்கத் தேடும் பொல்லாரிடமிருந்தும் என்னைச் சூழ்ந்து கொண்ட எதிரிகளிடமிருந்தும் என்னை மறைத்துக் கொள்ளும்.

(திருப்பாடல்கள் 17:9)

ஜெபிப்போமாக :

விண்ணுலகில் வாழும், எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளே! இதோ இந்த இனிய காலை பொழுதினிலே, உம்மை போற்றி புகழுகின்றோம், வாழ்த்தி வணங்குகின்றோம்.

உமது மேன்மையான படைப்புகள் அனைத்தையும், உமது வார்த்தையால் உருவாக்கினீர்; ஆனால் மனிதனை, உம் விருப்பப்படி உமது சாயலில் உருவாக்கினீர், ஆகவே உமது திருமகனின் விலைமதிக்க முடியாத இரத்தத்தால், எங்களை மீட்க திருவுளம் கொண்டு அவரை பலியாக்கினீர். நன்றி அப்பா! நன்றி ஆண்டவரே! நன்றி தேவனே!

அப்பா! உம்மிடமிருந்து எங்களை பிரிப்பதற்காக, சாத்தான் கர்ஜிக்கும் சிங்கம் போல அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து எங்களை விலக்கி காத்தருளும். சாத்தானின் சோதனைகள் மூலம், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் அனைவரையும் மீட்டருளும்.

இவ்விதம், நாங்கள் எந்த சூழ்நிலையிலும், சாத்தானுக்கும் பாவத்திற்கும் அடிமை ஆகாதபடி வாழ்வோமாக! இவ்வாறு ஆண்டவரே, உமக்கு சாட்சியான பிள்ளைகளாக, எப்போதுமே வாழும் வரத்தை எங்களுக்கு தந்தருளும்.

இன்றைய நாளை, உம்மிடம் ஒப்படைக்கின்றோம். நீரே எங்களை வழிநடத்தும், ஆசீர்வதியும், காத்துக்கொள்ளுங்க அப்பா.