Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
831
CLIENT
STORIES
BLOG SEPTEMBER 26, 2019 2 MIN READ 105 VIEWS 44 Likes FOLLOWING ACTIVE

இரவு செபம்

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
***இரவு செபம்*** (திபா 84: 2. 3. 4-5a,7a. 10) ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது! வானகத் தந்தையே இறைவா! இந்த மாலை வேளையில் என் உடலும், உள்ளமும் ஆழ்ந்த ஏக்கத்துடன் உம்மை நோக்கித் திரும்புகிறது. உமது தூய பலிபீடத்தின் அருகே, ஓய்வைத் தேடும் சோர்வடைந்த பறவையைப் போல, என் ஆன்மா இந்த இரவுப் பொழுதில் உமது உடனிருப்புக்காக ஏங்குகிறது. நீரே என் உண்மையான அடைக்கலம், என் அமைதி, என் ஆறுதல், என் பாதுகாப்பான மறைவிடம். உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். ஆதலால் அவர்களின் இதயங்களை நீர் மகிழ்ச்சியினால் நிரப்புகிறீர். உலகம் இருண்டு போனாலும், நீரே இன்னும் என் ஒளி. நான் பலவீனமாக உணர்ந்தாலும், நீரே என் பலம். ஆண்டவரே, இன்றைய நாளில் எனது பலவீனத்தால் உமக்கெதிராகவும், சக மானிடருக்கெதிராகவும் நான் கட்டிக்கொண்ட பாவங்களுக்காக என்னை மன்னியும். வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும், உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது; எனவே, இன்றிரவு உமது கருணையால் என்னைச் சூழ்ந்து கொள்ளுங்கள். என் தலையணை உமது உறுதி தரும் வார்த்தைகளாகவும் , என் போர்வை, உமது தூதர்களின் இறக்கைகளின் நிழலாகவும் இருக்கட்டும். நான் நாளை, புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் எழுந்திருப்பேன் என்னும் நம்பிக்கையில், இந்த இரவினை உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன் - ஆமென் (திபா 84: 2. 3. 4-5a,7a. 10) ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது! வானகத் தந்தையே இறைவா! இந்த மாலை வேளையில் என் உடலும், உள்ளமும் ஆழ்ந்த ஏக்கத்துடன் உம்மை நோக்கித் திரும்புகிறது. உமது தூய பலிபீடத்தின் அருகே, ஓய்வைத் தேடும் சோர்வடைந்த பறவையைப் போல, என் ஆன்மா இந்த இரவுப் பொழுதில் உமது உடனிருப்புக்காக ஏங்குகிறது. நீரே என் உண்மையான அடைக்கலம், என் அமைதி, என் ஆறுதல், என் பாதுகாப்பான மறைவிடம். உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். ஆதலால் அவர்களின் இதயங்களை நீர் மகிழ்ச்சியினால் நிரப்புகிறீர். உலகம் இருண்டு போனாலும், நீரே இன்னும் என் ஒளி. நான் பலவீனமாக உணர்ந்தாலும், நீரே என் பலம். ஆண்டவரே, இன்றைய நாளில் எனது பலவீனத்தால் உமக்கெதிராகவும், சக மானிடருக்கெதிராகவும் நான் கட்டிக்கொண்ட பாவங்களுக்காக என்னை மன்னியும். வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும், உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது; எனவே, இன்றிரவு உமது கருணையால் என்னைச் சூழ்ந்து கொள்ளுங்கள். என் தலையணை உமது உறுதி தரும் வார்த்தைகளாகவும் , என் போர்வை, உமது தூதர்களின் இறக்கைகளின் நிழலாகவும் இருக்கட்டும். நான் நாளை, புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் எழுந்திருப்பேன் என்னும் நம்பிக்கையில், இந்த இரவினை உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன்

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE44 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL