DONT GIVE UP

WEDNESDAY WISDOM Life responds to action.

WEDNESDAY WISDOM

DONT GIVE UP

Life responds to action.

Life does not reward hesitation.
Opportunities don’t chase us — they respond to movement.

So many dreams die quietly, not because they were impossible, but because they were postponed. We wait for confidence, permission, perfect timing, or approval… and time moves on without asking.

👉 If you don’t try, nothing changes.
👉 If you don’t speak, no one hears you.
👉 If you don’t move, life cannot meet you halfway.

Fear will always give you reasons to stay still:

“What if I fail?”

“What if they say no?”

“What if I’m not ready?”

But growth has a different language: 🌿 What if this works?
🌿 What if this changes everything?

Every meaningful shift in life begins with a small, uncomfortable step — sending the message, applying for the job, setting the boundary, choosing yourself, believing you’re allowed to want more.

You don’t need certainty.
You don’t need guarantees.
You only need courage — and courage is born after you move, not before.

🚶‍♂️Take the step.
🗣️Ask the question.
🔥Act on the desire that won’t leave you alone.

Because staying still is the only decision that guarantees nothing will change.

Move — even if your voice shakes.
Life responds to action.

PSALM 27

MORNING PRAYER

MORNING PRAYER

PSALM 27

காலை ஜெபம்

“கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்”.

(திருப்பாடல் 51: 10-15 )

அகில உலகையும் படைத்த எம் இறைவா! இந்த காலை வேளையில், நீர் படைத்த படைப்புகள் அனைத்தோடும் சேர்ந்து உம்மை போற்றுகின்றேன், புகழ்கின்றேன், துதிக்கின்றேன், உம்மை ஆராதிக்கின்றேன்.

“இரையாதே !” என்ற உமது சொல்லால் காற்றையும், கடலையும் அடக்கிய எம் இயேசுவே! அன்று கலிலேயக் கடலில் பயணித்த படகு புயலில் சிக்குண்டபோது, உமது இருப்பை உமது அருகாமையை தெரிந்திருந்தும், அன்று அச்சத்தின் பிடியில் ஆட்க்கொள்ளப்பட்ட சீடர்களைப் போல, நாங்களும் நீர் எங்களோடு எப்பொழுதும் இருக்கின்றீர் என்ற உண்மையை அறிந்திருந்தும், உணர்ந்திருந்தும் அலகை வருவிக்கும் அச்சத்தினால், அவ்வப்போது ஆட்க்கொள்ளப்படுகிறோம்.

“ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று, அன்று அப்போஸ்தல்களை நோக்கி நீர் எழுப்பிய வினா, பதிநான்கு நாள்கள் புயலில் சிக்கிய போதும், புனித பவுலை மெலித்தா தீவில் துணிவுடன் எழ வைத்தது. தூய சவேரியாரால் மலாக்கா தீவில் புயலை அடக்க வைத்தது.

இறைவா! திருத்தூதர் பவுலின் நம்பிக்கையையும், தூய சவேரியாரின் வல்லமையையும் எங்களுக்கும் தந்தருளும்.

தந்தை, மகன், தூய ஆவி என்ற மூவொரு கடவுளாகிய எம் இறைவா! உமது பிரசன்னம், எங்களோடு என்றும் இருக்க அருள் புரியும்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

MOR.PRAYER 1

காலை ஜெபம்

“நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
எனவே, ‘இதோ வருகின்றேன்.’ என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப் பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை”.

(திருப்பாடல் 40: 1,3 6-7. 9. 10 )

பலிகளையும், காணிக்கைகளையும் விரும்பாதவரே! எரிபலிகளிலும், பாவம் போக்கும் பலிகளிலும் நாட்டம் கொள்ளாதவரே!
இந்த காலை வேளையில் உம்மைப் போற்றி, புகழ்ந்து, ஆராதனை செய்கிறேன். உமக்கு நன்றி கூறுகிறேன்.

ஆண்டவரே! நான் உம் வழியில் நடக்க, மற்றொரு புதிய நாளை எனக்கு நல்வாய்ப்பாகக் கொடுத்த உமது இரக்கத்திற்காக நன்றி அப்பா.

இறைவா! இதுநாள்வரை நான் உமது திருவுளத்தை அறிய முயற்சிக்காமல் இருந்த தருணங்களுக்காக, உம்மிடம் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன்.
மனமிரங்கி என்னை மன்னித்தருளும்.

இறைவா! உமது திருவுளத்தை அறிய, அதை நிறைவேற்ற தூய ஆவியானவரின் துணையும், வழிநடத்துதலும் எனக்குக் கிடைக்கபெற அருள் புரிவீராக. ஏனெனில், இயேசுவே “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே, என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என நீர் கூறி இருக்கிறீர். நன்றி ஆண்டவரே.

இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். என்னை ஆசீர்வதித்து வழி நடத்துவீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

grateful

TALENTED THURSDAY

TALENTED THURSDAY

grateful

இன்று ஒரு சிந்தனை!

தோல்வி, எத்தனை முறை உதைத்தாலும், மீண்டு வர முடியும்; தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், உன் தாரக மந்திரமாக இருந்தால்!

உன்னை மதிப்பவர்களை தேடிப்போ, தப்பில்லை, ஆனால் உன்னை அலட்சியப்படுத்தியவர்களை, திரும்பிக்கூட பார்க்காதே!!

மற்றவர்களை விமர்சிக்கக்கூட, உனக்கு நேரமில்லை என்றால், உனக்கான வாழ்க்கையை, நீ வாழ துவங்கி விட்டாய், என்று அர்த்தம்!!!

MOR.PRAYER

TWISTING THURSDAY

TWISTING THURSDAY

MOR.PRAYER 1

இன்று ஒரு சிந்தனை!

தோல்வி, எத்தனை முறை உதைத்தாலும், மீண்டு வர முடியும்; தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், உன் தாரக மந்திரமாக இருந்தால்!

உன்னை மதிப்பவர்களை தேடிப்போ, தப்பில்லை, ஆனால் உன்னை அலட்சியப்படுத்தியவர்களை, திரும்பிக்கூட பார்க்காதே!!

மற்றவர்களை விமர்சிக்கக்கூட, உனக்கு நேரமில்லை என்றால், உனக்கான வாழ்க்கையை, நீ வாழ துவங்கி விட்டாய், என்று அர்த்தம்!!!

MOR.PRAYER

WISDOM WEDNESDAY

WISDOM WEDNESDAY

MOR.PRAYER 1

இன்று ஒரு சிந்தனை!

ஒரு ஏமாற்றம், தனிமையை நாட வைக்கும், ஒரு துரோகம், விலகி நடக்க வைக்கும், ஒரு அவமானம்தான், புதிய பாதையை தேட வைக்கும்!

அடுத்தவன் தப்பா நினைப்பான்னு பயந்து வாழ்வதைவிட, நம்மள தப்பா நினைக்க, அவன் யார்னு, கெத்தா வாழ்ந்துட்டு போகணும்!!

பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், நம்பிக்கையையும் அன்பையும் கொடு, ஆயுள் முழுவதும், அதுவே போதுமானதாக இருக்கும்!!!

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

MOR.PRAYER 1

காலை ஜெபம் – 21/01/26

திருப்பாடல் : 144

என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே! போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே! என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே! இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன். அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே!

(திருப்பாடல் 144: 1-2, 9-10)

🌿 ஜெபம் 🌿

எங்கள் கற்பாறையும், கோட்டையும் ஆனவரே! எங்கள் பாதுகாப்பாளரும், மீட்பரும் ஆனவரே! எங்கள் கேடயமும், புகலிடமும் ஆனவரே! இந்த அதிகாலை வேளையில் உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதனை செய்கின்றோம்.

இறைவா, இந்த புதிய நாளை எங்களுக்குக் கொடையாகக் கொடுத்தமைக்கு உமக்கு நன்றி. நேற்று முழுவதும் எங்களோடு இருந்து எங்களைக் காத்து வழி நடத்திய உமது மேலான கிருபைக்காக நன்றி தகப்பனே! 🙏

இறைவா! அன்று உம்மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையின் நிமித்தம் பலம் குன்றிய இளம் தாவீது, பலமிக்க பெலிஸ்தியனை அடியோடு வீழ்த்த முடிந்தது.

நம்பிக்கையின் ஊற்றே எம் இறைவா! இன்று நம்பிக்கை குன்றிய உம் பிள்ளைகளைக் கண்ணோக்கிப் பாரும். நாங்கள் நம்பிக்கையில் என்றும் நிலைத்திருந்து எங்கள் வாழ்க்கைப் போராட்டங்களில் வெற்றி பெற தயைகூர்ந்து அருள் புரிவீராக! 🙏

இறைவா, தேவையில் இருப்போர்க்கு நாங்கள் நன்மை செய்ய வேண்டிய நேரங்களில் பிறர் என்ன நினைப்பார்களோ என எண்ணி நன்மை செய்யாமல் பின் வாங்கிய தருணங்களுக்காக நாங்கள் மனம் வருந்தி உம்மிடம் மன்னிப்புக் கேட்கிறோம்.

இனிய இயேசுவே, அன்று பரிசேயர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் கை சூம்பியவரை நலமாக்கி நன்மை செய்தீர். ஆண்டவரே, அன்பிலும், இரக்கத்திலும் நாங்கள் உம்மைப் போல இருக்க அருள்புரியும்.

இந்த நாளை நாங்கள் உமது பெயரால் துவக்குகின்றோம். தூய ஆவியின் வழிநடத்துதல் எங்களுக்கு முழுவதும் கிடைக்கப் பெற அருள்புரிவீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

APPRECIATE

SHORT STORY

SHORT STORY

GOD BLESS BLESS

A popular story with a minor variation goes as follows:

A man fell off a cliff, but managed to grab a branch of a tree on the way down.
>> The following conversation then proceeded:
“Is anyone up there?”

“I am here. I am the Lord. Do you believe me?”
>> “Yes, Lord, I believe. I really believe, but I can’t hang on much longer.”

“That’s all right, if you really believe you have nothing to worry about.
>> I will save you. Just let go of the branch.”

After a moment of pause, the many continued and sad:
“Is anyone else up there?”

The man failed to depend on the Lord when the “crunch situation” was encountered!

Faith and Trust in the Lord requires us to follow His Word and to be assured that His Providence will take us through!

MUDPOT

SHORT STORY OF A MUD POT

SHORT STORY OF A MUD POT

MUDPOT

 

சிறுகதை: அந்த மண்பானையின் ரகசியம்
ஒரு பழைய மண்பாண்டக் கடையில், மூலையில் உடைந்து சிதறிக் கிடந்தது ஒரு களிமண் உருண்டை. அதன் மனமெல்லாம் ஒரே கவலை: “எல்லாரும் என்னைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். நான் எதற்கும் உதவாதவள். என் வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது.”
அப்போதுதான் ஒரு கை அதன் மேல் பட்டது. அது ஒரு திறமையான குயவனுடையது. அவர் அந்தக் களிமண்ணை மெதுவாக அள்ளி எடுத்து, தண்ணீரில் நனைத்து, தனது சக்கரத்தில் வைத்தார்.
சக்கரம் வேகமாகச் சுழன்றது.

களிமண்ணிற்குத் தலை சுற்றியது. குயவனின் கை அதன் மீது அழுத்தம் கொடுத்தது. களிமண் அலறியது: “ஏற்கனவே நான் நொறுங்கிப் போயிருக்கிறேன், இப்போது ஏன் இன்னும் என்னை அழுத்தி வலிக்கச் செய்கிறாய்?”
குயவன் மென்மையாகச் சிரித்தார். “இது உன்னைத் துன்புறுத்துவதற்காக அல்ல, உனக்குள் ஒளிந்திருக்கும் ஒரு அழகான வடிவத்தைக் கொண்டு வருவதற்காக,” என்றார்.

சிறிது நேரத்தில், அந்த உடைந்து போன களிமண் ஒரு நேர்த்தியான ஜாடியாக மாறியது. அது இப்போது தண்ணீரைச் சுமக்கத் தயாராக இருந்தது.

பாடம்:
நண்பரே, உங்கள் மனமும் வாழ்க்கையும் இன்று உடைந்து சிதறிப் போய் இருக்கலாம். தோல்விகளும் ஏமாற்றங்களும் உங்களை அழுத்தி வலிக்கச் செய்யலாம். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் இன்னும் அந்தப் “பெரிய குயவனின்” கைகளில் தான் இருக்கிறீர்கள். அவர் உங்களைக் கைவிடவில்லை. உங்களை இன்னும் அழகான, உறுதியான ஒரு மனிதராக மாற்றவே இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்துகிறார்.
நீங்கள் “தேர்ந்தெடுக்கப்பட்டவர்” (Chosen).

உங்கள் முடிவு ஒருபோதும் சிதைவல்ல, அது ஒரு புதிய விடியல்!

SPECIAL

EASY TIPS FOR A CONTENTED LIFE

EASY TIPS FOR A CONTENTED LIFE

SPECIAL

 

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்…!

“மத்தவங்க உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களின் பிரச்சினை, உங்களுடையது அல்ல!”, அமெரிக்காவின் முன்னால் First Lady, Eleanor Roosevelt அவர்களின் மிக பிரபலமான வார்த்தைகள் இவை.

1. எல்லாத்தையும் பெர்சனலா எடுத்துக்கிறத உடனே நிறுத்துங்க!

மக்கள் சொல்லும் & செய்யும் பெரும்பாலான விஷயங்கள் அவர்களின் உலகத்தின் பிரதிபலிப்புதான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

“உங்களின் எண்ணங்களை விட அதிகமாக உங்களை காயப்படுத்தும் வேறு எதுவும் இந்த உலகில் இல்லை” என்றார் புத்தர். அதனால, உங்களுக்கு சொந்தமில்லாத எதையும் நீங்க எடுத்துக்காதீங்க!

2. உங்களுடைய கவனத்திறனை ஒரு பொக்கிஷம் போல பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

உங்கள் கவனத்திறன்தான் உங்களுடைய எனர்ஜி. உங்கள் எனர்ஜிதான் உங்கள் வாழ்க்கையாக மாறுகிறது.

அதனால் உங்களை ஆக்கும் விஷயங்கள் மீது கவனம் செலுத்துங்கள், அழிப்பவை மீது அல்ல!

“நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் யாராக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதற்கு நீங்கள் போடும் ஓட்டு” என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் James Clear.

3. ரெஸ்பாண்ட் பண்ணுங்க, ரியாக்ட் பண்ணாதீங்க!

ரியாக்ட் பண்றது இன்ஸ்டிங்க்ட் (Instinct) அல்லது அடிப்படை மனித இயல்பு. ஆனா, ரெஸ்பாண்ட் பண்றது மாஸ்டரி (Mastery).

இதை பின்வருமாறு அழகாக விளக்குகிறார் ஆஸ்திரியா நாட்டின் நரம்பியல் மற்றும் மனநல மருத்துவரான Victor Frankl.

“ஒரு வினைக்கும், அதற்கான எதிர்வினைக்கும் இடையில் உள்ள இடைவெளியில்தான் இருக்கிறது உங்கள் சுதந்திரம்” என்கிறார்.

அதாவது ஒருத்தர் உங்ககிட்ட ஒன்னு சொல்றதுக்கும், நீங்க அதுக்கு ரியாக்ட் பண்றதுக்கும் இடையில் உள்ள இடைவெளியில்தான் உங்கள் அமைதியே இருக்கிறது என்கிறார் Victor Frankl.

4. மக்கள் என்ன வேணும்னாலும் நெனச்சிட்டுப் போகட்டும் விடுங்க!

“மக்கள் உங்களைப் பற்றி சொல்லும் கருத்துகளுக்கு நீங்கள் மதிப்பு கொடுத்தால், நீங்கள் அவர்களின் கைதி ஆகிவிடுவீர்கள்” என்கிறார் பிரபல சீன ஞானி Lao Tsu.

“பிறர் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நீங்கள் கைவிடும்போது உங்கள் சுதந்திரம் பிறக்கிறது” என்பதை நினைவில் வையுங்கள்!

5. உங்கள் அகங்காரத்தை (Ego) குறையுங்கள், உங்கள் அமைதி அதிகமாகும்!

சண்டை போடுவது, பிறருக்கு தன்னை நிரூபித்துக் காட்டுவது மற்றும் தற்காப்பு செய்துகொள்வது எல்லாம் உங்கள் ஈகோவுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் உங்கள் மனதுக்கு அமைதிதான் பிடிக்கும்.

அதனால், உங்கள் ஈகோவுக்கு தீனி போடுவதை நீங்கள் நிறுத்திவிட்டால், உங்களுடைய அமைதியான மற்றும் வலிமையான வடிவத்துக்குள் நீங்கள் அடி எடுத்து வைக்கிறீர்கள்!

நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்