இரவு செபம்

இரவு செபம்

அன்பும், இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பு ஆண்டவரே,

இந்த இரவு நேரத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். மனிதரின் வார்த்தைகள் மற்றவர்களை விழச்செய்யும், செயலற்று போகச்செய்யும். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகள் வல்லமையுள்ளது; அவரின் வார்த்தைகள், எங்கள் வாழ்வில் காணப்படும் எல்லா பிரச்சனைகளையும் மாற்றவும், அமைதிப்படுத்தவும், விடுதலை தரவும், வல்லமையுள்ளதாகவும் எங்களுக்கு உமது ஆசீராக இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

ஆண்டவரே, நாங்கள் எப்போதும் உம்முடைய குரலுக்கு செவி கொடுக்கிறவர்களாகவும், உம்முடைய இறை வார்த்தைகள், எங்கள் வாழ்வில் ஆசீர்வாதமாகவும் இருக்க உமது அன்பை எங்களுக்கு தந்தருள வேண்டுகிறோம்.

இன்றைய எங்கள் அன்றாட பணிகளை, எங்கள் குடும்பத்தினரை ஆசீர்வதித்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இந்த நாள் முழுவதும், எம் வாழ்க்கை பயணத்தில் சிறப்பாக பயணிக்க, நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியான மனநிலையையும் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இன்று இரவு எமக்கு மன அமைதியையும், நல்ல உறக்கத்தையும் தந்தருளும். அதிகாலை எழுந்து, உம்முடைய பாதத்தில் அமர்ந்து, செபித்து, நாளைய எங்கள் பணிகளை இனிதே துவங்க, உமது மேலான இரக்கத்தின் ஆசீரை எமக்கு அளித்தருளும்.

எங்கள் தாழ்மையின் நன்றிகளையும், வேண்டுதல்களையும் ஏற்று, உமது அன்பின் ஊற்றால், இறை இரக்கத்தினால் எம்மை நிரப்பி ஆசீர்வதியும்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *